Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by vasee

  1. இலங்கை வங்குரோத்தானபின் இலங்கைக்கு இராணுவ, அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இராணுவம் இலங்கையிலிருப்பது அவர்களுக்கு மேலதிக சாதகம் அத்னால் தமிழ்சிறியின் செய்தி உண்மையாவதற்கு சந்தர்ப்ப சாத்தியம் அதிகம் அதனை முன்னரே வெளியிட்டமையால் ஜூலியன் அசாஞ் மாதிரி நிலமை தமிழ்சிறிக்கு வராமலிருக்க வேண்டும்.
  2. சி எப் டி யில் வாங்க முடியவில்லை வேறு ஏதாவது மார்ககம் இருக்கலாம். நாணயத்தினை மிதக்கவிடாமல், தங்கத்துடன் peg செய்யும் போது நாணயம் பெறுமதி இழக்காது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் (1973 முன்னர் எனநினைக்கிறேன்) அமெரிக்க நாணயம் தங்கத்துடன் peg செய்யப்பட்ட அதே நேரம் அமெரிக்க நாணயத்தினுடன் ஜேர்மன், இங்கிலாந்து, சுவீடன், பிரான்ஸ் நாணயங்களுடன் peg செய்யப்பட்டிருந்தது, ஆனால் 1.5% அளவில் மட்டும் நாணயத்தினை அச்சிட வேண்டிய அமெரிக்கா அதிகளவில் தனது நாணயத்தினை அச்சிட்டமையால் அதன் பெறுமதி குறைந்தது, இதனால் அமெர்க்க நாணயத்தினை விற்று தமது நாணயங்களை ஜேர்மனும் பிரான்ஸும் வாங்க முற்பட்டது, அதே நேரம் பொருளாதார ரீதியாக தனக்கு சாதகமில்லாத நிலையில் அமெரிக்காவும் தனது ஒப்பந்தத்தை முறித்து கொண்டது. இரஸ்சியாவின் பிரச்சினை அதனது தங்க இருப்பினை கொண்டு தனது நாணயத்தினை peg செய்வதாக இருக்காது ஆனால் அதன் உள்நாட்டு வர்த்தக ஏற்றுமதியில் பாதிப்பினை சில வேளை உருவாக்கலாம். நேரம் இருக்கும் போது உங்களது பதிவுகளை இப்பகுதியில் இடுங்கள்,எப்போதும் பல விடயங்களை உங்கள் பதிவிலிருந்து அறியக்கூடியதாகவுள்ளது.
  3. எனது சி எப் டி யில் ரூபிளின் வர்த்தகம் மாசி மாதம் 25 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்க டொலரை விற்று ரூபிளினை வாங்க உத்தேசித்துள்ளேன். இரஸ்சியா அதிகளவில் தங்கத்தை கொள்வனவு செய்கிறது அதற்கு கூறப்படும் காரணம், இரஸ்சிய ரூபிளின் பெறுமதியிழப்பு. ஆனால் இரஸ்சியா தனது பணத்தை தங்கத்துடன் peg செய்தால் அதன் பெறுமதி வீழ்ச்சி அடையாது, அது தான் இரஸ்சியாவின் திட்டமாக இருக்கும் என கருதுகிறேன். அத்துடன் தன்னுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் இரஸ்சிய பணமான ரூபிளில் செய்ய வேண்டும் என வலியுருத்துகிறது. இவ்வாறு நிகழ்ந்தால் வெறும் முகப்பெறுமதியில் (fiat currency) உள்ள உலக reserve நாணயமான டொலரின் மூலம் ஏற்படும் உலக பொருளாதார நெருக்கடிக்குத்தீர்வு ஏற்படும் (அமெரிக பொருளாதார சரிவு உலகை பாதிக்கும் நிலை) ஏனெனில் அமெரிக நாணய அச்சீடு Bretton woods தீர்மானப்படி (தங்க அகழ்வு வீதம் 1.5%) தற்போது செய்யப்படுவதில்லை. இது உலக பொருளாதாரத்திற்கு கால காலமாக உள்ள அச்சுறுத்தல். எனது கருத்து தவற்றக இருக்கலாம். இரஸ்சிய ரூபிளை இப்பொது வாங்கினால் இலாபம் என கருதுகிறேன், உங்களது அபிப்பிராயம் என்ன?
