Everything posted by புலவர்
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
யாழ்கள திராவிடியா ஊடாக செய்தியாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். கோர்ட் உத்ததரவுப்படி இது சம்பந்தமாக திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் வாய்ப்ப்பூட்டுப்பட்டுள்ளதால் அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியான தளங்களில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை. தேர்தல் நேரத்தில் இந்தத் உத்தரவு சீமானுக்கு வெற்றி. திராவிடியா ஊடகங்களுக்கும் ஓசிச்சோறுகளுக்கும் தோல்வி.
-
நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
திராவிடியா ஊடகங்களுக்கு ஊடக அறம் கிடையாது. அவர்கள் விரும்பும் செய்தி கிடைக்காவிடில் அவர்கள் விரும்பியவாறு செய்திக்கு தலைப்பிடுவார்கள். தற்போதைய ஊடகங்களின் தலைப்பை வைத்து செய்தியைக்கணிப்பிட முடியாது.- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
திராவிடியா ஊடகங்களின் யாழ்கள நிருபர்கள் அந்த ஊடகங்களின் செய்தியை அப்படியே காவித்திரிவது வியப்புக்குரியது அல்ல.- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
புதிய தலைமுறை..இல்லை+ புதிய தலைவலிக்கான பதிவு. சீமானுக்கானதல்ல…. ------------------------------ எங்களை மொடக்கி விட்டார்கள், முடக்கி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்த புதிய தலைமுறைக்கு ஆதரவாக, திமுக அரசுக்கு எதிராக முதல் குரல் சீமானிடம் இருந்துதான் வந்தது. சமூக வலைதளங்களில் அதிகம் எழுதியது தமிழ்த் தேசியர்கள்தான். அந்த புதிய தலைமுறை, திமுக அரசிடம் நல்ல பெயர் வாங்கி, அரசு கேபிளில் நீக்கப்பட்ட சேனலை பழையபடி கொண்டுவந்து விட ஏதாவது சமரசம் செய்வது நியாயமே. அதற்காக ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பையே திரித்து, அதை சீமானுக்கு எதிரான பொய் செய்தியாக்கி, அதன் மூலம் ஸ்டாலின் அவர்களை குஷி படுத்தி விடலாம் என்ற அரசியல் இருக்கே அதுதான் கேவலமான ஒன்று. நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இறுதியாக, ’சீமான் மன்னிப்பு கேட்டார். வழக்கு முடித்து வைக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிட்டது புதிய தலைவலி. தவிர நடிகை நிவராரணத் தொகை கேட்பதாகவும் கூறியது. பார்ப்பவர்களுக்கு என்ன தோன்றும். சீமான் பக்கம்தான் தவறு. இதோ மன்னிப்பு கேட்டுவிட்டு சரணடைந்து விட்டார். அதனால் அந்த நடிகை, வழக்கை திரும்பப் பெறுவதாக சொன்னார். அதனால் உச்ச நீதிமன்றம் இப்படியாக முடித்து வைத்து விட்டது என்றுதானே தோன்றும்?. ஆனால் உண்மை என்ன? நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது, நம்பிக்கை மோசடி செய்தார் என புகார் அளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டு-தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான்தான் உயர் நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றம் எட்டு வார காலத்தில் விசாரித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார் சீமான். வழக்கு விசாரணையில் போது, ‘சீமானிடம் முன்னாள் நடிகை தான் நடந்து கொண்ட விதத்திற்காக மன்னிப்பு கேட்டால் ..சீமானும் அவர் பொதுவெளியில் பேசிய வார்த்தைக்காக மன்னிப்பு கேட்க சொல்கிறோம் என்று பதிவு செய்திருந்தார்கள். அதை அடுத்துதான், இரண்டு தரப்பையுமே ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டால் முடித்து வைப்பதாக கூறியது உச்ச நீதிமன்றம்.