Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. அந்தப் பிள்ளையார் கோவில் நினைவில் இருக்கின்றது. அதன் அருகில் ஒரு பாலர் பாடசாலை இருந்தது போல.....
  2. பூஸா முகாம் தானே.... நான் போகவில்லை...... தப்பி விட்டேன்...
  3. கலப்புத் திருமணம் ------------------------------- சினிமாவில் வருகின்ற அமெரிக்க மாப்பிள்ளைக்கும், உண்மையான நிலவரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி சைபீரியா பாலைவனம் போல நீண்டதும், கொடியதும், பொதுவில் மற்றவர்களுக்கு தெரியாததும். அமெரிக்க மாப்பிள்ளை என்றவுடன் அடித்து பிடித்து பெண்ணைக் கொடுப்பார்கள் என்ற காலம் தமிழ்நாட்டில் எப்பவோ வழக்கொழிந்துவிட்டது. பெண் பார்க்கப் போகும் இடத்தில், பெண் வீட்டாரிடம் இருந்து 'மாப்பிள்ளை அமெரிக்காவில் என்ன விசாவில் இருக்கின்றார்....' என்ற முதலாவது கேள்வி வரும். என்ன விசா என்று பதில் சொல்ல ஆரம்பித்தாலே, கிரீன் கார்ட் இல்லையா, இன்னும் சிட்டிஷன் ஆகவில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகள் வரும். அவை வந்திடும் என்று சும்மா சொல்லித் தப்பவும் முடியாது. இங்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு தோராயமான வழங்கும் திகதியும், காலமும் இருக்கின்றது. அதை ஒரு வெப்சைட்டில் போய் பார்க்கலாம். பெண் கொடுக்கப் போகின்றவர்கள் சும்மா இருப்பார்களா? இப்பொழுது இந்தியர்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்க 15 வருடங்கள் அல்லது அதற்கு மேலேயேயும் எடுக்கின்றது. நிரந்தர வதிவுடமை இல்லாதவர்களுக்கு நாங்கள் பெண் எல்லாம் கொடுப்பது இல்லை என்று நேரேயே சொல்லி விடுகின்றார்கள். இந்த தடையை தாண்டினால், அடுத்த தடை மாப்பிள்ளை எந்தக் கம்பனியில் வேலை செய்கின்றார் என்ற கேள்வி. ஆப்பிள், கூகிள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட்,...... இதில் ஒன்றா என்று அங்கே பாண்டிக்குப்பத்தில் இருந்து கேட்பார்கள். இங்கு வந்ததே கனவா அல்லது நனவா என்று சந்தேகத்தில் இருக்கும் பெரும்பானமையானவரின் நிலை, இதில் ஆப்பிளா அல்லது ஆரஞ்சா என்றால் அதற்கு எங்கே போவது? இந்தக் கம்பனிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ரவுண்டுகள் வரை இருக்கும் நேர்முகத் தேர்வுகள். ஒவ்வொரு ரவுண்டிலும் கேள்வி கேட்பவர்கள் நடிகர் கமல் போலவே கதைப்பார்கள். ஒன்றும் விளங்கவே விளங்காது. மன உளைச்சல் தான் மிஞ்சும். இதையும் தாண்டினால் சொந்த வீடு இருக்கா, கடன் ஏதும் இருக்கா என்ற அடுத்த தடையைத் தாண்டவேண்டும். அங்கு பரம்பரை வீட்டில் இருந்து கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்பார்கள். கடன் இல்லாமல் இங்கு எவரிடம் சொந்த வீடு இருக்கின்றது? வீடு என்ன வீடு, கடன் இல்லாமல் அமெரிக்காவில் கார் கூட ஒருவரிடமும் கிடையாது. இப்படியான எல்லா தடைகளையும் தாண்டி ஒரு நண்பன் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்ணை நேரில் பார்க்கப் போயிருந்தான். எத்தனையோ பெண்களை கல்யாண தரகர்கள் மூலம் பேசி, மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளில் விண்ணப்பித்து, பல கல்லூரி ஒன்றுகூடல்களிற்கு போய், இங்கு கடலை கடலையாகப் போட்டு எதுவுமே சரி வராமல், எல்லாம் சுத்தமான தோல்வியாகி, ஒரு கேள்விக்குறியாக இருந்தவன் அவன். இந்தச் சம்பந்தம் எதிர்பாராத விதமாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது இருவரும் இங்கே ஒரு கம்பனியில், ஒரே அணியில் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்தப் பெண்ணை பார்க்க ஊருக்குப் போகும் போது கல்யாணம் கட்டாமல் திரும்பி வரவே மாட்டன் என்று சொல்லி விட்டுப் போனான் நண்பன். இதற்கு முன்னும் சில தடவைகள் ஊருக்குப் போய், போன மாதிரியே வெறுங்கையுடன் திரும்பி வந்தவன் தான், ஆனால் இந்த முறை அவன் கண்ணில் ஒரு உறுதி