Everything posted by பிழம்பு
-
இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் - இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!
நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகளினால், எமது 30 மீனவர்களின் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு இந்திய ரோலர்களினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் கடற் தொழில் அமைச்சர் இந்தியா ரோலர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் பேச்சு வர்த்தை நடத்தினார் தோல்வியில் முடிவடைந்தது. கச்சதீவில் இருநாட்டு மீனவர்களையும் அழைத்து பேசினார் தோல்வியில் முடிவடைந்தது. இவ்வாறு இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தால் நாம் என்ன செய்வது. ஆகவே நெடுந்தீவில் இருந்து கொண்டு எமது வாழ்வாதார தொழிலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எம்மை வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டு இந்தியாவுக்கு நெடுந்தீவை ஒப்படையுங்கள் எங்களை வாழ விடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் - இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்! | Virakesari.lk
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் கோரிக்கை விடுத்துள்ளார். (ச) காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி - கிஷோர் விசனம்!
-
தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் - இந்தியப் பிரதமர் மோடி
தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவுக்கு நான் அன்புடன் வரவேற்கின்றேன். ஜனாதிபதியாக இந்தியாவுக்கு முதலாவது விஜயத்தினை மேற்கொள்வதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த விஜயமானது நமது உறவுகளில் புத்துணர்ச்சியுடனான ஆற்றல்களையும் சக்தியினையும் உட்புகுத்தியுள்ளது. நமது பங்குடைமைக்கான எதிர்கால நோக்கினை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அத்துடன் நமது பொருளாதார பங்குடைமையில் முதலீட்டினை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் இணைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். நேரடியான தொடர்புகள், டிஜிட்டல் மற்றும் ஆற்றல் அடிப்படையிலான இணைப்பு ஆகியவை எங்கள் கூட்டாண்மையின் முக்கிய தூண்களாக இருக்கவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான மின்சார வலையமைப்பிற்கான இணைப்பு மற்றும் பல்பொருள் பெற்றோலிய உற்பத்திகளை விநியோகிக்கும் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்காகவும் நாம் பணியாற்றவுள்ளோம். சம்பூர் சூரியக் கல மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இவற்றுக்கு மேலதிகமாக இலங்கையில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு LNG வழங்கப்படும். இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ETCA உடன்படிக்கையினை நிறைவேற்றும் முயற்சிகள் இரு தரப்பாலும் மேற்கொள்ளப்படும். இன்றுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான நன்கொடை மற்றும் கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றொம். எமது பங்காளி நாடுகளின் அபிவிருத்தித் தெரிவுகளுக்கு அமைவாகவே எமது திட்டங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இந்த ஆதரவினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாகோ முதல் அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சமிக்கைகள் மற்றும் காங்கேசன்துறை துறைமுக மீளமைப்புக்காக நன்கொடை அடிப்படையிலான ஆதரவினை வழங்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் எமது கல்வி ரீதியான ஒத்துழைப்பின் அங்கமாக இலங்கையில் உள்ள கிழக்கு பல்கலைக் கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு நாம் மாதாந்த புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளோம். அடுத்துவரும் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இலங்கையைச் சேர்ந்த 1500 சிவில் சேவை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சிகள் வழங்கப்படும். வீடமைப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுடன் இலங்கையின் விவசாயம் பால்பொருள் உற்பத்தி மற்றும் மீன்பிடி ஆகிய துறைகளுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும். இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்காளராக இருக்கும். எமது பாதுகாப்பு ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்களும் நானும் முழுமையான இணக்கப்பாட்டினைக் கொண்டிருக்கின்றோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையினை துரிதமாக நிறைவேற்றவேண்டுமென நாம் தீர்மானித்துள்ளோம். அத்துடன் நீரியல் சார்ந்த துறைகளிலும் ஒத்துழைப்புடன் செயற்பட நாம் இணங்கியுள்ளோம். பிராந்தியத்தின் சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு கொழும்பு பாதுகாப்பு குழுமம் மிகவும் முக்கியமான தளம் என நாம் நம்புகின்றோம். இவ்வாறான குடையின் கீழ், கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு, இணையப் பாதுகாப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல்களுக்கு