Everything posted by vasee
-
இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்
இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பாமர மக்களின் உணர்ச்சியினை தூண்டி தமது சுய அரசியல் இலாபம் தேடுபவர்கள், இதற்கு மதம் இனம் என்பவற்றினை பயன்படுத்துகிறார்கள். அதிக கல்வியறிவுள்ள நாடாக இருந்தும்இலங்கையில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள பாமர மக்களை தூண்டிய அரசியல்வாதிகளால் இலங்கை எனும் நாடு உருவாகி 75 ஆண்டுகளின் பின்னர் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனையாகி கொண்டிருக்கின்ற கண்கூடான உதாரணத்தினை பார்த்தும் இந்திய அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகளை பின்பற்றுகின்றனர். ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் ஒற்றுமை முக்கியம், இவர்களுக்கு ஊர் இரண்டுபட்டால்தான் இலாபம், இப்படியான அரசியல்வாதிகள் பெரும்பான்மை பெறுவது யார் தவறு?
-
சிட்னியில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் கொலை செய்யவும் உயிரிழக்கவும் தயாராகயிருந்தனர் - அவுஸ்திரேலிய காவல்துறை
வயது குறைவானவர்களுக்கு தண்டனை தளர்வு உள்ளது என கருதுகிறேன், இந்த வயதில் சரி எது தவறு என தெரியாதவர்களாக பொதுவாக உள்ளனர் ஆனால் பெற்றோர் முடிந்தவரை சரியானவற்றையே தமது குழந்தைகளுக்கு வலியுறுத்துகிறார்கள், ஆனாலும் இந்த வயதில் அறியாமையால் செய்யும் தவறுகளுக்கு சட்ட தளர்வு வழங்குகிறார்கள். குறித்த மதத்தில் குழந்தைகளை எவ்வாறு எம்மவர்கள் கல்வியினை திணிப்ப்தனை போல மதத்தினை திணீக்கிறார்கள், அவர்களாக சுயமாக எந்த தெரிவும் இருப்பதில்லை, இவ்வாறு வலிந்து திணிக்கப்படும் விடயங்களினால் உள்ள சில தவறான முடிவுகளை அதில் தீமைகளை பற்றி தெரியாமல் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்காகவே பெற்றோர்கள் இவ்வாறு மதம், கல்வி என்ப்வற்றினை திணிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதனை பின்பற்றி எடுக்கும் தவறான முடுவுகளுக்கு பெற்றோர்களே பொறுப்பெடுக்கவேண்டும், சாகச காட்சிகளை செய்பவர்கள் இதனை நீங்களாக வீட்டில் செய்யகூடாது என எச்சரிப்பது போல பெற்றவர்கள் தாம் தமது குழந்தைகளிடம் திணிக்கும் விடயங்களினால் அவர்கள் தவறான முடிவினை எடுக்காது கவனிக்கும் பொறுப்பு பெற்றவர்களுக்கு உள்ளது. உண்மையான தண்டனை பெற்றவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும், ஏனெனில் அவ்வாறு ஒரு விடயத்தினை அவர்கள் பின்பற்றி இருக்காவிட்டால் அவர்கள் பின்னர் அந்த மதத்தின் பேரால் தவறான முடிவுகளை எடுத்திருக்கமாட்டார்கள்.
-
அரச வருமானம் தொடர்பில் நெருக்கடி நிலை! பணத்தை அச்சிட முடியாத நிலையில் இலங்கை
https://www.bilibili.com/video/BV1hH4y1N7SS/?buvid=YA41D4A2800104D54100BF395D146E754284&from_spmid=main.space-contribution.0.0&is_story_h5=false&mid=OtB05gw9mksSY4DcBCOFBA%3D%3D&p=1&plat_id=116&share_from=ugc&share_medium=iphone&share_plat=ios&share_session_id=3843C766-F363-41B0-AAA2-2A6EB38AD0A4&share_source=COPY&share_tag=s_i&spmid=main.ugc-video-detail.0.0×tamp=1713860897&unique_k=UjFf8MR&up_id=249228804 ஒரு சீன நண்பர் எனக்கு இந்த பதிவை அனுப்பி, இலங்கையில் செலவு அதிகமா எனக்கேட்டார். கருத்திடும் பகுதியில் பல பக்க சார்பற்ற சுவாரசியமான தகவல்கள் உண்டு (எச்சரிக்கை சில பார்வையாளர்களின் மனதை புண்படுத்தலாம்).
