Everything posted by ரசோதரன்
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
🤣.......... அமெரிக்கா பற்றி ஏதாவதொரு அபிப்பிராயம் சகலருக்கும் இருக்க வேண்டும் போல........🤣. கேரள ஊர்ப் பக்கங்களில் இருக்கும் டீக்கடைகளில் காலையிலேயே ஆரம்பித்துவிடுவார்களாம்.......... ஒரு கட்ட சாயா மற்றும் தட்டையுடன். பிளேன் டீயும், தட்டு வடையும் கைகளில். அமெரிக்காவைப் போட்டு மிதிமிதி என்று மிதிப்பார்களாம். பிறகு, சரி மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம் என்று வீட்டுக்கு போய்விடுவார்களாம். அடுத்த நாள் இது மீண்டும் தொடரும்....... சிவப்புச் சட்டை தோழர்களின் ஆரம்ப பாடங்களில் இதுவும் ஒன்று - அமெரிக்காவை மிதிப்பது..........😀.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
தாங்க்ஸ் அண்ணை, நீங்கள் அனுப்பி இருக்கும் வீடியோவைக் கேட்டுப் பார்க்கின்றேன். கல்வித்துறைக்கு ஏழு அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால் அது அதிகம் தான், அண்ணை, ஆனால் மூவராவது வேண்டும் என்று நினைக்கின்றேன். ஒரு கபினெட் அமைச்சர், இரண்டு ராஜாங்க அமைச்சர்கள். மூன்று செயலாளர்களும் வேண்டும். வேறு பல துறைகளுக்கு ஒரு அமைச்சரே போதும். எமிரேட்ஸுடன் இருந்த போது இலங்கை விமான நிறுவனம் நன்றாகவே இருந்தது. மகிந்த ஒரே இரவில் தனிப்பட்ட கோபம் காரணமாக அந்த ஒப்பந்தத்தை முறித்து, எமிரேட்ஸை வெளியேற்றினார். பின்னர் இலங்கை விமான நிறுவனம் மூக்குக் குப்புற விழுந்துவிட்டது.
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
ஆமாம், அநுர இருந்தார், ஏராளன். விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை என்று நினைக்கின்றேன். அப்பொழுது ஏன் நீங்கள் அங்கே எந்த மாற்றங்களையும் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு, அந்த ஆட்சி எங்களுடைய ஆட்சி இல்லை என்று ஒரு கூட்டத்தில் இவரது பேச்சாளர்கள் ஒரு பதிலைச் சொல்லியிருந்தனர். அநுரவின் செல்வாக்கு கூடிக் கொண்டே போகின்றது போலவே தெரிகின்றது. எங்கள் நாட்டில் இருப்பது விகிதாராரப் பிரதிநிதிதுவம். பதினைந்து மாவட்டங்களில் இவர்கள் முன்னுக்கு வந்தால், 70 இலிருந்து 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை இவர்களுக்கு கிடைக்கும் போல தெரிகின்றது.
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
மும்மொழிகளும் தெரிந்தவர்கள் என்று அங்கே போய் முழங்கினார்களே, நீங்கள் சரியாகக் கேட்கவில்லை சிறி அண்ணா...............🤣. விக்கினேஸ்வரன் ஐயாவின் முதலாவது பேச்சுகளில் ஒன்று தானே, 'நாங்கள் தான் இந்த நாட்டின் ஆதிக்குடிகள்....... தமிழ் இந்த உலகத்தின் ஆதிமொழி...........' என்பது. இந்த மனுசன் ஏன் தன் பாட்டில் இருக்கிற அப்புஹாமியுடன் (இலங்கை வேடுவர் தலைவர்) கொழுவலுக்கு போகுது என்று தான் அன்று நான் நினைத்தேன்.......... முன்னர் ஒரு தடவை இவர் இங்கு வந்து ஒரு கூட்டமும் நடந்தது. அப்பவே இவர் மீது எந்த அபிப்பிராயமும் இல்லாமல் போய்விட்டது. ஒரு சோடித்த பொம்மை போன்றிருந்தார். இவரும், வேறு சிலரும் மும்மொழி பயின்றவர்கள் என்று, அனுபவம் உள்ளவர்கள் என்று பலரும் எவ்வளவு நம்பிக்கையாக இருந்தார்கள். சிவாஜிலிங்கமே பரவாயில்லை என்று நினைக்க வைத்துவிட்டார்கள்...........😜.
