Everything posted by ரசோதரன்
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
நேற்று குடிவரவு குடியகல்வு அதிகாரியை நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் சிறையில் போட்டது. உடனேயே வழிக்கு வந்துவிட்டார்கள்.............. விசா வழங்கும் புதிய முறையிலிருந்து பழைய முறைக்கு போக ஆறு மாதங்கள் எடுக்கும் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒரே இரவில் பழைய முறைக்கு போய் விட்டார்களே...........
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
🙃......... அங்கே நாட்டில் ஒரு நீண்ட வரிசையே நிற்குது...... ஒரு நண்பன் வாக்கு போட்டு விட்டு, ஒரு விரலை படமும் எடுத்து போட்டு விட்டு, சிஸ்டம் மாறவேண்டும் என்ற செய்தியும் போட்டிருந்தான் என்று முன்னர் இங்கு எழுதியிருந்தேன். அவன் இப்ப அங்கே ஒரு கோயில் கட்ட தயாராகி விட்ட மாதிரி தெரிகின்றது....... அநுரவிற்குத்தான்......படித்தவன், பதவியிலும் இருக்கின்றான்................ அவனுக்கு இப்ப எல்லாம் ஒரு நேர்கோட்டில் வருகிறது போல...😀. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி சார்பாக கிழக்கு மாவட்டம் ஒன்றில் நின்று படுதோல்வியடைந்தவர்களில் ஒருவனும் இதே வகுப்பு தான்........... இந்த தடவையும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பான்...... எனக்குத் தெரிந்த அளவில் அவன் செய்யும் ஒரே வேலை தேர்தலில் நிற்பது மட்டுமே.............😜. இப்படி இன்னும் சில உதாரணங்கள் உண்டு. இதில் எவரையும் அநுர கண்டுகொள்ளவில்லை என்றால், அநுர சரியான வழியில் போக முயற்சி செய்கின்றார் என்று சொல்லலாம்..........
-
பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து பலமான தரப்பாக போட்டியிடுவது குறித்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆராய்வு?
பலமான தரப்பு...... பல் தரப்பு....... பகிஷ்கரிப்பு............ இப்படியே மாறி மாறி ஒன்றைச் சொல்லிக் கொண்டு, அந்தப் பாராளுமன்றத்துக்குள் போவதில் மட்டும் குறியாக இருக்கின்றீர்கள் போல........... அந்தக் கேன்டீனில் சாப்பாடும் அருமையாக இருக்கும் என்று சொல்கின்றனர்.............
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
விஜய்காந்த்தின் 'ரமணா' படத்தை கிட்டடியில் திரும்பவும் பார்த்திருக்கின்றீர்கள் போல.........🤣. உங்களுக்காக ஒரு AI இடம் இந்தக் கேள்விகளை கேட்டேன். 'அப்படி எல்லாம் ஒரு தகவலும் இங்க கிடையாது, போ போ.........' என்று கலைத்துவிட்டது..........
-
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்!
அப்படியா............... ஏமாற்றுவது என்பது தான் முடிவு, ஆனால் என்ன பெயரில் ஏமாற்றுவது என்பதில் தான் உங்களுக்கிடையே இழுபறிகள் வரும் போல..............🤪.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
ஊரில் கோயில் கும்பாபிஷேகம் ஒன்று வருகுது.......... அதைச் சாட்டாக வைத்தாவது வேலைக்கு ஒரு மூன்று கிழமைகள் கட் அடிப்பமோ என்று நினைத்தனான்........... இப்ப வேண்டாம், அடுத்த கோயில் கும்பாபிஷேகம் வரட்டும்............🤣. அங்கே படித்த எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். என்னையும், நீர்வேலியானையும் போல இங்கு களத்தில் இன்னும் சிலராவது இருப்பார்கள். ஆனால் அடக்கமாக இருக்கின்றார்கள்...... அவர்களுக்கு தான் பதவிகளோ தெரியவில்லை...........😜.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
🤣..... ரசோதர என்று என் பெயரை மாற்றிவிடப் போகின்றார்கள்....
-
உருவப்படுமா?
அருமையான கவிதை நொச்சி..........🙏. 'நான் பார்க்காதது எதையும் நான் எழுதவில்லை.........' என்பது போல சில பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர். உங்களின் எழுத்தும் அவ்வாறானதே.........👍. ஒரு நாளுக்கு மட்டுமே என்றால் மரவள்ளியும், சம்பலும் அற்புதம் தான்..........அதுவே தினம் என்றால் அது வேற நிலைமை. 'அற்புதங்கள்....' என்ற சொல் அவநம்பிக்கையையே உடனே கொண்டு வந்துவிடுகின்றது. எங்களின் ஏராளமான முன் அனுபவங்கள் அப்படி.