எதிரான போராட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் ஆகிய விடயங்களிலும் ஆதரவு வழங்கப்படும். இந்திய - இலங்கை மக்களிடையில் காணப்பட்டும் உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை ஆகும். பாளி மொழியினை செம்மொழியாக அறிவித்த தருணத்திலும் அதனுடன் இணைந்த கொண்டாட்டங்களிலும் இலங்கையும் எம்முடன் இணைந்திருந்தது. கப்பல் சேவைகளும், சென்னை யாழ்ப்பாண விமான இணைப்புகளும் சுற்றுலாத்துறையினை மாத்திரம் மேம்படுத்தவில்லை, ஆனால் கலாசார உறவுகளையும் வலுவாக்கியுள்ளன. நாகபட்டினம் மற்றும் காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் சேவைகள் வெற்றிகரமாக மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையிலான கப்பல் சேவையினையும் ஆரம்பிக்க நாங்கள் கூட்டாக தீர்மானித்துள்ளோம். பௌத்த மத வளாகம் மற்றும் இலங்கையின் இராமாயணச் சுவடுகள் மூலம் சுற்றுலாத்துறையில் காணப்படும் மகத்தான ஆற்றலை உணர்ந்துகொள்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக மனிதாபிமான ரீதியிலான அணுகுமுறையினை கடைப்பிடிக்க வேண்டுமென நாம் இருவரும் இணங்கியுள்ளோம். அத்துடன் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பு குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைவரையும் உள்ளடக்கிய தனது நோக்கு குறித்து என்னிடம் கூறியுள்ளார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசியலமைப்பினை முழுமையாக அமுல்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குமான தமது உறுதிமொழியினை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் அவரது முயற்சிகளில் இந்தியா உண்மையானதும் நம்பத்தகுந்ததுமான பங்காளியாக இருக்குமென நான் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கா அவர்களிடம் உறுதியளித்துள்ளேன். ஜனாதிபதி திசநாயக்க அவர்களையும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒரு முறை அன்புடன் இந்தியாவுக்கு வரவேற்கின்றேன். அத்துடன் புத்தகயாவிற்கு அவர் மேற்கொள்ளும் விஜயம் சிறப்பானதாக அமைய வாழ்த்துவதுடன் அவ்விஜயமானது ஆன்மீக சக்தி மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றால் நிறைந்திருக்குமென நம்புகின்றேன் என மேலும் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமென நாம் நம்புகின்றோம் - இந்தியப் பிரதமர் மோடி | Virakesari.lk
-
Lycamobile tells nearly 90% of UK staff they could lose their jobs
Exclusive: Telecoms company is loss-making and it is locked in long-running VAT dispute with HMRC Almost 90% of the UK workforce at the telecoms company Lycamobile have been told they could lose their jobs, the Guardian has learned, in an announcement that leaves more than 300 staff fearing for their roles shortly before Christmas. The company, owned by the multimillionaire Tory donor and British-Sri Lankan businessman Allirajah Subaskaran, sells pay-as-you-go sim cards popular with low-paid workers wanting to make cheap phone calls to family overseas, as well as in the UK. On Friday, staff at the Lycamobile’s headquarters in the City of London were told that the company was facing “pretty serious challenges” and was planning to cut up to 316 jobs, leaving as few as 48 in the UK. Lycamobile lost £24m in 2022, the last year for which accounts are available, and its auditors have raised concerns about the opacity of the company’s books. It is also locked in a protracted tussle with HMRC over an alleged £51m unpaid VAT bill related to phone “bundles” sold to customers. Last year, the group’s French business was fined €10m (£8.3m) by a Paris court for money laundering and VAT fraud. Addressing staff on Friday, the company’s general counsel, David Dobbie, blamed competition, cost inflation, “legacy technology issues” and internal inefficiencies due to overlap between divisions based in the UK and India. He did not mention the company’s tax disputes. Dobbie said some of the services due to be cut in the UK, such as customer service, would be moved offshore, including to India. He said it would take some time before staff would learn their fates, with a consultation on jobs to start imminently. He promised that nobody would be dismissed before 31 January. “This proposed expansion of global service centres is going to unlock significant cost savings for us,” he said, asking for the support of staff to “make this no harder than it needs to be”. Cuts are expected to be felt across several businesses in the Lyca group of companies, which include property, media and a