  4. மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது, ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை திவாலாகும் என நிதி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆண்டின் ஆரம்பத்திலேயே யாழில் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் இலங்கையை வெளிநாடுகள் கைவிடாது என ஒரு கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது, இது ஒரு ஆபத்தானது இலங்கை திவாலாவதுதான் வெளிநாட்டிற்கு அனுகூலம் அதனால்தான் தற்காலிக கடன் என்ற பெயரில் உலகை ஏமாற்றுகிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கைக்கு கடனல்லாமல் மானியமாக காசு வழங்கவேண்டும். இது பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களும் பாதிப்படையும் பிரச்சினை, அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது. கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது. இலங்கை மீட்டெடுக்கும் நிலைமையைக்கடந்து விட்டது, இலங்கையின் இறையாண்மை என்பதே இனிமேல் இருக்காது. பல அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு இரவோடிர்வாக தலை மறைவாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கையில் இவ்வாறு ஒரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருந்தபோதே யாழில் இலங்கை பொருளாதாரப்பிரச்சினை பேசப்பட்ட போது, இலங்கையிலிருந்த கள உறவுகள் கூட எதிர்வாதம் செய்த நிலை காணப்பட்டது. இலங்கை இன்று உள்ள நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, இலங்கை தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற்து என்பது ஏனோ பலருக்கு புரியவில்லை, இதனால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர் இன்னும் தாயாராகவில்லை, இது ஆபத்தான விளைவை உருவாக்கப்போகிறது.
  5. 1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர 2007 இல் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது.
  6. கடன்சா, உண்மையான பெறுமதியில் (Equity) முதலிடுவதை தவறு என கூறவில்லை என நினைக்கிறேன். உண்மையான பெறுமதியை எவ்வாறு அறிவது? உதாரணமாக அவுஸ்ரேலிய வீட்டு விலைகள் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னிலிருந்து 2014 வரை அதன் வளர்ச்சி விகிதம் சராசரியாக 10 ஆண்டில் வீட்டின் விலை இரட்டிப்பாகிறது என கூறுகிறார்கள். அதாவது ஆண்டு ஒன்றிற்கு 10% வளர்ச்சி மாதிரியுள்ளது ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றிற்கு 7 % கூட்டு வட்டியே இவ்வகையான 10 வருடத்தில் வீட்டின் விலை இரட்டிப்பாவதற்கு காரணம், இது வீட்டு தேய்மானம், பண வீக்கம் உள்ளடங்கலாக (7% முன்பு கணித்தாக நினைவிலுள்ளது). உங்கள் கருத்து போல வீடு காணி முதலீடு நல்ல முதலீடுதான். ஆனால் தற்போது சிட்னியில் வீட்டின் விலை அதிகரிப்பு ஆண்டொன்றிற்கு 33% வீதம் என்றால் 7% விகிதத்திற்கும் 33% இற்குமிடையே உள்ள இடைவெளி சிந்திக்க வைக்கின்றது. https://www.abc.net.au/news/2022-01-27/sydney-median-house-price-increases-but-growth-expected-to-slow/100785706 வீட்டு விலை அதிகரிப்பானது வருமான அதிகரிப்பை விட அதிகம். இது கடனை அதிகரிகத்து ஒரு தளம்பல் நிலையை உருவாக்கும். இந்த வருமான அதிகரிப்பு குறைவாக இருப்பது பெரும்பான்மையான அடிமட்ட வருமானம் பெறுபவர்களையே அதிகம் பாதிக்கும். உதாரணமாக அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் வருமான வேறுபாட்டை பின்வருமாறு கூறுகிறார்கள். முதல் 10% மானவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தை தமதாக்கி கொள்கிறார்கள், அதாவது மிகுதி 90% மான மக்கள் மிகுதி 50% வருமானத்தை தமக்கிடையே ப்கிர்கிறார்கள், 10% = 50% 1% = 24% 0.1% = 12% 0.01% = 6% அது இவ்வாறு செல்லும். 2007 ஆம் ஆண்டளவில் 15000 அமெரிக்கர்களின் வருமானம் 700 பில்லியன், இது கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு ஆண்டிற்குரிய மொத பொருளாதார வளர்ச்சியினை விட 9 மடங்கு அதிகமாகும். வருமான வித்தியாசமிருந்தால் அதனால் என்ன பாதிப்பு? நாடு பொருளாதார வளர்ச்சி அடையும் போது அதனூடே அனைவரது வருமானமும் அதிகரிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் சில விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் அந்த அதிகரித்த வளர்ச்சி தாம் எடுத்து கொண்டால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் கடன் விகிதம் அதிகரிக்கும். இந்த வீட்டு விலை வளர்ச்சிக்கும் வருமான அதிகரிப்பும் குறைந்த பட்சமாவது இடைவெளி குறைவாக இல்லாவிட்டால் நிலமை என்னவாகும்? 1929 அமெரிக்காவில் வருமான இடைவெளி 25% இருந்த போது பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, பின்னர் அதே 1% வருமானம் 24% எட்டியபோது வீட்டு விலை சரிவு ஏற்பட்டது, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் உலக பொருளாதாரமும் பாதிப்பிற்குள்ளானது. சாதாரண மக்களின் மீது அவர்கள் வாங்கும் பொருதள் முதல் அவர்கள் உழைப்பு வரை வரி விதிக்கும் அரசுகள், வரி மூலம் வருமான மீள்வினியோகம் என்று சொல்கிறது, அவ்வாறிருந்தால் ஏன் இவ்வாறான பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பொருளாதர சரிவை உருவாக்க வேண்டும்? JP மோர்கனை King maker என்றே கூறுவார்கள்.