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
யாழ்ப்பாணம் மயோசின் காலத்தில் கடல் உயிரினங்களின் இறந்த உடல்களின் எச்சங்கள் மூலம், பின்னர் தரை உயர்வால் உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் (கிட்டதட்ட 20 மில்லியன் ஆண்டுகள்). அதனால் யாழ்ப்பாணம் சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசம் என வகைப்படுத்துகிறார்கள் (அதனால நிலத்தடி நீர் கொண்டுள்ளது). இந்த சுண்ணாம்புக்கற்கள் உறுதியானவை இல்லை, அதனாலேயே சில குகை அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இலகுவாக காணப்படுகிறது. இந்த சீமெந்து தயாரிப்பு நிலத்தடி நீரினையும் யாழ்ப்பாண நிலப்பரப்பின் உறுதித்தன்மையினையும் பாதிக்கும் அத்துடன் காற்று மாசுபட்டுதலலால் மக்களுக்கு பெருமளவில் சுவாச சம்பந்தமான நோய் ஏற்படுவதுடன் புற்றுநோயும் ஏற்படலாம். தற்போது சுவாச சம்பந்தமான நோய் உலகில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது, இந்த துறை ஒரு செல்வம் கொழிக்கும் ஒரு துறையாக உள்ளது இந்த நோய் ஒரு நீண்ட கால நோயகிவிடுவதால் இந்த வியாதிகளுக்கான மருந்து உற்பத்தி ஒவ்வொரு ஆண்டிற்கும் அதிகரித்து செல்லுகிறது. இந்த வேலை வாய்ப்புகள் மூலம் பெறுவதினை விட பல மடங்கு அந்த மக்கள் இழப்பார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்திலிருந்து முன்னரும் கிளிங்கரில் (சீமெந்தாக இல்லாமல்) தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுவதாக நினைவுள்ளது சின்ன வயதில் தெருவில் பச்சை சிறிய கற்கள் பார்த்த நினைவுள்ளது. மக்கள் சிந்தனையில்லாத தலைவர்கள் இருக்கும்வரை மக்கள் போராட்டங்களால் எந்த பிரயோசனமும் கிடையாது என்றே நினைக்கிறேன், கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைபட்டே ஆகவேண்டும் எனும் நிலையில் எமது மக்களின் நிலை!
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
இதற்கு காரணம் மேற்கு நாடுகளின் தடைதான் என கூறுகிறார்கள், தடைக்கு முன்னரான கால கட்டத்தில் இரஸ்சிய பண முதலைகள் தமது வளங்களை மேற்கு நாடுகளில் முடக்கியுள்ளார்கள் (அதனால் மேற்கு நாடுகளுக்கும் நன்மை) தற்போது இந்த நிலமை இல்லாததால் அந்த வளஙகல் உள்நாட்டிலேயே அதன் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
-
விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு
தயவு செய்து நான் குறிப்பிட்டதாக கூறிய விடயத்தினை குறிப்பிட்டுக்காட்ட முடியுமா? நான் கூறிய விடயம் பலர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ஐ எம் எப் இலங்கையினை கட்டாயப்படுத்தும் என்பதாக கூறியதற்கு, ஐ எம் எப் ஒரு வட்டிக்கு காசு கொடுப்பவன் போல அவன் தனது காசினை மீழ பெறுவதற்கு (முதலுக்கு மோசமில்லாமல்) குறித்த நாடு நிகர பாதீடு, வரி அதிகரிப்பு, அரச உடமையினை தனியார் மயப்படுத்தல் என செலவினை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுட வலியுறுத்தும். படை குறைப்பு, செலவு குறைப்புத்தான் அதனை ஐ எம் எப் கோருவது சகஜமான விடயமே ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு விடயத்தில் தலையிடும் அளவுக்கு ஐ எம் எப் இருக்குமா? என அந்த காலகட்டத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம் அதனால் அவ்வாறு கூறினேனோ தெரியாது ஆனால் எனது நினைவில் நீங்கள் கூறுவது போல எதுவும் இல்லை அதனாலேயே நான் கூறிய விடயத்தினை மீள் பதிவிட்டீர்களென்றால் நன்றாக இருக்கும். எனது தவறினை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகுந்த சந்தோசமே (உண்மையாகத்தான் கூறுகிறேன்) ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே (அப்பதிவினை) எந்த அடிப்படையில் கூறினேன் என்பதனை நானே உணர அதன் மூலம் வழிகிடைக்கும். நான் எப்போதும் கூறுவது போல எனது கருத்து தவறானவையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதால் அதனை ஒரு கருத்தாகவே பார்க்கவேண்டும் (ஆலோசனையாக அல்ல😁).