(இந்த மன்னிப்பும் கூட ஒருவருக்கொருவர் அநாகரீகமாக பேசி-பேட்டி கொடுத்தற்காகதான்) தொடர்ந்து தன்னால் இந்த வழக்கை நடத்த முடியாது என நடிகை தரப்பிலும் கூறப்பட்டிருந்தது. அதையொட்டி இரண்டு தரப்பு ஒருவருக்கொருவர் மன்னிப்பு அபிடவிட்டில் கொடுத்திருந்தார்கள். அதை ஒட்டியே இந்த பிரதான குற்றச்சாட்டு வழக்கில் ’ போதிய முகாந்திரம் இல்லை’ என தள்ளுபடி செய்து முடித்து வைத்ததுள்ளது உச்ச நீதிமன்றம். இதில் கூடுதலாக எனக்கு பெற்றோர் இல்லை. உடல் நலிவுற்றிருக்கும் சகோதிரியை கவனித்து வருகிறேன். அதனால் நிவாரணத் தொகையை (கருணை அடிப்படையில்) பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் நடிகை. அவ்வளவுதான். அதையும் நீதிமன்றம் ஏற்கவில்லை. ஆனால் இந்த திமுக ஆதரவு பெற வேண்டிய ஊடகங்கள், சீமானை மட்டுமே மன்னிப்பு கேட்கச் சொன்னதாக தொடர் செய்தியை போட்டு வருவது-எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்? அதன் ஆசிரியர்கள் என்ன நீதிமன்ற உத்தரவுகளை படிக்கத் தொரியாதவர்களா என்ன? பிறகு ஏன் இப்படி செய்கிறார்கள்….என்றால்… அப்படித்தான். அவர்கள் அப்படித்தான். புதிய தலைமுறை-புதிய தலைவலியாகி மாறிக் கொண்டிருக்கின்றது…பாவம். பா.ஏகலைவன். 08.10.2025- நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
நடிகை தரப்பில் என்ன மாதிரியான மன்னிப்புக் கேட்கப்பட்டது?சுPமான் நடிகையை விபச்சாரி என்று பேசியத்காக மன்னிப்புக் கோரினார். ஆனால்பாதிக்கப்பட்டதாக வழக்கப்போட்டு வாபஸ்வாங்கி வழக்குப் போட்டு வாபஸ்வாங்கி விளையாடும் நடிகை எதற்காக மன்னிப்புக் கோரினார்.?தான் பொய்ப்புகார் அளித்ததாகவா?- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!!!முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- சுமந்திரன் பதவி விலகினால் ஏற்படப் போகும் மாற்றம் ..!
சுமத்திரன் தானாக பதவிவிலக வேண்டும். தமிழரசுக்கட்சியில' இருந்து சுமத்தரனால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தெpரிவு செய்யப்பட வேண்டும். சுமத்திரன் விலக மறுத்தால் தமிழ்மக்கள் வெகுஜனப்புரட்சி செய்து சுமத்தரனை ஓட ஓட விரட்ட வேண்டும். கோத்தபாயவைப் போல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று அரசியலை விட்டே அவர் ஒதுங்க வேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
முடிந்தளவு என்றால்யாழ்களத்தில் எழுதுவதற்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளலாமா?ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!அப்படியா?ஒருகருத்தை எதிர்பதாயின் அந்தக்கருத்துக்களை செவிமடுக்க வேண்டும் அதன்பின் அதன்குறைநிறைகளை விமர்சிக்க வேண்டும்'.அதை விடுத்து பிராமனன் என்றால் இப்படித்தான் என்று சங்கி பட்டம் கட்டி விட்டு ஒதுக்கக் கூடாது. கமலும் பிராமணர்தான் ஆனால் கடவுள்நம்பிக்கை அற்றவர்.ஆனால் எடுக்கும் படங்கள் எல்லாவற்றிலும் கடவுள்பற்றிய காட்சிகளை வைத்து விடுவார்.இவர்பற்றி மவண்ணன் ஒரு உரை ஆற்றி இருக்கின்றார் கேட்டுப்பாருங்கள். https://www.youtube.com/watch?v=YkyXQ8tNzZw- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
சுவி ஐயாவின் பெறாமகன் சீக்கிம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
14 வயது நல்லது கெட்டதைச்சீர்தூக்கிப் பார்க்கத் தெரியாத வயது.மேலும் குறித்த மாணவி கடந்த ஒருவருட காலம்தான் குறித்த பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படிக்கிறார்.இயல்பாக பழகுவதற்கு இந்தக் காலம் போதுமானதாக இல்லீமல் இருக்கலாம்.பிறிதொரு பிரதேசத்தில் இருந்து வந்து குறித்த மாணவி முதலிடம் பெற்றது நெடுங்காலம் ஒன்றாகப் பழகிய மாணவிகளிடத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்திருக்கலாம்.அதனால் அவர்கள் அந்த மாணவியை புறமொதுக்கி இருக்கலாம்.காலப்போக்கில் அவர்கள் சேர்ந்து நல்ல நணபர்களாக கூடிய வாய்ப்பு இருந்தது.தனிமைப்படுத்தப்பட்டதில் அந்த மாணவி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம்.காலம் காயங்களை ஆற்றியிருக்கும்.மாணவி அவரசரப்பட்டு விட்டார்.காரணம் வயது.யார்நம்மை புறக்கணித்தார்களோ அவர்கள் முன்னால் புறக்கணிக்க முடியாத சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதே தேவையானது.தேவையானது.உளவளக்கல்வி.விளையாட்டு உளவளத்தை சீராக்கும் என்பார்கள்.ஆனால் அந்த விளையாட்டே இங்கு வினையாகி இருக்கிறது.தோல்வி என்றும்நிலையானதல்ல என்பதைப் புரிய வைக்க வேண்டும்.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
