-
Posts
4836 -
Joined
-
Last visited
-
Days Won
10
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by புலவர்
-
பகலிலேயே தூங்கிற ஆள்என்றால் இரவில் எப்படி இருப்பார். இது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று நினைத்து விடா போல.அல்லது பாக்கென்று நினைச்சு வெட்ட வெளிக்கிட்டு கைதவறிப்போச்சு போல. இனி எல்லோரும் பாக்கு வெட்டியை எடுத்து ஒழிச்சு வைக்க வேண்டியதுதான். ஆனால் பாக்குவெட்டி கிடைக்காத நேரத்தில் கதவிடுக்கிவைச்சு பாக்கு உடைக்கிற விசயமும் இருக்குது அதை நினைச்சால்தான் .....
-
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்
புலவர் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
மிச்ச 25 கோடியில் என்னதான் செய்து விட முடியும் மதநல்லிணக்கம் என்ற போர்வையில் தெளித்து விட்டுப் போவார். -
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம்
புலவர் replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
82 கோடி புத்தவிகாரைகளுக்கு என்றால் வடக்குக் கிழக்கில் அத்து மீறிக்கட்டப் பட்ட விகாரைகளுக்குமாகத்தான இருக்கும் மிச்ச 25 கோடியில் கிறிஸ்தவதேவாலயங்கள் பள்ளிவாசல்கள் போக ஏதாவது மிஞ்சியிருந்தால் ஏதாவது ஆங்சநேயர் கோவிலுக்கோ அல்லது சீத எலியாவுக்கு கொங்சம் கைகாட்டிவிட்டுப் போவார் அவ்வளவுதான். நாம சுpனாக்காரனோடு பேசத்தான் வேண்டும். -
என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்
புலவர் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
மாவை ஒரு ஆளுமை இல்லாத தலைவர்.கட்சிக்குள் சுமத்திரனை விட மாவைக்கு செல்வாக்கு அதிகம். தேர்தலுக்கு போனால் 2 பேருமே தோற்கும் நிலைதான்வரப் போகிறது. தமிழரசுக்கட்சிக்னகு எதிர்காலம் இல்லை. சம்பந்தர் சுமத்திரகன உள்வாங்கி தமீழத்தேசியக்கூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியை உடைத்து கடைசியில் தனக்கும் அழிவைத் தேடிக்கொண்டார். -
என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்
புலவர் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
இதெல்லாம் சுமத்திரனின் ஆளுமை என்று சால்ல முடியாது. சம்பந்தர் கொடுத்த துணிவில்தான் இவை எல்லாவற்றையும் செய்தார். சம்பந்தரும் கண்டும் காணாமலும் விட்டிருந்தார். மற்றவர்கள் மாவை உட்பட எல்வலாரும் சம்பந்தரின் வயதுக்கும் அனுபவத்திற்கும் மதிப்புக் கொடுத்து அடக்கி வாசித்தார்கள். இனி சம்பந்தரால் முடியாத நிலையில் தலைமையைக் கைப்பற்ற சுமத்திரன் சம்பந்தருக்கே ஆப்பை அடித்தார். ஆ னால் சம்பந்தர் உடலளவில் பலவீனப்பட்டாலும் பதவியைக் விட்டுக் கொடுக்க விரும்பாமல் என்னை விலகச் சொல்ல சுமத்திரன் யார் என்று கேள்வியை எழுப்புகிறார். தமிழரசுக்கட்சிக்குள் சுமத்திரனுக்கு செல்வாக்கு இல்லை. மாவைக்குத்தான் செல்வாக்கு.இப்ப சம்பந்ரை வீளாய் பகைத்து விட்டதால் மாவையின் கை ஓங்கும். மாவை மிகப் பொறுமைசாலி யார் எதைப் பேசினாலும் எதிர்த்து அரசியல்செய்யாமல் ஒத்தோடி தனது அரசியல் இருப்பைத் தகக வைத்துக்கொள்வார். சுமத்திரனுக்கு அரசியல் அனுபவம் இல்லை. சம்பந்தர் கொடுத்த தைரியத்தில் அளவுக்கு அதிகமா ஆடி விட்டார். இனி சுமத்திரகனுக்கு அரசியல் எதிர்காலமே இல்லை. -
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
-
பக்கத்தில் தள்ளு வண்டியில் ஒருவர் பீடா விற்பார்.இந்தமாதிரி இருக்கும் அதேமாதிரி றீகல் தியேட்டருக்குப் பக்கத்தில் மிக்சர் வண்டி மறக்க முடியாத அனுபவங்கள்.
