-
Posts
4856 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by புலவர்
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
புலவர் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
-
இவரும் சரி>>நேசக்கரம் சாந்தியும் சரி இந்திய உளவுத்துநறக்கு இதில் சம்பந்தமில்லாதது மாதிரி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இந்த உரை இந்தியத்தமிழர் அல்லது அங்கு நீண்ட காலம் வாழந்த ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அந்த உரையில் வரும் சில சொற்பதங்கள் காட்டிக் கொடுக்கின்றது.இவரகள் ஏன் இந்த விடயத்தில் இந்திய உளவுத்துறையின் பங்களிப்பை வெளியில் சொல்வதைத் தவிர்க்கின்றன. சுவிசில் பொலிசுக்குத்தான் பவர். கூட்டாட்சி முறை என்பதால் அந்த அந்த மாநிலங்களின் பல முக்கிய முடிவுகளை அவர்கள் எடுக்கலாம். அதுவும் இந்த அரசியல் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயத்தில் அவர்களின் பவர் மிக மிக அதிகம்.
-
தமிழர்களை இந்தியாவையும் சீனாவையும் சமாந்தரமாக கையாள வேண்டும். தற்போதைய நிலையில் கொஞ்சம் சீனாப் பக்கம் சாய வேண்டும். அப்பதான் இந்தியா வழிக்கு வரும்.
-
உண்மையில் அன்ன நடை நடக்க வெளிக்கிட்டு தன்னடையும் கெட்ட கதையாக இது நடந்திருக்கிறது. சரி 14 வருடங்களின் பின் ஒரு மாவீரர் உரை என்றால் அது எப்படி இருந்திருக்கும். உப்புச்சப்பற்ற உரையாக இருக்கின்றது. உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் எல்லோரும் அறிந்த விடயங்கள். புதிதாக தமிழ்மக்களுக்கும் உலகத்திற்கும் என்ன செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது?வாரிசு அரசியல் என்ற கோணத்தில் இதை வடிவமைத்ததில் இருந்து இந்திய உளவுத்துறையின் பங்கு இதில் இருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தற்போதைய சீனாவின் ஆதிக்கத்தை தவிர்ப்பதற்கு இந்தியாவுக்கு புலிகள் தேவைப்படுகிறார்கள். அதற்காக தமிழ் உணர்வாளர்களைசாம பேத தான தண்டம் என்ற முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.தலைவரின் பெயரைக் கெடுப்பதற்கு தங்களை அறியாமலே பல தமிழ் உணர்வாளர்கள் பலியாகி இருக்கின்றார்கள். நம்பிக்கெட்டுள்ளார்கள். இந்தியாவில் உள்ள உணர்வாளர்கள் ஒத்துக்கொள்ளாத சந்தர்பங்கில் ஆசைகாட்டி அதற்கும் ஒத்துவராதவர்களை மிரட்டி இந்த விடயங்களைுக்குப் பாவிக்கப்பட்டிருக்கிறார்க். இன்னும் சில உணர்வாளர்கள் அதீத நம்பிக்கையில் இது உண்மையாக இருக்கலாம் என்று நம்பிக் கெட்டிருக்கலாம். விசுகர் போன்ற தமிழ் உணர்வாளர்கள் அதீத நம்பிகiகயில் செயற்பட்டிருக்கலாம் . அதற்காக அப்படியான நிலையில் இருப்பவர்களை தாங்களாகத் தெளிவடையும்வரை அவர்களுக்கு நேரம் கொடுக்காது போட்டுத்தாக்குவது நல்லதல்ல. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எல்லாம் தெரிந்துகொண்டு இப்படியான முயற்சிகளுக்குத்துணைபோயிருக்க மாட்டார்கள். நம்பிக்கெட்டிருக்கலாம் அல்லது மிரட்டபட்டிருக்கலாம்.
-
எமது விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும் அவர்களுக்காக அவர்களுடன் மரணித்த அனைத்துபொதுமக்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.