தெரிந்தது. அநேகமாக திரும்பி வர மாட்டான் என்றுதான் எனக்கும் மனதில் பட்டது. நாலு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண்ணும் நண்பனின் குடும்பத்தில். நண்பன் தான் கடைசி. மற்ற நால்வரும் திருமணமானவர்கள். முதல் அண்ணா, அடுத்தது அக்கா. அப்பா இல்லை, அம்மா உண்டு. குடும்பத்தில் மூத்தவர் தான் எல்லா முடிவுகளும் எடுப்பது. பெண்ணை இவனுக்கு பிடித்துவிட்டது. நல்லாகவே பிடித்து விட்டது, அவனின் நிலைமை உங்களுக்கும் தெரியும் தானே. நண்பன் கொஞ்சம் கறுப்பாக இருப்பான். கொஞ்சம் கறுப்பு என்றால் ஆரம்ப கால ரஜனிகாந்த, விஜய்காந்த் அளவிற்கு கறுப்பாக இருப்பான். ஆபிஸில் ஏதாவது ஃபோட்டோ எடுக்கும் போது பலர் அவன் பக்கத்தில் போய் நின்று கொள்வார்கள். பெண் பார்த்து விட்டு, வீட்டுக்கு போய் சொல்கின்றோம் என்று மூத்தவர் கிளம்பி வந்துவிட்டார். என்ன வீட்டை போய் சொல்லுவது, இப்பவே சம்மதம் என்று சொல்வது தானே என்று இவன் நினைத்தான், ஆனால் மூத்தவரை நேரடியாகக் கேட்கத் துணிவில்லை. மூத்தவர் நண்பனைத் தனியே கூப்பிட்டுப் போனார். இந்தச் சம்பந்தம் சரி வராது என்றார் அவனிடம். அந்தக் கணத்தில் அவனுக்கு பூமி கால்களில் இருந்து நழுவியிருக்க வேண்டும். ஏன் என்று ஈனஸ்வரத்தில் முனகினான். மூத்தவர் சொன்னார்: அந்தப் பெண் நல்ல வெள்ளையாக இருக்குது. எங்களின் ஆட்களில் இப்படி வெள்ளையாக ஒருவர் வரவே முடியாது. இது ஏதோ கலப்புக் குடும்பம். அநேகமாக இது ஒரு முதலியார் கலப்பாகத்தான் இருக்கும் என்று. அது முதலியார் கலப்பாக இருந்தால் என்ன, அல்லது முதலைக் கலப்பாக இருந்தால் என்ன, தனக்கு அந்தப் பெண்ணைக் கட்டி வையுங்கோ என்று அழுது புரண்டு, அல்லாவிட்டால் மான்று விடுவேன் என்று அவன் வீட்டாரைப் பயமுறுத்தி, அந்தப் பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தான் நண்பன். இப்பொழுது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.
  4. 🤣..... அந்த மனுசன் கடைசி மட்டும் மறைத்து வைத்திருந்த ஒரு விசயத்தை சொர்ணமக்கா எட்டன்றாவது எல்லோருக்கும் தெரியட்டும் என்று நினைத்து செய்திருக்கின்றார்.........😜.
  5. 🤣........ எங்களிடம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குதே........ இதில் பலருக்கு போகிற வயதும் வந்து கொண்டிருக்கின்றது............ 🤣......... எங்களின் கவிஞர், கார்ட்டூனிஸ்ட் @Kavi arunasalam ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார் நேற்று. அதைப் பார்த்த பின் தான் இதை எழுதும் எண்ணம் வந்தது..............
  6. இருபாலைச் சந்தியில் இருந்து கிழக்கு பக்கம் போகும் வீதியில் கொஞ்ச தூரம் போய், உள்ளே இறங்க வயல்கள் வரும் என்று ஞாபகம். அங்கே ஒரு வீட்டில் லிபரேஷன் ஆபரேஷனின் போது ஒன்றோ இரண்டோ மாதங்கள் இருந்தோம். அந்தப் பகுதியில் ஒரு பெரிய குளமும் துருசுடன், ஒரு கோவிலுக்கு அருகில், மற்றும் பல சின்னக் குளங்களும் இருந்தன. எங்களூர் பக்கங்களில் சந்தைகளில் கூட நாங்கள் தாமரைக் கிழங்கு பார்த்தது கிடையாது. இங்கு தான் தாமரைக் கிழங்கை பார்த்ததும், சாப்பிட்டதும்.
  7. ஒரு இடம் பெயர்வின் போது இருபாலைப் பகுதியில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அப்பொழுது தான் துருசு என்ற சொல்லை நான் முதலில் அறிந்து கொண்டது. கடல் நீச்சல் மிக நல்லாகவே தெரிந்திருந்தும், குளத்தில் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. சேற்று மண், தாமரை, அல்லிக் கொடிகள், துருசு என்று இந்தக் குளங்கள் வேறொரு நீர் உலகம்.
  8. 🤣........... பலரின் மனநிலைகள் எனக்கும் விளங்குது சிறி அண்ணை, ஆனாலும் ஏதோ 'சரி... விடுங்கப்பா......' என்று சொல்ல வேண்டும் போலவும் இருக்கின்றது. இதுவரை எழுதிய பதினொரு குறுங்கதைகளில் இரண்டு அவரை நினைத்து எழுதியது........ இலேசில் விட்டுப் போக மாட்டார் போல.......
