Everything posted by colomban
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இங்கு எகிப்தில் மர்யம் என்னும் பெயர் பொதுவானது. எனக்கு இங்கு ஒரு மர்யம் இருகின்றாள்
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
செபஸ்டியான் என்றால் சீமான?
-
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு – முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம்.. ஆனால் மன்னிக்க முடியாது; ரவூப் ஹக்கீம் Photo of Madawala News Madawala News
தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் முரணாக இல்லை யாழ் முஸ்லிம்கள் பற்றிய நூல் வெளியீட்டில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு “ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்” என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருகின்ற விடயம். இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் அன்றிருந்த ஒஸ்மானியா கல்லூரியின் இன்றைய நிலையை பார்த்தால் அதைவிடவும் கூட வருத்தப்படுகிற ஒரு நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.” என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற,கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய “முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் ” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, ஒஸ்மானியா கல்லூரி என்பது இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் கலங்கரைவிளக்கம் என்று சொல்லுகிற அளவிற்கு புகழ்பெற்ற ஒரு கலைக்கூடமாக இருந்த இடம்,இன்று குறுகிப்போய் இருக்கிற ஒரு நிலைமையை பார்க்கிறோம். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் ஜின்னாஹ் மைதானம் என்று ஒன்று இருக்கிறது. ஜின்னாஹ் மைதானம் சாமான்யமான இடமல்ல, முஹம்மது அலி ஜின்னாஹ் வந்துபோன இடம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த சூழலில் கடந்தகால விடயங்களைப் பற்றி பேசுவது மனதிற்கு ஒரு சுமையான விடயம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 திகதி வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இங்கு தலைமை வகிக்கிற சகோதரர் என்.எம் அமீன் , விடுதலைப் புலிகளின் தலைவரிடம், அவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த சூழலில் அன்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒரு பிரபலமான கேள்வியை யெழுப்பினார். அந்த கேள்வி எழுப்பப்பட்டபோது விடுதலைப் புலிகளின் தலைவர் அங்குமிங்குமாக பார்த்துவிட்டு, அவருடைய மதியுரைஞர் அண்டன் பாலசிங்கத்திடம்கூட எதையும் பேசவில்லை,எடுத்ததெடுப்பில் சொன்ன விடயம் “அது ஒரு துன்பியல் சம்பவம்,அதைப்பற்றி நாங்கள் இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை” என்பது இன்று ஒரு வரலாற்று பதிவாக மாறிவிட்டது. அன்றிலிருந்தது இன்றுவரை யாழ் முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம் ; ஆனால் மன்னிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இதை மாறிமாறி வருகிற தற்கால அரசியல் தலைமைகளும் ஆங்காங்கே ஏதாவது சொல்லப்போனால் ஏட்டிக்குபோட்டியாக அவர்கள் மீதும் சீறிப்பாய்கிற ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது என்பதுதான் கவலைகுரிய விடயம் . இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நான் உங்களிடத்தில் சொல்லவேண்டும், வேறு எந்த பொதுமேடையிலும் இதை சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை, தனிப்பட்டமுறையில் பலரிடம் இதை நான் சொல்லியிருக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலைவரை நான் சமரசப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் சார்பில் அவரையும்,அவருடைய குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் செய்த சமயத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஒரு சாமான்யமான வரவேற்பு அல்ல. ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்கிறமாதிரி எங்களுக்கு வீதியெங்கிலும் இரு புறத்திலும் புலிகளுடைய பெண் போராளிகள் அவர்களுடைய மரியாதை நிமித்தம் ,எல்லோரும் அடிக்கிற சலியூட் அல்ல வலது கையை நெஞ்சுக்கு நேராக செங்குத்தாக வைத்து சலியூட் தெரிவித்தார்கள்.இப்படி ஒவ்வொரு 50 அடி தூரத்திலும் ஒருவராக நின்று எங்களுக்கு பெரியதொரு மரியாதையளிக்கப்பட்டது. கைலாகு கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை தொடங்கி கிட்டத்தட்ட நான்கு-ஐந்து மணித்தியாலங்கள் நாங்கள் கதைத்திருப்போம். யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய ஒரு விருந்துபசாரமும் நடந்தது. பேச்சுவார்த்தை நடுவில் இன்னுமொரு முக்கியமான விடயமும் நடந்தது. நண்பகல் 12.20 மட்டில் பேச்சுவார்த்தையின் இடை நடுவில் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார் “இப்பொழுது நாங்கள் பேச்சுவார்த்தையை கொஞ்சம் இடைநிறுத்தி உங்களுடைய தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது, நீங்கள் தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், தொழுதுவிட்டு வாருங்கள்” என்று சொன்னார். நாங்களும் ஆச்சரியப்பட்டுப்போனோம். எங்களுக்கு தூரபயணம் என்ற காரணத்தினால் கஸ்ர்,ஜம்மு அதாவது சேர்த்தும்,சுருக்கியும் செய்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்த எங்களுக்கு உரிய (வக்து )நேரத்தில் தொழுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களிடம் சொல்லுகிறாரே என்று நாங்களும் கொஞ்சம் பிரமித்துப்போனோம். தொழுகை முடிந்த பிறகு எங்களுக்கு விமர்சையான ஒரு விருந்துபசாரம் நடந்தது.அதில் எல்லாவிதமான மாமிசங்களும் இருந்தன. எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்: “யோசிக்கவேண்டாம் ,அது உங்களுடைய மார்க்கப்படி நாங்கள் அதை தயார் பண்ணியிருக்கிறோம் ” என்றாலும் கொஞ்சம் தயங்கினோம்,”கொஞ்சம் இருங்கள் அவரைகூப்பிடுங்கோ” என்றதும், நீண்ட தாடி,வெள்ளை சேர்ட்டோடு ஒருவர் வந்தார், கொஞ்சம் சந்தேகமாக இருந்ததால் நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றதும் வலைக்கும் ஸலாம் சேர்’ என்றார். அத்துடன், “நான்தான் சேர், தலைவருடைய சமையல்வேலையெல்லாம் பார்க்கிறேன், இவ்வளவு காலமும் அவரோடுதான் இருக்கிறேன்”என்றார். பிரபாகரனும் “அவர்தான் எனக்கு சமைப்பவர், அவருடைய கைகளால்தான் உங்களுக்கும் சாப்பாடு என்றார். எங்களுடைய வன்னி அமைச்சராக இருந்த நூர்தீன் மஷூரும் வந்திருந்தார்,அதாவுல்லாஹ் வந்திருந்தார்,மசூர் மௌலானா போன்றவர்கள் இருந்தார்கள். நாங்கள் ஐந்து,ஆறு பேர் போயிருந்தோம். இவற்றையெல்லாம் நான் சொல்கிறேன் . இன்னுமொரு விடயத்தையும் விடுதலைப் புலிகளின் தலைவர் எனக்கு சொன்னார், தான் இந்தியப் படையினரிடம் தப்பி ஓடி ஒழிந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறபோது சிலாபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தன்னை பாதுகாப்பாக ஒழித்துவைத்திருந்ததாகவும்,அதைத் தான் வாழ்வில் ஒரு