பிரபா, Think Tank என்பது, அரசியல்வாதிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டியதில்லை. அப்படி இருந்தாலும், அது தமது அரசியல் நன்மைகளை நோக்கியதாகவே இருக்க வாய்ப்பு உள்ளது. பலவேறு தரப்பிரைக் கொண்டதாக, அல்லது பலவேறு தரப்புக்களின் கருத்துக்களை விமர்சனங்களை காது கொடுத்து கேட்டு உள்வாங்கி ஒரு கருத்துருவாக்கத்தை அமைக்கும் குழுவாக, இருக்கலாம் என்பதுடன் உத்தியோகபூர்வ அமைப்பாக தம்மை வெளிப்படுத்துபவர்களாக இருக்கவேண்டிதில்லை என்று நினைக்கிறேன்.
ஈழத்தமிழரில் இவ்வாறான அமைப்பு இல்லை என்றாலும் எமது போராட்டம் திசை மாறிப் போக தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில் அதன் போக்கு குறித்து காத்திரமான எச்சரிக்கை செய்த சிறிய அளவிலான கலவியாளர்களும் தவறான கண்ணோட்டத்தில், அவர கள் மீதே குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களும் அழித்தொழிக்கப்பட்டதும் எமது போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.