  9. 👍.... நீங்கள் சொல்லியிருப்பது தான் சரி என்று நினைக்கின்றேன், ஏராளன். அவருக்கு இது விருப்பம், அது விருப்பம் என்று சொல்லி சொல்லியே செய்வார்கள். எங்களின் பக்கத்தில் 31 நாட்களுக்கு தினமும் விளக்கடியில் வைப்பதும் அவருக்கு விருப்பமான உணவு மற்றும் சிற்றுண்டிகளையே. 🤣........... வாசலில் வந்து நின்றாலும் நின்று விடுவார்.........
  10. 🙏.......... மிக்க நன்றி அக்கா. கடற்கரைகளிலும் இதே நிலை தான், அக்கா. அங்கும் அருகே வாழும் பெண்கள் நீச்சல் பழக விரும்புவார்கள், ஆனால் அது முடிவதில்லை.
  11. 🤣.... பொய்யா கோப்பாலு.... பொய்யா கோப்பாலு.... என்று எல்லாரும் கேட்கிறபடியால், உண்மையைச் சொல்லப் போகின்றேன்....... எல்லாமே பொய் தான்....🫢 இந்த தர்மத்தில் ஏழு நாட்கள் என்பார்கள், இன்னொரு தர்மத்தில் எழுநூறு நாட்கள் என்பார்கள். தர்மம் என்று ஒன்று இருக்குதா என்பதே பலத்த சந்தேகமே...
  12. கடைசி எட்டு நாட்கள் ---------------------------------- ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது. ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்களாக எழுதினேன் என்று ஷெஹான் சொல்லியிருக்கின்றார். மூன்று தடவைகள் எழுதியவற்றை கிழித்துப் போட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். அவரின் முயற்சிக்கும், முழுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அவர் பெற்ற விருது. பௌத்த தர்மம் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அதன் உடல் இறந்த பின், இங்கே பூமியில் மிகக் கறாராக மேலதிகமாக ஏழு நாட்கள் மட்டுமே கொடுக்கின்றதாம். இது தான் நாவலின் சுருக்கம். அசத்தலான ஒரு வரிக்கதை, ஒரு வரிக்கதை என்று தமிழ் திரையுலகில் அடிக்கடி சொல்வார்கள். ஷெஹான் அதை செய்து காட்டியிருக்கின்றார். வெகு நாட்கள் முன்பு, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த பின், இரண்டாம் நாள் இரவில் அவர் வாசல் கதவடியில் வந்து நின்றதாக ஒரு முறை யாரோ சொன்னது ஞாபகமிருக்கின்றது. அவர்கள் சொன்ன விதத்தில் குலை நடுங்கியது. இருக்கும் பொழுது அவ்வளவு அன்பாக இருந்த மனிதர்கள் இறந்த பின் ஆவியாக வந்து கடித்துக் கொல்லப் போகின்றார்களா என்ன, ஆனாலும் பயம் என்பது தர்க்கம் அறியாதது. எல்லோரும் உறங்கிய பின், குசினியில் ஒரே சத்தம் கேட்டது என்பதும் ஏழு நிலவுகளில் நிச்சயம் ஒரு நிலவில் ஆவது ஒவ்வொரு இழப்பு வீட்டிலும் நடக்கும் சம்பவம். கூட்டமும், அழுகையும் ஓயாமல் இருக்கும் இடத்தில் வளர்ப்புப் பூனை வேறு எப்பத்தான் சாப்பிட வருவது, அதற்குப் பசிக்காதா என்ன? எட்டுச் சடங்கு என்று சொன்னாலும் அதை நாங்கள் ஐந்து அல்லது ஏழு நாட்களிலேயே செய்து முடிக்கின்றோம். ஒற்றைப் படை நாட்கள் என்னும் சம்பிரதாயத்தின் படி. ஆவியோ அல்லது ஆன்மாவோ ஆகிய நீங்கள் எட்டு ஆட்கள் இங்கே அலைய வேண்டாம், ஐந்து நாட்களிலேயே விண்ணகம் போய் விடுங்கள் என்னும் எங்களின் நல்லெண்ணம் இன்னொரு காரணம். கதையில் மாலி அல்மேடாவிற்கு அவர் இறந்து ஏழு நாட்களில் அவர் எப்படி இறந்தார் என்ற உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம். புக்கர் பரிசு ஏன் அவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து கொள்ள, புக்கர் பரிசை இதுவரை வென்றவர்கள், இறுதிச் சுற்றில் இருந்தவர்கள், ஆரம்பச் சுற்றில் இருந்தவர்கள் என்ற தகவல் நிரலைப் பாருங்கள். விக்கிபீடியாவில் முழுவதும் உள்ளது. உங்களுக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். வாயடைத்துப் போவீர்கள், ஒருவர் கூட இல்லை. அனுக் அருட்பிரகாசம் 2021ம் வருடம் இறுதிச் சுற்றில் இருந்தார். சமூக ஊடகங்களில் இவரைப் பற்றி பதிவுகள் நிறையவே வந்தன. 