-
தலைவருக்கும்>பையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
புலவர் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
நாங்கள் அந்தக்கட்சிகளின் தலைவர்களைத்தான் எதிர்க்கிறோம். தொண்டர்களை அல்ல. அந்த தலைவர்கள்போடும் இரட்டை வேடத்தைத்தான் அம்பலப்படுத்துகிறோம்.ஒரு உண்மை தெரியுமா தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் பெரும்பாலோனார் தமிழர்கள்.ஆனால் திமுகவில் தொண்டர்கள்தான் தமிழர்கள் முக்கிய பதவிகளில் தெலுங்கர்கள்.அதிமுகவில் சாதாரண தொண்டன் தலைவராக முதலமைச்சராக வரலாம். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறுயாரும் இந்த இடத்துக்கு வரமுடியாது. இந்த உண்மையை தொண்டனுக்கு விளக்க வேண்டும். -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
புலவர் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
புலிகள் இயக்கம் வெளிப்படையாக தமிழகத்தின் ஒரு கட்சியை மட்டும் ஆதரிக்க முடியாது.அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன.ஆனால் புலிகளின் அழிவுக்கு காரணமான காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வைகோ> திருமாமளவனை எப்படி ஆதரிப்பது. போலிஉண்ணாவிரதம் இருந்து யுத்தத்தை நிறுத்தியதாக அறிவத்த கருணாநிதி அப்போது கருணாநிதியைத் துரோகி என்ற வைகோ இன்று திமுகவின் காலடியில் கிடக்கிறார். விதுதலைப்புலிகளால் வெளிப்படையாக சொல்ல முடியாத விடயங்களை மக்கள் வெளிப்படையாகச் சொல்ல முடியும். மக்களின் விருப்பே விடுதலைப்புலிகளின் விருப்பாக இருக்க முடியும்.திமுக நாம்தமிழர்கடசியை அதிமுகவை விட ஏன் கடுமையாக எதிர்க்கிறது. திமுகவும் அதிமுகவும் பெரிய வித்தியாசம் இல்லை. இன்று கூட திமுகவின் 9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அவர்களை விலைக்கு வாங்கலாம் .ஆனால் நாம்தமிழர் கட்சியின் உறுப்பினர்களை ஒரு சில ரைத் தவிர விலைக்கு வாங்க முடியாது. நாதகவில் இருந்து வெளியேறிய ராஜீவ் காந்திக்கு திமுக கொடுக்கும் மரியாதையைப் பாருங்கள் புரியும். நாதகவின் வளர்ச்சி 2 கட்சிகளின் வெற்றியையும் பாதிக்கும். -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
புலவர் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
தமிழ்த்தேசிய இருப்புக்கு நாம்தமிழர் கட்சி போன்ற ஒரு வாக்கரசியல் கட்சி கட்டாயம் தேவை. தமிழ்த்தேசிய அமைப்புகள் பல நீண்ட காலமாக தமிழகத்தில் இயங்கிய போதிலும் அவை எல்லாம் வாக்கரசியலில் ஈடுபடாமல் தமிழ்த்தேசியத்திற்கு வாய்க்கரிசி போடும் திராவிடக்கட்சிகளுக்கு முண்டு கொடுக்கத்தான் முடிந்தது. திராவிடக்கட்சிகளும் அவர்களை தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பேச்சாளர்களாக கறிவேப்பிலையாகப் பாவித்து தூக்கி எறிந்ததுதான் மிச்சம்.(இது நாம்தமிழர் என்ற அமைப்பைத்தோற்றுவித்த தினத்தந்தி சி.பா ஆதித்தனார். மபொசி>நெடுமாறன் ஐயா>இன்றைய சுபவீ என நீண்ட பட்டியல் கொண்டது. அவர்களை திராவிடம் அரவணைத்து தனக்காக தேவைகளை நிறைவேற்றிக் கொணடது. ஆரிய எதிர்ப்பின் காரணமாக அது அப்போதைய தமிழ்த்தேசிய அமைப்புக்களுக்குத் தேவையாக இருந்திருக்கலாம். திராவிடத்திற்கும் அவர்களால் ஆதாயம் கிடைத்ததே ஒழிய ஆபத்து ஏற்படவில்லை. ஆனால் இன்று திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழ்த்தேசியத்தை ஒரு கட்சியின்கீழ் அணிவகுத்து வாக்கரசியலாக மாற்றியதும் திராவிடம் விழ்த்துக்கொண்டது. தனக்கு எதிராக வாக்கரசியலில் தமிழ்த்தேசியம் திரள்வது தங்கள் இருப்புக்கு ஆபத்து என்றவுடன் இன்று ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து அதாவது தேசியக்கட்சிகளும் திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழ்த்தேசியத்தை எதிர்க்கின்றன. தமிழ் >தமிழ் என்று முழங்கிய வைகோ கூட இன்று சிலர் தமிழ்த்தேசியம் பேசி திராவிடத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்று பேசியது இந்தக்காரணத்தினால்தான். -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
புலவர் replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
