Everything posted by ரசோதரன்
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
பிரேமகுமார் குணரத்னம் அவர்களைச் சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அவர் இப்பொழுது ஜேவிபியில் இல்லை. உள்தகராறாகி, பிரிந்து போய் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டார் - Frontline Socialist Party. சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலையில் இந்த இரண்டு பிரிவுகளுமே மோதிக் கொண்டனர்..............
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
ஓபிஎஸ்ஸும், ரணிலும் சரியான மொட்டைக் கத்திகள், சிறி அண்ணா...........🤪.
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்பு போலவே இதுவும் நல்ல சிரிப்பாக இருக்குது............ யார் யாரை இணைத்துக் கொள்ள முடிவெடுக்கின்றது.........🤣.
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
நாமலின் மனைவியும், மனைவியின் தந்தையும் போன வாரமும் வெளியேறினார்கள் என்று ஒரு செய்தி வந்து இருந்ததது. பசில் மருத்துவப் பயணம் என்று சொல்லி துபாய் கிளம்பிய அதே நாட்களில்........ நாமல் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை போல.........🤣.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
🤣......... அது வேற, இது வேற, விசுகு ஐயா........... முந்தி இந்திய இராணுவத்துடன் இருந்த தலையாட்டிகள் உண்மையான இயக்கக்காரர்களை பார்த்து தலையாட்டுவதில்லை. ஆனால் ஊரில் தெரிந்தவர்கள் யாராவது மாட்டுப்பட்டால் அவர்களைப் பார்த்து தலையை ஆட்டி விடுவார்கள்.............. கொழும்பில் போய் இறங்க, இந்த வருஷக்காரான், இந்த வகுப்புக்காரன் எல்லாரையும் தூக்கிக் கொண்டு போக ஒரு கூட்டம் தயாராக இருக்குதே தெரியல்ல.........🤣.
-
மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ; டக்ளஸ் தேவானந்தா!
இந்தப் பழைய படத்தையே காட்டிறதை விட்டிட்டு, இரண்டு பக்க மீனவர்களிடமும் இருந்து தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடுங்க சார்.............
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இது நாங்கள் வகுப்பில் எடுத்த நோட்ஸுகளைப் போலவே இருக்குது......🤣. நம்மட கூட்டாளிகள் தான் யாரோ அவசரப்பட்டு, தன்னுடைய ஆசையை இப்படி ஒரு லிஸ்ட்டாக வெளியிட்டிருக்கின்றார் போல.....
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
🤣........ அவர் பெயர் தானே இப்ப எல்லா இடமும் இருக்குது, கபிதன்...... நேற்று இது வாட்ஸ்அப்பில் ஆங்கிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் அநுரவின் பெயரை கீழே போட மறந்துவிட்டார்கள்....... தமிழ் மொழிமாற்றம் வேறு தப்பும் தவறுமாக இருக்கின்றது.......... ------------------------------------ Immediate Changes in a future NPP government . 1. Paye Taxes from 36% to 24%. 2. VAT will be exempt for Food items, Health sector services & educational books. 3. One vehicle per minister/MP. 4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians. 5. Cut down on unnecessary government expenditure. 6. No familly/Frieds will be accommodated on overseas tours. 7. All tours are on assigned targets. 8. Only 25 ministries. 9. Cut down prices on electricity & fuel. 10. Low interest rates 11. Development bank for the start of new small & medium scale industries. 12. A 3 bench special court to hear fraud cases. 13. Presidents budget cut down by 50%. 14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians. 15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences. 16. New laws to prevent MP's from switching the party they were elected to. 17. New Invesments (local & overseas Srilankans already ready to invest). 18. No additional benefits for politicians over citizens. 