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
கப்பித்தான் கூறியுள்ள இலக்கம் 1 இலக்கம் 2 அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக கட்டாயம் இருக்கவேண்டும், ஒருவர் பொதுவான அதிகாரம் ஒன்றினை வழங்கியுள்ளார் அங்குள்ளவர் அவரது காணியினை சுயமாக விற்றுவிட்டதாக ஒரு வதந்தி உலவுகிறது அது அதன் உரிமையாளருக்கே தெரியாது என்பதாக. POWER OF ATTORNEY REVOCATION DOCUMENT Principal's Information: Name: [Your Full Name] Address: [Your Address] Contact Information: [Your Phone Number and Email Address] Attorney-in-Fact's Information: Name: [Attorney-in-Fact's Full Name] Address: [Attorney-in-Fact's Address] Contact Information: [Attorney-in-Fact's Phone Number and Email Address] Original Power of Attorney Details: Date of Execution: [Date the Original Power of Attorney was Signed] Place of Execution: [Place where the Power of Attorney was executed] Revocation Statement: I, [Your Full Name], hereby revoke, cancel, and annul all powers and authority granted to [Attorney-in-Fact's Full Name] under the power of attorney executed on [Original Date of Execution], effective immediately. This revocation applies to all acts, whether financial, legal, or otherwise, that were authorized under the aforementioned power of attorney document. Reason for Revocation (Optional): [Briefly state any reasons for the revocation, if you wish to disclose them] Notification: A copy of this revocation will be provided to [Attorney-in-Fact's Full Name] and all third parties with whom the power of attorney may have been previously shared or registered, including [list any banks, financial institutions, government agencies, etc.]. Signature: Signed on this ___ day of [Month], [Year]. [Your Full Name, as Principal] Witnesses (If required by law): Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Witness Name: __________________________ Address: ________________________________ Signature: ______________________________ Date: __________________________________ Notarization (If required by law): On this ___ day of [Month], [Year], before me, a notary public, personally appeared [Your Full Name], known to me (or satisfactorily proven) to be the person whose name is subscribed to the within the instrument and acknowledged that they executed the same for the purposes therein contained. In witness whereof, I hereunto set my hand and official seal. [Notary Public's Signature] [Notary's Printed Name] My Commission Expires: ___________________ Instructions: Make sure to fill in all brackets ([ ]) with the relevant information. Check if your state or country requires the revocation to be witnessed or notarized. Distribute copies as described in the "Notification" section to ensure all relevant parties are informed of the revocation. This document template should help you formally cancel the power of attorney. For complex situations or legal advice, consult with a qualified attorney. மேலே இணத்துள்ள ஆவணம் ஒரு முழுமையான சட்ட ஆவணம் அல்ல, ஒரு மாதிரி ஆவணம் மட்டுமே, மேலே குறிப்பிட்டது போல யாராவது முழு அதிகாரம் வழங்கியிருப்பின் அதனை இரத்து செய்வதற்கான மாதிரி வடிவம் மட்டுமே.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
பவளப்பாறை பாதுகாப்பிற்காக மேலை நாடுகளில் (கடல் விலங்கியல்) பெருமளவு பணம் நேரம் என்பவற்றை செலவு செய்து அதனை காப்பாற்றுகிறார்கள், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஒரு தொலைநோக்கு சிந்தனை இன்றி தமது மண்ணை அழிப்பதற்கு முன்னிற்கும் பனத்திற்காக விலைபோன அம்மக்களின் பிரதிநிதிகள், இதுதான் எமது மக்களின் நிலை.
