Everything posted by புலவர்
-
10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி - ஜேர்மனியில் சம்பவம்!
கருணைக் கொலை செய்தாரோ தெரியவில்லை. ஆனால்சட்டத்தை மீறுவதால் எற்படும் விளைவுகளை அவர் சிந்திதிருக்க வேண்டும். அல்லது கடுமையான மன அழுத்தத்ததினால் இப்படிச்செய்ததாக அவர் சொல்லியிருக்கிறார் அவருக்கு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
-
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
- பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
https://www.facebook.com/share/v/17Pjpja7KA/- ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லா 2 கோடிக்கு தங்கம் வாங்க முயற்சித்தார் என்றால் அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு? அவர் அரசியல்திவிர என்ன வேலை அல்லது தொழில் செய்கிறார். அவரது மாதவருமானம் எவ்வளவு?- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
https://www.facebook.com/share/17Ssyf9XgK/?mibextid=wwXIfrபோலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு ஜாமீன் கானா வின் அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் - Ghanaian Cedi (GHS) (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களை இவர்களிடமிருந்து கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.- தவெக உட்கட்சி மோதல்
https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Includeகரூர் நெரிசல் சம்பவம்.. சிபிஐ அதிரடி! புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமாருக்கு நேரில் ஆஜராக சம்மன் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/karur-crowd-incident-cbi-summons-tamilaga-vettri-kazhagam-bussy-anand-and-ctr-nirmal-kumar-for-inqu-745795.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Left_Include- யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
இந்தத் திராவிடக் கொத்தடிமை வயிறுமுத்துதான் பாட்டு எழுதி படம் தயாரிக்க வேண்டிய நிலையிலா நாம் இருக்கிறோம்.இவரால் எமது வலியையும் சோகத்தையும் கடத்த முடியுமா?தமிழீழத்தின் தேசிய கீதத்தை நானே எழுதுவேன் என்று முந்திரிக்கொடடை மாதிரி சொன்னவர்தானே இவர்.புலிகள் இவரை ஏறெடுத்தும்பார்க்கவில்லை.ஆனானப்பட்ட வியையின் கட்சிப்பாடலுக்கே திமுக கொத்தடிமை வயிறுமுத்துவைப் புறக்கணித்து ஈழக்கவிஞரை வைத்து எழுதினார்கள்.அதுசரி முள்ளிவாயக்கால் பரணி எழுதுகிறேன் என்கடந்தமுறை வந்த போது சொன்னார் எழுதிமுடித்து விட்டாரா?அல்லது ஆரிய உதடு உன்னது திராவிட உதடு என்னது என்று என்று எழுதிக்கொண்டிருக்கிறார?தாயகத்தில் நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள்.- தவெக உட்கட்சி மோதல்
திராவிடம் சாதனையத்தான் கரூரில் பார்த்தோமே!பெரியார் செய்த பகுத்தறிவுப் புரட்சி இதுதான்.ஆனால் பெரியாரைப் மின்பற்றாத கேரளாவில் நடிகனைப் பார்ப்பதற்கு போய் யாரும் சாகமாட்டார்கள்.அவர்கள் திராவிடர்கள் என்று தம்மைப் போலியாகச் சொல்லிக் கொள்வதில்லை.அங்கு மலையாளி மட்டும்தான்.- தவெக உட்கட்சி மோதல்
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பெரும்பாலான போட்டிகளை மழைதான் விளையாடுது. இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளின் மழைக்காலங்களில் ஏன் இந்தப் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.காசைக் கொடுத்து வேலைக்கு லீவுபோட்டு போயப்பார்க்கிறவர்களுக்கு இது பெரிய ஏமாற்றம்.தங்ங்கள் விரும்பிய அணி லவல்லுதோ இல்லையோ ஒரு கடுமையாகன போட்டயைப்பார்த்த திருப்தியாவது இருக்கவேண்டும் அல்லவா?- தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்
vஎது செருப்பு தைச்சு உடுப்பு தைச்சு உழைச்ச காசில் வாங்கிய தங்கத்தைப்பறிப்பதற்காகவா?அது சரி இவ்வளவு காலமும் இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதியும் ஏன் பேசவில்லை. அவர்பேசாவிட்டாலும் இந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் பேசாமல்விட்டிருக்க மாட்டார்களே. இப்பொழுது இவரின் வாலைப்பிடித்துக் கொண்டு மாணிக்கங்கள் ஒவ்வொருவராக வெளியில்வருகிறாரகள் போல் தெரிகிறது.- தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!