restaurant chain, Bella Cosa. In 2019, Labour described Boris Johnson as “unfit” to be prime minister, over reports that he attended a private dinner at Bella Cosa and met Allirajah, as he sought financial backing for his attempt to become Tory leader. The criticism is understood to have related to Johnson’s decision to attend the meeting while Lycamobile was under investigation for money laundering in France. Lycamobile donated more than £2m to the Tories between 2011 and 2016. Allirajah gave Johnson gifts worth £600 while he was the London mayor, including flowers and a £100 hamper for his birthday. Allirajah is reportedly entering politics in Sri Lanka himself, through an attempt to unite Tamil parties in the country. A spokesperson for Lycamobile said: “As with all other UK companies, Lycamobile reviews its business model on an ongoing basis to provide the best possible service to its customers. “No final decisions have been made on any changes to our model at this time, but we have announced a consultation process regarding strategic changes to align with our long-term growth goals and the challenges facing our business and other telcos, including a focus on digital transformation. “In parallel, our HMRC matters are ongoing in accordance with our previous statements and there are not material updates at this time.” Lycamobile tells nearly 90% of UK staff they could lose their jobs | Telecommunications industry | The Guardian
-
வீட்டுப்பணிப்பெண்ணின் உரிமைகளை மீறிய அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம்
12 Dec, 2024 | 05:29 PM வீட்டுப்பணிப்பெண் ஒருவரின் உரிமைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட வீட்டுப்பணியாளருக்கு செலுத்தாத சம்பளங்கள் மற்றும் அதற்கான வட்டியாக 500,000 அமெரிக்க டொலர்களை ஹிமாலி அருணதிலக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையிலேயே இந்த அபராதத்தை விதித்துள்ளது. 2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவிற்கான பிரதிஉயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்த அவர் இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயரான பிரியங்க தனரட்ணவை டீக்கினில் உள்ள தனது இராஜதந்திரிகளிற்கான இல்லத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்ததார். அவுஸ்திரேலியாவிற்கு பிரியங்காவை வேலைக்கு அழைத்திருந்த ஹிமாலி அவுஸ்திரேலியாவின் சம்பளங்கள் நிபந்தனைகளிற்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். எனினும் அந்த வீட்டில் தான் தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். மூன்று வருடங்கள் தான் வேலை பார்த்ததாகவும்,தன்னை சமையலறையில் எண்ணையை ஊற்றி கொழுத்திக்கொள்ள முயன்றதால்தான் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். நாளாந்தம் அந்த பணிப்பெண் 14 மணித்தியாலங்கள் பணியாற்றினார் என கணக்கிடப்பட்டது,எனினும் அவரது வேலை இரவு 1 மணி வரை நீடித்தது. மேலும் பிரதி உயர்ஸ்தானிகர் பணிப்பெண்ணின் கடவுச்சீட்டையும் தான் எடுத்துவைத்துக்கொண்டார்,அவர் வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை.எப்போதாவது அயலில் உள்ள பகுதிகளிற்கு சிறிது நேரம் நடந்து செல்ல அனுமதித்தார். அவர் எனக்கு உரிய உணவையும் உடையையும் வழங்கவில்லை ஒழுங்காக நடத்தவில்லை என்பது போல உணர்ந்தேன் என அந்த பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வீட்டுப்பணிப்பெண்ணின் உரிமைகளை மீறிய அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் இராஜதந்திரி- 117,000 டொலர் அபராதம் விதித்தது நீதிமன்றம் | Virakesari.lk
-
யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி - ஒருவர் கைது!
தளபாடங்களை தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் பெருமளவான பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா பெறுமதியான தளபாடங்களை தருவதாகக் கூறி, வவுனியாவில் உள்ள நபர் ஒருவரை ஏமாற்றி பணத்தினை பெற்றுக்கொண்டு ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர், அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் 20 இலட்சத்துக்கு அதிகமான பண மோசடி - ஒருவர் கைது! | Virakesari.lk
-
எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு
(செ.சுபதர்ஷனி) நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் குமுது வீரகோன்ன் தெரிவித்தார். எலிக்காய்ச்சல் பரவல் குறித்து புதன்கிழமை (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த வருடம் மாத்திரம் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சலால் பாதிப்புற்ற 9 ஆயிரம் பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இரத்தினபுரி, குருநாகல், காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 10 தொடக்கம் 12 மாவட்டங்கள் அதி உயர் அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் பாரிய அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது. மழையுடன் கூடிய காலநிலை மற்றும் பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அடையாளம் காணப்படும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லெப்டோஸ்பைரா எனப்படும் ஒருவகை பற்றீரியா தொற்றால் இக்காய்ச்சல் ஏற்படுகிறது. பெருமளவில், நோய்த் தொற்றுக்கு ஆளான எலிகளின் சிறுநீர் மூலம் மனிதர்களுக்கு பரவுவதால் எலிக்காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. எனினும் நாய், மாடு, பன்றி, ஆடு போன்ற விலங்குகளின் மூலம் இது பரவலாம். பற்றீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்களில் நடமாடுதல், விளையாடுதல், பயிர்ச்செய்கை மற்றும் அகழ்வு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அவதானத்துடன் செயற்படுவது நல்லது. மேலும் சுற்றுலாவுக்காக செல்வோர் நீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் பழக்கமில்லாத நீர்நிலைகளில் நீராடுதல், விளையாட்டு சாகசங்களில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம். நீர், மண்ணில் கலந்துள்ள பற்றீரியா உடலில் உள்ள சிறு புண்கள், காயங்கள், கீறல்கள் மற்றும் அவ்வாறான நீரை அருந்துவதன் மூலமும் உடலை வந்தடைகின்றது. நோய் அறிகுறிகள் வெளிப்பட சுமார் 7 தொடக்கம் 14 நாட்களாகக் கூடும். ஆகையால் அதானம் மிக்க பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விவசாயம், இரத்தினக்கல் அகழ்வு பணியை மேற்கொள்பவர்கள் காய்ச்சல்கள் ஏதும் ஏற்படின் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது நல்லது. நோய்த் தொற்றுக்கு ஆளானவரிடம் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கண் சிவத்தல், வாந்தியும் குமட்டலும் போன்ற அறிகுறிகள் தென்படலாம். நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டு சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையேல் கடுமையான விளைவுகளும் உயிரிழப்பும் ஏற்படலாம். அத்துடன் நோய் தொற்று காரணமாக சிறுநீரகம், இதயம், மூளை, நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழப்பதற்கும் வாய்ப்புள்ளது. விவசாயிகளின் நலன் கருதி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படுகிறது. அவற்றை பொது சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய பெற்றுக் கொள்ளலாம். மேலும் யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலால் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறெனினும் எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது. பரிசோதனை அறிக்கை கிடைக்க பெற்ற உடன் உறுதியான காரணம் வெளியிடப்படும் என்றார். எலிக்காய்ச்சலால் பாதிப்புற்றவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிப்பு | Virakesari.lk
-
`உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான்
நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்' என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்' என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்' வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான், ரஜினி அதில், ``ஐயா ரஜினிகாந்தை நான் சந்தித்ததை வைத்து, என்னை ‘சங்கி’ என முத்திரைக் குத்தினார்கள் திராவிடக் கருத்தாக்கிகள். இதே ஐயா ரஜினிகாந்தை வைத்து, ‘கலைஞர் எனும் தாய்’ எனும் நூலை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். நாணய வெளியீட்டு விழாவுக்கும், இன்னப் பிற நிகழ்வுகளுக்கும்கூட அவரை அழைத்தார். அப்போதெல்லாம் ஐயா ஸ்டாலின் சங்கியாகவில்லையா? வெங்கையா நாயுடு ஐயா கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்; ராஜ்நாத் சிங் ஐயா கருணாநிதியின் நாணயத்தை வெளியிடுகிறார். கூடவே நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வுக்கெல்லாம் அரசியல் சாயம் பூசாது, அதனை அரசியல் நாகரிகமெனக் கதையளந்தவர்கள் எனக்கும், ஐயா ரஜினிகாந்துக்கும் இடையேயான தனிப்பட்ட சந்திப்புக்கு உள்நோக்கம் கற்பித்து காவிச்சாயம் பூசுவதேன்?" என வினவியிருப்பதோடு சங்கி என்றால் நண்பன் எனச் சொன்னதற்கும் பதில் சொல்லியிருக்கிறார். ரஜினி - ஸ்டாலின் `` ‘சங்கி’ என்பதற்கு உண்மையிலேயே நண்பன் எனும் பொருளிருக்கிறது. இராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்த்த துளசிதாசர், ராமனுடைய நண்பன் அனுமன் எனக் குறிப்பிடுவதற்கு, ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். ‘சங்கி’ என்றால், ‘பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவர்’ எனும் பொருளும் பாலி மொழியில் இருக்கிறது. தற்காலச்சூழலில், ‘சங்கி’ என்பதை சங் பரிவார் அமைப்புகளையும், அவர்களோடு உறவு வைத்திருப்பவர்களையும் குறிக்கிற அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்துகிறார்கள்” என்றிருக்கிறார். தொடர்ந்து, ``ஐயா ரஜினிகாந்த் உடனான சந்திப்பை வைத்து என்னை, ‘சங்கி’ என்றதற்கு, ‘நண்பன்’ எனும் பொருள் இருப்பதைக் குறிப்பிட்டேன். உள்நோக்கம் கொண்ட அந்த அரசியல் அவதூறைக்கூட ‘நண்பன்’ எனும் வேறு பொருள்பட நான் எடுத்துக் கொள்வதாய் கூறினேன். அதேசமயம், சங் பரிவார் அமைப்புகளைக் குறிக்கிற வகையில், ‘சங்கி’ எனும் சொல்லாடலைப் பயன்படுத்தும்போது அது திமுக-வுக்குத்தான் பொருத்தமானதாக இருக்குமென்பதைக் கூற, “உண்மையான் சங்கி திமுகதான்” என அச்செய்தியாளர் சந்திப்பிலேயே தெளிவாகக் குறிப்பிட்டேன். ஆனால், என் பேச்சை வழக்கம்போல வெட்டி ஒட்டி, திரித்துவிட்டார்கள். இப்போதும் சொல்கிறேன் உண்மையான் சங்கிகள் திமுக-வினர்தான். ``90 விழுக்காடு இந்துக்களின் கட்சி திமுக” எனச் சொல்கிற ஐயா ஸ்டாலின் சனாதன எதிர்ப்பாளர்; “தமிழர்கள் இந்துக்களே இல்லை” எனச் சொல்கிற நான் சங்கியா? திராவிட மாடலின் முன்னோடி ராமர்தான் எனச் சொன்ன அமைச்சர் ரகுபதி சமூக நீதிக்காவலர்; இராவணப் பாட்டனைப் போற்றிக் கொண்டாடும் நான் சங்கியா? பசு மடம் கட்டும் சேகர்பாபு சமத்துவவாதி; மாட்டிறைச்சி உணவுக்காகக் குரலெழுப்பும் நான் சங்கியா? என்ன தர்க்க நியாயமிது?” ``இந்த 14 ஆண்டுக்கால நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயணத்தில் பாஜக-வின் கொள்கைகளையோ, திட்டங்களையோ, சட்டங்களையோ நான் ஆதரித்த ஒரே ஒரு இடத்தைக் காட்ட முடியுமா? இந்துத்துவாவுக்கு எதிர்திசையில் இருக்கும் என் மீது ‘சங்கி’ என முத்திரைக் குத்தும் இவர்கள், “இந்துத்துவா என் ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது” என முழங்கிய உத்தவ் தாக்கரேவை எப்படிப் பார்க்கிறார்கள்? அவரை எதற்காக, ‘இந்தியா’ கூட்டணிக்குள் இணைத்து வைத்திருக்கிறார்கள்? கேரளா முதல் காஷ்மீர் வரை இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், அவர்களது குடும்பத்தினரும் குறிவைத்து அமலாக்கத்துறையாலும், வருமான வரித்துறையாலும் பழிவாங்கப்படுகிறபோது, ஐயா ஸ்டாலினையோ, அவரது குடும்பத்தினரையோ பாஜக விட்டு வைத்திருப்பதேன்? திமுக மீது என்ன பரிவு பாஜக-வுக்கு? என்னை, ‘சங்கி’ என அவதூறுப் பரப்பிய கருத்தாக்கிகளே! ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரை வந்தபோது அவர் செல்லும் சாலையைப் பராமரிக்கச் சொன்னது தி.மு.க ஆட்சிதானே? நான் பா.ஜ.க-வின் ஆளென்றால், என் பிள்ளைகளின் வீட்டுக்கு தேசியப் புலனாய்வு முகமை எதற்கு வந்து சோதனை செய்தது? நான் அவர்களுக்கு அனுசரணையாக இருந்தால், எதற்கு எங்களது சின்னத்தைப் பறிக்கிறார்கள்? இதற்கு என்ன சொல்லப் போகிறது திராவிடக்கூட்டம்? நேர்மையாக என்னையும், எனது அரசியலையும் எதிர்கொள்ள வக்கற்ற கோழைகள் அவதூறுகளின் மூலம் வீழ்த்தத் துடிக்கிறார்கள். அதனால்தான், ஒற்றைச் சந்திப்புக்கே அலறித் துடித்து, இத்தகைய அவதூறைப் பரப்புகிறார்கள். சத்தியமே உருவாய் நின்ற சத்தியத்தலைவன் பிரபாகரனின் மகன் நான். இந்த அவதூறுகளை எல்லாம் நாங்கள் கொண்டிருக்கிற அரசியல் அறமே அறுத்தெரியும்” எனக் காட்டமாக பதிலளித்திருக்கிறார். `உண்மையான சங்கி திமுக தான்; என்மீது ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள்..!' - கொதிக்கும் சீமான் | seeman about the sanghi criticisms against him - Vikatan
-
யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில் வெற்றுக் காணியிலிருந்து எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு | Virakesari.lk
-
மீளவும் கூட்டமைப்பாக செயற்படலாமா ? ஆராய்வதாக செல்வம் எம்பி தெரிவிப்பு!
முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தெரிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கு இன்றையதினம் வழங்கிவைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது பாராளுமன்றக்குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்ற நிலமை ஏற்ப்பட்டுவிடும். எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணையவேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள். எனவே பாராளுமன்றுக்குள்ளும் தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொதுவிடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்ப்படுத்தவேண்டும். அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமாஎன்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் பெருவாரியான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கத்தின்ஜனாதிபதி பேசியபோது ஒருமணிகூட வெளியில்இருந்து இறக்கமாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று நிலைமைமாறி இறக்குமதிசெய்யும் சூழல் வந்துள்ளது. சர்வதேச நாணயநிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர். எனவே இந்தநிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்ப்படும். எனவே அரசாங்கம் நிதானமாக செயற்ப்படவேண்டும். இன்று சாதாரணமக்கள் கூட தேங்காய் வாங்கமுடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்றவேண்டும் என்றார். மீளவும் கூட்டமைப்பாக செயற்படலாமா ? ஆராய்வதாக செல்வம் எம்பி தெரிவிப்பு! | Virakesari.lk
-
முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !
"மீனவ சமூத்தின் உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் கண்ணியமான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிப்போம், உணவு இறையாண்மையை உறுதிசெய்வோம்" என்னும் தொனிப்பொருளில் முல்லைத்தீவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பித்த இந்த நடைபவனியானது, முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபம் வரை இடம்பெற்றது. குறித்த நடைபவனியில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்திய இழுவைமடி ஆக்கிரமிப்பை நிறுத்துதல், மீனவசட்டத்தை உடன் அமுல்படுத்துதல், சட்டவீரோத மீன்பிடிச் செயற்பாடுகளை முற்றாக தடைசெய்தல், கனிய மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தல், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பண்ணை வளர்ப்புத் திட்டங்களை நிறுத்துதல், காற்றாலை மின்சாரத் திட்டத்தைத் தடை செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களை எழுப்பியவாறும், பாதாதைகளைத் தாங்கியவாறு நடைபவனியில் ஈடுபட்டனர். வன்னிபாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் 16 மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதகள், மீனவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் உலக மீனவதின நிகழ்வுகள் இடம்பெற்றன. முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி ! | Virakesari.lk
-
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் என்பவற்றை பொருளாதார ரீதியாகப் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையை முன்மொழிவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த ஒருங்கிணைந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி அரச நிர்வாக,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் கீழ் கொழும்பு 07 மற்றும் 05 பகுதிகளில் காணப்படும் 50 அரச பங்களாக்கல் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிர்வாகிக்கப்படும் கொழும்பு,கண்டி, நுவரெலியா, மஹியங்கனை, அநுராதபுரம்,கதிர்காமம்,யாழ்ப்பாணம்,எம்பிலிபிட்டிய, மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகளும் அமைந்துள்ளன. அவற்றில் அடிக்கடி பயன்படுத்தப்படும் கண்டி, கொழும்பு ஜனாதிபதி மாளிகைகள் தவிர்ந்த ஏனைய மாளிகைகளும், தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் பல நாட்டின் தலைவர்கள் பலரும் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்திய கொழும்பு 02 இல் உள்ள விசும்பாய, பிரதமர் அலுவலகத்தின் கீழ் காணப்படும் நுவரெலியாவிலுள்ள பிரதமருக்கான உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட அரச பங்களாக்கல் என்பன இவ்வாறு பொருளாதார ரீதியில் பயனுள்ளவையாக மாற்றப்படவுள்ளன. இந்த அரசு சொத்துக்களைப் பராமரிப்பதற்காக பெருமளவு நிதி செலவழிக்கப்பட்டுள்ள போதும் அவற்றினால் குறைவான பலனே ஈட்டப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாக்கள், ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் | Virakesari.lk
-
இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குமாறு வலியுறுத்தல் !
