Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாத்தியார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by வாத்தியார்

  1. முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்
  2. மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் கூறியது போல 50 வீதம் என்பது பிழையான தகவல் . இந்த வருடத்தில் கட்டணம் குறைவு என்பது ஒரு வருடம் ஒரு குடும்பத்தினருக்கு அதிக பட்சமாக 100 யுரோ விற்குள் தான் இருக்கும். அதை விட இங்கே மின்சார விநியோகம் பல நிறுவனங்களினால் கையாளப்படுகின்றது. வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களின் மிசார விநியோக நிறுவனத்தை மாற்றும் முறையைக் கையில் வைத்துக் கொண்டால் அதாவது ஒப்பந்தம் வருட ரீதியில் செய்தால் ஒவ்வொரு வருடமும் குறைந்த விலையில் விநியோகிக்கும் நிறுவனங்களால் அதிக லாபம் பெற்றுக் கொள்ளலாம். இதில் விழிப்பாக இருக்க வேண்டும் வருடம் முடிவதற்குள் அடுத்தநிறுவனத்தை தெரிவு செய்து பழைய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களின் ஒப்பந்தப்படி இரண்டாவது வருடத்திற்கான அதிகப்படியான விலையைக் கொடுக்க வேண்டி வரும்
  3. களத்தில் கேர்ணல் சங்கர் ஞாபகார்த்தமாக என இந்தத் திட்டம் பெயர் சூட்டப்பட்டாலும் அதே பெயரில் நாட்டில் இயங்க முடியாது என்றால் நாட்டில் அதை இன்னொரு பெயரால் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால் மட்டுமே யாழ்களத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் உறவினர்களிடம் இதற்கான நிதி உதவிகளைக் கோரலாம் என்று நினைக்கின்றேன்.
  4. நன்றி ஏராளன் தகவலுக்கு காரைநகரின் பெயரை வைத்துப் பல அமைப்புக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் நிலையிலே........ (ஆலயங்கள் கட்டுதல், புனரமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பன தான் அந்த அமைப்புக்களின் முதன்மையான திட்டங்கள்) உங்கள் அமைப்பு இப்படியான உதவிகளை பல காரைநகர் மக்களுக்காகச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. நாங்கள் குறுகிய காலம் அங்கே தங்கி நிற்கும் நிலையால் இப்படியானவர்களை அடையாளம் காண முடிவதில்லை பாடசாலை, மாணவர்கள், கல்வி, பரிசளிப்பு, என்ற நிலையிலே தான் பலருடைய தனிப்பட்ட உதவிகளும் செல்கின்றன. இனிமேலாவது சரியான வழியில் செல்வார்கள் என் நம்புவோம் 🙏 அடுத்த கட்டமாக எப்படி எந்த வகையில் எங்கள் பங்களிப்பினை செய்யலாம்? ஏராளன் உங்கள் அமைப்பின் வங்கி இலக்கத்தைப் பயன்படுத்தலாமா? அல்லது உங்களால் இதற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பிக்கலாமா ? அல்லது ஏதாவது மாற்று வழி உள்ளதா ?
  5. நன்றி கு சா அண்ணா வேறு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அவரின் ஊடாக இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவோம் 🙏
  6. நன்றி சுவைப்பிரியன் களத்தில் உங்களின் சேவைகளின் அர்ப்பணிப்பு, உங்களுக்குரிய அனுபவங்கள் எல்லோருக்கும் தெரியும். அவை யாழ் களத்தில் எங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் 🙏
  7. நல்ல விடையம் ஏராளன் மிகவும் சுறுசுறுப்பாகத் தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார். கோஷன் எழுதியதைப்போல முன்னோட்டமாக 10 வீடுகளுக்கான வசதி செய்து கொடுக்கலாம் 5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம். அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன் ஏராளன் அடுத்த கட்டமாக ஒரு வீட்டில் கழிவறை அமைத்துக் கொடுக்க என்ன செலவாகும் என்பதையும் அறியாத தந்தால் உதவியாக இருக்கும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது ஒருவரிடம் மட்டுமல்லாது பலரிடம் கேள்விப் பத்திரம் மூலம் மொத்த செலவைக் கேட்டு ஒரு ஒப்பந்த அடிப்படையில் செயற்படுவதும் நல்லது என நினைக்கின்றேன் ஏராளன் ஏற்றுக் கொண்டால் அவரை இந்தத் திட்டத்திற்கான பொருளாளராக நான் பிரேரிக்கின்றேன் அவரால் கட்டாயம் நம்பிக்கையான முறையில் நிதி கையாளப்படும் உங்கள் அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் உங்கள் ஆதரவிற்கு நன்றி தங்கை யாயினி கட்டாயம் நிழலி இந்தத் திட்டம் 2026 இல் யாழின் ஒன்றிணைந்த ஒரு உதவித் திட்டமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உண்டு .