https://www.facebook.com/share/19qr18tmmk/?mibextid=wwXIfrZoho ஆப்பிற்கு தமிழ் பெயரா? நல்லாவே இல்லை மாத்துங்க.. ஸ்ரீதர் வேம்புவிற்கு வடஇந்தியர்கள் நெருக்கடி! #Arattai #Zoho #SridharVembu #Whatsapp #NewsUpdate #Oneindia #OITamil- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- ’நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக உள்ளோம்’ - சி.வி.கே.சிவஞானம்
முதலில் தமிழரசுக்கட்சி ஒற்றுமையாக இருக்கிறதா?தமிழரசுக்கட்சிக்கு தலைவர் ,செயலாளர் பதவிகள் ஏன் வெற்றிடமாக இருக்கின்றன என்றுதலைவர் ,செயலாளர் இல்லாத தமிழரசுக்கட்சியின் பிரதித்தலைவர் சிவஞானம்கூறவேண்டும்.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
BBC News தமிழ்அரவிந்த் ஸ்ரீனிவாஸ்: பெர்ப்ளெக்சிட்டியை நிறுவிய சென்னை த...கூகுள் நிறுவனத்தின் குரோமை விலைக்கு கேட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பெர்ப்ளெக்சிட்டி நிறுவனர்களில் ஒருவரான இவர், தொழில்நுட்ப உலகில் சாதித்தது எனகூகுள் குரோமை விலைக்கு கேட்ட சென்னை தமிழர் - 31 வயதில் கோடீஸ்வரரான இவர் யார்? மகாகவி பாரதியாரும் சங்கி என்று புறக்கணிப்பீர்களா?- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா....? நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார். எப்போதும் தனி விமானத்தில் பயணம் செய்வது என்பது சாதாரண பயணிகள் விமானத்திற்கு டிக்கெட் வாங்குவது போல் எளிமையான விஷயம் இல்லை. ஒரு விஐபி தனி விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில், அவர் 3 நிலைகளை கிளியர் செய்ய வேண்டும். ஒன்று, வான்வெளி பயண விதிகளை பின்பற்ற வேண்டும், இரண்டாவது, பாதுகாப்பு புரோட்டோக்கால்களை பின்பற்ற வேண்டும், மூன்றாவது, ஒன்றிய அரசிடம் clearance வாங்க வேண்டும். இவை மூன்றும் கட்டாயம். இவை தவிர்த்து, தனியார் நிறுவனத்தின் விமானம் கிடைத்த உடன், எந்த நேரத்தில் புறப்படுகிறது? எந்த நேரத்தில் தரையிறங்கிறது? என்கிற flight plan-ஐ தயாரித்து 'Directorate General of Civil Aviation (DGCA)-க்கு கொடுத்து அப்ரூவல் வாங்க வேண்டும். அனுமதி கிடைத்த உடன் ஏர்போர்ட்டில் இந்த தனி விமானத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். வேறொரு இடத்தில் இறங்குவதற்கும் முன்கூட்டிய இடம் ஒதுக்க வேண்டும். பின்னர், விமானம் புறப்படுவதற்கு முன் Airport Traffic Control (ATC) அதிகாரி எல்லா பாதுகாப்புகளையும், ஓடுதளங்களையும் சரி பார்த்துவிட்டு பின்னர் தான் அனுமதி கொடுப்பார். இதற்கு பின்னர் தான் அந்த தனி விமானம் take off ஆகும். இப்ப கரூர் சம்பவத்துக்கு வருவோம். சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட நடிகர் விஜய், இந்த அனுமதிகளை எல்லாம் முன்கூட்டியே பெற்றிருப்பார். ஆனால், கரூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு திருச்சிக்கு வந்து அங்கிருந்து சுமார் 11 மணியளவில் புறப்படுவோம். எனவே, அந்த நேரத்திற்கு take off அனுமதியை முன்கூட்டியே வாங்கியிருக்கலாம். (12.45 மணிக்கு வர வேண்டிய இவர்கள் எதற்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும்....? ஏனெனில், பிரச்சாரம் இரவு வரை நீடிக்கும் என முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துள்ளது) இப்படியான ஒரு சூழலில் கரூரில் நிகழ்ந்த உயிரிழப்புகளால் எல்லா திட்டமும் மாறின. 6 to 7 மணிக்குள் கூட்டத்தை விட்டு அவசரமாக புறப்பட்ட விஜய் திருச்சிக்கு வந்து, அங்கிருந்து தனி விமானம் எடுத்துக் கொண்டு உடனே சென்னை வந்து விட்டார். இவருக்கு எப்படி உடனடியாக take off மற்றும் landing ஆகியவற்றிக்கு விரைவாக அனுமதி கிடைத்தது...? கிட்டத்தட்ட 3 - 4 மணி நேரத்திற்கு முன்கூட்டியே திட்டமிடாமல் வந்த விஜய்க்கு ATC அதிகாரி எப்படி உடனடியாக அனுமதி கொடுத்தார்...? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள் தனி விமானங்களில் புறப்பட்டால், இவர்களுக்கு மட்டும் தான் விதிவிலக்குகள் மாற்றி அமைக்கப்பட்டு அவசர அனுமதியை தருவார்கள். ஆனால், அரசியல் அதிகாரம் இல்லாத விஜய்க்கு எப்படி உடனடி அனுமதி கிடைத்தது...? வான்வெளி பயணத்தில் மட்டும் அதிகாரிகள் அவசரப்பட மாட்டார்கள்/சமரசம் செய்ய மாட்டார்கள். மிகவும் கண்டிப்புடன் செயல்படுவார்கள். ஆனால், விஜய் விவகாரத்தில் அப்படி இல்லையே...!!! ஒருவேளை, விஜய் ஒரு நாள் முழுக்க whole day அனுமதி வாங்கியிருக்கலாம்...? சரி தான். இதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், முழு நாள் பயணத்திற்கு முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் கூட பயண திட்டத்திற்கு எதிராக ATC அதிகாரி எப்படி அனுமதி வழங்கினார். விஜய் திருச்சி வந்ததும் விமானத்தில் ஏறி 'டிரைவர்....ஓ சாரி...பைலட் வண்டியை எடுப்பா'னு சொன்னவுடனே அவர் பறந்து வந்து விட்டாரா...? விஜய்க்கு எப்படி விதிமுறைகள் relax செய்யப்பட்டது...? உடனடி take off அனுமதி கிடைத்தது...? நேற்றுக் கூட ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் முன் அறிவிப்பின்றி அவசரமாக டில்லி புறப்பட்டது உங்களுக்கு தெரியும். இவர்கள் என்ன அந்த தனி விமானத்தை தேர்தல் வரை மொத்தமாக பேசி வாங்கி விட்டார்களா என்ன? விமானப்போக்குவரத்து துறை ஒன்றிய அரசிடமே உள்ளது. ஒன்றிய பாஜக அரசை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய்க்கு அவர்கள் எப்படி இவ்வளவு சலுகைகளை இறங்கி வந்து செய்கிறார்கள்...? உங்களுக்கு உண்மை விளங்கும் என நம்புகிறேன்!!- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
"என்ன மாதிரியான கட்சி இது.. கரூரில் இருந்து தவெக நிர்வாகிகள் ஓடியது ஏன்.." சென்னை ஐகோர்ட் காட்டம் By Vigneshkumar Updated: Friday, October 3, 2025, 17:28 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரித் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி கரூர் துயரத்தைக் குறிப்பிட்டு காட்டமான கருத்துகளைக் கூறினர். அதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு எனக் குறிப்பிட்ட நீதிபதி, தவெக என்ன மாதிரியான கட்சி என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது மிக மோசமான ஒரு சம்பவம் நடந்தது.. அங்குக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்கக் கோரி பி.எச்.தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மிகக் காட்டமான கருத்துகளைத் தெரிவித்தார். முதலில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு நீதிபதி செந்தில் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் வழக்கு விசாரணையின் போது, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து விழுந்ததைப் பார்த்தீர்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். ஏன் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பினார். Also Read இனி சாலையோர பிரச்சாரத்திற்கு.. எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை! ஐகோர்ட்டில் தெளிவாக சொன்ன தமிழக அரசு வேதனை நீதிபதி மேலும் கூறுகையில், "அங்கு நடந்த சம்பவத்தின் வீடியோவை பார்க்கும்போதே மிகுந்த வேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இவ்வளவு நடந்த பிறகும் காவல் துறை கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது. முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளனர்.. பாதிக்கப்பட்டோரை நேரில் பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்த பின் குடியரசு தலைவர், பிரதமர், முதலமைச்சர் என அனைவரும் வருத்தம் தெரிவித்தனர். எல்லாக் கட்சிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், நிகழ்வை ஏற்பாடு செய்த கட்சியினர் மொத்தமாக வெளியேறி இருக்கிறார்கள். தலைமைப் பண்பே இல்லை உலகமே இந்தச் சம்பவத்தைப் பார்த்திருக்கிறது.. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், தலைவர் எல்லாரும் தொண்டர்களை, ரசிகர்களை, மக்களைக் கைவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளனர்.. இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார்" என்றார். மேலும், அவருக்குத் தலைமைப் பண்பே இல்லை என்றும் நீதிபதி கூறினார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அரசு அமைதியாக இருக்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதி, கரூரில் நடந்த சம்பவத்தை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) என்று குறிப்பிட்டார். Recommended For You 6 வழக்கறிஞர்களை களமிறக்கிய தவெக! 30 நிமிடங்கள் தொடர்ந்து வாதம்! ஒரே பாயிண்டில் ஆஃப் செய்த தமிழக அரசு தவெக என்ன மாதிரியான கட்சி கரூர் பிரச்சாரத்திற்குப் பல்வேறு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன என்றும் மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன என்றும் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, "என்ன மாதிரியான கட்சி இது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தவெக கட்சிக்கு என்ன தடையாக இருந்தது?" என்று மிக காட்டமான கேள்விகளை எழுப்பினார். Read more at: https://tamil.oneindia.com/news/chennai/what-kind-of-party-is-tvk-chennai-high-court-slams-vijay-over-karur-stampede-as-leader-fled-the-spot-740355.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links-DMP&ref_content=740361-p2- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நான்நலமாக இருக்கிறேன். உடம்பில் கவனம் எடுக்கவும். சுவர் இருந்தால்தான் சித்திரம்வரையலாம்.விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். VAT 69 என்று அந்தக்காலத்தில் பிரபலமான குடிவகை இருந்தது.வெறியில் தலைகீழாகப்பார்த்தாலும்69 என்றுதான் தெரியுமாம்.நானும் சுவைத்திருக்கிறேன்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு வாட்சப் செயலிக்கு மாற்று. Zoho ஸ்ரீதர் வேம்பு அவரது பதிவு 🟢 அரட்டை (Arattai) மெசஞ்சர் அப்டேட் 🟢 இது எங்கள் நிதானமான பொறியியல் முயற்சியின் இன்னொரு சிறந்த உதாரணம். நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டது காரணம்: • குறைந்த விலை போன்களில் கூட செயல்பட வேண்டும் • குறைந்த இன்டர்நெட் வேகத்திலும் (8 kbps வரை சோதித்து வருகிறோம்) நன்றாக இயங்க வேண்டும் • மிகச்சிறந்த தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டும் • அதே நேரத்தில் மிக எளிதாக பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் ✅ ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து அப்டேட் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் (features) இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடையும். அதோடு, அதிகமான பயனர்களை தாங்கும் சர்வர் அடிப்படை (infrastructure) வளர்ச்சியில் முதலீடு செய்து வருகிறோம். நான் தினசரி நேரடியாக எங்கள் எஞ்சினீயர்களுடன் இதைப் பற்றி கலந்துரையாடி வருகிறேன். 📢 இது முடிந்தவுடன், ஒரு பெரிய மார்க்கெட்டிங் பிரச்சாரம் (big marketing campaign) நடத்த இருக்கிறோம். அது உங்களுக்கு பிடிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை. 🌍 எங்கள் அரட்டை மெசஞ்சர் உலகின் சிறந்த மெசேஜிங் அனுபவத்தை (best messaging experience) வழங்கும் என்ற எங்கள் உறுதி தொடர்கிறது. 👉 மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்! --Sridhar Vembu CEO ZOHO Download link:- https://chat.arattai.in/app/download - நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.