Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. வாரணாசியில் இருக்கும் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு நீர்மட்டம் குறைந்து, ஆற்றின் அகலம் வழமையான 70-80 மீட்டரிலிருந்து 30-35 மீட்டராக குறைந்துள்ளது. கங்கையில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக இருக்கும்போது, அங்கிருக்கும் குப்பைகள் வெளியே தெரிவதில்லை. ஆனால், தற்போது வெப்பத்தின் காரணமாக, நீர்மட்டம் குறைந்திருப்பதால், கங்கையின் யதார்த்த நிலை தெரியவந்துள்ளது. அத்துடன், ஆற்றின் கரைகளிலும் குப்பைகள் நிறைந்து கிடைக்கின்றன. https://tamil.news18.com/photogallery/trend/record-drop-in-gangas-water-level-what-is-the-reason-1499663-page-3.html ************** மோடிஜீ வேற தன்னை கங்கா தேவி மகனாக தத்து எடுத்து விட்டார் என்று தேர்தலிற்கு முன்னும் பின்னும் சொல்லியிருந்தார்......... தாங்க முடியாமல் கங்கையும் காய்ந்து போய் விடுமோ.........🤣.
  2. நாம தான் கீழே இறங்கப் போகிறோம், நம்மட அணி தான் நடையைக் கட்டி விட்டதே என்று பார்த்தால், நமக்கு கீழ இருக்கிறவர்களும் நம்மளோட சேர்ந்தே இறங்கி வாறாங்க..............🤣.
  3. இப்போதைக்கு 'ஆப்கானிஸ்தான் ஜிந்தாபாத் .......' என்று சொல்லிக் கொண்டே அந்தக் கட்சியில் போய் சேருவம்......
  4. 🤣...... தலிபான் தலைவர் ஒருவர் எங்களுக்கு இப்படி வரும் உலகப் புகழும், அதனால் வரும் பணமும் தேவையில்லை என்பது போல ஒரு கருத்தை கடந்த வாரம் சொல்லியிருக்கின்றார்... அது வேற ஒரு விடயத்திற்காக அந்த தலைவர் சொன்ன கருத்தாக இருந்தாலும், இரண்டு மாங்காய்களுக்கும் சேர்த்தே எறிந்த கல்லு மாதிரியும் தெரியுது.........
  5. குறுகிய காலத்தில் அதி வேகமாய் நொடிஞ்சு போன அணிகள் என்ற வகையில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்த் வரும்...............🤣.
  6. அதே தான்........ அவுஸ்ஸை உள்ளுக்குள்ள வைத்திருந்தால் அது தலைக்கு மேல தொங்கிற கத்தி தானே..........
  7. எதை எடுத்தாலும் ஒரு டாலர் தான் என்று இங்க ஒரு கடை இருக்கு..... அதைப் போல எவர் போட்டாலும் நாங்கள் அடிப்பம் சிக்ஸர் என்று இந்தியா நிற்குது........ அவுஸ்ஸிற்கும் கெட்ட நேரம்........
  8. மழை விட்டிட்டுது.......அடிச்சு தான் வெளியே அனுப்புகிறோம் என்ற மாதிரி இந்தியா விளையாடுது......நிறைய தடவைகள் அவுஸ்ஸிட்டை வேண்டிக் கட்டியிருப்பினமோ..........
  9. நான் ஒரு சின்ன லெவலில், ஒரு உண்ணா விரதம் என்ற அளவில், செய்ய நினைத்த சம்பவத்தை நீங்கள் அப்படியே அடுத்த லெவலுக்கு உயர்த்தி, ஒரு தீ குளிப்பையே ரெடி பண்ணுகிறீர்கள்........🤣......
  10. உங்கள் மீள்வரவு நல்வரவாகுக, சுண்டல். நான் புதிது, சில மாதங்களின் முன் இங்கு இணைந்தேன்.........
  11. நான் தோற்றதிற்கு இவர் தான் காரணம்...... இவர் விளையாடுகின்றார் என்று நினைத்து தான் நான் அந்த அணியை தெரிவு செய்தனான்.......😜.
  12. பொது வாழ்வில் இருந்து ஒதுங்குவதாக மேற்கிந்திய தீவு வீரர்களும், அத்துடன் நானும் முடிவெடுத்திருக்கின்றோம்..........🤣🤣........ மேல ஏறி நின்ற காலம் போய், இனிமேல் கீழ இறங்கி வரும் காலம்......... 'காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே ..........'