-
என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்..! கேள்வி எழுப்பிய சம்பந்தன்
புலவர் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
சம்பந்தர் 2 பெருந்தவறுகள் செய்தார்.2009 இற்குப் பின் புலி நீக்க அரசியல் செய்தார்.பின்னர் சுமத்திரனைக் கட்சிக்குள் கொண்டு வந்தார். சுமத்திரன் விக்கியை தமிழத்தேசியக்கூட்டமைப்பிலிருந்து நீக்கினார். சுரேசின் கட்சியை நீக்கினார்.அனந்தி ரவிகரனை நீக்கினார்.தன் சகாவான ஆர்னோல்டடடை ஓரங்கட்டினார். தமிழரசுக்கட்சித்தலைவர் பதவி பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி ஆசைகாட்டி சிறிதரனை கூட்டுச்சேரத்து கட்சித்தலைவர் மாவையை தேர்தலில் தோற்கடித்து ஓரங்கட்டினார். புளொட்>ரெலோலவ நீக்கினார். சிறிதரனுக்கு ஆப்படித்து விட்டு சாணக்கியனை சேர்த்துக் கொண்டார்.அருந்தவபாலைனை ஓரங்கட்டினார். சசிகலா ரவிராஜை ஓரங்கட்டினார்.தமிழ்த்தேசியக் கூட்டமைபபை உடைத்தார். தமிழரசுக்கட்சியை உடைத்தார். இப்பொழுது சம்பந்தருக்கும் ஆப்படிக்கிறார். ஆனால் ஈது அவர் மல்லாந்து கிடந்து கொண்டு துப்பினமாதிரி இருக்குது. சுமத்திரனை தமித்தேசிய அரசியல் அரங்கிலிருந்து வெளியேற்றாவிட்டால் தமிழத்தேசியத்திற்கு பெரும் பின்னடைவு வரும். -
இந்தியாவின் துரோகங்கள் ஈழத்தமிழர்களுக்கு நன்றாகப்புரியும். இப்ப சீனாவைக்காட்டி தமிழர்களைப்ப் பேய்க்காட்ட வேண்டாம். இந்தியாவின் தவறான வெளியுறவுக்கொள்கையின் தோல்வியே இன்றைய சீனாவின் சுற்றிவளைப்பு. புலிகள் இருந்தவரையில் இலங்கை இந்தியக்கடற்பரப்பில் சீனாவே,அமெரிக்காவோ யாரும் உள்நுழைய முடியவில்லை. புலிகளை அழித்து தனக்குத்தானே மண்ணை அள்ளிப்போட்டது.இந்தியா. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையின் தோல்வி இந்தயாவைச்சுற்றியுள்ள நாடுகளை இந்தியாவுக்கு பகைநாடுகளாக்கி வைத்திருக்கின்றன.இந்தியா வேடம் பேட வேண்டாம். இநதியாவின் வெளியுறவுக்கொள்கையை மற்றாகக் கலைத்து மலைiயாளிகளை வெளியேற்றி தமிழர்களை வெளியுறவுத்துறைக்கு புதுஇரத்தம் பாய்ச்ச வேண்டும்.
-
பெளத்த பிக்குகள் அப்படி ஒன்றும் அதிகாரம் படைத்தவர்கள் அல்ல. ஆனால் அப்படித்தான் மக்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எத்தனையோ பெளத்த பிக்குகளை சிங்களவர்க்ள சரமாரியாகத்தாக்கியிருக்கிறார்கள். கோகம போராட்டம். மமற்றும் அண்மையியல் தாயையும் மகளையும் பாலியல் தேவைக்குப் பயன்படுத்திய விகாரத்தில் எல்லாம் நல்ல தர்ம அடி கோடுத்திருக்கிறார்கள்.ஆகவே அவர்களைக்கைது செய்து உள்ளே போடுவது பெரிய விடயமல்ல. இந்த அரசாங்கம் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறது. சுமத்திரன் அவர்மீது சட்டரீதியாக வழக்குத் தொடுக்காமல் பொத்தாம் பொதுவாக ஏன் கடிதம் எழுதினார். புலிகள் இருந்தவரையில் இந்தப் பிக்குகளின் வீரம் எங்கே மறைந்திருந்தது.இந்தநாட்டில் முதல் துப்பாக்கியை வெடித்தது பிக்குவவின் துப்பாக்கிதான்.