இதல்லாம் ஒரு தீபாவளிச்செய்தியா ?எங்க சம்பந்தர் ஐயாவின் செய்திக்கு கிட்ட நிற்க ஏலுமோ?- கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அவன் பிரபல கொலைகாரன் அல்ல, பிரபலமாக இருப்பதால் கொலைகாரன்; அவனுக்குக் கூட்டம் பிடிக்காது; அதுவும் தன்னைப் பார்க்க எதற்கு இத்தனைக் கூட்டம் என ஆச்சரியம் அவனுக்கு; தன்னை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என பார்க்க டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்; கடும்வெயிலில் காக்க விட்டான், கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில் அப்படியே நின்றார்கள்; தூக்கித் தூர எறிந்தான், பந்துபோல் அவனிடமே திரும்பி வந்தார்கள்; நீரின்றி நா வரளவிட்டான், அவனைப் பார்த்தவுடன் நாவாலேயே வாலாட்டினார்கள்! அவனுக்கு ஒரே மகிழ்ச்சி; தன் ஊர்வலங்களில் அவ்வப்போது ஓரிருவரைக் கொன்று பழகினான்; யாரும் கணக்கு பார்க்கவில்லை, கண்டும்கொள்ளவில்லை! கொலைகாரன் குதூகலமானான், விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது! மதியம் 12க்கு வருகிறேன் என சொன்னவனைப் பார்க்க, இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்! அவனோ பகலிலும் தூங்கிவிட்டு இரவு 7.30க்கு 'சாவ'காசமாக வந்தான்! சாவு வண்டியில் சனியன் போல் கூட்டம் புகுந்தான்! முகத்தை மூடியும் காட்டியும் குழந்தைகளிடம் நாம் விளையாடுவதைபோல, தன் அடிமைகளிடம் விளையாடினான்; அவர்களைக் கதறவைத்துச் சிரித்தான்; தன்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தவிப்பதைக்கண்டு ரசித்தான்! உலகில் முதல்முறையாக, கொலையாகப் போகிறவர்கள் கொலைகாரனைப் பார்க்க ஆசை ஆசையாய் வந்திருந்தார்கள்! காத்திருந்தார்கள்! அவனைப் பார்த்தாலே பாக்கியம் என வந்தவர்களில், அவன் கையால் சாகும் பாக்கியம் 40 பேருக்கு மட்டுமே வாய்த்தது; முகத்தில் வாயில் வயிற்றில் மிதிபட்டார்கள்; உடல் பிய்ந்து, மணிக் கணக்காக அடக்கி வைத்திருந்த மலமும் சிறுநீரும் தெருவில் பாய்ந்தது! குழந்தைகள் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்கள்! பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது! வீடு போய்ச்சேர்ந்த அடிமைகளில் சிலர், அடுத்த கூட்டத்திலாவது போய்ச்சேர நமக்கு லக் அடிக்கிறதா பார்ப்போம் என முனகினார்கள்! வேன் மோதி திருப்பதி சென்ற பக்தர்கள் 4 பேர் பலி என செய்திகளில் வருமே, அந்த பக்தர்களை ஏழுமலையான் அம்போ என விட்டுவிடுவார்; ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல; நான்காவது நாள் வீடியோவில் காட்சி தந்தான்; நாற்பதாவது நாள் அக்கவுண்டில் காசு தந்தான்; குழந்தைகளை இழந்தவர்கள் சிரித்தபடியே பேசினார்கள்! மகன்களை இழந்தவர்கள் மனதார வாழ்த்தினார்கள்! மனமுடைந்த ஒரு தாய் அய்யோ தூக்கிக் கொடுக்க இன்னொரு புள்ள இல்லாம போச்சே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் போல வருந்தினார்! ஒரு அண்ணன், தம்பி செத்தா என்னங்க எங்க அண்ணன் கூட்டத்துல சாகுறது வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி நேரா சொர்கம்தான் என்றார். யாரையும் பலிகொடுக்காத ஒருவர் தன் துரதிருஷ்டத்தை நொந்து கொண்டார்! எப்படிடா தப்பிச்சு வந்த என தன் பையனை அடித்தார்! தவளைகள் பாம்பின்மேல் முழுமையாய் காதல் கொண்டிருந்தன! பட்டாம்பூச்சிகள் பல்லியைப் பார்த்துப் பல்லிளித்தன! ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியில், கொலைகாரனின் அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது! கொலைசெய்யும் நேரம்போக மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும் மட்டுமே இருக்கும் கொலைகாரன், தன் ரத்தம் தோய்ந்த பற்கள் தெரிய சொன்னான் "ஐயாம் வெயிட்டிங்...." -டான் அசோக் 19 அக்டோபர் 2025- கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் யூரியூப்பர்களாக மாறிக் கொண்டு வருகிறார்கள்.- Bond Master(பொண்ட் மாஸ்ரர்.
