Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. மனித அறிவுச் சுட்டெண் என்பது மக்களின் சராசரி ஆயுட்காலம்,கல்வியறிவு,தனிநபர்வருமானம் என்பவற்றை வைத்து கணிக்கப்படுகிறது.இந்தியாவில் இளைஞர்களே அதிகம் ஆயுட்காலம் குறைவு,கல்வியறிவு இந்தியாவின் நகர்புறத்திடன் ஒப்பிடும் பொழுது கிராம ப்புறங்களில் படுமோசம்.நகர்புறங்களில் தனியார் கல்விநிலையங்கள் மிக அதிக அளவு பணத்தை அறவிடுவதால் எல்லோரும் னியார் கல்விநிலையங்களில் படிப்பிக்க முடியாது.அரசபாடசாலைகள் நிலமை படுமோசம்.அதேபோல் தனிநபர் வருமானம் நகர்புறத்தில் வாழும் நடுத்தரக்குடும்பங்களில் சமாளிக்க முடியாத நிலமை.ஆப்பிரிக்க நாடுகளை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.வளர்ச்சியடைந்த நாடு என்று எப்படிச் சொல்வதுஅதுவும் இலங்கைக்கு கீழே இருக்கிறது என்றால் கற்பனை பண்ணிப் பாருங்கள்
  2. Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
  3. இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
  4. மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
  5. சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள் கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  6. பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?
  7. பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
  8. வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
  9. அந்தத் தும்புத் தடியின் சின்னத்தை எதற்கு பாஜக முடக்கியது எதற்கு திமுக அதற்கு வாகன வசதி கொடுத்து ஊக்குவித்தது.சீமானினின் வாக்கு சதவீதம் கடந்த தேர்தலில்7வீதம். ஏனைய கட்சிகளின் துல்லியமான வாக்கு சதவுpதம் என்று கூற முடியுமா?திமுகவின் வாக்கு வங்கி என்ன? அதேபோல் காங்கிரஸ்>விசிக>மதிமுக>ஒருகாலத்தில் எதிர்க்கட்சியாக விருந்த கம்மினியூஸ்ட்டுகளின் துல்லியாமான வாக்கு சதவீதம் என்ன? யாராலும் கூற முடியுமா?
  10. அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும்.
  11. நாம் தமிழர்கட்சி இந்தமுறை சீற் வெல்லமுடியாது போகலாம். ஏனென்றால் இது பாராளுமன்றத் தேர்தல். ஆனால் அதன் வாக்கு சதவீதத்தை 10 சத வீதத்திற்கு மேலே எடுத்தால் அது பெரிய வெற்றி 2026 சட்ட மன்றத் தேர்தலில் முக்கிய சக்தியாக விளங்கும்.
  12. நாம் தமிழர்களுக்கு சின்னம் பறிக்கப்பட்ட பொழுது திமுக அதைக் கொண்டாடியது.இப்போது அதன் கூட்டணிக்கட்சியான விசிக,மதிமுக சின்னத்தையும் முடக்குகியிருக்கிறார்கள் திமுக மௌனமாக இருக்கிறது.அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டி வந்தால் அது திமுகவிற்கத்தான் நன்மை.