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
இல்லை, எனக்கு யாரிவர் என்றே தெரியாது, சும்மா பொதுவாகக்கூறினேன்.
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
கோசான் கவனத்திற்கு, டக்ளஸ் பயணம் செல்லும் பாதை மண் சாலையாக உள்ளது😁,
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
இது ஒரு முகாமைத்துவம் சம்பந்தப்பட்டதல்லவா? இதற்கு நல்ல தலமைப்பண்புள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறப்பாகும் என கருதுகிறேன்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நன்றி ரஞ்சித் இணைப்பிற்கு, அந்த பெண்மணி செய்ததை விட அவரை தாக்கியவர்கள்தான் மாவிரர்களையும், விடுதலை போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
நன்றிகள் கிருபன், ரசோதரன். ELM எனப்படும் வகை கற்றல் முறையினை எமது வழமையான கல்வி முறையினுடன் இணைத்து பாடசாலைகள் கற்பிக்கவேண்டும். அதன்மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை (பெட்டிக்குள்ளிருந்து சிந்திக்கும் நிலையில் இருந்து மாற்றலாம்) மேம்படுத்தலாம், நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அறிவினை இது வழங்கும்.அதன்மூலம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை (பெட்டிக்குள்ளிருந்து சிந்திக்கும் நிலையில் இருந்து மாற்றலாம்) நடைமுறை பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான அறிவினை இது வழங்கும்.
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
கிருபன், இவர் இலங்கையரா? இந்த கட்டுரையாளர் பிரச்சினைகளை மிகவும் அறிவுபூர்வமாக அணுகுகிறார். எமது கல்வி சார் சமூகத்தில் இப்படி இருப்பது ஒரு நல்ல விடயம். பாடசாலைகளின் செயற்திறனற்ற நிலையே இவ்வாறான தவறுகள் நிகழ காரணமாக இருக்கின்றது, தவறுகள் தெரிந்தோ அல்லது அது தவறு என தெரியாத நிலையில் நிகழும் போது பாடசாலைகளின் தவறுகள் தண்டிக்கப்படவேண்டியவை எனும் நிலையிலேயே செயற்படுகிறார்கள். இவ்வாறான நிலை தவறு என உணர்ந்தாலும் அதனை நியாயப்படுத்துவதிலும், தவறு செய்வதென்பது ஒரு மிக பிழையான விடயமாக பார்க்கப்படுகிறது அதற்கு பாடசாலை பெறுபேற்களைப்போல அணுகுகிறார்கள். தவறுக்கு மன்னிப்புகோருவது என்பது அதற்கான முழுமையான பொறுப்பினை ஏற்பதாகும், சமூகத்தில் படித்த நல்ல நிலையில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம் தாம் மன்னிப்புகோருவதால் தாம் தவறிழைத்தவர்கள் (ஆவர்களது எண்ணவோட்டத்தில் அது மோசமான விடயமாக பார்க்கிறார்கள்)ஆகிவிடுவோம் எனும் அச்சமே மேலோங்கியிருக்கும், அவர்கள் தமது தவறுகளை நியாயப்படுத்துவதில் கவனம் செலுட்துவதால் அவர்களது முன்னேற்றம் தடைப்பட்டு ஒரு வட்டத்திற்குள் தொடர்ச்சியாக பயணப்படும் நிலையே காணப்படும். அதனை தவிர்க்க பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டும் அடுத்த தவறை செய்கிறார்கள். அதனால் அவர்கள் நேர்மையினை இழக்கிறார்கள், இவற்றிற்கெல்லாம் காரணம் பாடசாலைகள், தவறு என்பதற்கான சரியான புரிதலுடன் இருக்கவேண்டும், அவ்வாறு ஏற்பட்டால் பாதிக்கப்படும் மாணவர்களையும் தவறு செய்த மாணவர்களையும் புரிந்துணர்வுடன் அரவணைது செல்லும் நிலை உருவாகும்.