  8. யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏
  9. ஆனால் நமக்கு நஷ்டமே எதுக்கும் வரட்டும் கேட்டுப் பார்க்கலாம் 😇
  10. இவர் நம்ம ஆள்..... அதனால் தண்ணீரில் சறுக்கி விழ வாய்ப்பில்லை... தள்ளுப்பட்டுத்தான் விழுந்திருப்பார் 😂 பனையாலை விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி பனையூர் செல்லும் வழியில் இன்னொரு விபத்தால் 🤣சங்கடமாம்
  11. deutsche bundesbank ஜேர்மன் நாட்டின் அரசவங்கி ஜேர்மன் நாட்டில் இன்றைய நாளில் பொருளாதாரம் என்பது மந்தமான நிலையில் தான் உள்ளது. இந்த மந்தமான நிலை ஜெர்மனியில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் உள்ளது அந்த அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த நாட்டின் அரசியல் ரீதியாக கணிக்கப்படும் பொழுது சிறிது முன்னுக்குப் பின்னாகவே இருக்கும். உலகளாவிய ரீதியில் ஜெர்மனியின் பொருளாதாரம் இனிமேல் முதன்மை நிலைக்கு வரமுடியாது. மக்கள் அரசையும் அரசு மக்களையும் காரணம் காட்டித் தப்பிக்கும் நிலையில் இன்று ஜெர்மனியின் பொருளாதாரம் மந்தமான நிலையில் இருக்கின்றது சிலர் குடியேறிகளின் மீது பழியுயைச் சுமத்தும் நிலையில் சிலர் ட்ரம்பின் வரிச் சுமையைக் காரணம் காட்டுகின்றனர். என்னுடைய கணிப்பின்படி பொருளாதாரம் உலகிலேயே இன்று ஒரு போர்க் கால சூழ்நிலையில் இருக்கின்றது . ரஸ்யாவின் மேற்குலகின் மீதான போர் அச்சம் உக்கிரையேன் நாட்டில் ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு நேட்டோவின் ரஷ்ய நாட்டின் மீதான பகை ஈரான் இஸ்ரேல் காசா தைவான் சீனா போர்ச் சூழல் எனப் பல வகையான காரணங்கள் உள்ளன ஆனாலும் ஒரேயடியாக அடிபட்டுப் போகும் அளவில் ஜெர்மனியின் பொருளாதாரம் விழவில்லை . உண்மையிலேயே ஜெர்மனி நாட்டவர்கள் எந்தச் சூழலிலும் இருந்து மீண்டுவரும் பண்பினைக் கொண்டவர்கள்
  12. உங்களுக்காகத்தான் இந்த ஒரு வசனத்தையும் அதில் எழுதியிருந்தேன் 😊
  13. உங்களுக்கு என்ன பிரச்சனை 😂 வழக்குத் தோல்வி....... சுமந்திரனின் அசட்டையீனம் அல்ல அவர் வேண்டுமென்றே சரியான முறையில் அந்த வழக்கையே தோல்வி அடைய வைத்து அரச பக்கம் கட்டிட வேலைகளை தொடர எதிர்மறையாக அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளார் சில கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில்....... நீங்கள் எழுதும் நளினங்கள் எங்களுக்கு விளங்கும்😇
  14. தமிழரசு கேட்டு உருவான ஒரு 75 வருடம் பழமை வாய்ந்த கட்சி இப்போது பிழையான மேய்ப்பரின் கையில் சொல்ல முடியாத அளவிற்கு மேய்ப்பர் மாற்றத்தை விரும்புகின்றார் அனுராவின் ஆசியை பெறுவதுடன் நிற்காமல் ஆட்சியிலும் பங்கு கிடைக்கலாம் மேய்ப்பருக்கு
  15. பழைய பூங்கா ஒரு பசுமைத் திட்டத்தின் கீழே பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி . அதில் இதுவரை எந்த ஒரு ஆட்சியாளர்களும் கை வைக்கவில்லை ....... ஆனால் இப்போது சுமந்திரனின் வழக்குத் தள்ளுபடிசெய்யப்பட்டது அரசாங்கத்திற்கு ஆதரவாக முடிந்துவிட்டது மக்களுக்கு சுமந்திரனால் நன்மை கிடைக்கும் என்பவர்களுக்கு....... இனியாவது நல்ல ஒரு சட்டத்தரணியைப் பார்த்து சரியான முறையில் வழக்கைப் போடச் சொல்லுங்கள்😂