  13. 2013ம் ஆண்டில் அப்பொழுது அமெரிக்காவிற்கான இந்தியாவின் துணை தூதுவராக இருந்த தேவயாணியும் (தமிழ் நடிகை அல்ல....😜) இதே போன்ற ஒரு குற்றச்சாட்டில் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் அது இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு முறுகலானது. https://en.wikipedia.org/wiki/Devyani_Khobragade_incident
  14. என்ன சாரே, இதுக்கு போய்............ களப் போட்டி முடிவு என்ன வந்தாலும், நீங்க நீங்க தான் சாரே.......... 50% மேல உங்க மாணாக்கர்கள் தான் இங்கே....... Free Hit: இலங்கை அணியை மட்டும் விட்டிடுங்க, தலை. அந்த அணியில் ஏழு பேருக்கு 7 1/2 சனி நடக்குது என்ற விசயத்தை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கின்றார்கள். மொத்தம் 52 1/2 சனி........... இவர்கள் அடிக்கிற பந்து எல்லாம் காட்சாகத் தான் போகும்.......
  15. கள்ளக்குறிச்சி கல்லவராயன் மலையில் ஏறி கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை தீ வைத்துக் கொளுத்தி விட்டு, நீட் பிரச்சனையை தீர்க்க வருவார்கள்............ ஒரு ஒரு கிழமை டைம் கொடுங்கள்........ நீட் தேர்வு இன்னுமொரு அட்சய பாத்திரம்...... எப்ப உள்ளுக்குள் கையை விட்டாலும் அங்கே ஒரு போராட்டம் தயாராக இருக்கும். நீட் தேர்வு பற்றி இங்கு களத்தில் ஒரு பெரிய விவாதம் நடந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால், இப்ப நடக்கும் பிரச்சனை நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் பற்றியது மற்றும் முழு இந்தியாவும் இதில் பங்கேற்கின்றது. எவர் குத்தினால் என்ன, எப்படிக் குத்தினால் என்ன, அரிசி வந்தால் சரி என்று தமிழ்நாட்டு தலைகள் எல்லோரும் ஒவ்வொரு உலக்கையை இப்ப போடுவார்கள் பாருங்கள்..........
  16. அந்த நாலு உறவுகளுக்கும் கீழே இருப்பது.......... இலங்கை அணி....🤣..
  17. 🤣..... எங்க நம்ம தமிழ் கட்சிகளின் பிரமுகர்களை யோகாவில் காணவில்லையே என்று தேடினால்........... மகாபாரதத்தில் பீமன் ஒரு ஆசனம் செய்வார். பெயர் மறந்துவிட்டது. ஆற்றுக்குள் ஒரு கூடு கட்டி, அப்படியே நீருக்குள் மூச்சை பிடித்துக் கொண்டு இந்த யோகாவைச் செய்தாராம். நம்மவர்களை ஜெய்சங்கர் அந்த பீமாசனத்தை செய்யும் படி இரணமடுவிற்குள் தள்ளி விட்டு ஓடி வந்திட்டாராம்......... தமிழ் கட்சிகளின் ஜெய்சங்கருடனான சந்திப்பில், ஜெய்சங்கர் நடுவில் சும்மா இருக்க, இவர்கள் பொது வேட்பாளர் விவகாரத்தில் வாக்குவாதப்பட்டார்கள் என்கின்றது செய்தி.......... ஜெய்சங்கருக்கு தமிழ் வேற தெரியும்.........🫣.
  18. 👍......... எனக்கு எந்த ஆட்சேபணைகளும் இல்லை, கிருபன். நாலு புள்ளிகள் போனாலும், நம்மை தாங்குவதற்கு நாலு உறவுகள் கீழே இருக்குதே என்ற துணிவு தான்.........🤣..........மதுரை, சென்னை, திருச்சி, கோவை...... மிக்க நன்றி கிருபன் உங்களின் நேரத்திற்கும், தொடர் உற்சாகத்திற்கும்.
  19. மேற்கிந்திய தீவுகள் ஆங்கிலேயர்களிடம் தோற்ற கோபத்தை அமெரிக்கர்களிடம் காட்டிவிட்டனர். 10 ஓவர்களிலேயே அடித்துக் கலைத்து விட்டனர்.....
  20. உங்களின் குரல் எங்களின் ஜீயின் காதுகளில் விழுந்துவிட்டது..........ஜம்மு காஷ்மீரில் ஜீ சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா செய்தார்....