போதும் மறக்கப் போவதில்லை என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் பார்கிறபோது ஏன் இந்த விதமாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள் என்பதிலும் எங்களுக்கும் கொஞ்சம் சந்தேகம்தான். அதையெல்லாம் கேட்கிற நிலைமையில் இல்லை,நாங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக எங்களுடைய பேச்சுவார்த்தையில் மிக அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்ன விடயம், வடபுலத்து முஸ்லிம்கள் எல்லோரையும் மீளக்குடியமர்வதற்கு விடுதலைப் புலிகள் எல்லாவற்றையும் செய்யவேண்டும்,அது மாத்திரமல்ல அந்த நேரம் நடந்துகொண்டிருந்த இன்னுமொரு மிக கஷ்டமான ஒரு விடயத்தை நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சொன்னோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம் வியாபாரிகளிடம் வரி விதிக்கிற ஒரு நடைமுறை இருந்தது.ஏனென்றால், புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் எல்லா தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய ஆதிக்கம் இயல்பாகவே வந்துவிட்டது என்றொரு நிலையில் ,எல்லா இடத்திலும் வரி வசூலிக்கிற மாதிரி முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கிற ஒரு நிலைவரம் இருந்தது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. அதை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம் ,அதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்.”நாங்கள் இந்த போராட்டத்திற்கு வரி வசூலிக்கிற ஒரு நடைமுறை இருக்கிறது. வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கிற பிரதானமான நகரங்களில் நான்கு,ஐந்து தமிழ் கடை இருந்தால் இன்னுமொரு முஸ்லிம் கடை இடையில் இன்னுமொரு முஸ்லிம் கடை அப்படி இருக்கும் போது தனிய தமிழ் கடைகளுக்கு போய் நாங்கள் வரி வசூலிப்பது எங்களுக்கு கொஞ்சம் சங்கடமான விடயம், எனவே அதை நீங்கள் கொஞ்சம் பொருந்திக்கொள்ளவேண்டும்” என்றார். அதற்கு நான் அவரிடத்தில் சொன்ன விடயம், “முஸ்லிம்களை பொறுத்தமட்டில், உங்களுடைய போராட்டம் முஸ்லிம்களுக்காகவும் சேர்த்து செய்யப்படுகிறது என்ற உணர்வு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது, இந்த சூழலில் நீங்கள் அவ்வாறு வரி வசூலிப்பது வரியாக இல்லாமல் கப்பமாக பார்க்கப்படுகிற ஒரு நிலைவரம் இருக்கிறது ” என்பதையும் நான் கொஞ்சம் தயக்கத்தோடாவது சுட்டிக்காட்டவேண்டிய ஒரு நிலைவரம் இருந்தது. சொன்ன மாத்திரத்திலேயே “நீங்கள் சொன்னது சரிதான். நாளையிலிருந்து எந்த முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கப்படமாட்டாது” என்றார். அப்பொழுது பக்கத்திலிருந்த கிழக்கு தளபதிகள் கொஞ்சம் அதில் விருப்பக்குறைவுமாதிரி தென்பட்டாலும் கூட, தலைவர் சொல்லிவிட்டார் என்றவுடனே வேறு யாரும் மறுத்துப் பேசவில்லை. அதற்கு பிறகு தலைவருடைய கட்டளையை மீறி அவ்வாறு சில இடங்களில் நடந்தபோது, நான் அடிக்கடி தமிழ் செல்வனோடு தொலைபேசியில் உரையாடி முறையிடுகிற நிறைய நிகழ்வுகளும் நடந்தன .இவற்றையெல்லாம் நான் ஏன் நினைவுகூறுகிறேன் என்றால் இந்த பின்னணியில் நல்லதொரு உடன்பாடு முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையில் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக பல விடயங்களை கையாண்டோம் என்பதற்காகத்தான்.