Everything posted by பகிடி
-
அறுகம்குடா இஸ்ரேலியர்களுடையது என 5000 ஆண்டுகளிற்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டதா?!
புலம் பெயர் தமிழர்கள் capital pooling செய்து இலங்கையில் ஒரு நிறுவனத்தை அமைப்பதன் மூலம் Real Estate Investment Trust என்ற வகையில் நல்ல வருமானம் தரும் இது போன்ற இடங்களில் முதலீடு செய்யலாம்.
-
ஒரே இடத்தில் இறந்து புதைந்த ஆயிரக்கணக்கான டைனோசர்கள் - ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்பட வைத்த வரலாற்று நிகழ்வு
கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி. Alberta வில் உள்ள Drumheller இல் சிறந்த டைனோசர் அருங்காட்சியகம் ஒன்று உண்டு. இரு தடைவை சென்று இருக்கின்றேன். Pipestone creek பற்றி இப்பொழுது தான் கேள்விப்படுகின்றேன். யாரும் யாழ் கள உறவுகள் இஞ்சால வந்தால் ஒருக்கா போய் பார்க்கலாம்.
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
ஊரில் விவாகரத்து இலகுவாக்கப்பட வேண்டும். புனிதப் படுத்துதல்கள் தவிர்க்கப் பட வேண்டும்
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
மன்னிப்பு கேட்காத கமலுக்கு பாராட்டுக்கள்
-
சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும்
Doctorஸ் தங்களின் இடுப்புக் கொழுப்பு, தொந்திக் கொழுப்பு போன்றவற்றை குறைத்து விட்டு வந்து பிள்ளைகளுக்கு பாடம் எடுத்து இருக்கலாம்.
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன் யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும் வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள் கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும். ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி. சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு? இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
கனடாவில் ஓய்வு பெற்ற பின் மனுஷன் மாதிரி வாழ இன்றைய காலத்தில் கணவனுக்கும் மனைவுக்கும் சேர்த்து மாதம் $4000 வேண்டும். ஓய்வு பெற முன் வீட்டுக்கு முழுப் பணமும் செலுத்தி முடித்து இருக்க வேண்டும். ஓய்வூதியம் தலா ஒருவருக்கு $2000 வர வேண்டும் என்றால் ஓரளவுக்கு நல்ல வேலையில் இருந்து இருக்க வேண்டும். இது பலருக்கு இங்கே இல்லை. இதில் பிள்ளைகளும் இவர்களை இன்னும் நம்பி வாழ்ந்தால் என்னாவது?
-
பாவப்பட்ட 🇪🇺🇨🇦 புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை..
உலகிலேயே சொந்த பந்தங்ளிடம் கையேந்தி வாழும் பழக்கம் உள்ளவர்கள் தென்னிந்திர்களும் எரித்திரிய எதியோப்பிய மக்களும் தான் . இதன் விளைவு - உடனடிப் பயன் கிடைகின்றது ஆனால் நீண்ட காலநோக்கில் சமூகத்துக்கான தீமை அதிகம். இது புத்தாக்கங்களை நீர்த்துப்போக செய்கிறது. தங்கி வாழ்வதை ஊக்கிவித்து சமுகம் தேங்கிப் போக வழி செய்கிறது. உண்மை
-
கனடிய தேர்தல்: ஒரு போஸ்ட் மோட்டம்
நல்ல கட்டுரை. இந்தத் தேர்தலின் பின் Alberta பிரிந்து போகும் முயற்சியில் இறக்கி இருக்கிறது. தேர்தலின் சூடு தணிய சுதந்திர ஆல்பர்டா கனவும் தணியலாம்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
நான் வசிக்கும் Alberta province ஒட்டோவை கடுமையாக பகைக்கும் முடிவை எடுத்து இருக்கிறது. Alberta கனடாவில் இருந்து தனியாகப் போக வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் பலமாக கேட்க ஆரம்பித்து உள்ளது
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