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
புலவர் replied to goshan_che's topic in அரசியல் அலசல்
இதுவே எனது நிலைப்பாடும். தமிழ்நாடு இந்தியாவின் வசல்வாக்கு மிக்க முன்னேறிய மாநிலமாகும். தமிழ்நாடு ஒருவிடயத்தை ஆதரித்தால் அது தமிழ்நாட்டு மக்கள் அனைவரினதும் விருப்பமாகும் 7கோடி தமிழர்கள் கிளர்நதெழுந்தால் அதற்கு உலகம் செவிசாய்க்க வேண்டும். அவர்களை இந்த ஆரிய திராவிடக் கும்பல் சினிமாவையும் கிரிக்கட்டையும் காட்டி ஒரு போதைக்குள் வைத்திரக்கிறார்கள். அவர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. எந்த ஊடகமும் சினிமா கிரிக்கட்டைத்தாண்டி உலக அரசியல்>தமிழர்களின் அரசியலைப் பேசுவதே இல்லை. இது திட்டமிட்டு அரங்கேறும் விடயங்கள் . இதகன உடைத்தெறிந்து தமிழர்களுக்கான அரசியலும் ஊடகங்களும் வரும் நிலைம வந்தால் எல்லாம் மாறும். -
போரை நிறுத்த வேண்டும் என்பவர்களும் போரத் தொடரவேண்டும் என்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார்கள்.ஆனால் 2 பக்கதிலும் இல்லாமல் மதில்மேல் பூனையாக இருப்பவர்கள். சந்தர்பவாதிகள். இந்தியா இப்போதும் இப்படியான தீர்மானங்களை எடுப்பது புதிய விடயமல்ல. இதற்கான தீர்வுகளை முனமொழிந்தால் யுத்தம் தானாகவே நிற்கும். இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாத ஹமாசை முஸ்லிம் நாடுகள் தங்கள் உதவிகளை நிறுத்தி கட்டுப்படுத்த வேண்டும். இஜ்ரேல் பாலஜ்தீனம் என்ற இறைமையுள்ள இருநாடுகள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் யுதுக்குடியேற்றங்கள் நிறுத்தப்பட்டு ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.
-
இது எனது கட்டுரைத் தொகுபபு இல்லை. இதை எழுதியவர் இதை விரிவாக எழுதியிருக்கிறார்.சம்பந்தப்பட்ட இடங்களுக்குப் போய் ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறார். வாசிக்கும் பொழுது ஒரு தொடர்நாவலை வாசிப்பது போல் அருமையாக இருக்கிறது. வாசித்துப்பாருங்கள்.