துரதிர்ஷ்ட வசமாக அந்த நிலையெல்லாம் தலைகீழாக மாறி ,இன்று வரலாறு வேறு விதமாக விடயங்களைத் தீர்மானித்துவிட்டது. இவையெல்லாம் நான் எதையும் நியாயப்படுத்துவதற்காக சொல்லுகிற விடயமல்ல, குறிப்பாக முஸ்லிம்களுடைய,வடமாகாணத்தின் வெளியேற்றம் என்பது புலிகளுடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய ஒரு வடு என்பதை புலிகளே உணர்ந்திருந்தார்கள் என்பது தெட்டத்தெளிவான விடயம் மாத்திரமல்ல ,அடிக்கடி நேர்மையான தமிழ் தலைமைகள் அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் இங்கு பெயர் சொல்லி எதையும் சொல்லவரவில்லை.ஆனால் இதுதான் இன்றிருக்கிற நிலைவரம், அதைத்தான் நான் சொன்னேன். முஸ்லிம்கள் மத்தியில் இது மறக்கப்பட்டாலும் மன்னிக்கப்படமுடியாத ஒரு விவகாரம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் என்னுடைய மறைந்த தலைவர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களுடைய போராட்டங்களின் அடிப்படை அம்சங்களில் எங்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் சில முரண்பாடுகள் வருகின்றனவோ நாங்கள் அதைப்பற்றி பேசுகிறபோதும் இவர்களுடைய அடிப்படை அபிலாஷைகளுக்கு முரணாக அது வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். எதிர்வரும் 24 ஆம் திகதி கனடாவில் இருக்கிற எல்லா ஈழத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நான் தைப்பொங்கள் விழாவில் பிரதம அதிதியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கு போனாலும் இந்த விவகாரங்களில் இருக்கிற சில துல்லியமான உண்மைகளை நாங்கள் மனம் விட்டுபேசாமல் இருப்பது என்பது நாங்கள் செய்கிற மிகப்பெரிய வரலாற்று தவறாகப் போய்விடும் என்பதற்காகத்தான் இந்த ஒருசில விடயங்களை நான் இங்கு சொல்லிவைக்கிறேன். இவற்றை சொன்ன பிறகும் விமர்சிப்பவர்கள் இரு புறத்திலும் இருப்பார்கள், இதுதான் இருக்கிற நடைமுறைச் சிக்கல், இனத்துவ அரசியலில் இப்படியான விவகாரங்களை ஜீரணித்துக்கொள்வது என்பது சில தரப்புகளுக்கு மிகவும் சங்கடமான, கஷ்டமான விவகாரமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மிகப்பெரும் ஆளுமைகளில் சிலரைப் பற்றிய விடயங்களை கொண்டாடுகிற விதமாக இந்த நூல் எழுப்பட்டிருக்கிறது. அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அடிக்கடி என்னுடைய நினைவுக்கு வருபவர்.அவரது புதல்வர் நண்பர் அலி அஸீஸ் ஒருமுறை என்னை ஏ.எம்.ஏ அஸீஸ் நினைவு பேருரையாற்றுவதற்கு அழைத்திருந்தார்.அந்த உரையை நான் கவனமாக தயார் செய்தபோது ,எனக்கு கைதந்த ஒரு நூல் அவருடைய மகன் வெளியிட்டுவைத்த “ஏ.எம்.ஏ அஸீஸ் செனட் உரைகள்” என்ற ஒரு தொகுப்பு. இலங்கையின் செனட் சபையின் உறுப்பினராக10,12 ஆண்டுகள் இருந்தவர். ஸாஹிராவின் அதிபராக, இலங்கையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட நிருவாக சேவை அங்கத்தவராக என்றெல்லாம் இருந்தவர். அதுவும் நிருவாக சேவை அங்கத்தவர் என்ற பதவியை ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவியை எடுப்பதற்காக இராஜினாமா செய்தவர், அப்படியான ஒரு மிகப் பெரிய தியாகத்தை யாரும் செய்யமுடியாது.ஸாஸாஹிராவுடைய பொற்காலம் அஸீஸுடைய காலம் என்று அடிக்கடி நாங்கள் கேள்விப்படுகிறோம்; பேசுகிறோம். அவருடைய நினைவு பேருரைக்காக அவருடைய செனட் உரைகளுடைய தொகுப்பை நான் இன்றும் கூட என்னுடைய கைநூல் போன்று வைத்துக்கொண்டிருக்கிறேன்.அவர் செனட் சபையில் கதைத்த பேச்சுக்களுடைய கனதி என்பது என்னைப்பொறுத்தவரையில் அவருக்கு முன்பும்,பின்பும் எவருடைய பேச்சுக்களுக்கும் எந்தத்தரத்திலும் குறைவில்லாததாக, தரமான ஆய்வின் அடிப்படையிலான உரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். அவர் இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்துடைய ஸ்தாபகர் .