'வடக்கிற்கான ஒரு பாதை' என்னும் அவரின் நாவலுக்காக. அவர் இதை மூன்று வருடங்கள் எழுதினார், அத்துடன் கொலம்பியா பல்கலையில் கலாநிதிப் பட்டத்திற்கும் படித்துக் கொண்டிருந்தார். அவரின் பேட்டியும் பல இடங்களில் உள்ளது. ஷெஹானிற்கும், அனுக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளது போலவே தெரிகின்றது. இருவரும் தினமும் எழுத வேண்டும் என்கின்றனர், தினமும் வாசிக்க வேண்டும் என்கின்றனர். அடடா, இதனால் தான் நம்மில் எவருக்கும் இந்த புக்கர் பரிசு இன்னமும் கிடைக்காமல் இருக்கின்றதோ என்று எண்ணவும் முடியவில்லை ஏனென்றால் எனக்கு பரிச்சியமான சில தமிழ் எழுத்தாளர்கள் 24 மணி நேரமும் எழுதுகின்றனர். இஸீரு சாமர சோமவீர என்று ஒரு இளம் இலங்கை எழுத்தாளர் இருக்கின்றார். அவருடைய சில கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 'திருமதி. பெரேரா' என்னும் ஒரு சிறுகதையை தேடி வாசித்துப் பாருங்கள். இஸூரு என்ன சொல்லுகின்றார் என்றால் அவர் சில வேளைகளில் ஆறு மாதத்திற்கு எதுவும் எழுதுவதே இல்லையாம், எதுவுமே அவருக்குத் தோன்றாது என்கின்றார். ஒரு முக்கால் சைக்கிள், டெனிம் டவுசர், ரீசேட், காலில் செருப்பு, கன்னத்தில் மெல்லிய தாடியுடன் இருக்கும் இவரின் பேட்டியில் இருந்த இன்னொரு, மறக்க முடியாத, வசனம், 'மன்னிக்க வேண்டும். எல்லோருடனும் உரையாடுவதற்காக நான் எழுதுவது இல்லை.' பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் ஒரு அற்புதமான கேரள எழுத்தாளர். அவர் ஒரு சிந்தனையாளரும் கூட. அவர் வீட்டுப் பக்கம் வாசகர்கள் என்று யாரும் போனாலேயே, கல்லால் எறிந்து கலைத்துவிடுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிரகம். எட்டுச் சடங்கில் மிகப் பிடித்த விசயம் என்னவென்றால், எங்கள் மரபில் அது அசைவம் படைக்கும் ஒரு சடங்கு, அத்துடன் வகை வகையான அசைவங்கள், எங்களின் பழக்கத்தில் உள்ள அத்தனையும் படைப்பார்கள். எதை தொடுவது, எதை விடுவது என்று தெரியாது. இந்த ஷெஹான், அனுக், இஸூரு, பி.கே. பாலகிருஷ்ணன் போல. ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.
  13. 😗...... விஜய் சேதுபதியின் 'க/பெ. ரணசிங்கம்' படத்தின் கதை.......... என்ன கொடுமை, சார்......
  14. 'கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா?' என்னும் இக்கட்டுரை 'அருஞ்சொல்' இதழில் கு. கணேசன் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றது. பலருக்கும் பலதும் ஏற்கனவே தெரிந்த தகவல்கள் தான், ஆனால் இலகுவான ஒரு நடையில் இதை எழுதியிருக்கின்றார். நல்ல ஒரு வாசிப்பாக அமையலாம். *********** கொலஸ்டிரால் நண்பனா? எதிரியா? (கு.கணேசன், 07 Jul 2024) -------------------------------------------------------------------------------------------- இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சிகூட கண்டுகொள்ளாது. ஏதோ ஆசைப்பட்டு, வாய் ருசிக்குச் சாப்பிட்டு, ‘தெனாலிராமன்’ வடிவேலுபோல் உடல் பெருத்து, முன் வயிற்றில் தொப்பை விழத்தொடங்கினால்போதும், படாத கண்ணெல்லாம் பட்டுத் தொலைக்கும். “உடம்பைக் குறைங்க. எதுக்கும் ஒரு தரம் பிஎம்ஐ, கொலஸ்டிரால் எல்லாம் பார்த்துக்கோங்க… கொழுப்பு கூடுறமாதிரி தெரியுது. வெறும் வயித்துல ‘லிப்பிட் புரோஃபைல்’ பார்த்தா கரெக்டா இருக்கும்…” இப்படியான இலவச ஆலோசனைகள் மத்தியமரிடமிருந்து கட்டாயம் கிடைக்கும். “கொழுப்பு இல்லாத பால் குடிங்க. கொலஸ்டிரால் இல்லாத எண்ணெயை வாங்குங்க” என்றெல்லாம் ஊடகங்கள் போதாத குறைக்குப் பாடம் நடத்தும். உங்களுக்கோ குழப்பம் கூடிவிடும். உடல் பருமனுக்கும் கொலஸ்டிராலுக்கும் என்ன சம்பந்தம்? கொலஸ்டிராலை ஏன் அந்தக் கால வில்லன் நடிகர் நம்பியாரைப் பார்ப்பதுபோலவே பார்க்கிறோம்? வாருங்கள், அதையும் பார்த்துவிடலாம். கொலஸ்டிரால் விரோதியல்ல! எல்லோரும் நினைப்பதுபோல் கொலஸ்டிரால் நமக்கு விரோதியல்ல! அது ஒரு சாதுவான சத்துப் பொருள். அதிக சக்தி தருகிற, நம் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு கொழுப்புப் பொருள். நம் உடல் கார்போஹைட்ரேட்டைத் தயாரிப்பதில்லை; புரோட்டீனைத் தயாரிப்பதில்லை. ஆனால், கொலஸ்டிராலை மட்டும் தயாரித்துக்கொள்கிறது. அப்படியானால், நமக்குத் தேவையான ஒரு ‘விஐபி’யாகத்தானே அது இருக்க வேண்டும்? கல்லீரல், குடல், அட்ரீனல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்குச் சினைப்பைகள் என