  7. https://www2.asx.com.au/investors/investment-tools-and-resources/sharemarket-game அவுஸ்ரேலிய பங்கு சந்தையான Australia stock exchange (ASX) இனால் நடாத்தப்படும் பங்கு வர்த்தக விளையாட்டு, விரும்பியவர்கள் சித்திரை 28 முதலாக பதிவு செய்யலாம். இதில் 50000 அளவிற்கு விளையாட்டு காசு வழங்கப்படும் (உண்மை காசல்ல).
  8. இன்றைய தின சிட்னி மோர்னிங் கேரல்ட் பத்திரிகையில் வந்துள்ள் கட்டுரை, https://www.smh.com.au/property/news/investor-with-8000-homes-calls-for-negative-gearing-to-be-axed-20220208-p59us2.html
  9. இந்த மாதிரியான நீர்குமிழிகளை அரசுகள் கூட உருவாக்குகின்றதோ? ( உண்மை இல்லை ஒரு சந்தேகம் மட்டுமே) உதாரணமாக அவுஸ்திரேலியாவில் முதலீட்டு அடிப்படையில் வீடு வாங்கும் போது அந்த கடனின் வட்டியை உங்களது வரியிலிருந்து தள்ளுபடி செய்யலாம். இதனால் நன்மை பெறுவது செல்வந்தர்கள், அதனை பார்த்து மற்றவர்களும் வீடுகளை வாங்க வீட்டு விலை அதிகரிக்கும் செல்வந்தர்கள் அதிகரித்த விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள், அதன் பின் நீர்குமிழி உடைந்து விலை சாதாரண மட்டத்திற்கு வந்த பின் சிலேட்டை அழித்து விட்டு மீண்டும் ஆரம்பிப்பார்கள், இதனால் பாதிப்படைவது பாட்டாளிகளே. வீடுகள் மட்டுமல்ல பங்குகள் போன்ற அனைத்து முதலீடுகளில் பெரும்பாலும் நன்மை அடைவது செல்வந்தர்கள் (இதில் நிறைய விதி விலக்குகளும் உண்டு). வளங்களை சமமாகப்பிரிப்பதே வரியின் அடிப்படை, என்று கொண்டுவரப்பட்ட வரி, அதிகமாக செல்வந்தர்களுக்கே சாதகமாகவுள்ளது (பாட்டாளிகளின் வரி விகிதம் வருமானத்தினடிப்படையில் பல மடங்கு செல்வந்தர்களை விட அதிகமாகவுள்ளது). வருமானங்களை சமமாக பிரிக்கப்படும் நிலை உருவானால் ஒட்டு மொத்த சமூகமும் சிறந்த வாழ்க்கை தரத்தை எட்ட முடியும், அமெரிக்காவில் 1950 - 1970 காலப்பகுதியில் ஒப்பீட்டளவில் வருமான இடை வெளி குறைவாக இருந்ததாக கூறுகிறார்கள் ( மிக சிறிய அளவில்) இந்த காலத்தை பொற்காலம் என கூறுகிறார்கள் (இதன் உண்மைதன்மை தெரியாது). இந்த முதலீடுகளில் பங்கு பெற்றும் காலங்கள்தான் அதன் வெற்றியை தீர்மானிக்கின்றது. முதலீடுகளில் ஆரம்பத்தில் முதலிடுபவர்கள் அதிக வெற்றியாளராகவும் உச்ச பகுதியில் முதலிடுபவர்கள் தோல்வியாளராகவும் (குறைந்த பட்சம் சில ஆண்டுகளாவது) காணப்படுகிறார்கள். https://www.investopedia.com/terms/b/bell-curve.asp#:~:text=A bell curve is a,a symmetrical bell-shaped curve.&text=The width of the bell curve is described by its standard deviation. இது ஒரு வட்டம் போல நிகழும் (கால சுழற்சி). https://en.wikipedia.org/wiki/Diffusion_of_innovations இந்த Bell curve மற்றும் "S" curve அடிப்படையிலேயே பழக்க வழக்க பொருளாதார நிகழ்வதாகக்கூறுகிறார்கள். the three skills of top trading இந்த புத்தகத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம் ( இணையதளத்தை இணைப்பது சரியல்ல என்பதால் இணைக்கவில்லை). பங்கு சந்தையில் சொல்வார்கள் " Don't fight with the trend", "Cut your loss and run your profit" ஆனால் நடைமுறையில் நாம் அதற்கு எதிர்மறையாகவே செயல்படுவோம். விலை வீழ்ச்சி அடைகிற பங்குகளை வாங்குவோம் (Catching falling knife), ஏற்கனவே நட்டத்திலுள்ள பங்கினை விலை மேலும் குறைந்த பின்னும் திரும்பவும் வாங்குவோம் (Doubling down). அதே நேரம் சிறிதளவது இலாபம் வந்தவுடன் பங்குகளை விற்றுவிடுவோம், ஆனால் சில பங்குகள் நட்டம் அதிகரித்து கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஆனால் எங்களால் விற்க முடியாது. இவை அனைத்தும் எனக்கு ஏற்பட்டது, இவற்றிற்கு காரணம் சரியான முதலீட்டு திட்டமின்மையே.