  13. நாம் தமிழர் தம்பிகளுக்கு என்ன வெறித்தனம்.பல நாள் பட்டினி கிடந்த புலியை இரையை நோக்கிப் பாய்வது போல சில மணி நேரங்களில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டார்கள்.ஏன்டா பறித்தோம் என்று பாஜகவும் அதற்குத் துணை போன திமுக உபிக்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள்
  14. https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.htmlசெய்திகள்சென்னை சின்னங்கள், வாக்கு பதிவு இயந்திரத்துக்கு தடை, இடைத்தேர்தல் ஒழிப்பு- சீமான் அதிரடி தேர்தல் வாக்குறுதி By Mathivanan Maran Published: Wednesday, March 27, 2024, 15:46 [IST] சென்னை: லோக்சபா தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில், தேர்தல்களில் சின்னங்கள் பயன்படுத்தும் முறையை ஒழிப்போம்; வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்துவோம்; இடைத் தேர்தல் முறையையும் ஒழிப்போம் என்பது உள்ளிட்ட அதிரடியான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலுக்கான 84 பக்க தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டார். மொத்தம் 32 தலைப்புகளில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இதுக்குத்தான் நாம் தமிழர்கிட்ட மோதினாங்களா! 22 தொகுதியில் போட்டியிட ஆளே இல்ல! கதறும் கரும்பு விவசாயி இந்த தேர்தல் அறிக்கையின் தொடக்கத்தில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்று என்கிற விமர்சனம் இடம் பெற்றுள்ளது. அதேபோல மாநில உரிமைகளை திமுகவும் அதிமுகவும் அடகு வைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தேசிய இனங்களின் நலன்கள், உரிமைகள் அடிப்படையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும் என்கிறது நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை. இத்தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் 1.- மக்களால் மட்டுமே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் 2.- ராஜ்யசபா எம்பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவிகள் தரக் கூடாது 3.- ஆளுநர் பதவியை நீக்க வேண்டும் 4.- மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சாசனத்தின் 356- வது பிரிவு நீக்கம் 5.- 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு லோக்சபா தொகுதி என மறுசீரமைப்பு செய்ய வேண்டும் 6.- சின்னங்கள் இல்லாமல் எண்கள் ஒதுக்கீடு செய்து தேர்தல் நடத்த வேண்டும் 7.- வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு தடை விதித்து வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் 8.- இடைத் தேர்தல் முறையையே ஒழிக்க வேண்டும் 9.- ஊழல் செய்தவர்கள் தேர்தல் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 10.- ஒரு நபர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் 11.- வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை; சிறை கைதிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை 12.- மற்றொரு அரசியல் கட்சி சின்னத்தில் போட்டியிட தடை 13.- மாநில உயர்நீதிமன்றங்களில் மண்ணின் மைந்தர்களே நீதிபதிகள் 14.- காஷ்மீருக்கான 370-வது பிரிவு சிறப்புரிமை அனைத்து தேசிய இனங்களுக்கும் வழங்க வேண்டும் 15.- கச்சத்தீவு ஒப்பந்தம் ரத்து 16.- வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்க எதிர்ப்பு 17.- சிஏஏ, என்பிஆர், என்.ஆர்.சி, பொதுசிவில் சட்டங்களுக்கு எதிர்ப்பு 18.- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lok-sabha-election-2024-seemans-naam-tamilar-promises-symbol-less-election-594077.html
  15. Xதளத்தில் சிலமணி நேரங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் ஒலிவாங்கி சின்னம்.நாம் தமிழர் உறவுகள் புயல் வேகப் பரப்புரை என்னால் படங்களை இணக்க முடியவில்லை.
  16. 30 ஆண்டு காலப் போர் மனிதர்களை மட்டுமல்ல சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவைகளை அழித்ததில் பெரும்பங்கு வகுத்தது.குண்டு வெடிப்புகளையும் போர் விமானங்களின் இரைச்சலும் குண்டுகளின் இரசாயனத்தன்மையும் சிறிய உயரினங்களின் அழிவை அதிகரித்தன.
  17. சீமான் இந்தத் தேர்தலில் தன் வாக்கு சத வுத்ததை அதிகப்படுத்தினால் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் கட்சியின் தலைமையில் கூட்டணி அமையாது என்று சொல்லக்கூடாது. நாம் தமிழர்கட்சிக்கு இச்தத் தேர்தலில் வாக்கு சதவீதம் குறைய வேண்டும் என்று திட்டமிட்டு கரும்பு விவசாய சின்னத்தை பாஜக பறித்தது. திமுக அதற்கு துணை போனது. நாம்தமிழர்கட்சியின் வாக்கு சதவுதம் குறைக்கப்பட்டு கமல் கட்சிபோல் காணமல் ஆக்க வேண்டும் என்பதே திமுக பாஜகவின் கனவு. பாஜகவுக்கு இந்தத்த்தேர்தலில் அதிமுகவைப் பின்தள்ளி 2வது இடம் தவறினினால் 3 வது இடத்தையாவது தக்க வைக்க வேண்டும் என்று செயல்படுகிறது. தனித்து நின்ற போது விஜயகாந் வைகோ போன்றவர்'களின் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கு கூட்டணி செர்ந்த பின் அதிமுக திமுக என்ற பெரிய கட்சிகளால் அடியோடு அழிக்கப்பட்டது.தனித்து நின்றால் உடனே நற்றி கிடைக்காது ஆனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்கள் அதனை விரும்புவார்கள். இந்த நவீ னஉலகில் நாம் தமிழர் போன்ற ஒரு கட்சி வளர்ச்சியடைவதற்கு பல காரணிகள் இருக்கின்றன.