உடலில் பல இடங்களில் கொலஸ்டிரால் ஃபேக்டரிகள் இருக்கின்றன. இவை தினமும் 700 மில்லி கிராம் கொலஸ்டிராலைத் தயாரிக்கின்றன. உங்கள் எடை 70 கிலோவாக இருந்தால், நீங்கள் சுத்த சைவமாகவே இருந்தாலும் சரி, உங்கள் உடலில் 140 கிராம் கொலஸ்டிரால் கட்டாயம் இருக்கும். ஏன்? என்ன அவசியம்? உடலில் செல்களின் வளர்ச்சிக்குக் கொலஸ்டிரால் அவசியம். மூளையின் செயல்பாட்டுக்குக் கொலஸ்டிரால் தேவை. கொழுப்பு உணவைச் செரிக்க, பித்தநீரைச் சுரக்க கொலஸ்டிரால்தான் தேவை. நரம்புகளைப் பாதுகாக்கும் சவ்வுகள் வளர வேண்டுமா? அதற்கும் கொலஸ்டிரால் வேண்டும். நம் உடலின் வெப்பம் சமச்சீராக இருக்க வேண்டுமானால் கொலஸ்டிரால் இருக்க வேண்டியது கட்டாயம். டீன்ஏஜில் ஆணுக்கு மீசையும், பெண்ணுக்கு மார்புகளும் வளர வேண்டுமானால் கொலஸ்டிரால் இல்லாமல் முடியவே முடியாது. சுகம் காணும் தாம்பத்தியத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவுகிற ஸ்டீராய்டு ஹார்மோன்களுக்கு அடிப்படையே இந்தக் கொலஸ்டிரால்தான். இப்படிப் பல வழிகளில் நமக்குக் கைகொடுக்கும் நண்பனாகத்தானே கொலஸ்டிரால் இருக்கிறது! பிறகேன் அதை எதிரியாகப் பார்க்கிறோம்? கொலஸ்டிராலை இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தப் புதிர் விலகும்! கொலஸ்டிராலில் இரண்டு வகை! நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டு, இல்லையா? அதுமாதிரிதான் கொலஸ்டிராலிலும் இரண்டு தினுஷு உண்டு! கெட்ட கொலஸ்டிரால், நல்ல கொலஸ்டிரால்! அது என்ன கெட்டது, நல்லது? சாதாரண கொலஸ்டிரால் அதன் ரசாயன முறைப்படி உடல் திசுவிலிருந்து ரத்தத்துக்குள் தனியாகப் போக முடியாது. அதை ரத்தத்தில் தூக்கிச் சென்று சுற்றுலா காண்பிக்கத் தனி வாகனம் தேவை. அதன் பெயர் ‘லிப்போ புரோட்டீன்’. கொலஸ்டிரால் இதன் முதுகில் ஏறிக்கொண்டு உடலில் ஊர்வலம் வரும்போதுதான் அதன் அடுத்த பக்கம் தெரிகிறது. ‘லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’, ‘ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன்’ என்றெல்லாம் வாய்க்குள் நுழையாத பெயர்களைச் சொல்லி உங்களை இம்சைப்படுத்த விரும்பவில்லை. முதலாவதை எல்டிஎல் (LDL) என்றும், இரண்டாவதை ஹைச்டிஎல் (HDL) என்றும் நம் வசதிக்குச் சொல்லிக்கொள்ளலாம். இவற்றைத் தயாரிப்பதும் கல்லீரல்தான். சரி, இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? சுருக்கமாகச் சொன்னால், ஹைச்டிஎல் நல்ல கொலஸ்டிரால். எல்டிஎல் கெட்ட கொலஸ்டிரால். எப்படி? அது செய்யும் காரியம் அப்படி. ரத்தத்தில் எல்டிஎல் பயணிக்கும்போது, போகிற போக்கில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளில் படியத் தொடங்குகிறது. இதனால் ரத்தக்குழாய் தடித்து ரத்த அழுத்தம் அதிகரிக்க வழிசெய்கிறது. அப்போது முதல் முறையாக ‘பிபி பேஷண்ட்’ என்ற முத்திரை குத்தப்படுகிறது. “உப்பைக் குறைங்க, கொழுப்பைக் குறைங்க” என்கிற ஆலோசனை ஆரம்பமாகிறது. நாக்குக்கு அது புரிகிறதா? எது வேண்டாமோ அதைத்தான் அதிகம் தேடி ஓடுகிறது. நமக்கும் “சாப்பிட வேண்டிய வயதில் சாப்பிடாமல் பிறகு எப்போது சாப்பிடுவதாம்?” என்று சொல்லத் தோன்றிவிடுகிறது. வாரம் தவறாமல் வீக் எண்ட் பார்ட்டியில் சாப்பிட்ட பர்கரும் கிரில் சிக்கனும் கொடுத்த கூடுதல் கொலஸ்டிரால் ரத்தக்குழாயின் உள்ளளவைக் குறைத்துவிடுகிறது. இது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. பாசி படிந்த தண்ணீர்க் குழாய் அடைத்துக்கொள்கிற மாதிரி அடைத்துக்கொள்கிறது. கொஞ்சம் யோசியுங்கள். இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயில் இந்த எல்டிஎல் படிந்து அடைத்துவிட்டால் என்ன ஆகும்? மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும். நீங்கள் நெஞ்சுவலிக்காக டாக்டரிடம் சென்று, இசிஜி, ஆஞ்சியோகிராம் என ஏதாவது எடுத்துப் பார்த்திருந்தால், ‘அத்திரோஸ்கிலிரோஸிஸ் ஆரம்பமாகிவிட்டது. தர்ட்டி பர்சென்ட் அடைப்பு இருக்கு. கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த