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
👍................ சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் ஏறக்குறைய முற்றாக இல்லாமல் ஆக்கப்பட்ட பின்னர், இவர்களுக்கு நல்லதொரு நீண்ட எதிர்காலம் இருக்கின்றது. இவர்களுக்கு இருக்கும் ஒரேயொரு போட்டியாளர் சஜித் மட்டுமே. சஜித்தின் தனிப்பட்ட ஆளுமையில் சந்தேகம் இருந்தாலும், அவர் இவர்களுக்கு மிகவும் பலமான ஒரு எதிராளியே. அநுர சிறிது சறுக்கினாலும், அங்கே அது சஜித்திற்கு ஆதரவாக முடிந்துவிடும். சில செயல்கள் ஒரு விம்பத்தை கட்டி எழுப்பும்: வாகனங்களை மீளப் பெறுதல். குடியிருப்புகளை மீட்டெடுத்தல் போன்றன. இவை ஆரம்பத்தில் பெரிதாகத் தோன்றும், ஆனால் நாளடைவில் மக்களுக்கு இவை சலித்துவிடும், அத்துடன் இவை ஒரு ஆரம்ப நடவடிக்கைகளின் பின்னர் பெரும் பொருள் அற்ற செயல்களும் கூட. சில செயல்கள் பெரும்பாலும் உணர்வு பூர்வமானவை, ஆனால் நடைமுறைச் சாத்தியம் அற்றவை: ஊழல், கொள்ளைப் பணத்தை மீட்போம் என்பது. சிறிய அமைச்சரவை என்பது. எல்லா பொறிமுறைகளையும், கல்வி, உட்பட மாற்றப் போகின்றோம் என்று சொல்வது. இவைகளில் ஒரு அடி முன்வைக்க ஒரு அடி சறுக்கிக் கொண்டும் போகலாம். இவைகளை செய்யாமல் கைவிட்டாலும் மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். சில செயல்கள் காலாவதியான வெற்றுக் கோட்பாடுகள்: தனியார்மயப்படுத்தலை எதிர்த்தல். பலவேறுபட்ட இனக்குழுக்களை, அவர்களின் பண்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்தல். ஒரே ஒரு வகையான புத்திஜீவிகளை மட்டும் உள்வாங்குதல் போன்றன. இவை பெரும் சேதத்தை கட்சிக்கும், நாட்டுக்கும் உண்டாக்கும். ஒரு பிரதேச சபையைக் கூட இதுவரை ஜனநாயக முறையின் கீழ் நிர்வகிக்காதவர்கள் இவர்கள். போகும் வழியிலேயே கற்றுத் தேர்வார்கள் என்பதே பலரினதும் நம்பிக்கை.
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
ஒரு கார் லைசென்ஸ், ஒரு பார் லைசென்ஸ் இப்படிக் கொடுத்தே நம்ம அரசியல் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டார்கள்............. யாரு இதெல்லாம் கொடுத்தது.............ரணிலா..........🤣. அந்தப் பக்கம் அவர் ஒரே ஒரு ஆள் போதும் போல ..........
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
தோழர் இன்று எடுத்துள்ள முடிவே இதுவரை அவர் ஜனாதிபதியாக வந்து எடுத்துள்ளவைகளில் முக்கியமான முடிவு. இலங்கை விமான நிறுவனம் விற்கப்படமாட்டாது, தனியார்மயப்படுத்தலும் இல்லை என்று முடிவெடுத்திருக்கின்றார். இவை போன்ற முடிவுகள் நாட்டை பொருளதாரா ரீதியாக மீண்டும் இக்கட்டான ஒரு நிலைக்கு தள்ளக்கூடும். ஏற்கனவே 550 மில்லியன் கடன்களில் நின்று கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் மிகச் சிலரை மாற்றுவதால் மட்டும் இது ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறப் போவதில்லை. மேலும் இன்னும் சில அரச நிறுவனங்களும் தனியார்மயப்படுத்த வேண்டிய இந்தப் பட்டியலில் இருக்கின்றது. சுதேசம், சுய பொருளாதாரம், சுயநிறைவு......... போன்ற கொள்கைகள் நடைமுறையில் சாத்தியமானவை இல்லை. குதிரைகள் ஓடிக் கொண்டிருப்பதால், புழுதி பாராளுமன்ற தேர்தல் வரை பறக்கும். அதன் பின்னர், அவை அடங்க, நிஜம் துலங்கும்.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