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
இலங்கையின் பங்களாதேசத்திற்கான துடுப்பாட்ட சுற்றுப்பயணம் யூரியூப்பில் நேரலை செய்யப்பட்டிருந்த்து, அதில் போட்டியினை விட வங்கதேச இரசிகர்கள் இலங்கை இரசிகர்களுக்கிடையே நிகழ்ந்த வாக்குவாதம் மிகவும் சுவாரசிய்மாக இருந்தது😁.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
இந்த நிறுவனத்தின் சூரிய மின் தகடுகள் இங்கும் பொருத்துகிறார்கள், நல்ல தரமான சூரிய மின் தகடு, அவுஸ்ரேலியாவினை விட இலங்கையில் உள்ள சூரிய மின் தகடு பொருத்துனர்கள் புதிய சூரிய மின் தகடுகளை பொருத்துகிறார்கள், ஆனாலும் விலை கிட்டதட்ட ஒரே அளவில் உள்ளது. (தற்போதும் அதிக பட்சமாக 400W வினத்திறன் கொண்ட மின் தகடுகளே இங்குள்ள நிறுவனங்கள் பொருத்துகிறார்கள் என கருதுகிறேன், எனது கருத்து தவறாக இருக்கலாம்), இங்கு பெரும்பாலும் இந்தியர்கள் இந்த வகை நிறுவனங்களை பெரும்பாலும் நடத்துகிறார்கள்.
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
நன்றி ஜஸ்ரின் உங்கள் கருத்திற்கு, ஏராளன், இன்னும் உங்கள் காணொளியினை பார்க்கவில்லை ஆனாலும் சூரிய மின் தகடு பொருத்துதல் தொடர்பான சில சொந்த அனுபவங்களை பகிற்கிறேன். தற்போது உள்ள ஒரு தகடு கிட்டதட்ட 390W வலுவை கொண்டது, எனது வீட்டில் பொருத்தும் காலத்தில் 190W ஆக இருந்ததாக நினைவுள்ளது. 11 தகடுகள் 2.1KW மின் வலுவினை கொண்டதாக பொருத்தப்பட்டது ஆரம்பத்தில் நாளொன்றிற்கு 12KW சக்தியினை பிறப்பித்தது, இலங்கை போன்று பூமத்திய ரேகையில் அவுஸ்ரேலியா இல்லை, அதனால் பருவகால மாற்றத்திற்கு ஏற்ப அதன் வலுப்பிறப்பிக்கும் சக்தி வேறுபடும். நாளொன்றிற்கு உங்கள் சூரிய மின் த்கடுகள் அதனை விட சராசரியாக 4 மடங்கு மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் என கூறுகிறார்கள் ஆனால் நடைமுறையில் அது சற்று கூடுதலாக இருக்கும். ஆண்டொன்றிற்கு 0.5% -0.8% அதன் மின் உற்பத்திதிறன் குறைவடைவதாக கூறுகிறார்கள். inverter 10 ஆண்டு காப்புறுதியும் சூரிய மின் தகடு 15 ஆண்டு காப்புறுதியும் வழங்குகிறார்கள், எனது inverter காலாவதியாகிவிட்டது ஆனாலும் தொடர்ந்து இயங்கிறது, உறவினர் ஒருவரது inverter சில வருடங்களிலேயே பழுதாகிவிட்டதாக கூறினார். இரண்டாம் தர மிந்தகடுகள் 15 ஆண்டுகளின் பின்னர் 80% இயங்குதிறனுடன் காணப்படும் அது அடுத்த 10 வருடங்கள் வரை இயங்கும் ஆனால் உத்தரவாதம் இல்லை. அதனால் இரண்டாந்தர மின் தகடு இலாபமா என்பதனை பார்த்து வாங்கலாம் ஆனால் அது உத்தரவாதம் இல்லை. எனது