(எம்.எம்.சில்வெஸ்டர்) இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை (வற் வரி) உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கம், இலங்கை நூல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சங்கம், அகில இலங்கை நூல் விற்பனையாளர்கள் சங்கம், இலங்கை எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களும் அரசாங்கத்தை கூட்டாக வலியுறுத்துகிறது. இவ்விடயம் குறித்து தாம் தற்போது புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்திற்கு பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளதாகவும் குறிப்பிட்ட இந்த சங்கங்கள், சார்க் வலய நாடுகளில் இலங்கையில் மாத்திரமே புத்தகத் துறைக்கு 18 வற் வரி அறவிடப்படுவதாகவும், ஏனைய சார்க் நாடுகளில் பூச்சய வீத வற் வரியே அறவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும்,அறிவு மற்றும் கற்றல் தொடர்பான மூலதாரங்களுக்கு வரி விதிதப்பதால் ஏற்படுகின்ற நிதியியல் மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் கருத்திற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தப்பட்டிருந்தது. இவ்விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை நூல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன்த இந்தீவர, "பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த போது புத்தகத் துறைக்கு 18 வீத வற் வரி விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவத்தவர்கள், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அன்று இவ்விடயத்தை எதிர்த்தவர்கள், புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் VAT வரியை நீக்கிக்கொள்வதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புத்தகங்கள் மீது வற் வரி விதிக்கப்படுவதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்காக அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தின்போது எமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் " என்றார். இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் தினேஷ் குலதுங்க கூறுகையில், "பெரும்பாலான பதிப்பக நிறுவனங்கள் வற் வரியை செலுத்தவதற்கான தகுதியை கொண்டதானவை அல்ல. ஏனெனில், அவர்கள் பாரிய ரீதியில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இதனால், 18 வீத வற் அறவீட்டை கழித்துக்கொள்ளவும் முடியாத துர்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. உள்நாட்டு தொழிலாளர்களைத் தவிர, பதிப்பகத் துறைக்கான அனைத்து உள்ளீடுகளும் இறக்குமதி செய்யப்படுவதால், இலங்கையின் புத்தகத் துறைக்கு ஏற்கனவே 33.04 சதவீத வரி அறவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கு மேலதிகமாக, 18 சதவீதவற் வரி அறவிடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, புத்தகங்களின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதுடன், புத்தகத்தை கொள்வனவும் செய்யும் நுகர்வின் அளவும் 30 சதவீதத்தால் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணிகள், இலங்கையின் புத்தகத்துறை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அத்துடன், சிறியளவான வர்த்தகர்கள் இத்துறையை விட்டு செல்கின்றனர். இதனால் உள்நாட்டு தொழிலாளர்களும் தமது தொழிற்துறைகளை இழந்துள்ளதுடன், எதிர்காலத்திலும் இழக்க நேரிடும். நாட்டில் புத்தி கூர்மையான மக்களை உருவாக்குவதில் புத்தகத்துறை பெரும் பங்கு வகிக்கிறது என்பதை தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள அரசாங்கம் நம்புகிறது. இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி வற் வரியை உடனடியாக நீக்குமாறும், அடுத்தாண்டு தயாரிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தின்போது இது குறித்து அரசாங்கம் தனது அவதானத்தை செலுத்த வேண்டும் என லியுறுத்தி நிற்கிறோம் " என்றார். இலங்கையில் புத்தகத்துறைக்கு விதிக்கப்படும் 18 சதவீத பெறுமதி சேர் வரியை நீக்குமாறு வலியுறுத்தல் ! | Virakesari.lk
-
அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச முகவர் அமைப்பு (USAID) மற்றும் அமெரிக்காவின் திறைசேரி துறை ஆகியவற்றின் அமெரிக்க பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அமெரிக்க பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் புதிய நிர்வாகம் குறித்து வாழ்த்து தெரிவித்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்திப்பில் இலங்கையின் நிர்வாகம், விவசாயம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன், ஜனாதிபதி அநுர குமாரவுடனான சந்திப்பில் இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கான அமெரிக்க ஆதரவை அமெரிக்க பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர் என்றும் இதன் மூலம் சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியதாகவும் ஜூலி சங் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பிரதிநிதிகள் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இடையே சந்திப்பு | Virakesari.lk
-
இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி
இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்தார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்த தடையும் இல்லையென்றாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார். பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது பரவலாகப் பேசப்படும் பல தலைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய ஜனாதிபதி, தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்தும் ஊடகப் பிரதானிகளுக்கு விளக்கமளித்தார். இலங்கை ஒலிபரப்பாளர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொது முகாமையாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். R Tamilmirror Online || இனவாதத்தை மீண்டும் அனுமதிக்கப் போவதில்லை ; ஜனாதிபதி
-
சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாயைச் சேர்ந்த சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். (ப) மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
-
புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் ஊர்காவற்றுதுறையில் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!
ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அந்நபர் தலைமறைவாக இருந்த போது வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தேகநபரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. (ப) புகையிலைக் கொள்வனவால் 5 கோடிக்கு மேல் மோசடி- பிரதான சந்தேகநபர் கைது!
-
தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்! தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று காலை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப) தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!