  10. விலை என்பது அதன் உண்மையான மதிப்பிலேயே தங்கியுள்ளது. அசையும் சொத்துகளின் (Goods) விலை ஓரளவிற்கு நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படும் (efficient market hypothesis). உதாரணமாக கார் விலை அதிகரித்தால் அதன் விறபனை குறையும். ஆனால் அசையா சொத்துக்களான முதலீடுகள் (Asset) நிறைபோட்டி சந்தை அடிப்படியில் தீர்மானிக்கப்படுவதில்லை. உதாரணமாக வீடு, பங்கு போன்றவை விலை அதிகரிக்க அதற்கான கேள்வி அதிகரிக்கும் அதற்கு காரணம் முதலீட்டு செலவுகளின் எதிர்பார்ப்பே எதிர்காலத்தில் வாங்கிய விலையினை விட அதிக விலைக்கு விற்கலாம் என்பதாகும். இதனால் தான் இப்படியான முதலீடுகள் உண்மையான விலைகளை விட அதிகளவான விலையினை ஏற்படுத்துகிறது (Bubbles) வரலாற்றில் பல வகையான நீர் குமிழிகள் (Bubbles) உருவாகியிருக்கின்றன என கூறுகிறார்கள். ருலிப், தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட் போன்றவையை உதாரணமாக சொல்கிறார்கள். https://www.investopedia.com/terms/d/dutch_tulip_bulb_market_bubble.asp இந்த நீர் குமிழிகள் ஒவ்வொன்றிற்கும் பின்னர் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகக்கூறுகிறார்கள். ஏற்கனவே மிகைப்படுத்தப்பட்ட விலையினை உடைய கடனில் உள்ள வீட்டின் பெறுமதியினை துணையாக வைத்து அதன் போலியான பெறுமதியை முதலீடாக்கி அதே சந்தையில் இன்னொரு வீட்டை மிகைப்படுத்தப்பட்ட விலையில் மீண்டும் கடனில் வாங்கினால் என்னவாகும். ருலிப்பினை வங்கிகள் கூட ஒரு சொத்தாக அங்கீகரித்திருந்தது என்பதை இப்போது பார்ப்பவர்களுக்கு நகைசுவையாக இருக்கலாம் ஆனால் அந்த காலத்தில் ஒருவரும் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. முதலீடுகளில் மற்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் போது இவ்வாறான துயரம் நிகழுகிறது.
  11. சந்தை சில சமயம் செய்திகளுக்கு தொடர்பில்லாமல் செயற்படும், அதனை நியாப்படுத்தும் வகையில் சொல்வார்கள் " Good analysis bad trader " https://www.goodreads.com/book/show/100779.Reminiscences_of_a_Stock_Operator இந்த புத்தகத்தில் ஜெசி லிவர்மொரின் பங்கு சந்தை அனுபவங்கள் கூறப்படுகிறது. அதில் ஜெசி லிவர்மோர் அடிசன் கமாக் என்பவர் எவ்வாறு, சந்தை நடவடிக்கையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் ஜோசப் எனும் பங்கு சந்தை, பொருளாதார பற்றி எழுதும் பத்திரிகையாளர், அடிசன் கமாக்கிடம் ஒரு சந்தையின் முக்கியமான தகவலை கூறுவார், வில்லியம் ரொக்கர்பெலோ தனது எரிசக்க்தி பங்கினை ஒவ்வொரு 3/8 அதிகரிப்பிற்கும் 1500 பங்குகள் வீதம் விற்கிறார் என்பதாகும். பத்திரிகையாளரான ஜோசப்பிற்கு அடிசன் பங்கு சந்தை சரிவில் முதலிட்டிருப்பது தெரியும் அதனால் அந்த செய்தியினை கூறியவுடன் அடிசன் தனது பங்கு சந்தை சரிவு முதலீட்டினை அதிகரிப்பார் என எதிர்பாத்திருந்தார் (சாதாரணமாக அனைவரும் அதனையே செய்வார்கள்), ஆனால் அடிசன் அந்த பங்குகளை அதே விலை மாற்றத்தில் அதேயளவில் வாங்கினார். பின்னர் அந்த பங்குகளை கொண்டே பங்கு சந்தை சரிவை ஆரம்பித்து வைத்தார் என