  16. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழ் நாட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்ட மலையாகத் தமிழர்களின் நிலை என்ன என்பது யாருக்காவது தெரியுமா ? அவர்களுடைய நிலை தொடர்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டால் அவர்கள் எப்படி தமிழ் நாட்டிலே வாழ்கின்றார்கள் என்பது தெரியும் சொந்த மக்களையே சிலோன்காரன் வந்துட்டான் என்று அலறிய தமிழ் நாட்டவர்கள் இருக்க....... அவர்களை இப்போது சுமந்திரன் இல்லை அனுர அனுப்பினாலும் அவர்களின் வெளியேற்றத்திற்கெதிரான பொறுப்புக்கு கூறலை யாரும் செய்யமாட்டார்கள். கோத்தா கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்ற முயன்று இப்போ அவரின் நிலையே கவலைக்கிடம் 😂 சுமனும் பாத்து சூதானமாக நடந்து கொள்ள வேண்டும் 😅
  17. என்னாது ஒருவாட்டி நீங்க சொல்வீங்க..... கருத்தைப்பார் நல்லாயிக்கீதா ...... சொன்னவனா.... அது யாருன்னு பாக்காதே..... அப்பிடீன்னு... மறுக்காலை வந்து குந்திக்கின்னு ..... நீ ஏன் வாத்தின்னு பேரை வைச்சுக்கிட்டேனு கேக்கிறாப்பல...... என்னாய்யா இது ............ சாமி இதுக்கு எனக்கு விளக்கம் வேணாம்😂 சுமந்திரன் எந்தூண்டு பெரியாம் தலீவர்...... அவரு சும்மா அறிக்கை உடலாம்......... 😇நாம யாரு .......வரியக் கட்டி வாறீக 🤣
  18. இயற்கை அனர்த்தத்தை காரணமாக்கி ஒரு இடத்தில் இரு நூற்றாண்டுகளாக வாழ்ந்த மக்களை வெளியேற்றி பின்னர் அங்கே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப இங்கேயிருந்து அங்கே மக்களைக் குடியேற்றி எல்லா மக்களின் மனதுகளையும் குழப்பி சலுகைகளைக் கொடுத்து மனதுகளை மாற்றி இங்கே பார்..... அங்கே பார்..... தெரிகின்றதா ஒளி வட்டம்..... என்று ஆர்ப்பரித்து......... சாமிப்பிள்ளையை சமி பிலே.... ஆக்கி மயில்வாகனத்தை மல்லி வானே.... யாக்கி இது புத்தன் இயேசு பிறந்த பூமி என்று மகாவம்சத்தையே மாற்றி..... இப்படியே மாற்றத்தையே வேண்டும் வேண்டும் என..... மக்களை ஏய்ப்பதே இந்த அரசியல்வாதிகளின் தொழில் . அதற்கு வக்காலத்து வேறை....... 😂
  19. இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட
  20. இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்
  21. தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை அந்த இடங்களில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கும் அரசுக்கும் நிச்சயமாக இருக்கு . ஆனால் சிங்கள அரசுக்கும் மலையக அரசியல் வாதிகளுக்கும் மனம் இல்லை .எந்த ஒரு மலையாகத் தமிழ் அரசியல் கட்சியும் சிங்கள அரசிற்கெதிரான ஒரு சிறு அளவிலான அகிம்சைப் போராட்டத்தையும் செய்யும் நிலையில் இல்லை. மலையக மக்களை இப்படியான சங்கடத்தில் வைத்திருந்தாலே அவர்களுக்கு வாக்கு வேட்டை செய்ய வசதியாக இருக்கும்- இப்போது அனுரா திசாநாயக்க நாட்டின் தலைவராக வந்திருப்பதால் அவரின் மீதான தனிப்பட்ட ஒரு நம்பிக்கையினால் பல உலக நாடுகளும் அவருக்கான ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில் இந்த NPP அரசால் இந்த மலையக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மலையக மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் அரச நிர்வாகத்தினர் யாரையும் கூட்டாக வேறு இடத்தில் குடியேற அனுமதிக்க மாட்டார்கள். மனோ கணேசனின் ஒரு பேட்டி பார்த்தேன் அதில் அவரே சொல்கின்றார் லட்சக்கணக்கில் மக்களை இடம்பெயர வைத்தால் எங்கள் பிரதி நிதித்துவம் பாராளுமன்றில் இல்லாம போய்விடும்.