இங்கு சீமானையும் நாம்தமிழர்கட்சியையும் ஆதரிக்கும் சிலரில் நானும் ஒருவன் நான் அக்கட்சிக்கு எந்தவித நிதியுதவியும் செய்வதில்லை. அதுபோல பையனும் நாதமுனியும் தாங்கள் கொடுப்பதில்லை அறிவித்திருக்கிறார்கள். இப்படி இருக்க அவர்களை எதிர்ப்பவர்கள் நிதியுதவி பற்றிப் பேசுவது அபத்தமானது. உண்மையில் நாதகட்சிக்கு புலம் பெயர்ந்த தமிழக உறவுகளும் தமிழகத்தில் உள்ள உறவுகளுமே பெரிய அளவில் நிதியுதவி அளிக்கின்றன. நாதகவிற்கு வாக்களிப்பதற்காக புலம்பெயர்ந்த தமிழகத்தமிழக உறவுகள் பலர் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் தமிகத்திற்கு சென்று வாக்களித்துவிட்டு வந்த உணர்வாளர்களும் பலர் இருக்கின்றார்கள்.புpக்கொடியையும் தலைவர் பட்த்தையும் தடைகளுக்கு மத்தியில் தமிழகத்தில் கொண்டு செுரத்தவர்கள் நாம்தமிழர் கட்சியினரே. புலம் பெயர்ந்த நாடுகளை விட தமிகத்தமிழர்கள் மத்தியில் எற்படம் எழுச்சியே ஈழத்தமிழர்களுக்கு நன்மைதரக் கூடியது. ஒட்டு மொத்த தமிழகமும் எழுச்சி பெற்றால் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல உலகமே இறங்கி வரும். ஜல்லிக்கட்டுப் போராட்டம் அதற்கு உதாரணம் 7 கோடி தமிழ்மக்கள் என்பது சாதாரணமாகப் புறக்கணித்துப் போகக் கூடிய எண்ணிக்கை அல்ல.மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகள் தமிழக மக்களை உணர்வு பூர்வமாக ஒருங்கிணக்கும் வல்லமை உடையது. நாங்கள் எங்கள் தார்மீக ஆதரவை நாதகவிற்கு வழங்க வேண்டும்.சீமான் தமிழத்தேசியத்தை முன்னெடுக்கிறார்.அதற்கு எதிராக தேசியக்கட்சிகளும் திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து வேலை செய்கின்றன.தமிழ்த்தேசியத்தை முன்னெடுப்பவர் தலைவரையும் மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்யாமல் பெரியாரையும் காந்தியைுயும் வைத்தா அரசியல் செய்ய வேண்டும் ? -
இலங்கையில் மிகப்பெரிய புத்தர் சிலையை அமைக்க சீனா உறுதி
புலவர் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்தியா இதற்குப் பதிலாக வட கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய இராமர் சிலையோ>குரங்கு சிலையோ வைக்க உதவும். -
யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது
புலவர் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
கனவிலும் அந்த எண்ணம் வராது. புலிகள் அழிய வேண்டும் என்று விரும்பிய மாற்றுக்கருத்தாளர்கள் வீட்டிலும் இந்த நபர் கமரா வைத்திருப்பார். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
அஸ்வின் பந்து போடுவதில் மட்டுமல்ல இக்கட்டான நேரங்களில் துடுப்பாட்டத்திலும் கைகொடுக்கக் கூடியவர். இது 50 ஓவர் போட்டி இப்படியான போட்டிகளில் சகலதுறை ஆட்டக்காரர்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் விக்கட் வீழந்தாலும் பின்னல் வரும் வீரர்களுக்கு போட்டியின் முடிவை மாற்நறும் வாய்ப்பு உண்டு. ஆப்கானிஜ்தான் போட்டி இதற்கு சிறந்த உதாரணம். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இதுவே எனது கருத்தும். -
நிலாந்தன் ஒரு இந்திய சார்புஆய்வாளர். அவருடைய கருத்து இந்திய அரசின் மறைமுகத்திட்டங்களைக் காட்டிக்கொடுக்காது.
-
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
தெலுங்கு நடிகை தெலுங்கு நடிகை -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
1.30 இலட்சம் இந்திய இரசிகர்களையும் மெளனமாக்குவோம். என்று நாகாரீகமான வார்த்தைகளால் இந்திய இரசிகர்களநின் வாயை அடக்குவோம் என்று சொன்ன ஆஸ்திரேலியா கப்டன் அதை செய்து காட்டியுள்ளார். இதுதான் கெத்து. -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? எல்லாம் இந்திய ரசிகர்களுக்குத்தான். இந்திய அணி வென்றால் விசாகபட்டிகம் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிக்கை விட்ட நடிகைக்கு எவ்வளவு நம்பிக்கை. -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
ஐயர்.சர்மா என்று விளையாடுனவங்களில் பலர் அதிலிலம் தமிழகப் பிராமணர் அஸ்வினைக் கழட்டி விட்டார்கள்.அனாலும் இந்த உலக கோப்பையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை லவளிக்காட்டியிருந்தது. -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
குழுநிலை ஆட்டங்களில் அவுஸ் ஆரம்பத்தில் சொதப்பினது உண்மைதான். ஆனால் போக உசாரயிட்டாங்கள். இந்த உலகக் கோப்யைpல் தோல்வியையே காணாமல் இருந்த இந்திய அணி தங்களுக்குத்தான் கப் என்று மெத்தனமாக இருந்திட்டினம். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
வெற்றி உறுதியாகிக்கிட்டே வருது. ஹெட் 100 ரண்ஸ் எடுத்த பிறகு வாண வேடிக்கையைப் பார்க்கலாம். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
புலவர் replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
பும்ரா மிகவும் ஆபத்தான பந்துகளைப் போடுகிறார்.