குறிப்பிடுகிறார். இங்கு பெரிய வர்த்தகர்கள் சில்லறை வர்த்தகர்களிடமிருந்து இவ்வாறுதான் வேறுபடுகிறார்கள். இந்த பெரிய வர்த்தகர்கள்தான் சந்தையை கட்டுப்படுத்துகிறார்கள், ஆனாலும் சில சமயம் இந்த பெரிய வர்த்தகர்கள் கூட சில பங்குகளில் மாட்டி விடுவார்கள், அந்த பங்கிற்குரிய நிறுவனம் திவாலாகி கொண்டிருக்கும் அதிலிருந்து வெளியேறுவதற்காக தேர்ந்தெடுப்பது சில்லறை வர்த்தகர்களை. செயற்கையாக தற்காலிகமாக பங்கின் விலையை வலிந்து உயர்த்தி கழிவு விலையில் பங்கு வாங்கும் சில்லறை வர்த்தகர்களின் தலையில் கட்டிவிடுவார்கள் இந்த பெரிய வர்த்தகர்கள். இதனை பங்கு சந்தையில் "Dead cat bounce" என்பார்கள்.
  12. மேலே குறிப்பிட்ட தை மாதத்திற்கான நுகர் விலை சுட்டெண் மாதாந்த அதிகரிப்பு, வருடாந்த அதிகரிப்பு நீங்கள் சொன்னது போல 7.5%. https://www.bls.gov/cpi/ அமெரிக்க தேசிய பாதுகாப்பு அலோசகரான சலிவனின் கருத்து வெளியானதை அடுத்து பங்கு சந்தை மற்றும் சில நாணயங்கள் யுரோ உள்ளடங்கலாக மற்றும் பிட் கொயின் என்பவை சரிவை சந்தித்தது ஆனால் மறுவளமாக தங்கமும் அமெரிக்க நாண்யமும் விலை அதிகரித்தது.
  13. இரண்டாவதாக பதிவேற்றிய ஒளிப்பதிவில் நுகர்வோர் விலை சுட்டெண் அறிவிப்பின் பிட் கொயின், தங்கம், SPY சந்தை மாற்றம் சிறிய அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க நுகர்வோர் விலை சுட்டெண் 0.4% ஆனால் நடைமுறை நுகர்வோர் விலை சுட்டெண் 0.6% ஆக வந்திருந்தது, எதிர்பார்க்கப்பட்ட நுகர்வோர் விலை சுட்டெண்ணை விட 0.2% அதிகம், இதன் பிரதிபலிப்பு வட்டி வீதம் அதிகரிப்பாக இருக்கும் என்பதால் பங்கு சந்தையில் சரிவும் தங்கம் பிட் கொயினில் விலை அதிகரிப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், சந்தை எதிர்பார்ப்பிற்கு மாறாக பங்கு சந்தை, தங்கம், பிட் கொயின் என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஐரொப்பிய ஒன்றியம் ஐரோப்பிய மத்திய வங்கி பணமுறிகளை வாங்குவதை மட்டுபடுத்துவதாகவும் பங்குனி மாதத்தில் முற்றாக பணமுறிகளை வாங்குவதை கைவிடுவதாக அறிவித்தது (PEPP) , முதலீட்டாளர்கள் பலரும் எதிர்பார்த்த வட்டி வீத அறிவிப்பு வெளிவரவில்லை, யுரோ நாணயம் சடுதியாக அதிகரித்தது முதலாவது ஒளிப்பதிவில் காட்டப்பட்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது என வரையறுக்க முடியவில்லை, ஆனால் முன்பு பதிவிட்ட எலியட் அலை தொழில்னுட்ப பதிவில் ஐரோப்பிய நாணயம் உயரலாம் என பதிவிட்டிருந்தேன், திங்கள் கிழமை 90 புள்ளிகளும், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவிப்பின் பின்னர் 130 புள்ளிகளுமாக கடந்த வாரம் மொத்தமாக 311 புள்ளிகள் அதிகரித்திருந்தது, 3 வார விலை மாற்றத்தினை 1 வாரத்திலேயே அடைந்தது. அத்துடன் யுரோ நாணய சுட்டெண்ணும் அதிகரித்தது, இது முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த வட்டி வீத அதிகரிப்பில்லாமல் யுரோ நாணயம் விலை அதிகரித்திருந்தது, மறுவளமாக அமெரிக்க நாணயம் எந்தவித மாற்றத்தினையும் எதிர்பாரா அதிகரிப்பான நுகர்வோர் விலை சுட்டெண் ஏற்படுத்தவில்லை, ஏன் என்பது விளங்கவில்லை.