-
இந்திய மீனவர்களை விடுவிப்பதன் மூலம் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்கவேண்டும்; இந்தியாவிலிருந்து ஜனாதிபதிக்கு வந்த கடிதம்
முந்தாநாள் இது ஒரு செய்தியாக நியூஸ் 18 இல் போய்க் கொண்டிருந்தது. செய்தியில் இவர் இன்னும் அதிகமாகச் சொன்னதாகாச் சொல்லியிருந்தார்கள். தமிழக மீனவர்கள் தெரிந்தே எல்லை தாண்டுவதில்லை என்றும், சமீபத்தில் இலங்கை மீனவர்கள் இருவர் காணாமல் போயிருந்த பொழுது மயிலாடுதுறை மீனவர்கள் சேர்ந்து தேடி உதவினார்கள் என்றும் சொல்லியிருந்தார்.................. அப்படியான மயிலாடுதுறை மீனவர்களை நீங்கள் கைது செய்து வைத்திருக்கின்றீர்களே என்றும் கேட்டார்...........🫢. பொறுப்பு மிக்க இடங்களில் இருப்பவர்கள் கூட இப்படி அரைகுறையாக இருந்தால், விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் என்ன தான் செய்வது, எப்படி பிரச்சனைகளை தீர்ப்பது....... சமூக ஊடகங்களில் சும்மா பொழுது போக எழுதும் நாங்களே எவ்வளவு கவனித்து எழுதிக் கொண்டிருக்கின்றோம்...............
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நீங்கள் இப்ப இடையில் ஒரு லீவு எடுத்து, கொஞ்ச நாட்கள் ஒரு கணக்கு ட்யூசனுக்கு போனனீங்கள் தானே........... அந்தக் கணக்கு வாத்தியாரை பாவபுண்ணியம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிடுங்கோ............🤣.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
🤣......... வரும் தேர்தலில் தான் போடியிடப் போவதில்லை என்றும், இரண்டு வருடங்களுக்க்கு ஓய்வெடுக்கப் போகின்றேன் என்று ரணில் சொல்லியிருக்கின்றாரே........... நீங்கள் வேற இரண்டு வருடங்கள் தான் இந்த ஆட்சி என்கின்றீர்கள்.......... ரணில் வந்தால் ஜனாதிபதியாகத் தான் வருவாரோ...........😜. ** இரண்டு வருட ஓய்வு என்று ரணில் சொல்லவில்லை, நானா அடிச்சு விட்டது..........
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
🤣...... நம்மட கதை....... அதை இங்க எவர் கேட்கப் போகின்றார்கள், கந்தையா அண்ணை........ புலம்பெயர்ந்தவர்கள் பலர் பொதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அந்தக் காலத்தில் அப்படிக் கஷ்டப்பட்டோம், இப்படி அலைக்கழிந்தோம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். அதைக் கேட்ட பிள்ளைகள் 'உஷ்ஷ்....... யப்பா........' என்று ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்கள் பாருங்கள்.......... அது விலை மதிப்பற்றது......... இப்ப அநுர அப்படி ஒரு கதை சொல்லியிருக்கின்றார். இந்தக் கதையின் பின், 42 வீதத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு 50 வீதமாகவேனும் கூட வேண்டும்.............🤣.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இப்படியானவற்றை உண்மையிலேயே செய்யலாம். பலநாடுகளில் இருக்கும் வெற்றிகரமான நடைமுறைகளையும் ஆராய்ந்து, அதில் இருக்கும் குற்றம் குறைகளை தவிர்த்து, எங்களின் நாட்டிற்கு பொருத்தமான முடிவுகளை நீண்டகால நோக்கில் எடுக்கலாம்..............👍. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு, அப்படியே வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியவர்களிடமிருந்து ஒரு தொகையை மீட்கப் போகின்றோம் என்று ஒரு திட்டம் கொண்டு வராமல் இருக்க வேண்டும்.............🤣. எங்களின் முகத்தைக் கண்டால், அப்படி ஒரு திட்டம் அவர்களின் மனதில் தோன்றினாலும் தோன்றக்கூடும்............😜.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
🤣............... ஒரே வாங்கில் இல்லை, அண்ணை, இருவரும் வெவ்வேறு பீடங்கள்...... மேலும், அநுர வகுப்புகளுக்கு போயிருப்பார் என்றும் நான் நம்பவில்லை.............😜. ஏனென்றால் அவர் இரண்டு வருடங்கள் பிந்தித்தான் பாஸாகி வெளியே வந்திருக்கின்றார்.........