-
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
புலவர் replied to goshan_che's topic in அரசியல் அலசல்
ஆட போங்கப்பா இந்த விடயத்தில் திமுகவின் ஊடகங்களும் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களும் இன்னும் எழுதிக் கொண்டிருந்தாலும். மக்கள் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. யார்தான் யோக்கியர்.என்று அவர்கள் கடந்து சென்று விட்டார்கள். சீமான் தொடர்ச்சியாக பெரும்மக்கள் திரளும் கூட்டத்துடன் கூட்டங்களை நடத்திக் கொண்டே வருகிறார்.சமான் இந்த விடயத்தை கடந்து போய் கனகாலம் அகி விட்டது.இங்கே இருக்கும் சீமானைப் பிடிக்காதவர்கள் தான் அதைப்பபிடித்தத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் சிமானின் அரசியலுக்குப் எந்தப் பாதிப்பும் இல்லை. சீமானுக்கு எதிரான இந்த விடயத்தை உடகங்கள் தூக்கிப்பிடித்து உடகங்களில் காட்ட வெளிக்கிட்டு சீமானை மேலும் மக்களிடம் அறிமுகப்படுத்தி விட்டிருக்கிறார்கள். இப்போது மக்கள் மேலும் சீமானை தேட முயற்சிக்க இணையத்தில் குவிந்து கிடக்கும் அவரது காணொளிகளில் உள்ள நல்ல விடயங்களையும் உள்வாங்கப் போகிறார்கள். சீமானின் எதிரிகள் சீமானின் அரியலை ஒழிக்க முற்பட்டு அவரை வளர்த்து விட்டிருக்கிறார்கள் எக்பதே நிதர்சனம். அடுத்து வரும் தேர்தல்களில் சீமானின் வாக்கு வங்கி இரட்டை இலக்கத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது. இப்படிப் போகும் இடத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். -
ஆண் மனதின் கேவலம் - உதாரணமாக சீமான்! By பிருந்தா சீனிவாசன்
புலவர் replied to goshan_che's topic in அரசியல் அலசல்
ஜெயலலிதா ஆட்சியின் போது மத்திய அரசில் அங்கம் வகித்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன் >கருணாநிதி உட்பட எல்லோரையும் ஆடித்து குண்டு கட்டாகத் தூக்கி உள்ளே போட்டார். மத்திய அரசு முச்சே விடவில்லை. இந்த மாநில மக்களின் முழுமையான ஆதரவுடன் வரும் தலைவர்களை அதுவும் துணிவு மிகுந்த தலைவர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. -
இணப்புக்கு நன்றி கிருபன்ஜி.மிகவும் அருமையான கட்டுரை. பின்வரும் இணைப்பிலும் இஜ்ரேல் பாலஸ்தீனப்பிரச்சினை பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கிறது.இணப்புக்கு நன்றி கிருபன்ஜி. பாலஸ்தீனத்திற்கான கரிசனையின் அதே அளவு யூதர்களுக்கான ஒரு நாட்டிற்கும் இருக்கவேணும் என்ற நோக்கில் நான் எழுத ஆரம்பித்த தொடர் இது. கடந்த 2000 வருடங்கள் எவ்வளவு முயற்சி செய்து இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டது என்ற வரலாற்றை தொடர்ந்து எழுதி வருகின்றேன். பிரித்தானியாவும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்களிடம் இருந்து பிடுங்கி யூதர்களுக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கொடுத்து விட்டன என்றது ஒரு பொய் பிரசாரம் என்பதை இத்தொடரை வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். யூதர்கள் வரலாறு 1-20Kumaravelu Ganesan ----------------------------- 1.https://www.facebook.com/1153120557/videos/10225739431129855/ 2.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225755370488329 3.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225823677155953 4.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225836514756885 5.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225844268350720 6.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225851799418992 7.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225870951337778 8.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225899725897124 9.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225929559802953 10. https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225959619274421 10.1 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10225972802884003 10.2 https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 11.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226001402398973 12.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226033148392603 13.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226058944717495 14.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226325207773905 15.https://www.facebook.com/kumaravelu.ganesan/posts/10226336456095106 16. https://www.facebook.com/1153120557/posts/10226385173753017/?mibextid=WiMSqg 17. https://www.facebook.com/1153120557/posts/10230558689568304/?mibextid=WiMSqg 18. https://www.facebook.com/1153120557/posts/10230573832906878/?mibextid=WiMSqg 19. https://www.facebook.com/1153120557/posts/10230620051702319/?mibextid=WiMSqg 20. https://www.facebook.com/1153120557/posts/10230727412626275/?mibextid=WiMSqg
-
கண்ணா!காலத்திற்குக் காலம் புதிய தலைவர்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். சேர் பொன் அருணாசலம்>ஜீஜீபொன்னம்பலம்>தந்தை செல்வா ஈஅமிர்தலிங்கம் > தேசியத்தலைவர் பிரபாகரன் என்று தலைவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். சம்பந்தர்>சுமத்திரன் மாதிரி அரசியல்தற்குறிகள் காணாமல் போவார்கள். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் . சம்பந்தன் சுமத்தரனை விட இன்னுமொரு எதிர்காலத்தலைவரை நீங்கள் ஆதரிக்கத்தான் போகீறீர்கள். சம்பந்தன் தமிழினத்துக்குக் கிடைத்த சாபக்கேடு. கருணாவைப் போல சம்பந்தரைத் தெரிவு செய்ததும் தலைவர் விட்ட மிகப் பெரிய பிழை.