  14. https://www.reallifetrading.com/online-courses இந்த இணையத்தில் இலவசமாக பங்கு வர்த்தகம் மற்றும் நாணய வர்த்தகம் பற்றிய இலவச கல்வி வழங்கப்படுகிறது, ஆரம்பத்தில் 8 இலவச கல்வி போல் காணப்படும் இணையத்தில் நீங்கள் பதிவு செய்த பின்னர் 21 இலவச கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. ஆரம்பக்கல்வியில் (Beginner course)முதல் இரண்டு பாகங்கள்(Module) வரை பார்த்துவிட்டேன், அடிப்படை அறிவை மேலொட்டமாக இலகுவாக எடுத்து சொல்கிறார், சில Affiliate இணையதளங்களை இதில் குறிப்பிடுகிறார், ஆனால் இந்த த்ளம் ஒரு உபயோகமான தளமாக இருக்கும், அத்துடன் பொழுது போக்காகவும் இருக்கும், சுவாரசியமாக சொல்வதற்காக சில மிகைப்படுத்தல் உள்ளதாகக்கருதுகிறேன். இந்த பங்கு 0.055 அவுஸ்திரேலிய டொலரில் முக்கிய வலயமாக உள்ளது என நினைக்கிறேன். மேலே ஒரு இணையத்தளம் இணைத்துள்ளேன், அதிலுள்ள இலவசக்கல்வியை பற்றிய உங்கள் கருத்து என்ன?
  15. EURJPY Monthly chart ஒவ்வொரு மெழுகுதிரியும் 1 மாத கால அளவை கொண்டவையாக உள்ளது, இந்த வரைபடத்தில், இந்த நாணயத்தின் எதிர்கால பெறுமதி எலியட் அலை எனும் தொழில்னுட்பம் மூலம் ஆராயப்பட்டுள்ளது. இந்த நாணய இணை தற்போது ஏறத்தாழ 128.500 கீழாக உள்ளது எதிர்பார்க்கப்படும் விலை 135.000, அவசர வெளியேற்றம் 126.500 கீழாக இடப்படுமாயின் 1:3 என்ற இலாபத்தை எதிர்பார்க்கும் ஒரு வர்த்தக முயற்சியாகும். எதிர்பார்க்கும் விலையினை அடைவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாத காலமாகலாம். இது ஒரு வர்த்தக ஆலோசனை அல்ல. இந்த எலியட் அலை பற்றிய சிறு குறிப்பு இணையத்தில் தேடிய போது, கிடைத்த காணொளியினை கீழ் இணைத்துள்ளேன்.
  16. வருட இறுதிக்குள் பிட் கொயின் 100,000 மேல் செல்லும் என எதிர்வுகூறுகிறார்.
  17. இந்த சம்பவங்களின் பின்னர் எனக்கு Fundamental analysis ஒரு முதலீட்டின் ஒளிமயமான எதிர்காலம் என கூறப்படும் போது எனக்கு ஒரு மோசமான Deja vu போலிருக்கும்.
  18. அந்த வர்த்தகத்திலீடுபட்ட போது எனக்கு தொழில்னுட்ப (Technical) அறிவு இருக்கவில்லை, Fundamental அடிப்படையிலேயே முதலிட்டிருந்தேன். அந்த முதலீட்டு தோல்வியின் பின் அந்த இழப்பினை ஈடு செய்வதற்காக இணையத்தில் மும்முரமாக தேடி ஒரு முதலீட்டு இணையத்தினை கண்டு பிடித்து அதனை தொடர ஆரம்பித்தேன் .அந்த இணையத்தில் ஒரு பங்கினை பற்றி அதிகமாக உரையாடப்பட்டது அந்த பங்கினை பிந்தொடர ஆரம்பித்தேன், ஒரு நாள் சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ( காலை 8 மணிக்கு முன்னதாக இருக்கலாம்) அந்த பங்கு வர்த்தக நடவடிக்கையை இடைநிறுத்துவதாகவும் அது அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதற்கானது என அறிவித்தது. அது ஒரு வெள்ளிக்கிழமை, வார இறுதி முழுவதும் அந்த இணையத்தளத்தில் அந்த பங்கு தொடர்பாக சாதகமான கருத்துகள் குவிந்தது. திங்கள் கிழமை சந்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒன்று அல்லது இரண்டு மணித்தியாலத்திற்கு முன்பாக அது தனது அறிவிப்பை வெளியிட்டது, அது ஒரு செம்பு அகழும் நிறுவனம் அது அவுஸ்திரேலிய நிறுவனமாக இருந்தபோதும், அந்த நிறுவனத்தின் சுரங்கங்கள் பிரேசிலில் அமைந்திருந்தது. சில மாதிரிகளை சேகரித்திருந்தார்கள் அதனடிப்படையிலேயே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் துறைசார் அனுபவமில்லாதலால் அந்த இணையத்தளத்திற்கு சென்று அவர்கள் கூறிய