அவர் மடவளைக்கு வந்து அந்த காலத்தில் ,50 களில் என நினைக்கிறேன். அதன் கிளையை அங்கு ஆரம்பித்தபோது என்னுடைய தகப்பனாரும் அதனுடைய செயலாளராக இருந்திருக்கிறார் என்பது எனக்கு பெருமைக்குரிய விடயம். அதேபோன்று, நான் இன்னும் பெருமைப்படுகிற விடயம் அதாவது யாழ் மக்கள் பெருமைப்பட்டுக்கொள்கிற விடயம் அடுத்த நிருவாக சேவை உத்தியோகத்தர் மறைந்த மக்பூல் . மக்பூல் அவர்கள் நான் கல்வி கற்ற கலகெதர ஜப்பார் மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் எனக்கு பெருமை தருகிற அடுத்தவிடயம். ஏன் இவர்களையெல்லாம் நாங்கள் கொண்டாடுகிறோம். இப்படி கொண்டாடப்படக்கூடிய அந்தஸ்தில் இருக்கிற மிகப் பெரிய ஆளுமைகளை உருவாக்கிய ஒரு மண் இன்று வெறிச்சோடிப்போய் இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்கு எப்படி உயிரோட்டம் அளிப்பது? அன்று யாழ் முஸ்லிம்கள் வியாபாரத்தில் உச்சநிலையில் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல ,சில துறைகளில் அவர்கள்தான் அங்கு யாழ்ப்பாணத்தில் தையல் கடை என்றால் எல்லாம் முஸ்லிம்கள்தான்.இரும்பு வியாபாரிகள் என்றால் முஸ்லிம்கள்தான். இப்படியாக அவர்களுக்கென்றே தனித்துவமான வியாபார நோக்கங்கள் இருந்தன. செயல்பாடுகளும் இருந்தன. இவற்றையெல்லாம் பெருமையாகப் பேசுகிறபோது, நாங்கள் யாழ்ப்பாணம் போகிறபோது பொம்மைவெளிக்கு போனால் மூர் வீதிக்குபோனால் அங்கிருக்கிற கட்டிடங்கள் மீண்டும் உயிரோட்டமாகத் தென்பட்டாலும் இடைக்கிடையில் பாலடைந்த இல்லங்களைப் பார்க்கிறபோது அவை ஒரு தனியான வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அந்த வலியைச் சுமந்த உணர்வு மற்றும் அந்த கொடூரமான ஓக்டோபர் 1990 இன் நினைவுகள் இன்றும் வருகிறமாதிரிதான் நாங்க மூர் வீதிக்கு போனால்,பொம்மைவெளிக்கு போனால் எங்களுக்கு வருகிறது என்பது ஒரு விடயம். அனால் இவற்றையெல்லாம் அந்த விவகாரங்களைக்கூட இங்கு எவற்றையும் நண்பர் பரீட் இக்பால் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் சொல்லியாகவேண்டும்.ஏ,னென்றால் அதை தவிர்த்து நாங்கள் யாழ் முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசமுடியாது. அந்த மண் முஸ்லிம்கள் வாழ்ந்த மண் மீண்டும் உயிர்த்தெழவேண்டும் .அதற்கு இன்றும் கூட பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டிருக்கின்றன. அவை நிருவாக ரீதியாக இருந்தாலும் சரி, அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி சிக்கல்கள் இல்லாமலில்லை. மீள்குடியேற்றம் என்று பேசுகிறபோது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு விசேடமான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைக்கிற பொறுப்பும்,கடமையும் எங்கள் தரப்பிலிருந்து மாத்திரமல்ல ,தமிழர் தரப்பிலிருந்தும் வரவேண்டும். அவற்றையெல்லாம் தாண்டிப்போய், சந்ததிகள் பல கடந்து விட்ட நிலையில் யாழ் முஸ்லிம்கள் அங்குமிங்குமாக சில்லாங்கொட்டை சிதறின மாதிரி வாழுகின்ற ஒரு நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடைவு எதிலும் பெரிதாக குறைந்துபோய்விடவில்லை என்றார். https://madawalaenews.com/35691.html
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்
-
கிளிநொச்சியில் ஆடை தொழிற்சாலையில் ஒன்றரை வருடமாக நடந்த திருட்டு அம்பலம் - இருவர் கைது!