19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 22. Restoring the oil refinery. 23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned. 24. New technology for the fisheries industry to enhance the yeild (Fishermen to receive directions for fishing areas) 25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs. 26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a mnimum cost. 27. Facilitate for Eco based tourism. 28. Plans to capture IT market. 29. Changes in the education policies to facilitate the economy. 30. Secure Food, Heath & and education as fundamentals for the citizens through adequate funds.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
🙃........... ஒரு தனிநபரிடமும் இருந்து ஒரு சல்லிக்காசு கூட பறிமுதல் செய்யப்படமாட்டாது....... ஆள் அடையாளத்துடன் இங்கே ஊழல் செய்தவர்களோ அல்லது கொள்ளை அடித்தவர்களோ கிடையாது. இந்தியாவில் மோடியும் இப்படித்தான்........ கறுப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 15 இலட்சம் ரூபாய்கள் கொடுக்கப் போகின்றேன் என்றார்........... இன்னும் ஒரு 15 சதம் கூட அவர் கொடுக்கவும் இல்லை, ஒரு கறுப்பு பணத்தையும் மீட்கவும் இல்லை........😀.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இந்த நிரல் இன்னமும் அநுரவைப் போய்ச் சேரவில்லை.......... இதில் இருக்கும் விபரங்கள் அவருக்கு தெரிய வந்தவுடன், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கி விடுவார்..............🤣. 'சந்திரனிலிருந்து அரிசி, முட்டை, சீனி, உள்ளி, இஞ்சி கொண்டு வருவோம்......' என்ற ஒரு வரியையும் இந்த நிரலில் 31 வதாக சேர்க்கலாம்..........😜.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இவர்களின் நட்பு வட்டத்தில் தமிழர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன், விசுகு ஐயா. ஒரு போதும் ஒரு இணக்கமான சாதாரண பழக்கம் கூட இவர்களுக்கு சக தமிழர்களுடன் இருந்ததில்லை. இவர்களின் கட்சியில் சில தமிழர்கள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இருக்கின்றார்கள். முக்கிய நியமனங்கள் பலவும் இவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே என்றால், அது தனிச் சிங்களமாகவே இருக்கப்போகின்றது. கோதபாய இங்கு அமெரிக்காவில் இருந்து சில நண்பர்களை அவரின் காலத்தில் இதே போன்று பதவிகளில் நியமித்திருந்தார், உதாரணம்: உபுல் - விமான சேவைகள் ஆணையாளர்.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இவர் அநுரவின் roommate ஆக பல்கலையில் இருந்தவர் என்கின்றனர். இதையே தான் கோதபாயாவும் செய்தவர்............... நியமனங்கள் நண்பர்கள் என்ற வகையில் மட்டும் இருந்தால், எதிர்பார்க்கப்படும் எந்த மாற்றமும் வரப் போவதில்லை............
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
🤣........... ரணில் ஒரு விதத்தில் மறைந்த லாஸ் ஏஞ்சலீஸ் கூடைப்பந்தாட்ட வீரர் Kobe Bryant ஐ ஞாபகப்படுத்துகின்றார். ஒரு போட்டியில் தோற்று விட்டால், Kobe Bryant குளித்து விட்டு உடனேயே மீண்டும் அதே கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கு வந்து பந்துகளை கூடையில் எறிந்து கொண்டேயிருப்பாராம்...... அவரை ஒரு இயந்திரம் என்று சொன்னார்கள். ஒரு பெரிய வித்தியாசம்.......... Kobe Bryant ஐந்து தடவைகள் சாம்பியன் ஆக வந்தார்......... ரணில் மட்டும் தானா கதை சொல்லுவார்........... நாங்களும் அவருக்காக கதை சொல்லுவம்..........🤣.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
ஐக்கிய மக்கள் சக்தி அநுரவிற்கு தேவைப்படும் வேளைகளில் ஆதரவு வழங்கும் என்று சஜித் சொல்லியிருக்கின்றார். https://www.dailymirror.lk/latest-news/SJB-will-support-Anura-whenever-needed-Sajith/342-292218#
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