பொண்ட் இன்ஸ்ரியூட் என்று யாழ் பெரியஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்தது. கொட்டடியிலும் இருந்ததாகக் கேள்வி.நான் அவரிடம் படிக்கவில்லை. ஆனால் அவருடைய ரியூட்டரியில் படித்தேன் யாழில் உள்ள பிரபலமான ஆசிரியர்களை அழைத்து வந்து பாடம் நடத்துவார். அவர்O/L இற்குத்தான் பாடம் எடுத்திருக்கிறார்.என்று நினைக்கிறேன்.A/L இற்கு அவருடைய ரியூட்டரியில் இரசாயனவியலுக்கு சிறிபதி>கனக்ஸ் கருணாகரன் போன்றவர்கள்படிப்பித்தார்கள். இந்தச்சிறிபதி ஒரு சிகரெட்பத்தி முடியும் நேரத்தில்அடுத்த சிகரெட்டை அந்த நெருப்பிலேயே பற்ற வைத்து இருமிக்கொண்டும் புகைத்துக் கொண்டும் பாடம் நடத்துவார். நல்ல ஆசிரியர்.கருணாகரன் இளைஞராக இருந்தபடியால் பாடம் முழுவதும் ஒரே பகிடியாகவும் சிரிப்பாகவும் போகும்அடிக்கடி புது புதுச்சட்டைகளை மாற்றிப் போட்டுக் கொண்டு ஸ்டைலாக ஸ்கூட்டரில் போவதைப்பார்த்து உள்pளுக்குள் பொருமியிருக்கிறோம். நல்ல மனிதர். நல்ல நிர்வாகத்திறமை உடையவர். அந்தக்காலத்தில் 4 பாடங்களுக்கு காசு கட்டினால் அனைத்து வகுப்புகளுக்கும் அனுமதி இருக்கும்.பணமும் எற்க் கொள்ளக்கூடிய அளவு தொகைதான். அதிகம் வாங்குவதில்லை.இரசாயனவியலில் பொண்ட்களைப்பற்றி நன்றாக பாடமெடுப்பதால் அந்தப் பெயர்வந்ததாக பேசிக்கொள்வார்கள்.- கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
நல்ல கேள்வி முதல்மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைகட கூட்டணி போட்டியிடவில்லை.அது போகட்டும் கிழக்குமாகாண சபைத் ரே;தலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. அதன்காரணமாக பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். அடடா வடை போச்சே! என்று அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்தக்காரணம் ஏற்புடையதாகவில்லை. வாரிசு அரசியல் என்று சொல்வதை ஒரளவு ஏற்றுக் கொண்டாலும். ஜீஜீ செய்த மாதிரி கனவான் அரசியலை கஜேந்திரகுமார் செய்யவில்லை. போராட்டக்களங்களில் நிற்கிறார்.பலமுறை தோற்றும் சோரம் போகாத அரசியலைச் செய்கிறார். எவரும் நல்ல அரசியல்வாதியாக இல்லாதிருப்பதால்தான் என்பிபியும் அர்ச்சுனாவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.வாரிசு அரசியல்மாதிரியே அனைத்து தமிழ்கட்சிளிலும்ஒரே ஆட்களே தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இது என்னமாதிரியான அரசியல்- கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
- எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
ஒரு தொட்டியில்சிறிய கல்லுகள் மணல் போன்றவற்றை மாறி 2 3 அடுக்குகளாக போட்டு வ டி கட்டி எடுத்த மழைநீரை அருந்தலாம் என்று நினைக்கிறேன். முதல் மழைநீரைச் சேகரிக்கக் கூடாது. இது வழிமண்டலத்தில் இருக்கும் ஆழுக்குகள் தூசிகள் புகைகள் போன்றவற்றைக் கொண்டு வரும். அதனால்தான் நீண்டகாலத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையக் கூடாது வருதம் வரும் சட்டையில் கரம்பேன் பிடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் மழை நல்லா அடிச்சு ஊத்தி விட்ட பின்னர் அடிக்கும் வெய்யில் கடுமையாகச் சுடுவதும் வானம் தெளிவாக இருப்பதும் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் கழுவப்படுவதால்தான். ஆகவே தொடர்சியாக மழை பெய்யும் பொழுது 2வது 3வது அல்லது அதற்குப் பிந்திய மழைநீரைச் சேகரித்து வடிகட்டி எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது எனது சொந்த விளக்கம்.