படம் : தாலி பாக்கியம்(1966)
இசை: K.V மகா தேவன்
வரிகள்: வாலி
பாடியோர் : TMS & சுசீலா
கண் பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கைத் தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை (கண்)
அந்திப் பொழுது போக போக
ஆசை வந்தது – அது
முதல் முதலாய் தொடங்கும்போது
மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை
மனதில் விழுந்தது
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு
மடியில் விழுந்தது.........(கண்)
இந்தப் பேரழகு பெட்டகத்தை
ஆடை மறைப்பதோ – இல்லை
பருவப் பெண்ணைப் பார்த்த கண்ணை
ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது
உள்ளம் தெரியுமா - அந்த
உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே
உறவு புரியுமா..........(கண்)
நல்ல கோடைக்கால நேரத்திலும்
குளிரெடுப்பதேன் – உடல்
குளிரெடுக்கும் காலத்திலும்
கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும்
காரணம் என்ன – உன்
பால் விழிகள் சிவந்திருக்கும்
காரியம் என்ன.............(கண்)