🤣......... சமீபத்தில் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அங்கு இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே சண்டை என்றே பூட்டப்பட்டது. ஒரு பிரிவு ஜேவிபி, அடுத்த பிரிவு இன்னொரு சோஷலிஸ்ட் முன்னணி.........! பழைய சோஷலிஸ்டுகள் இப்பொழுது ஆட்சிக்கு வர, புதிதாக இன்னொரு முன்னணி உருவாகி, தேவையென்றால் இன்னொரு 'அரகலிய' ஆரம்பித்து, சிங்கள மக்களை காப்பாற்ற ஏற்கனவே தயாராகிவிட்டார்கள் போல........... சிங்கள மக்கள் வாழ்வோ, தாழ்வோ ஒரு அலையாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் நாலு பக்கங்களாக பிரிந்து, நண்டுகள் போல போய்க் கொண்டிருக்கின்றது எங்களின் தெரிவுகள். ஜேவிபியினர் ஜாதிக ஹெல உருமய, பூமி புத்ர, பொதுஜன பெரமுன போன்ற இனவாதிகள். இதை நான் மீண்டும் மீண்டும் இங்கே எழுதிக் கொண்டிருக்கின்றேன். உதய கம்மன்பில கூட இவர்களில் ஒருவர் தான். அநுர, ரில்வின், உதய, விமல்,..... என்று இந்த வரிசை இப்பொழுது பல கட்சிகளாகப் பிரிந்து இருக்கின்றார்கள். அரசியல் ரீதியாக ஒரு துரும்பைக் கூட தமிழர்களுக்காக இவர்கள் அசைக்கப் போவதில்லை. உண்மையில் எந்த பெரும்பான்மை அரசியல்வாதியும் அசைக்கப் போவதில்லை, சஜித், ரணில் உட்பட. ஒன்பது அல்ல, இன்னும் 90 இலங்கை ஜனாதிபதிகள் வந்தாலும் இதுவே தான் நிலைமை. சர்வதேசமும் எங்களுக்காக எதுவும் செய்யப் போவதில்லை. எங்களை விட பாலஸ்தீனர்கள் இன்று பெரும் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கேட்போர் எவருமில்லை. இத்தனைக்கும் எங்களின் குரலை விட அவர்களின் குரல் கேட்க உலகில் நாடுகளும், மனிதர்களும் இருக்கின்றனர். ரணில் வெல்லாதது இல்லை, இவ்வளவு குறைவாக வாக்குகள் ஏன் எடுத்தார் என்பதே ஆச்சரியம். மகிந்த குடும்பத்தை காப்பாற்றினார் என்பது மட்டும் அதற்கான காரணம் இல்லை. இதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலிலும் அவருடைய கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. ரணிலே அந்தப் பாராளுமன்ற தேர்தலில் தோற்றார். அதுவும் ஒரு படுதோல்வி. வெளியில் என்னதான் வெற்றிகரமான அரசியல்வாதி போன்ற தோற்றம் இவருக்கு இருந்தாலும், இவர் ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி. இவர் வந்தால் நாட்டுக்கு நல்லது என்பதே என் எண்ணமாகவும் இருந்தது. பெரும்பானமை மக்கள் அப்படித்தான் நினைக்கின்றார்கள் போல என்றும் நினைத்திருந்தேன். ஆனால் நாட்டு மக்கள் வேறு ஏதோ நினைத்து இருக்கின்றார்கள். இனிமேல் என்ன செய்ய.............. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு..............🤣.
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
இந்த மனுஷனுக்கு ஏதோ நடந்து விட்டது............ தேர்தலுக்கு முன் ஆஸ்பத்திரி - அவசர நோயாளி - மருத்துவர் என்று ஒரு கதையைச் சொன்னார். இப்ப குழந்தை - தொங்குபாலம் - தொங்கினேன் என்று இன்னொரு புதுக் கதையுடன் நிற்குது இந்த மனுஷன். இனி வீட்டில் இருந்து கொண்டு இதே டிசைன்ல கதை கதையாக எழுதப் போகுது போல ஆள்............ செத்தார்கள் வாசிக்கும் சிங்கள மக்கள்..........🤣.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் இரண்டு பேர்களும் கன்னத்தில் விழுந்த அந்தப் பகுதியை வசதியாக பார்க்காத மாதிரி இருக்கிறீர்கள்..........🤣. அடி வாங்கியதில் ஒருவன் இன்னமும் இலங்கையில் தான் இருக்கின்றான். அவன் யாருக்கு வாக்குப் போட்டான் என்று ஒரு சலனமும் இல்லை. இவர்களில் சிலரை இன்னமும் நல்லாவே ஞாபகம் இருக்கின்றது. இவர்களின் பேச்சுத்திறமை தனித்துவமானது, அத்துடன் இவர்கள் இலங்கையின் சில பகுதிகளில் இருந்தே வந்திருந்தனர். சிலர் படிப்பிலும் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் எந்த சித்தாந்தத்திலும் பயிற்சியோ அல்லது தெளிவோ இருந்தது போன்று அன்று தெரியவில்லை. ஒரு ஆவேசமே தெரிந்தது. நாங்களும் தான், ஒவ்வொருவரும், அன்றிலிருந்து இன்று வரை எவ்வளவு மாறியிருக்கின்றோம். சிலர் முற்றாக தலைகீழாகவும் மாறியுள்ளனர். இவர்களிலும் மாற்றங்கள் வந்திருக்கும், எல்லோரையும் அரவணைத்துப் போவார்கள் என்று நம்புவோம்..........