எதற்கும் துறை சார்ந்தவர்களிடம் அறிவுரை கேட்டு சேமிப்பது நல்லது.- யாழில் மாகாண சபை தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது குறித்து கலந்துரையாடல்
இவர்கள் திருந்தப்போவதில்லை.இந்தியாவின் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மைகள். இந்தியா மாகாணசபை முதல்வராக ஒரு பொம்மை முதலமைச்சரைத் தெரிவு செய்வதில் காட்டும் ஆர்வத்தை விட்டு விட:டு 13ஆம் திருத்தச்சட்டதை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அதற்கு இந்தியாவுக்கு கடப்பாடு உள்ளது.சமுன்னணியைக் கூப்பிட வேண்டாம் என்று இந்தியா சொல்லி விட்டதோ?அது சரி வரதராஜப்பெருமாள் பிரகடனப்படுத்திய தமிழீழப் பிரகடனம் என்னாச்சு?- சென்னையில் பழனிசாமி, சீமான் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நீங்களே எழுதி சுய இன்பம் காண்பதற்கு யாரும் தடையில்லை.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எட்டாத உயரத்தில் இருக்கும் முதல்வர் அகஸ்தியனுக்கு வாழ்த்துகள்.- விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
பொய்யை நான் சொல்லவில்லை சீமானும்சொல்லவில்லை.- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
கஸ்ரப்பட்டு ஓவர்ரைம் அடித்து உழைத்த காசே நிலைக்குதில்லை.மோசடி செய்த காசு எப்படி நிலைக்கும். கொஞ்சகாலம் .ஆடாத ஆட்டம் ஆடுவார்கள். ஒருநாள் அடங்கிவிடுவார்கள்.பெரிய பெரியகார் எடுத்து பகட்டாக ஓடித்திரிவார்கள். ஆனால் வங்கியில் மாதம் மாதம் பெரிய தொகை சம்பளத்தில் இருந்து போகும். புதுக்கார் கொஞ்சம் உரஞ்சுப்பட்டாலே அவ்வளவுதான் அதன் மதிப்பு குறைந்து விடும். அதை விட சில வேளைகளில் விபத்து நடந்து காரைக்கைவிடும்நிலை வந்தால் கொம்பனிக்கு முழுக்காசும்கட்டத்தான் வேண்டும்.காப்புறுதி செய்தாலும் அதுக்குக்கட்டும்காசும் அதிகம் அதைவி ஓரளவு பழைய காரை குறைந்த விலையில் முழுப்பணத்தையும் செலுத்தி வாங்கினால் சின்ன உராய்வுகள் வந்தாலும் வைச்சு ஓடலாம் கவலையும்படத்தேவையில்லை.போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
புலம்பெயர்தேசங்களில் இப்படியான பல கலப்புத்திருமணங்களை காணக்கூடியதாக இருக்கிறது. இது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரின் திருமணங்களே இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.3 ஆம் தலைமுறையினரில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும்.ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்வதை தாயகத்தைப் போல்கட்டுப்பாடுகள் விதித்து தடுக்க முடியாது என்ற உண்மை போகப் போக பழகிவிடும். - பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.