வேண்டியது கட்டாயம்’ என்று உங்கள் கார்டியாலஜிஸ்ட் எச்சரித்திருப்பாரே, அது இதுதான். சரி, இதுவரை நண்பனாக இருந்த கொலஸ்டிரால் இப்போது எதிரியானது எப்படி? நம் கல்லீரல் தானாகவே கொலஸ்டிராலை தயாரிப்பது ஒரு புறம். நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பிலிருந்து கொலஸ்டிராலைத் தயாரிப்பது இன்னொரு புறம். நாம் சாப்பிடும் உணவில் 20% வரை கொழுப்பு இருக்குமானால், இந்த இரண்டுவித கொலஸ்டிரால் உற்பத்தியும் சரியாகவே இருக்கும். அதாவது, தினமும் 27 கிராம் கொழுப்பு, 35 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் எடுத்துக்கொண்டால் நெய், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றைத் தினமும் 10 கிராமுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் கொழுப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமும் இணைந்து ஆய்வுசெய்து, வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் இது. இந்த அளவு அதிகமாகும்போதுதான் பிரச்சினை. அதிலும் குழம்பாக உட்கொள்ளப்படும் மாமிச உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பைவிட வறுத்த, பொரித்த, எண்ணெயில் குளித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் உறங்குகிற உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்புதான் முக்கிய எதிரி. அளவுக்கு மீறி உடலுக்குள் நுழையும் இந்த வகை கொழுப்பைக் கல்லீரல் பித்தநீரில் சேமித்துக்கொள்ளும். தொப்பை விழுமளவுக்குக் கொழுப்புணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது இதுவரை சேமித்துவைத்த கொழுப்பை கொலஸ்டிராலாக அது மாற்றிவிடும். அப்போது உடலுக்குள் கொலஸ்டிரால் உற்பத்தியாவது தேவைக்கு அதிகமாகும். பிறகென்ன, நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஆரம்பமாகும். நண்பனும் எதிரிதான், எப்படி? சரியான வோல்டேஜில் எரியும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தை நம்மால் ரசிக்க முடியும். அதேநேரம் வோல்டேஜ் அதிகமாகி மின்னல்போல் வெளிச்சம் கொட்டினால் அதை ரசிக்க முடியுமா? அப்படித்தான் அளவோடு உணவு சாப்பிடும்வரை கொலஸ்டிரால் நமக்கு நண்பன். அளவுக்கு மீறி சாப்பிட்டு, உடல் பருமனுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டால், நண்பனும் எதிரிதான். உடலின் அதிசயத்தைப் பாருங்கள். ஆபத்து இருக்கும் இடத்தில்தான் பாதுகாப்பும் இருக்கிறது. கெட்ட கொலஸ்டிராலைத் தயாரிக்கும் அதே கல்லீரல்தான் நல்ல கொலஸ்டிராலையும் தயாரிக்கிறது. நல்ல கொலஸ்டிரால் எனப் புகழப்படும் ஹைச்டிஎல் என்ன செய்கிறது தெரியுமா? இதய ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வந்து கல்லீரலுக்குக் கொடுக்கிறது. அதைக் கல்லீரலானது பித்தநீராக மாற்றி சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றுகிறது. நமக்கு உடல் பருமன் இருந்தாலும் உடனே மாரடைப்பு வராமல் பாதுகாப்பது ஹைச்டிஎல் மேற்கொள்ளும் இந்த மெக்கானிஸம்தான். எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? எல்டிஎல் அதன் எல்லையைத் தாண்டினால், நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், எல்டிஎல்லின் கை ஓங்கிவிடும். ஹைச்டிஎல் அப்போது தூங்கிவிடும். அப்படியான ஒரு கெட்ட நாளில் மாரடைப்பு எனும் எம தூதன் எட்டிப் பார்ப்பதைத் தடுக்க முடியாது. எல்லாம் உடல் பருமனின் உபயம்! https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-cholesterol
  15. சமீபத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரஷ்யாவிற்கு ஒரு மாநாட்டிற்காக போயிருந்த வேளையில் இலங்கையைச் சேர்ந்தவர்களை ரஷ்ய ராணுவத்தில் இருந்து விடுவிக்கின்றோம் என்று ரஷ்யர்கள் சொல்லியிருந்தனர். இலங்கையிலிருந்து அங்கு சண்டையிட போனவர்கள் பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து போனோர் சாதாரண பொதுமகன்கள் போல இருக்கின்றது...........🫣. ரஷ்யாவில் என்ன வேலை என்று போனார்களோ.........