இந்த முறை ஊருக்கு போயிருந்த போது நான் கவனித்த ஒரு விடயம், அந்த நாட்களில் மதுபானக்கடை இருந்த இடத்தில் ஒரு தேத்தண்ணிக் கடை தான் இருந்தது. எப்படியும் ஒன்றாவது இங்கு இருக்காமல் இருக்காதே என்று நினைத்தனான். ஆனால் என் கண்ணில் ஒன்றும் அகப்படவில்லை. பக்கத்து ஊர்களில் எங்கும் இருக்கின்றதோ தெரியவில்லை............ கந்தையா அண்ணை, இந்த தகவல்கள் எல்லாம் ஒரு வாட்ஸ்அப் பதிவாக இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உண்மை பொய் தெரியாது. இங்கே முதலில் யாராவது இதை இணைத்தார்களா என்றும் தெரியவில்லை. ---------------- கிளிநொச்சியில் சந்திரகுமாரும் அங்கயனும் டக்ளசும் சாராயக்கடை வைத்திருக்கிறார்கள். இதை யாரும் கதைக்க தயார் இல்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் உரிமையாளர் யார் என்று யாரும் அறிந்துகொள்ளலாம். சந்திரகுமாரின் மனைவியின் பெயரில் கரடிப்போக்கு சந்தியில் இரண்டு பார்கள் உள்ளன. பரந்தனில் இருக்கும் இரண்டு பார்கள் அங்கயனின் தம்பியின் பெயரில் இருக்கும் நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கனகபுரம் வீதியில் உள்ளது தான் கிளிநொச்சியில் அதிகவிலைக்கு விற்கப்பட்ட பாராம். இது டக்ளசின் தம்பி தயானந்தாவின் பெயரில் உள்ளது. பூநகரி சந்தியில் உள்ள ஒன்று Rockland சாராய நிறுவனத்தின் பெயரில் உள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு பக்கத்தில் உள்ள பார் புலம்பெயர் வாழ் பிரபல தமிழ் வர்த்தகர் பெயரில் உள்ளது. அதுவும் ஒரு சாராய நிறுவனத்தின் பெயரில் தான் பதிவு உள்ளது. 6.5 லட்சம் மக்கள் உள்ள யாழில் 67 பார்கள் உள்ளன. 2 லட்சம் மக்கள் உள்ள கிளிநொச்சியில் 6 பார்கள் உள்ளன. 2.5 லட்சம் மக்கள் உள்ள வவுனியாவில் 39 பார்கள் உள்ளனவாம். 1.8 லட்சம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 11 பார்கள் உள்ளனவாம்.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
❤️.......... மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍. நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை. இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
தமிழ்நாட்டு மக்களும் தங்களுக்கு ஒரு அநுரகுமார வேண்டும் என்று விரும்பினார்களாமே............ இதோ உங்களுக்காக ஒரு உதயகுமார...........🤣. ராஜராஜ சோழன் பரம்பரை ஆட்சியை விட இது நீளப் போகுது போல...........
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம். இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே. சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும். நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம். இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
🤣................ அமெரிக்கா வங்குரோத்து அடிக்கக் கூடாது என்று தான் உலகம் முழுக்க அங்கங்கே இப்படி ஆள் வைத்து அடித்துக் கொண்டு திரிகிறது போல. எத்தனை கையாட்கள்............. நிலைமை கை மீறினால், இரகசியமாக அச்சடிக்க வேண்டியது தான்......... அதை வாங்கிப் பதுக்கத் தான் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள்........ அந்த ஆள் சண்டையில் சாகாது, நஞ்சூட்டிச் சாகாது.......... இது தெரிந்து தான் சாகப் போகுது...........🤣.
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
அண்ணன்மார் இருவருக்கும் நான் அன்புடன் எழுதுவது, கூப்பிடப்பட வேண்டிய ஆட்களின் பெயர்கள் உங்களிடம் இருந்தால், அதை எங்களுடன் பகிரவும். நாங்கள் உடனேயே 'பகிரங்க அநாமேதயக் கடிதம்' ஒன்றை ஒரு ஊடகத்தில் எழுதி, ஆக வேண்டிய காரியங்களை முன்னெடுக்கின்றோம்..............🤣. பிற்குறிப்பு: இதனால் எங்களுடன் யாராவது பிரச்சனைக்கு வந்தால், 'அண்ணன்மார் இரண்டு பேர்கள் ஐரோப்பாவில் இருக்கின்றார்கள், இது அவர்கள் கொடுத்த பெயர்கள், உங்களால் முடிந்தால் அவர்களைத் தொட்டுப் பார்.................' என்று உடனேயே உங்கள் பக்கம் கையையும் காட்டிவிடுவோம்.............😜.