-
சிக்கினார் ஆவாகுழு பிரசன்னா
This alleged Sri Lankan gangster lay low in Canada for a year after claiming refugee status. Now he faces extradition The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France. Updated Nov. 27, 2024 at 5:47 p.m. Nov. 27, 2024 2 min read Save Prasanna Nallalingam, also known as Ajanthan Subramaniyam, in a photo included in a French warrant for his arrest. (Court filings) By Abby O’BrienStaff Reporter A man believed to be the head of a Sri Lankan motorcycle gang is facing extradition to France to face murder charges after being arrested in Toronto this spring, the Star has learned. The extradition of Prasanna Nallalingam is being sought in connection with the alleged gang killing of Abiraman Balakirishnan and attempted murder of Prashant Kulesekaram in September 2022 in France, Canada’s Department of Justice confirmed Wednesday. According to an affidavit obtained by the Star, Nallalingam, 32, who also goes by the name Ajanthan Subramaniyam, is believed to be the leader of a group known as AAVA, an outlaw motorcycle club active in the northern province of Sri Lanka. The filings state the attack targeted a group known to be rivals of AAVA, the LC Boys. According to French media reports, the two groups were engaged in a multi-year conflict over control of La Courneuve, a commune located in the northern suburbs of Paris. Alleged Sri Lankan gangster faces extradition to France
-
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு அமெரிக்கா எத்தகைய உதவிகளை வழங்கலாம்? - இருநாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஆராய்வு
(நா.தனுஜா) நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ தலைமையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பிரதி உதவிப்பணிப்பாளர் அஞ்சலி கௌர் மற்றும் திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் ஆகியோர் அடங்கிய அமெரிக்க உயர்மட்டப்பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (5) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். அதன்படி அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் நிதியமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்கும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்தும், நிதியியல் மீளெழுச்சித்தன்மையை வலுப்படுத்தக்கூடியவாறான இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டிணைந்த வாய்ப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு அமெரிக்கா எத்தகைய உதவிகளை வழங்கலாம்? - இருநாட்டு உயர்மட்டப்பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஆராய்வு | Virakesari.lk
-
”வரி செலுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர்”
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்தார். அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது மிகப்பெரும் பலம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 15 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த செயலியின் நெரிசல் காரணமாக வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கருமபீடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கூறினார். தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார். Tamilmirror Online || ”வரி செலுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர்”
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி 05 Dec, 2024 | 06:18 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தில் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட 361 மதுபானசாலை அனுமதிகளின் உரிமையாளர்கள், சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமா, வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை முன்வைத்து மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த அரசாங்கத்தால் அரசியல் இலஞ்சமாக மதுபானசாலைகளுக்கான அனுமதிகளை பெற்றவர்களின் விபரங்களை அரசாங்கம் சபையில் சமர்ப்பித்தமை பாராட்டுக்குரியது. அதேவேளை இந்த மதுபானசாலைகளின் உரிமையாளர்கள், இவற்றுக்கான அனுமதிகளுக்கு சிபார்சு செய்தவர்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்துமா? அத்துடன் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட இந்த மதுபான சாலைகளுக்கான அனுமதிகளை அரசாங்கம் இரத்துச் செய்யுமா , இந்த 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் தொடர்பில் அரசாங்கம் ஏனெனில் பொதுமக்கள் எம்மிடம் இவ்விடயம் குறித்து வினவுகிறார்கள் ஆகவே அரசாங்கம் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என சபைமுதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்கவிடம் கோரினார். எனினும் அரச தரப்பில் இருந்து எவரும் பதிலளிக்கவில்லை. அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா ? - சாணக்கியன் கேள்வி | Virakesari.lk
-
கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம்
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதி கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர். கலந்துரையாடலுக்கு பின்னரும் பாராளுமன்றத்திலும் அது தொடர்பான விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக கல்முனை பிரதேச செயலக தொகுதி தொடர்பான பிரச்சினை தீர்ப்பதற்கு ஜனாதிபதி தலையிடுவதாக வாக்குறுதி வழங்கியதாக இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடுவோம். கலந்துரையாடல் ஊடாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். இந்த விடயம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. மற்றும் சத்தியலிங்கம் எம்.பியுடன் கலந்துரையாடி இருக்கிறேன். எமது பிரச்சினை தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடி இருக்கிறேன். அதனால் இவ்வாறான பிரச்சினைகள் முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் தற்போது வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டிரு்ககிறது. அதற்கு மேலதிகமாக எல்லை நிர்ணயம் தொடர்பாக பல குழுக்களும் இருக்கின்றன. இந்த விடயங்கள் தொடர்பான அனைத்தையும் கருத்திற்கொண்டு ஒரு தீர்மானத்துக்கு வருவோம் என நான் யோசனை முன்வைக்கிறேன் என்றார். கல்முனை பிரதேச செயலகம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக்கொள்வோம் - ரவூப் ஹக்கீம் | Virakesari.lk
-
தலைமன்னார் கடற்பரப்பில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது
05 Dec, 2024 | 12:44 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (4) காலை மீன் பிடிக்க வந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அந்த மீனவர்களிடம் தலைமன்னார் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணைகளின் பின்னர், மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதுவரை நாட்டின் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் 68 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 529 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தலைமன்னார் கடற்பரப்பில் 14 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது | Virakesari.lk
-
மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இன்று (5) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் மாவீரர் தின நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்ட குற்றத்துக்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளருக்குப் பிணை | Virakesari.lk