கருத்துகளினடிப்படையில் அந்த பங்கினை வாங்கமுற்பட்டேன். ஏனெனில் அந்த இணையத்தில் அதிகமாகப்போற்றப்படும் ஒருவர் அந்த தகவல் அடிப்படையில் அந்த நிறுவனம் உற்பத்தி ஆரம்பிகும்போது அதன் விலை $1 மேல் செல்லும் என்பதை ஆதாரபூர்வமாக கூறியிருந்தார். இறுதியாக அந்த பங்கு 0.072 சத அளவில் விற்பனையாகியிருந்தது. சந்தை ஆரம்பித்தபோது ஆரம்ப விலை 0.09 சதத்திற்கு வாங்கினேன், விலை அன்றைய நாளிறுதியில் 0.07 இல் இருந்தது மீண்டும் நட்டம். அந்த இணையத்தில் அதுவரை காலமும் அந்த பங்கின் (குறித்த நாள் காலையில் கூட) ஒளிமயமான எதிர்காலம் பற்றி விவாதித்தவர்கள், மாலையில் அதற்கு எதிராக விவாதித்தார்கள், இன்னுமொரு வித்தியாசம் அவர்களது நிலையில் காணப்பட்டது, அந்த தளத்தில் ஒரு பங்கு பற்றி விவாதிக்க வேண்டுமாயின் நீங்கள் அந்த பங்கினை வாங்கி வைத்திருக்கிறீர்களா இல்லையா என்பதையும் மற்றும் உங்கள் நிலைப்பாடு வாங்கல், விற்றல், நடுவுநிலமை என்பதையும் குறிப்பிடவேண்டும். காலைவரை பங்கு வைத்திருப்பதாகவும் அவர்களது நிலைப்பாடு வாங்குவதும் என்று குறிப்பிட்டிருந்தவர்கள் மாலையில் பங்குகள் வைத்திருக்கவில்லை என்றும் அவர்களது நிலைப்பாடு அந்த பங்குகளை விற்றல் என்பதுமாக இருந்தது. அவர்களிடம்தான் அதிக விலைக்கு காலையில் பங்குகளை வாங்கியிருப்பேன் என கருதுகிறேன். அதன் பின் அந்த நடவடிக்கை எதனால் ஏற்பட்டது என இணைய்த்தில் ஆராய்ந்த போது அறிந்து கொண்ட விடயம் Exhaustion Gap https://tradingsim.com/blog/exhaustion-gap/ அதுதான் தொழில்னுட்ப ஆய்வு எனது கவனத்திற்கு வந்தது அதன் பின்னரே அது தொடர்பாக மேலும் மேலும் இணையத்தில் வாசித்தறிந்து கொண்டேன்.
  19. தொழில்னுட்ப அடிப்படையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதால், கிரிப்டோ நீண்ட கால அளவில் நல்ல முதலீடா என்பது தெரியவில்லை, ஆனால் தற்போது ஆரம்ப நல்ல அறிகுறி காட்டுவதாக நம்புகிறேன்(கிரிப்டோ), ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை, சில வேளை அது Dead cat bounce ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தொழில்னுட்ப ரீதியாக சாதகமாகக்காணப்பட்டால் வாங்குவேன் மறு வளமாக பாதகமாகக்காணப்பட்டால் விற்பதாக உத்தேசித்துள்ளேன். (குறுங்கால அடிப்படையில்)
  20. பிட் கொயின் தொழில்னுட்ப ரீதியாக ஆரம்ப நல்ல அறிகுறிகள் காட்டுகிறது, 36000 விலையை தக்க வைத்தால் (தற்சமயம்) குறுங்கால அளவில் சாதகம் என நினைக்கிறேன் அத்துடன் 39000 மற்றும் 44000 விலைகளை கடந்தால் தொழில்னுட்ப ரீதியாக பிட் கொயின் இறங்குமுகம் முடிவுக்கு வருவதாகக்கருதுகிறேன், இது எனது சொந்த கருத்து, வெறும் தொழில்னுட்ப அடிப்படையில் கூறப்படும் இக்கருத்து நிகழ்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. கடந்த தினம் விலை 33000 நெருங்கிய போது அதிக அளவான அலகுகள் விற்பனையாகியுள்ளது, ஆனால் விலை 36000 வரை உயர்ந்துள்ளது, அந்த விலையில் உள்ள வாங்கல்களை காட்டுகிறது, இது சாதகமான விடயம். இதனை மட்டும் அடிப்படையாகக்கொண்டு முடிவு எடுக்க முடியாது, விலை 38300 தொடாமல் கீழிறங்கினால் மீண்டும் 33000 விலையினை நெருங்கும், அப்போது அந்த விலையினில், விலை வீழ்ச்சி தடுக்கப்படாவிட்டால் அடுத்த இலக்கு 30000, 28000. மேலும் இணையவன் கூறிய Fundamental analysis (Bottom up analysis) பார்க்கும் போது இந்த தொழில்னுட்ப ரீதியாக காணப்படும் சாதக நிலை தற்காலிகமானது போல் உள்ளது.