என்று ஆகவே அரசியல்வாதிகள் தங்கள் முனைப்பில் கருத்தாக இருக்கின்றார்கள் என்பது அவருடைய அந்தக் கூற்றில் இருந்து தெரிய வருகின்றது அடுத்து நீங்கள் கூறுவது போல ஒரு சில நூறு அல்லது ஆயிரம் மலையக மக்களை முதலில் வடக்கு கிழக்கில் குடியேற்றி அவர்களுக்கான ஆவனங்களை செய்து கொடுக்கலாம் என்பது . வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளுக்காக மட்டுமே இந்த நூறு அல்லது ஆயிரம் மக்களும் பயன்படுத்தப்படுவார்கள். மலையக மக்களின் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக்குறி ஆக்கப்படும் அந்த மாணவர்களால் வடக்கு கிழக்கு மாணவர்களின் போட்டிக் கல்வி முறையில் தேற முடியாத சந்தர்ப்பங்கள் அதிகமாக உருவாகும். . இப்படிப் பல சிக்கல்களினால் அவர்களின் முன்னேற்றம் இன்னும் சில தசாப்தங்களுக்குப் பின்தள்ளப்படும்
  22. கதையின் நகர்வு மிக்கது திறமையாக இருந்தது எங்கள் ஊரில் ஒரு வீட்டில் ஒரு மாமரம் இருந்தது. அதன் கொப்புகள் இரண்டு அயல் வீட்டாரின் வேலிக்கு மேலாக சென்று அவர்களின் காணிக்குள் நீண்டு இருந்தது, அவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருக்கும் வரை மாமரம் காய்க்கும் போது பக்கத்து வீட்டுக்காரர் அதை அனுபவித்து வந்தனர் . சில காலங்களின் பின்னர் இரு குடும்பத்தாருக்கும் இடையில் உறவு ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து விட்டது. அடுத்த நாள் அந்த மாமரத்தின் இரு கொப்புக்களும் மரத்தின் உரிமையாளரால் வெட்டப்பட்டு விட்டன. இதில் ஒரு முக்கியமான விடையம்..... அந்த இரு குடும்பத்தவர்களும் ஒரே பெற்றோருக்குப் பிறந்த இரு சகோதரிகள்😂
  23. சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம் ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்.... 1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா? 2.முடியாது என்றால் என்ன காரணம் ? (சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை) 3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ? 4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ? மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ? முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂
  24. அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும் ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,, இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇
  25. சிங்கள இன மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று ஆயுத ரீதியாகப் போராடிய தமிழ் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதியில் ....... எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்... எங்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள். எங்கள் நிலத்தில் எங்கள் சந்ததியினருக்கு கல்வி உரிமையைக் கொடுங்கள்.... நாங்கள் காடு அழித்து கடும் துயர் மத்தியிலும் நாட்டிற்காக எங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் .... என்று அகிம்சை வழியில் போராடும் மக்களை எப்படி அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும்? சரி அப்படி ஒரு நிலை வந்தால் 200 ஆண்டுகள் உழைப்பினாலும் கடும் துயரங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட அந்த நில புலன்களின் நன்மைகளை யார் அனுபவிக்கப் போகின்றார்கள்? (இதுக்கை வேறை மலையகம் சிங்களரின் தாயகமாம்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.