சூரிய மின் தகட்டினை இன்வேட்டர் செயலிழக்கும் வரை (10 வருட உத்தரவாதம், தற்போது 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது) அதனது செயற்பாட்டு காலமான 25 வருடங்கள் வரை உபயோகிக்க உத்தேசித்துள்ளேன், காரணம் சுற்று சூழல் ஆர்வத்தினால் அல்ல அதனை மாற்றீடு செய்வதால் இலாபம் ஏற்படாமல் மேலதிக பணவிரயம், ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை மாற்றீடு செய்கிறார்கள் அதன் இயங்குநிலையிலேயே. அவஸ்ரேலியாவிலிருந்து வரும் இரண்டாம் தர சூரிய மின் தகடுகளின் அதிக பட்ச உபயோகிக்கப்பட்ட காலம் 17 வருடங்கள், ஆனால் பெரும்பாலான சூரிய மின் தகடுகள் அந்த காலத்தினை விட குறைவாக இருப்பதற்கே வாய்ப்புள்ளது. இங்கு விக்ரோரியா மானிலத்தில் மட்டும் சூரிய மின் தகடு மீழ் சுத்திகரிப்பு தடை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் தனியார் பணம் பெற்று பழைய மின் தகடுகளை எடுத்து செல்வார்கள், இலங்கையில் அவ்வாறான பிரச்சினை வராது என கருதுகிறேன். இங்கு ஒரு அலகு மின்சாரம் 0.42 சதத்திற்கு வழங்குகிறார்கள், நாளொன்ற்றிற்கு சேவைக்கட்டணமாக 0.98 சதம் பெறிகிறார்கள் உங்களது மேலதிக சூரிய மின்சாரம், மின்சார சபை மின்சாரத்திற்கு செல்லும் அதற்கு மின் அலகொன்றிற்கு 0.05 சதம் வழங்குகிறார்கள். மின்சாரம் தடைப்பட்டால் சூரிய மின் தகட்டின் மூலம் வரும் மின்சாரம் உடனடியாக நின்றுவிடும், காரணம் அது திருத்த வேலைகளில் ஈடுபடும் மின்சார சபை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சூரிய மின் தகட்டுடன் பற்றரி பொருத்தினால் மின் தடைப்பட்டாலும் மின்சார வழங்கலை தொடர்ந்து பெறலாம் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதில் சேமிக்கப்படும். புதிய சூரிய மின் தகடும் இன்வேட்டரும் பொருத்தும் செலவை இங்குள்ள மின் கட்டணத்தினடிப்படயில் அந்த செலவினை இரண்டு ஆண்டுகளிலேயே உங்களுக்கு வழங்கிவிடும் இந்த சூரிய மின் தகடுகள், பற்றரி இணைப்பு (10 வருட உத்தரவாதம் 80% செயற்திறன்) இலாபம் இல்லை, இந்த தரவு அவுஸ்ரேலிய மின்சார கட்டணத்தினடிப்படையில் (சிலர் மின்சார கார் வைத்திருப்பவர்கள் இலாபகரமானது என கூறுகிறார்கள் அதன் உண்மைத்தன்மை தெரியாது). இலங்கை மின் கட்டணத்திற்கு இந்த மின் தகடு பொருத்துவது இலாபமா என்பதனை நீங்கள் கணிக்க வேண்டும். உங்கள் வீட்டில் நீங்கள் மின் திருத்த வேலையில் ஈடுபடும்போது பிரதான ஆழியின் இணைப்பை துண்டிப்பதுடன் சூரிய மின் தகட்டின் பிரதான ஆழியின் (சுவிட்ச்) இணைப்பையும் துண்டிக்கவேண்டும்.