  21. கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment) எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில் பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம். Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன். நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள். மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன் அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன். விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது? ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake) ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை. எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்). நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை. சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது. பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது. பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன்.
  22. மேலோட்டமாக பார்க்கும் போது கிரிப்டோவின் நிலை இப்பொது தொழில்னுட்ப ரீதியாக மிகவும் பாதகமான நிலையில் உள்ளது (வாங்குபவர்களுக்கு), நேற்று அவதானித்தபோது 38000 கீழிறங்கிவிட்டது அலகுகளின் அளவும் அதிகமாகக்காணப்பட்டது, ஆனால் விற்கவில்லை (Short), தற்போது 36650 இல் உள்ளது அடுத்த முக்கிய வலயம் 28000 ஆகும். அதற்கு முன்னராக 39000 வலயத்திற்கு விலை உயரலாம்(Testing) என நினைக்கிறேன். இப்பகுதியில் விற்கலாம் (Short) என உத்தேசித்துள்ளேன். குறிப்பு இதுவரை பிட் கொயின் வாங்கவில்லை, ஆனால் விற்றுள்ளேன.(57000 இல் இலிருந்து கீழ் நோக்கி )
  23. https://www.reuters.com/technology/bitcoin-investors-dig-long-haul-staggering-shift-2022-01-17/ பிட் கொயின் தொடர்பான சாதகமான ஆரம்ப அறிகுறியாக இந்த கட்டுரை உள்ளது, தற்போதய நிலவரத்தில் விலை 45000 கடந்தால் தொழினுட்ப ரீதியாக சாதகமான நிலை உருவாகலாம். ஆனால் தற்போதய நிலையில் பிட் கொயின் பாதகமான நிலையிலேயே காணப்படுவதாக கருதுகிறேன். ஆனால் 39000 விலையில் ( Testing the un tested low) கடந்த முறையை விட அளவு குறைவான அளவிலேயே விற்பனையாகியுள்ளது இது சாதகமான ஒரு விடயம், ஆனால் எதிர்பார்த்த அளவை விட குறைவான சாதகத்தன்மையைக்காட்டுவதால் விலை மீண்டும் 39000 நெருங்கும் ( Re-testing) என எதிர்பார்க்கிறேன் அப்போது விற்கப்படும் அலகுகள் குறைவாக இருந்தால் 38000 விலை கீழிறங்காது, மிகவும் ஒரு சாதகமானநிலை அதன் பின் விலை 45000 கடந்தால் பிட் கொயினை வாங்க தீர்மானித்துள்ளேன். மறுவளமாக விலை 39000 அதிக அலகுகள் விற்கப்பட்டு விலை 38000 விட கீழிறங்கினால் விற்கத்தீர்மானித்துள்ளேன், இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே.
  24. கேம் சொடொப் உடன் ரவியனை ஒப்பிட்டமைக்கான காரணம் நிதி நிலமை, நிர்வாகம், பங்குகளின் உரிமத்தினடிப்படையில். கேம் சொடொப் 23 விலையில் விற்கப்பட்ட ஒரு நிறுவனம் கிட்டதட்ட 10 மடங்கு விலை சடுதியாக வளர்ந்தமைக்கு காரணம் அதன் சந்தையில் மிதக்க விடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை குறைவு (Thin stock), பங்குகளின் Dividend விட capital gain அடிப்படையில் அக்கருத்தை கூறினேன். இன்று பொதுவாக அனைத்து பங்குகளும் வீழ்ச்சி அடைந்துள்ளது அதற்கு கோசான் கூறிய காரணம் பொருத்தமாக இருக்கலாம். சில பங்குகள் மட்டும் உயர்ந்துள்ளன. வட்டி வீதம் குறைக்கப்படும் போது பங்கு சந்தை உயர்வதும் வட்டி வீதம் அதிகரிக்கப்படும் போது பங்கு சந்தை இறங்குவது பொதுவான நடைமுறை. பணச்சந்தையில் வட்டி வீதம் அதிகரிக்கப்படுவது மிகவும் சாதகமானது (Carry Trade). (Hedging) https://www.investopedia.com/terms/c/currencycarrytrade.asp

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.