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களில் மகேசன் என்ற பெயரும் இருந்தது: Mr. K. Mahesan -- Secretary Ministry of Sports and Youth Affairs
- பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் முக்கிய புள்ளிகள்
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது........... 🤣.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
🤣........... அவ்வளவு பெரிய பொதுநலவாதிகள் வெளிநாடுகளில் இருப்பது போல தெரியவில்லை........ ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்த்லுக்கு 11 பில்லியன் ரூபாய்கள் தேவை என்று தேர்தல் ஆணையாளர் கேட்டிருக்கின்றார். இரண்டு தேர்த்லுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு. பெரிய செலவு தான்............ இது மக்களின் பணம் தான். ரணில் தான் இருப்பில் ஐந்து பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக விட்டுச் செல்கின்றேன் என்று அவரது கடைசிப் பேச்சில் சொல்லியிருந்தார்........... அங்கேயிருந்து தான் எடுப்பார்கள் போல.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் முள் பாதையை விட, எங்களின் பாதைகளில் எவ்வளவு முட்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்கிறீர்கள்................🤣. உங்களுக்கு அப்படி நடந்து, அப்படியே திருமணமும் நடந்தது மிகச் சிறப்பான ஒரு விடயம். ஊதி வைத்த பலூன்கள் ஒவ்வொன்றாக உடைய உடைய மற்றவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்.......
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இப்படியானவர்களிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு கட்டப் பஞ்சாயத்து முறையை எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களுக்குள் இருக்கும் ஓரிரு சந்தர்ப்பவாதிகள் தவிர்த்து ஏனையோர் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆடம்பரத்தில் திளைக்கமாட்டார்கள். அரைவாசி சிங்கள மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு உணவு - உடை - உறையுள் என்ற மூன்று மிக அடிப்படைத் தேவைகளுக்குமான ஒரு நிரந்தர வழியும், ஊழலற்ற நிர்வாகமும் போன்றே தெரிகின்றது. அவர்களின் தெரிவு தான் இவர். 'தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு.............' என்ற கதை, கவிதையெல்லாம் இவர்களிடம் எடுபடவே எடுபடாது. அநுர தமிழர்களுக்கு தனியே எதுவும் கொடுப்பேன் என்று சொன்னால், அது முழுப்பொய்யே அன்றி வேறெதுவும் இல்லை.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
Tiran Alles தான் இதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் மற்றும் இறுதிவரை அந்த குளோபல் நிறுவனத்திற்காகப் போராடியவர். 10 மில்லியன் டாலர்கள் லஞ்சம் என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றார். எல்லா நாடுகளிலும் இப்படியான அரசியல்வாதிகள் இந்த ஒரு வசனத்தை மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்......... பின்னர் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்னும், பழைய நடமுறைக்கு போகாமல், ஆறு மாதங்கள் வேண்டும் என்று இவரே இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இவரின் கீழ் இருந்த ஆணையாளர் முந்தாநாள் சிறைக்கு போனார். பழைய நடைமுறையில் விசா வழங்கும் முறை உடனேயே மீண்டும் வந்துவிட்டது........ ரஜனியின் 'சிவாஜி' படத்தில் 'ஆபீஸுக்கு வாருங்கள்.........' என்று ஒரு காமடி இருக்கிறது தானே........ Tiran Alles அவுஸ்திரேலியா குடியுரிமை உள்ளவர் என்று எங்கோ வாசித்த ஞாபகம். ஓடி விட்டாரா என்று தெரியவில்லை. இவர் முன்னொரு காலத்தில் ஜேவிபி ஆதரவாளராக இருந்தவர். விமல் வீரவன்ச போல அவர்களில் ஒருவராக இருக்கவில்லை, ஆனால் அவர் போன்றவரே இவரும் போல.........
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
இவ்வளவு விலையா, அண்ணை..........🤨. கொள்கையும் மண்ணும்............. நாலு சிவப்பு சட்டைகள் வாங்குகிறோம், கொழும்பில் போய் இறங்குகிறோம்....🤣.
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
நான் போன நேரத்தில் இந்த மாற்றம் வரவில்லை, அண்ணை. அதன் பின்னரே வந்தது. ஒவ்வொரு விசாவிலும் 25 டாலர்கள் என்ற கணக்கில் விஎஃப்எஸ் நிறுவனைத்திற்கு போய்க் கொண்டிருந்தது. வருடத்திற்கு இரண்டு மில்லியன் பயணிகள் என்று எடுத்துக் கொண்டால், 50 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு......🫢. அந்த நிறுவனத்தை ஏற்கனவே வெளியேற்றிவிட்டார்கள்.
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு................. எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்.........