  16. 🤣..... 'அமீபா' என்ற பெயரே அந்தப் பக்கத்து பெயர் போலவும் இருக்கின்றது.................😜.
  17. 🤣.... தென் அமெரிக்க நாடுகளில் ஆர்ஜென்டீனாவிற்கும் மற்றைய நாடுகளுக்கும் கால்ப்பந்தாட்டத்தில் ஒரு உரசல் இருக்கின்றது. அங்கு எல்லா நாடுகளும் பிரேசிலை ஆதரிக்கும், ஆனால் ஆர்ஜென்டீனாவை ஆதரிக்காது. நிறம் தான் காரணம்.......... தாங்கள் கொஞ்சம் நல்ல நிறம் என்று ஆர்ஜென்டீனியர்கள் நினைக்கின்றார்களாம்........... ஆர்ஜென்டீனியர்கள் சும்மா சும்மா கிரவுண்டில் விழுந்து நடிப்பார்கள் என்றும் ஒரு பெயர் அவர்களுக்கு இருக்கின்றது..........
  18. 🤣..... அச்சு அசலாக இதே போல ஒரு குளம் தீருவில் வயல்களின் நடுவிலும் இருக்கின்றது. அதன் முந்தைய பயன்பாடும் நீங்கள் சொல்லியிருப்பது போன்றே. பின்னர் அங்கே தூபி கட்டப்பட்டு, அருகில் இருக்கும் வயலூர் முருகன் கோவிலும் பெரிதான பின், குளம் சுத்தமாகியது. அந்த நாட்களில் ஜப்பான் மீன் குஞ்சுகளை யாரோ வருடா வருடம் அந்தக் குளத்தினுள் விடுவார்கள். பின்னர் ஒரு நாளில் போய் வளர்ந்த மீன்களை பிடிப்பார்கள். குளத்து மீன் என்று நாங்கள் பலர் ஒதுங்கி விடுவோம். தமிழ்நாட்டில் நடக்கும் மீன்பிடித் திருவிழா போல. நன்னீர் மீன்கள் கடல் மீன்களை விட சிறந்தவை என்று சில தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இவர்கள் கடலே பார்க்காதவர்கள் போல என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.
  19. 🤣..... இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது..... ஆதவன் அந்தச் செய்தியில் 'மனித குளம்' என்று எழுத்துப்பிழை விட்டு இருப்பார்கள். அங்கேயிருந்து தான் 'அமீபா குளம்' என்ற இந்த தலைப்பு உருவானது...
  20. 👍.... வேற யாரும் எங்களை அப்படிக் கேட்டால், 'நீங்க தான் அடுத்த ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கும்....' என்று ஒரு எதிர்க் கேள்வி கேட்டு விடுவோமே....🤣
  21. 👍... அடி வாங்கிப் பறந்து போய் விழுகிற தமிழ்ப்பட அடியாட்கள் போலவே செய்கின்றார்கள்..... நடிப்புத்தான்...