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இது தான் நிர்வாக வித்தியாசம்............👍. இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்: தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர் திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர் மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும் எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள் அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார் தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
👍............ இவர்களால் ஊழலும், விரயச் செலவுகளும் அற்ற ஒரு அரச நிர்வாகம் கட்டமைக்கப்படும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அரச செலவுகள் தான் விரயம் ஆகாது, ஆனால் மனித உழைப்புகள் விரயம் ஆகப் போகின்றன என்பதும் இந்த வகை ஆட்சியில் எதிர்பார்க்கப்பட வேண்டிய இன்னொரு பக்கம். கேரளாவும், மேற்கு வங்கமும் இந்தியாவிலேயே அதிகமாகப் படித்தவர்களை, அறிஞர்களை கொண்ட சமுதாயங்களாக இருந்தாலும், அபிவிருத்தி என்று வரும் போது, தொழிற்துறைகள் என்று வரும் போது பின்னாலேயே வந்து கொண்டிருந்தார்கள். கேரளாவில் இருந்த பல பெரும் தோட்டங்களை தமிழர்கள் விற்றதற்கும் அவர்களின் ஆட்சி முறையே பிரதான காரணம். இதைப் போன்றே பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்த இரு மாநிலங்களையும் தவிர்த்தனர். ஒரு இராணுவ முகாமைக் கூட அநுர அகற்றுவார் என்று நான் நம்பவில்லை. எங்களூர் அரச மரங்களின் கீழ் புதிய புத்தர் சிலைகள் வராமலிருக்கக்கூடும்..................
-
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
🤣.......... இவரும் முன்னர் மாணவர் சங்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் தானே......... அப்ப இப்படித்தான் எடுத்ததுக்கு எல்லாம் கோபப்படுவினம், அண்ணை...... ஆனால், இவர்களுக்கு வெறும் வாய் தான். அந்தப் பக்க மாணவர் சங்கங்கள் இருக்குதே, அது தான் நாட்டில் இப்ப ஆட்சிக்கு வந்து இருக்குதே, அவர்கள் தீவிர ஆக்ஷனிலும் இறங்குவார்கள்............🤣.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
👍...... புதிய பிரதமர் ஹரினி நேர்மையானவர், துணிச்சலானவர் என்று சொல்கின்றனர். எக்கச்சக்கமாகப் படித்தவர், ஆனால் கள அனுபவம் உள்ளவரா என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. அரவிந்த் கெய்ரிவால் போல நடைமுறைகள் தெரியாமல், சிக்கலில் அவரும் மாட்டி, மக்களையும் மாட்டிவிடக் கூடாதல்லவா......
-
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
டப்பென்று 'அநுரவிற்கு அருகதை கிடையாது...............' என்று சொல்லி விட்டீங்கள், அப்ப யாருக்குத்தான் இந்த அருகதை இருக்கின்றது.........🙃. தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தானே நீங்கள்.......... அப்புறம் அந்த தேர்தலில் வென்றவருக்கே கோரிக்கையும், வெருட்டலுமா..........🤣.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
👍............ அவரைப் பற்றி மூன்று வரிகள் எழுதினால் அதில் ஒரு வரியாக மேலே உள்ளது ஆகிவிடுமளவிற்கு இன்று தேய்ந்து போய்விட்டார்...............🤣. அரைக்கோளத்திற்கு ஒரு காலத்தில் ஒளியாகத் தெரிந்தவரின் இன்றைய நிலை இது.........
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையில் தான் எந்த மாற்றமும் செய்ய மாட்டேன் என்று அநுர தேர்தலிற்கு முதல் வாரம் சொல்லியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் Article 9 இல் ஒரு மாற்றமும் கிடையாது என்று உறுதி வழங்கியிருந்தார். நாங்கள் கார்ல் மார்க்ஸை நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ தெரியவில்லை........... அவர் இறந்து, அவரின் கதை பூமியில் எப்பவோ முடிந்து விட்டது................🤣.
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
அவரே தான், அண்ணை. இப்பவும் ஆஸ்திரேலியா தான், இலங்கைக்கு வந்து வந்து போவார். ஒரு காலத்தில் ரோஹணவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர். பின்னர் சோமவன்சவுடன் பிரச்சனை ஆனது. ரோஹணவின் பின் சோமவன்ச முன்னிலைக்கு வந்தார்............. பின்னர் அநுர வந்தார்.
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
அமுல் பேபி மட்டும் இல்லை, கொஞ்சம் 'மந்தமான பேபி' என்றும் சொல்லுகின்றனர்......... லண்டனில் படிக்காமல் பஸ் ஓடினேன், அப்படி இப்படி என்று ஒரு தடவை எங்கேயோ பேசியிருந்தார்.......... ஆனால் நல்லா படிச்ச ரணிலை விட இந்த பேபி பரவாயில்லை என்று மக்கள் நினைக்கினம்............