வியாபார நடவடிக்கைகளை கண்காணிக்க பதிவு செய்ய என internal control என ஒன்றிருகின்றடல்லவா. delivery, note, receiver's signature, surprise inventory counting, GRN, invoices, purchases order/prices, payment process என்பவை அடிக்கடி செய்யப்பட்டதா audit தொழிற்சாலையில் industry bench mark இல் என்ன நடக்கின்றது என்றாவது தெரிகின்றதா? finance dept என்ன செய்கின்றது? ஒன்றரை வருடமாக தூங்கிவிட்டு இப்பொழுது பிடிக்கின்றீர்கள்.
-
லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
இப்ப ஏன் சிங்களவன்களை ஏச வேண்டும்? எங்கோ ஒருவன் செய்த தவறிற்காக. ஊத்தைகள் எல்லா சமூகத்திலும் இருக்கின்றார்கள் தானே. பின்வரும் செய்தியை பாருங்கள் மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் காயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை: யாழ். பொன்னாலையில் கொடூரம்! மூன்று வயதுப் பச்சிளம் குழந்தையின் அடிகாயத்தில் மிளகாய்த் தூள் பூசிக் கடும் சித்திரவதை செய்த சம்பவமொன்று யாழ்.பொன்னாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணம் முடித்துள்ளார். அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் பிள்ளைக்கே இவ்வாறு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இணைந்து அந்த குழந்தைக்குத் தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டு வந்தனர். இதனால், குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்கள் மீது மிளகாய்த் தூள் இட்டதாகவும், பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் சங்கானைப் பிரதேச செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றனர். கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலகச் சிறுவர்கள் தொடர்பான உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டுக்குச் சென்ற நிலையில் கணவனும், மனைவியும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://vampan.net/76166/
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கு மலையக மக்கள் என்றுதானே கூறியுள்ளார் அப்படியானால் மலையகத்தில் வாழும் நாங்கள் முஸ்லீம்களும் வந்து குடியேரலாமா?. மாவனல்லய், கம்பொல, ஹேம்மாத்தகம, அக்குரனை, மடவளை போன்ற பகுதிகளும் மலைகம்தானே? செல்வசன்ந்திதி முருகன் கோயிலுக்கு பக்கத்தில் சவுதி உதவியுடன் செந்னிற பள்ளி, மதரசாக்களுடன் கட்ட அனுமதிப்பார்களா? மாலை 6 மணிக்கு பின், பாபத் கறி, பீஃப் கொத்து, தலைக்கறி,ஆட்டுக்கள் சூப், கத்தான்குடி ஸ்பெசல் புரியானி, கோல்பேசில் அல்லது மாளிகாவத்தையில் போல் நானாமார்களின் கடைகளை நல்லுர் கோவில் வளாகத்தை சுற்றி அமைக்க அனுமதிப்பார்களே? நாங்களும் மலையகம்தானே?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
ஆனல் எங்கட தென்பகுதி தமிழ்மக்கள் சிங்களாவனுடன் இருந்தாலுல் இருப்பன் யாழ்பாணாத்தவனோடு இருக்க ஏலாதப்ப என்று சொல்வார்கள்
-
மூதூரை மீளக் கட்டியெழுப்ப 100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத் தருகிறேன் ; ஹிஸ்புல்லாஹ் MP
அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் – மூதூர் பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலில் ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் உருக்கமான வேண்டுகோள்..! மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் அவர்களை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) மூதூர் பிரதேச செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாக சேதமடைந்த மூதூர் பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அவர், “மூதூரை