  18. காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம்.அதனால் தங்கக்குழம்பு வைக்க வேண்டிய பரிதாப நிலை.
  19. பாஜகவின் தீவிர ஆதரவாளர் பாண்டேஉட்படப் பலர் நாம்தமிழர்கட்சிக்கு விவசாயிச் சின்னம் ஒதுக்கப்படாதது தவறு என்றுதெரிவித்துள்ளனர்.
  20. சிங்கள இடங்களில் அரச செயலங்களில் மட்டும்தான் சிங்களத்திலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். அதிலும் தமிழில் பிழை பிழையாக எழுதப்பட்டிருக்கும். மற்றைய இடங்கள் எல்லாம் தமிழைக்காண முடியாது. முழுழையாக சிங்களத்தில் இருக்கும். எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதே தெரியாது. ஈதாவது அரச கட்டிடங்கள் இருந்தால்தான் அந்த இடம் எதுவென்று தெரியும். நாம் தமிழர் கட்சிக்கு வேண்டுமென்றே சின்னம் மறுக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிக்கும் காலம் வரைக்கும் பார்த்து விட்டு அதன்பின்னரே அந்தச்சின்னத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஒரு கட்சி பலதேர்தல்களில் பயன் படுத்திய சின்னத்தை இதுவரை ஒரு தேர்தலையும் சந்திக்காத தமிழ்நாட்டிலேயே இல்லாத கட்சிக்கு தேர்தல் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கொடுத்திருப்பது அறமற்ற செயல். இந்த தேர்தல் ஆணையம் எப்படி முறையாகத் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
  21. ஆனால் அம்மாமாரையும் அழைத்திருக்கடவேண்டும் அவர்கள் இந்த வயதில் தனியாக இருப்பதிலும் பார்க்க நாலு பேரோஐட கதைத்தால் நல்லதுதானே. ஆனால் காணுமப்பா என்று 2வது ரவுண்டு தொடங்க முதலே சாப்பாட்டைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். அதுதான் வீசுகண்ணை அழைக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் விசுகண்ணை பார்ட்டிக்கு நல்ல ஐடியா குடுத்திருக்கிறியள்.
  22. தேர்தலைப் புறக்கணிக்கப்பது அரசியல் தற்கொலைக்கு நிகரானது. வெற்றியோ தோல்வியோ தேர்தலில் நிற்பது களத்தில் நின்று சண்டை செய்வது மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்.இந்த டிஜிட்டல் உலகில் சின்னத்தை மக்களிடிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது பெரிய விடயம் அல்ல. சின்னத்தை வேண்டுமென்றே கொடுக்காமல் விட்டது கூட நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தும் விடயம். ஆகவே சின்னப் பிரச்சினை ஒரு சின்னப் பிர்சினை புதிய சின்னத்தில் சீமான் வாக்கு வீதத்தை உயர்த்தினால் அது சீமானின் வளர்ச்சிக்கு லேும் உரமாகும். 8 வீத வாக்குகளுக்கு இன்னும் சொற்ப வாக்குகளே உள்ள நிலையில் அதனைப் பெற்று சின்னத்தை நிரந்தரமாக்கலாம். சீமான் இந்த முறை இரடடை இலக்க வாக்கு வீதத்தை பெறுவார் என எதிர்பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.