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கும் நாட்களில் ஒருநாள் எங்கள் வகுப்பில் இருவருக்கு கன்னத்தை பொத்தி விழுந்ததும் நல்லாவே ஞாபகத்தில் இருக்குது...............🫢.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நான் இடையில் களைத்துப் போய் சொல்லிக் கொள்ளாமல் நித்திரைக்குப் போய்விட்டேன்...........எல்லாரும் நித்திரையில என்றால் எண்ணுகின்றவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிவிடுவினம் என்ற பயம் தான்...........🤣. ஆனால், பரவாயில்லை, சரியாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்..............
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
கந்தையா அண்ணை, இன்றைக்கு உங்களோட பேச்சுவார்த்தை கிடையாது. நீங்கள் கேட்கப் போகின்ற கேள்விகளில் இந்த தேர்தலில் யார் யார் நின்றார்கள் என்பதே மறந்து போய்விடும்...........🤣.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் நித்திரை கொள்ளப் போகின்றேன் என்று போய் விட்டீர்கள்............. நாங்கள் இப்படியே இது இழுபடுவதை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்............🤣.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நீங்கள் என்ன ஒரு கடுங்கோப முனிவர் சாபம் போடுவது போல அள்ளித் தெளித்துவிட்டீர்கள்............🤣. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், இந்த மூன்று கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. நாமலின் நிலை தான் ஆகக் கவலைக்கிடம்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு பக்கம் சாய்ந்துவிட்டன. ஷேக் ஹசீனா ஓடியவுடன் பங்களாதேஷும் 'ரசாக்கள்' ஆகிவிட்டனர். இலங்கை இன்றுடன் 'மாவோ நமோ நமோ.....' என்று அந்தப் பக்கமும் சரியும். நேபாளும், மாலதீவும் ஏற்கனவே போய்விட்டன. அதானியின் மன்னார் காற்றாலையை காப்பாத்துவதே வல்லரசு இப்ப செய்ய வேண்டியது...........🤣.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அநுரவே வெல்லட்டும்.......... ஆனால் முதல் எண்ணிக்கையில் 50% கீழேயே எடுக்கட்டும். நாங்களும் எங்கள் வாழ்நாளில் இந்த இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவதை ஒரு தடவையாவது பார்த்து விடுவோம்..........
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
நாடு இன்று இருக்கும் நிலையில் இவர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் உலக நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களுடனான உறவுகளில் பல தெரிவுகள் இவர்களுக்கு இல்லை என்றே தெரிகின்றது. ரணில் போன பாதையிலேயே, அதாவது ஐஎம்எஃப் சொன்ன பாதையிலேயே போவது தான் பிரதான தெரிவாக இருக்கும். உல்லாசப் பயணிகள் வருகையை வருடத்திற்கு இரண்டு மில்லியன்களிலிருந்து நான்கு மில்லியன்களாக மாற்றுவேன் என்று போன வாரம் அநுர சொல்லியிருந்தார். தீவிர இடதுசாரி நாடொன்றுக்கு உல்லாசப் பயணிகள் படையெடுத்து வரப் போவதில்லை. மிதவாதம் என்றே மாறவேண்டும். மிகப் பெரும் தலையிடியாக இருக்கப் போவது ஜேவிபியினரின் அடாவடித்தனம். தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை அங்கே அடாவடியாக இருப்பார்கள். புரட்சி வேறு, ஆட்சி வேறு என்ற புரிதல் வரவேண்டும்............