-
தோற்ற வழு
நான் சிறுவனாக இருந்தபோது கற்கண்டு எனும் (தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் சஞ்சிகை) சஞ்சிகையில் இத்தாலிய ஓவியர் ஒருவர் (பெயர் நினைவில்லை) பல சிறந்த ஓவியங்களை போல் போலி ஓவியம் தயாரிப்பவர் எனவும் அந்த ஓவியங்கள் உண்மையான ஓவியங்களை விடவும் சிறப்பாக இருக்கும் என வாசித்த நினைவுள்ளது. கலைப்படைப்புக்களை உருவாக்குபவர்கள் வலது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் எனவும் அவர்கள் தூரதரிசன பார்வை (Big picture) கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என வாசித்த நினைவுள்ளது. தி இ மித் எனும் புத்தகத்தில் வியாபாரம் தொடங்குபவர்கள் ஏன் தோற்றுபோகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவம் ஒன்றை விவரிப்பார் அதில் ஒரு சிறந்த பேக்கர் ஒரு பேக்கரியினை ஆரம்பித்து மிகவும் சிரமப்படுவார், அதற்கு காரணம் அவர் ஒரு டெக்னீசியன் என குறிப்பிடுவார். சிறந்த வர்த்தகர்கள் தொலைநோகுடையவர்கள் என கூறுகிறார். சாதாரண கலைஞர்களுக்குரிய வலது மூளை ஆதிக்கத்துடன் இடது மூளை ஆதிக்க டெக்னீசியனாக அந்த இத்தாலிய ஓவியர் இருப்பார் என நினைக்கிறேன், அதனாலேயே மிக நேர்த்தியாக ஒன்றை பிரதி எடுக்க அவரால் முடிந்திருக்கிறது,
-
சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
சுருக்கமாக எழுதுவதால் சில புரிந்துணர்வு சிக்கல் ஏற்படுகிறது என்பதனை ஜஸ்ரின் கருத்தின் மூலம் உணர்கிறேன், சூரிய மின் தகடு மீழ்சுத்திகரிப்பில் கண்ணாடியும் அலுமினியமும் முற்றாக சுத்திகரிக்க முடியும் அதில் அலுமினியம் பொருளாதார ரீதியில் சாதகமானது அதனடிப்படையில் கருத்து வைக்கப்பட்டது. லீட், கட்மியம் போன்ற சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தும் மூலகங்களும் அதில் அடங்கியுள்ளது. சூரிய மின் தகடுகளுக்கு 15 வருட உத்தரவாதம் வழங்குகிறார்கள் அதன் பின்னர் அதன் செயற்பாடு குறைவடையத்தொடங்கும்.
-
தோற்ற வழு
அந்த விடயத்தில் எனக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது,
-
தோற்ற வழு
https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756 இந்த திரியினை திசை திருப்புவது என் நோக்கமல்ல, இந்த இணைப்பினை இணையத்தில் கண்டேன் ப்ல சுவாரசியமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளது.
-
தோற்ற வழு
உண்மையான ஒருவரின் அடையாளத்தினை திருடி (உண்மையானவர் இங்கிலாந்தில் வாழ்கிறார்) அவுஸ்ரேலியாவில் அவர் வேலை பெற்றிருக்கிறார், தற்போதய தொழினுட்ப வளர்ச்சியில் இது எவ்வாறு சாத்தியமானது என தெரியவில்லை (இது நடந்தது கிட்டதட்ட 10 வருடங்கள் இருக்கும்) நாடுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் நிகழும் காலத்தில் எவ்வாறு இதனை சாத்தியப்படுத்தினார் என்பது தெரியவில்லை. அவரிடம் துறைசார் திறைமை இருந்துள்ளது என்பதனை அவருடன் பணிபுரிந்தவர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள், அதனாலேயே அவரலால் சமாளித்திருக்க முடிந்திருக்கிறது, முன்னா பாய் எம்பிபிஸ் அவரை தூண்டியிருக்கக்கூடும்😁.