  22. அமீபா குளம் -------------------- அமீபா ஒரு ஒரு கல விலங்கு என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்தார்கள். நுண்ணோக்கியினூடாக அதைப் பார்த்த மாதிரியும் ஒரு ஞாபகம். பார்க்காமலேயே பார்த்தது போலவே ஒரு உணர்வாகக் கூட இருக்கலாம். ஒரு அமீபாவில் ஒரே ஒரு கலம் மட்டும் இருக்கும் போது, ஒரு மனித உடம்பில் எத்தனை கலங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றீர்கள்? 20லிருந்து 40 டிரில்லியன் கலங்கள் வரை இருக்குமாம். 20 இலட்சம் கோடியிலிருந்து 40 இலட்சம் கோடி வரை. இந்தியாவில் 2ஜி காற்றலை ஊழலில் தான் இப்படியான ஒரு எண்ணை கடைசியாகக் கேள்விப்பட்டது. அமீபா இப்பொழுது திடீரென்று செய்திகளில் அடிபடுகின்றது. அமீபா மனிதர்களுக்குள் போய் அவர்களின் மூளையை அழிக்கின்றது, மூளையை தின்று விடுகின்றது என்று செய்திகளில் வந்து கொண்டிருக்கின்றது. பயப்பட வேண்டாம், இது எல்லோரையும் தாக்காது என்கின்றார்கள். மூளை இருப்பவர்களை மட்டும் தான் இது தாக்கும் என்று சொல்ல வருகின்றார்களா என்று குறுக்குமறுக்காக யோசிக்கக்கூடாது. அழுக்கு நீரில் குளித்தால், அதுவும் அதில் ஒருவரையோ அல்லது மிகச் சிலரையோ மட்டுமே இது தாக்குகின்றது. அழுக்கு நீரில் இருக்கும் அமீபா மூக்கினூடு அல்லது வாயினூடு உள்ளே போய், மூளை வரை போகும் என்கின்றனர். மாரியில் பெய்யும் மழை தான் ஊர்க் கோவில் குளங்களின் ஒரே ஒரு நீர் ஆதாரம். எந்தக் குளத்திலும் இயற்கையாக நீர் ஊற்று இருந்ததை நான் காணவில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பெய்யும் மாரி மழையில் கோவில் குளங்கள் நிரம்பும். சில வருடங்களில் நிரம்பி வழிந்தும் இருக்கின்றன. மிகுதி மாதங்களில் அதே தண்ணி தான், அங்கேயே நிற்கும், பச்சை நிறமாக மாறும், வற்றும். என்ன நிறம் ஆனாலும் நாங்கள் அந்த நிறத் தண்ணீருக்குள் பாய்ந்து பாய்ந்து முங்கி முங்கி எழுந்திருக்கின்றோம். குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தில் ஏறிக் குதிப்பது, கோவில் கூரையில் ஏறிக் குதிப்பது, எல்லாப் படிகளையும் நீளவாக்கில் தாண்டிக் குதிப்பது என்று மூளை கெட்ட தனமாக பலவற்றைச் செய்திருக்கின்றோம். ஒரு குளத்தின் அருகில் நின்ற கத்தேக்க மரத்தில் உயரத்தில் பலகையை கிடையாக கட்டி, அதில் இருந்து துள்ளிக் கூட குதித்திருக்கின்றோம். அமீபாவும் அங்கு குடியிருந்திருக்க வேண்டும் இப்பொழுது தெரிகின்றது. நிற்கும் அழுக்குத் தண்ணீர், இளஞ்சூடு என்று அமீபா வளர்வதற்கேற்ற எல்லா காரணிகளும் சரியாகப் பொருந்துவது மட்டும் தான் ஒரு காரணம் என்றில்லை. 'உன்ரை மூளையும் இரும்புச் சூளையும் ஒன்று............' என்று திட்டுகள் பல தடவைகள் விழுந்திருக்கின்றது. அமீபா தான் ஒரு பகுதியை எடுத்து விட்டதோ என்று இப்பொழுது சந்தேகமாக இருக்கின்றது. 'உங்களுக்கு மூளையே இல்லை.............' என்று இன்று அடிக்கடி வரும் வரியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. ஐந்தாம் வகுப்பில் இருந்த வருடம். ஒரு கோவிலின் ஐயர் மகனும் எங்களின் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பெரிய கோவில் ஒன்றிலும், சில சின்னக் கோவில்களிலும் அவர்களின் குடும்பம் பூசை செய்து கொண்டிருந்தது. ஒரு நாள் பெரிய கோவில் குளத்தில் எங்களுடன் குளித்தான். பல மணி நேரங்களின் பின், போதும் என்று நாங்கள் வெளியில் வந்து விட்டோம், அவன் வரவேயில்லை. குளித்துக் கொண்டேயிருந்தான். பின்னர் சில நாட்கள் சின்ன ஆஸ்பத்திரி, பெரிய ஆஸ்பத்திரி என்று படுக்கையில் கிடந்தான் ஐயர் நண்பன். அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டான். சன்னி ஆக்கி விட்டது என்று ஊரில் சொன்னார்கள். சிறுவர்களுக்கு என்று இருக்கும் இடுகாட்டில் ஒரு பெரிய சமாதி அவனுடைய பெயரில் கட்டினார்கள். இன்றும் அது அங்கே இருக்கின்றது. சமீபத்தில் ஊர் போய் இருந்த போது, எல்லாக் கோவில் குளங்களையும் போய்ப் பார்த்தேன். கடும் வெயிலில் காய்ந்து, அடி மட்டத் தண்ணீருடன், கடும் பச்சை நிறத்தில் இருந்தன. எத்தனை டிரில்லியன் அமீபாக்கள் அங்கு நீந்திக் கொண்டிருக்கின்றனவோ.
  23. எல்லோரும் ஃபுட்பால் பார்க்கிறாங்களே என்று நானும் பார்ப்பமே என்று தேட............ இது தான் என் தேடலில் வந்தது.......🤣
  24. ஒரு புறம் ஆதவன் மறு புறம் தமிழ்வின் இரண்டுக்கும் நடுவே அழகிய தமிழ்.........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.