எதுவுமே இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் புண் பொதுவாக ஒரு மாதத்தில் ஆறி விடும், epidural கொடுக்கும் முதுகு வலி பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும்.தவிர அந்த நோவினப் போக்கவும் வலி நிவாரணிகள் உண்டு இதனால்த் தான் பெண்களால் மேலும் பிள்ளைகள் பெற முடிகின்றது. அடுத்த விஷயம் ஆண்களை விட பெண்களுக்கு வலி தாங்கும் சக்தி அதிகம், அது இயற்கையாக அமைந்தது. புருஷன் போருக்குப் போகாமல் வீட்டில் உதவியாக இருந்தால் மனைவிக்கு depression பிரச்சனைகள் குறைவு. ஆனால் இதை மட்டுமே பிடித்து வைத்துக்கொண்டு ஆண்களை மட்டுமே கொலைக்களம் அனுப்புவது தவறு என்கின்றேன். பெண்கள் நாட்டின் சனத் தொகை க்கு முக்கியம், ஆகவே பிள்ளைப் பெறும் வயதுடைய பெண்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது. உங்கள் நியாயப்படி ஆண்கள் கட்டாயம் போரில் சாக வேண்டும் என்றால் பெண்கள் கட்டாயம் இத்தனை பிள்ளைகள் பெற வேண்டும் என்றாவது சட்டம் கொண்டு வர வேண்டும் பெண்கள் பிறப்பதே பிள்ளைப் பேறு என்னும் போருக்காகவே என்ற உண்மையை வெளிப்படையாக சொல்லிய உங்களுக்கு நன்றி. இதை கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று பேசும் இன்றைய பெண்ணியப் போராளிகள் ஏற்க மாட்டார்கள் தவிர பெண்கள் பின் அரங்கில் நன்றாக செயல்படுவார்கள் என்பதை ஏற்கின்றேன். ஆகவே பெண்களுக்கு கட்டாய தாதிப் பயிற்சி போன்றவையாவது கொடுக்கப்பட வேண்டும்.
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
இதை சொல்லி சொல்லியே பெண்கள் காலா காலமாக தப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது எத்தனை பெண்கள் C section செய்யாமல் பிள்ளை பெறுகின்றர்கள். Pain அளவு மிகக் குறைந்த அளவில் தான் இன்று பிள்ளைப் பேறுகள் நடக்கிறது. இயற்கை பிரசவம் என்றாலும் epidural முலம் வலி நிவாரணி எடுத்து விட்டுத் தான் மிச்சம் எல்லாம். பெண்களுக்கு சம உரிமை வழங்கத் தயார். ஆனால் போர் என்று வரும்பொழுது அவர்களும் சாக ரெடி ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண் ஈஈயம் ஒரு பம்மாத்து வேலை.
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
ஆணும் பெண்ணும் சமம் என்கிறார்கள் ஆனால் போர் என்று வந்துவிட்டால் ஆண் மட்டும் தான் சாக வேண்டுமாம்.
-
14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
Ketamine கன காலம் பாவித்தால் erectile dysfunction வருமாம்.அது தான் ஆள் இப்பவே பின்விளைவுகளை உணர்ந்து செயல்படுகின்றார் போலும்
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
மக்களால் ஒரு தடவை நிராகரிக்கப் பட்டால் அரசியலிலேயே இருக்கக்கூடாதா? அவரை அரசியல் செய்யக்கூடாது என்று சொல்ல நாம் யார்? இங்கே கேள்வி ஒரு அரசியல்வாதிக்கு தீவிர தமிழ் தேசியர்களிடம் இருந்து வந்த, வரக்கூடிய உயிர் ஆச்சுறுத்தல் பற்றியது. நேர்மையான மனிதர்களாக அதை நாம் முதலில் கண்டிக்க வேண்டும், ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை, மாறாக இப்பொழுதும் எப்பொழுதும் போல் அவரை கரித்துக்கொட்டுவதுதான் வேலை. உயிர் ஆச்சுறுத்தல் இருப்பதால் அவர் அரசியலை விட்டு போய் விட வேண்டும் என்று நீங்கள் சொல்வதற்கும் அவரை அவரது அரசியல் நோக்கத்துக்காக கொலை செய்ய தேடுவோருக்கும் நோக்கம் ஒன்று தான்.
-
கணேமுல்ல சஞ்சீவ சுமந்திரனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டாரா?
இங்கே யாழ் தளத்திலேயே சுமந்திரன் எப்ப சாவார் எப்ப செத்த வீடு கொண்டாடலாம் என்று நாட்களை எண்ணிக்கொண்டு ஆட்கள் இருக்கினம். ஆஸ்திரேலியாவில் இருக்க மாட்டினமா?