-
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் செல்லும் ஆதிவாசிகள்
புலவர் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இவர்களின் குலதெய்வம் முருகனா?நல்லூரில் மாப்பிள்ளை வீட்டுக்கும் வருவார்களா? -
எல்லோரும் முற்ற வெளியில் நிக்கினமாம்.கண்ணா! இது வெறும் ட்ரையிலர்தான் முற்றவெளியில்தான் மெயின் பிக்ஸராம்!
-
நேரே சந்தித்தேன். அவர்கள் தான் எந்த சந்தேகமும் இல்லை
புலவர் replied to விசுகு's topic in செய்தி திரட்டி
ஆக மொத்தத்தில் இந்த செய்திகளுக்கு பின்னால் இந்தியா இல்லை.அப்படித்தானே குணா கவியழகன்.இந்த ஆய்வாளர் ஒரு இந்திய அபிமானி ஆகவே அந்தக் கோணத்தில் ஆய்வைச் செய்யாமல் வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்.இந்தச் செய்தி முதலில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயா. காசி ஆனந்தன் மூலமாக வெளியே விடப்பட்டது. சாதாரண காலங்களில் இப்படியான செய்திகள் வெளிவரும்போது அவர்களை இந்தியப் புலனாய்வுத்துறை சும்மாவிடாது. விசாரைணகள் நடத்தப்பட்டிருக்கும் அப்படி எதுவும் நடைபெற வில்லை.மக்களும் அந்தச் செய்தியை பெரிதுபடுத்தவில்லை.அடுத்ததாக தலைவரின் மனைவியின் தமைக்கையாரின் காணொளி வந்தது. அதைத்தொடர்ந்து பிரா;சில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒரு பேட்டியில் யைh நெடுமாறன் தெரிவித்த செய்தியை தானும் உறுதிபடுத்துவதாகச் சொன்னார். அவர் ஒரு இந்திய விசுவாசி அவரின் பேட்டியின் பின்னர் இந்தச் செய்தியை மக்கள் நம்பத்தயாராக இல்லை. ஆனால் இந்தியப்புலனாய்வுத்துறைக்கு இதில் தொடர்பிருப்பதற்கான சந்தேகத்தைக் கொடுக்கூடிய காரணிகள் இவை.இந்தியாவுக்கு இந்தச் செய்தியைப்பரப்புவதில் பல நன்மைகள் இருக்கின்றன. அதனை சிறிலங்காவும் ஏனையோரும் பயன் படுத்துகிறார்கள்.தலைவர் இருந்தால் தலைவன் இல்லாவிட்டால் இறைவன். -
நேற்று பைடன் இன்று ரிசி சுனாக் என்று வல்லரசுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு அடுத்தடுத்து போன காரணம் என்ன?நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் நீங்கள் பாலஸ்தீனத்தை அழித்து சுடுகாடாக்குங்கள் என்றுதான பொருள். உண்மையில் இவர்கள் என்ன செய்ய வேண்டும். யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் பொதுவான நிலையில் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் இரண்டு தரப்பும் அந்தத்தீர்வை மானசீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுவே சரியான முறை அதை விட்டு ஒருபக்க சார்பாக நின்று கொண்டு ஹமாஸ் செய்யும் பயங்கரவாத செயல்களுக்காக ஒட்டு மொத்த பாஸ்தீனர்களையும் எதற்குத் தண்டிக்க வேண்டும்.இஸ் ரேலும் அறம் மீறிய பயங்கரவாத தாக்குதல்களைச் செய்கிறது என்பதை ஏன் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.வைத்தியசாலையில் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது பழியைப் போடுகிறார்கள். அதற்கு மேற்கு ஊடகங்களும் ஒத்துதுகின்றன. பிபிசி கொஞ்சம் நடுநிலத்தன்மையோடு நடந்து கொள்வதைக் கூட மற்றைய ஊடகங்கள் கேள்விகேட்கின்றன. முள்ளிவாய்க்காலில் எம்மினம் அழியும் போது இந்த நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்களா?
-
இந்தியப் பிரதமருக்கான கடிதம் கையளிக்கப்படும் சாத்தியமில்லை
புலவர் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆனால் விஜையக் கடிதம் அனுப்பியுள்ளார்களாமே?