  21. இந்த நிவாரணம் வழங்கும் செய்தியை எப்படி எடுப்பது என்றே தெரியவில்லை. அழுது தவிக்கும் குடும்ப உறுப்பினர்ளை, சிறு பிள்ளைகள் உட்பட, பார்க்கும் போது, மனம் பரிதாப்படுகின்றது. ஆனால், பொங்கி வரும் உணர்வுகளை ஒதுக்கி விட்டு, நிதானமாக யோசித்தால், இதில் ஒரு பெரும் தவறு நடந்து கொண்டிருப்பதும் தெரிகின்றது. அடிக்கடி நிகழும் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இறப்பவர்களுக்கே அரசு இந்த அளவு நிவாரணங்கள் வழங்குவதில்லை. ஒரு இலட்சம் கொடுத்தாலே அது பெரிய விசயம். குடித்து அழிந்து கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இப்படி கொடுக்க வேண்டும் என்பதும், இது என்ன முன்னுதாரணம் என்பதும் சரியான கேள்வியே. எவருமே அவர்கள் கள்ளச்சாராயம் (என்று நினைத்து விஷச்சாராயம்) குடிப்பதை ஒரு தவிர்க்க வேண்டிய செயலாக சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட. மருந்தென்று நினைத்து மாறிக் குடித்து விட்டார்கள், உடம்பு நோவுக்கு குடிப்பார்கள் என்பது போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. இவை ஒரு விதமான நியாயப்படுத்தல் போன்றே இருக்கின்றன. இங்கிருக்கும் இரண்டு உண்மைகளில் முதலாவது: இவை, கள்ளச்சாரயமோ அல்லது விஷச்சாராயமோ அல்லது பொறுப்பற்ற எந்த வகை குடியுமே, குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்பது. இரண்டாவது உண்மை: இந்த கள்ளச்சாராய தொழிலுக்கு இருக்கும் அரசின் ஆதரவும், நடவடிக்கைகளும். தினமும் அங்கிருக்கும் மலையடிவாரத்தில் காய்ச்சிக் கொண்டே இருந்திருக்கின்றார்கள். இந்த வியாபாரிகள் கொடுக்கும் மாமூலை வாங்கிக் கொண்டு அரச நிர்வாகமும், காவல்துறையும் எதையும் கண்டும் காணாமலும் இருந்திருக்கின்றனர். ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 60 ரூபா என்றும், அதற்கு இணையானது டாஸ்மாக்கில் 250 ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்றும் குடிப்பவர்கள் சொல்லியிருக்கின்றனர்....... ஆகவே அரசின் டாஸ்மாக் தொழிலும் ஒரு காரணம் ஆகின்றது. செந்தில் பாலாஜியை வெளியே வர முடியாதபடி உள்ளேயே பாஜக அரசு அடைத்து வைத்திருப்பதற்கு பிரதான காரணம் டாஸ்மாக் மூலம் இவர் புரட்டிக் கொடுக்கும் பெரும் தொகையான பணத்தை தடுப்பதற்காகவே என்று ஒரு செய்தியில் இருந்தது. அந்தப் பணம் இல்லாவிட்டால் திமுக தேர்தல் செலவிற்கு திக்குமுக்காடும் என்று பாஜக கணக்குப் போட்டிருந்தது. டாஸ்மாக் வருமானம் இல்லாவிட்டால், தமிழ்நாடே இயங்காது போலிருக்குதே....... என்ன ஒரு இழிநிலை... அந்தக் குற்ற உணர்வில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் 10 இலட்சம், 5 இலட்சம் என்று ஆளுக்கு ஆள் கொடுக்கின்றார்களா....... கடந்த வருடத்தை விட இந்த வருடம் டாஸ்மாக் வருமானம் 1734 கோடி ரூபாய்கள் அதிகரித்திருக்கின்றது.... இந்த வருட மொத்த வருமானம் 45, 855 கோடி ரூபாய்கள்.........!!
  22. இந்த உலக கோப்பையில் இப்படித்தான் அவர்களின் ஒவ்வொரு போட்டியிலும் நடக்கின்றது.......... Chokers என்ற அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.........👍
  23. தென் ஆபிரிக்கா கடைசியில் வென்றிடுவார்கள் போலவும் தெரியுது.......
  24. நீங்கள் சொல்வதும் சரி. இந்த வாரம் ஆப்கானிஸ்தான் அணியினருக்கு, இந்தியாவுடனான போட்டியின் முதல் நாள், ஹலால் உணவு கிடைக்கவில்லை என்று ஆப்கான் வீரர்களே சமைத்ததாக செய்திகளில் இருந்தது. அதனால் அவர்களால் போட்டிக்கு சரியாக தயாராக முடியவில்லையாம்..........😶.......... இனி ஒரு சமையல்காரரையும் கூட்டிக் கொண்டே போக வேண்டியது தான்......... இது இந்தியாவின் கைப்பாவை என்று சொல்லப்படும் ஐசிசியின் சதியாக இருக்குமோ........🤣.
  25. யோக நிலை என்பது இறைவனுடன் ஒன்றாதல், உருவ வழிப்பாட்டின் சில சாயல்கள், இறைவனையே பிரதி எடுத்தல்........இப்படி பல காரணங்களைச் சொல்லி, இவை அவர்களின் இறைவன் சொல்லியவற்றுக்கு எதிரானவை என்று அவர்கள் யோகாசனத்தை நிராகரிக்கின்றனர். 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் 60 மீட்டர் இடைவெளியில் கடைசியாக வருபவர்களும் இருக்கின்றனர்..... பார்த்தும் இருப்போம்.......... ஆறுதலாக வந்து சேரட்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.