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
நீங்காத நினைவுகள்! சென்று வாருங்கள் ஆனந்தி அக்கா
-
சமத்துவ சமூகமின்மையே ஊழல், மோசடி நிறைந்த கலாசாரம் உருவாகக் காரணம் - பிரதமர் ஹரிணி
- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
சவாகச்சேரி 2004 முதலே கிட்டத்தட்ட இப்படித்தான். ஒரு படம் பார்க்க திரையரங்கம் செல்ல முடியாது.- CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
தனுஷ் நடித்த செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் ஒரு வசனம் வரும் "நிறைய மொழி தெரிந்தால் ஒரு மொழியும் உருப்படியாகத் தெரியாது "- தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
சில சமயம் இப்போது தனி நாடு கோர வாய்ப்பு இல்லாத காரணத்தால் அதற்கான காரணங்களை மட்டுமே அரசியல் ஆக்கி இவர்கள் அரசியல் செய்வது தனி நாட்டுக்கான கோரிக்கைகளை நீறு பூத்த நெருப்பாக வைக்க உதவும். சீமான் அப்படி ஒருவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தனிநட்டுக்கான காரணங்களை மட்டும் வைத்து அரசியல் செய்து தனி நாட்டுக் கனவை நீறு பூத்த நெருப்பாக வைத்திருக்கும் மற்றவர்களில் அல்லவா கை வைக்கின்றார்?- இந்தியிலே என்ன இருக்கிறது? | அண்ணா உரை
முட்டாள்த்தனம் மோடியிடமும் இருந்தது, முகநூல் முக்கால்வாசிக்களிடமும் இருந்தது. முகநூல் முக்கால்வாசிகளைப் பற்றி சொல்லி விட்டீர்கள், ஆனால் மோடி இந்தக் கேள்விக்கு தான் பதிலளிப்பது சரியாகஇருக்காது என்று சொல்லி இருக்க வேண்டும். தவிர மோடிக்கு அந்தக் கேள்வி முழுமையாக விளங்கவில்லை என்றொ அல்லது அவர் அதை விளங்கி பதிலை process செய்யும் நேரத்துக்குள் டிரம்ப் முந்தி விட்டார் என்றொ இதை எடுத்துக்கொள்ளலாம் ஒன்று தனக்கு ஆங்கிலத்தில் நன்கு புலமை இல்லை என்று ஒதுங்கி இருந்து ஹிந்தி மொழிபெயர்ப்புக்கு காத்திருக்க வேண்டும். அல்லது ப சிதம்பரம் போல சாரளமாக ஆங்கிலதில் பேசவும் கேள்விகளை உடனுக்குடன் process செய்யவும் தெரிந்து இருக்க வேண்டும். மோடிக்கு இரண்டும் கெட்டான் நிலை. தான் வல்லவர், சூரர் என்று காட்டவும் வேண்டும், மாட்டவும் கூடாது. பிள்ளையார் என்பது அந்தக் காலத்தில் இந்தியா பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையில் முன்னோடியாக இருந்தது என்பதற்கு ஆதாரம் என்று மோடி இந்திய மருத்துவ மாநாட்டில் கூறியதை மறந்து விட்டேர்களே...- யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
- யாழ்ப்பாணத்திலிருந்து மற்றுமொரு விமான சேவை
பலாலி விமான நிலையத்தை பெரிதாக்காமல் இருப்பதே இலங்கை அரசின் கொள்கை.- கருத்தடை மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டால் அபாயம்; ஆய்வின் முடிவில் வெளியான அதிர்ச்சி
கருத்தடை மாத்திரை எடுப்பதால் பல இஞ்சி இடுப்பழகிகள் இன்று தடிச்சிகளாக மாறி விட்டார்கள். எங்களுடன் படித்த அழகிய பெட்டைகள் எல்லாம் இன்று உரல் மற்றும் மண்ணணெய் பெரல் போல் ஆகி விட்டார்கள், பாடசாலையில் படித்த பெட்டையைக் காட்டி இவள் எல்லாம் என்னுடைய முன்னாள் காதலி என்று மனிசியிடம் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆண்கள் vesoctomy செய்யலாம் அல்லது பெண்கள்Tubal legation செய்யலாம். - சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
Important Information
By using this site, you agree to our Terms of Use.