மீண்டும் உயிர்ப்பிக்க 100 கோடி தேவையென்றாலும், நான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசி பெற்றுத்தருகிறேன். மக்கள் அழிந்துபோய் தவிக்கும் இந்த நிலையை மாற்றவும் மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்பவும் ஒத்துழைப்பு வழங்குங்கள்” என பிரதேச செயலாளரிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி பிரச்சனைகள், குடிநீர், சுகாதாரம், வீட்டு சேதங்கள், வாழ்வாதார இழப்புகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர். — ஊடகப்பிரிவு https://madawalaenews.com/32952.html
-
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை
சில நாட்களுக்கு முன்னர் பிரன்சில் இருந்து வந்த ஒரு இளைஞனையும் இப்படி வெட்டி கொன்றார்களே.
-
காதலன் வீட்டில் லிவிங் டு கெதராக இருந்து அங்கிருந்த தாயின் 8 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற காதலி பொலிஸாரால் கைது #இலங்கை
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிளிநொச்சியில் இருந்து வந்து காதலன் வீட்டில் தங்கியிருந்த காதலி, சாவகச்சேரியில் உள்ள காதலன் வீட்டில் வைத்து புதன்கிழமை (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தாலிக்கொடியை சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடைவு வைத்ததாகவும் மீதி நகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. அத்துடன் டிக்டொக் சமூக வலைத்தளத்தில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இதுவரையில் 27 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் மேலதிக பணம் செலுத்துவதற்காக காதலன் வீட்டில் திருடியதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார். இதே போன்று அண்மை நாட்களில் வேறு சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக இளம் யுவதி ஒருவர் தனது நகையை விற்பனை செய்து இணைய முதலீட்டு வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் நகை திருட்டு போயுள்ளதாக பொய் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். எனவே பொதுமக்கள் குறிப்பாக இளைஞர் யுவதிகள் இணைய மோசடி தொடர்பில் மிக அவதானமாக இருக்குமாறு சாவகச்சேரி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். https://madawalaenews.com/32520.html
-
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும்
0 1 minute read கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத அரசு காலத்தில் செயல்பட்டது போல் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை தவிர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது பற்றி ஸ்ரீ. ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக பேச்சாளர் முபாறக் மஜீத் தெரிவித்ததாவது, அண்மைக்காலமாக தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையும் இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையில் முரண்பாடு தோன்றுவதும் கவலைக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிள்ளையார் ஆலயத்திலும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு இடங்களிலும், இது போல் பல இடங்களிலும் தொல்பொருள் அடையாளங்கள் உள்ளதாக கூறி பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது இந்திய மத வாதிகள் மசூதிகளில் இந்து மத தொல்பொருள் உள்ளது என கூறி மசூதிகளை இடிக்க முனைவது போன்றே உள்ளது. தொல்பொருள் என்பது ஆதி கால அடையாளங்கள் என்பதற்கப்பால் நவீன காலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் தோண்டப்படுபவை என்பதை நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஒரு தொல்பொருள் என்றால் பூமிக்கு அடியில்தான் இருக்கும் என்பது போன்ற பிரேமை இந்தியாவிலும் இலங்கையிலும்தான் உள்ளது. அது மட்டுமல்ல, இலங்கையின் ஆதிகால தமிழ் மக்கள் தமது இந்து மத கடவுள்களுடன் புத்தரையும் வணங்கி வந்ததை வரலாற்றில் காண்கிறோம். இப்போதும் கூட இந்தியாவின் தமிழ் நாட்டில் பலர் புத்த சிலைகளையும் வைத்துள்ளனர். அந்த வகையில் புத்தர் சிங்கள மக்களுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் தமிழ் மக்களுக்கும் உரியவர்கள் என்பதால் சில பொருட்கள் தமிழ் மக்களாலும் பாவிக்கப்பட்டிருக்கலாம். அவற்றை தோண்டி எடுப்பதாக கூறி இனங்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயலைத்தான் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சில ஹாமதுருமார் கோட்டாபயவின் உதவியுடன் அரங்கேற்றியதால் நாட்டுக்கு நல்லது செய்த மஹிந்தவையும் சிறு பான்மை மக்கள் மிகக்கடுமையாக வெறுக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே தொல்பொருள் திணைக்களம் சிங்கள மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆய்வு செய்தால் அவர்களுக்கு நிறைய தொல்பொருள்கள் கிடைக்கும் என்பதால் அதில் கவனமெடுக்கும் வகையில் அரசு அறிவிறுத்தல்கள் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது. https://madawalaenews.com/32504.html
-
வடக்கில் 12 இடங்களில் இராணுவத்தினரின் சிகை அலங்கரிப்பு நிலையம்!
நான் யாழ் நண்பர்களிமே முடி வெட்டுவது வழமை. நான் கட்டரில் இருந்த காலத்தில் அங்கு வந்து சொந்தமாக சலூன் போட்டு அதை இன்னும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கினறார்கள். இவர்கள் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்கள் என நம்புகின்றேன். கொழும்பில் கூட நிறைய இடங்களில் இவர்கள்தான் முன்னனி சலூன்காரர்கள். சிங்களவர்கள் வந்து காத்திருந்து முடிவெட்டி செல்வார்கள். இராணுவம் நடத்துகின்ற சலூனுக்கு தமிழர்கள் ஏன் செல்கின்றார்கள்? இந்த செய்தியின்படி சிங்களவர்கள் தமிழர்களின் இந்த வியாபாரத்தை பிடிக்க நினக்கின்றார்களா?
-
அமெரிக்காவின் அவலம்
இப்படி இந்தியா நல்ல நாடு என்றால் அங்கு இருக்கலாமே. ஏன் பிளைட் பிடித்து இவ்வளவு இந்தியர்கள் அமெரிக்க வரவேண்டும்.
-
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
நீங்கள் சொன்வது பல வருடங்களுக்கு முன் நடந்தது. நான் சொல்வ்து சமிபத்தில் 2 அல்லது 3 மாதமளவில் நடந்தது வீடியோவும் வந்து இருந்தது.
-
இலுப்பைக்கடவை கடற்கரைக்கு கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்!
இல்லை. டொல்பின் சமீபத்தில் ஒரு பெண்ணை விளையட்டின்போது கொன்று விட்டது.
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இது உண்மையான தரவா? அப்படியென்றால் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மேலாகவா இப்படி அகதிகளாக வருகின்றார்கள். சில வருடங்களுக்கு முன் (டெயிலி மெயில் என நினக்கின்றேன்) எங்கோ வாசித்த ஞாபகம் அகதியாக கோரிக்கை வைப்பவர்களில் இலங்கையர்கள் 3வது அல்லது 4வது இடத்தில் உள்ளார்கள் என, ஹோம் ஒபீஸ் தரவுகளின் படி இது உண்மையா?
-
இங்கிலாந்தில் நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!
இந்த சட்டம் நடமுறைக்கு வராது என நினக்கின்றேன்
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
கெய்ரோவில் பொதுவாக உபர் சாரதிகள் ஆங்கிலம் கதைப்பர்கள் எனவே பயப்பட தேவையில்லை. ஆனல் மொபபைல் போன் கவனம் அடித்து பறித்து கொண்டு ஓடிவிடுவார்கள். நேரம் போதுமாக இருக்கும் என நம்புகிறேன். படகு மூலம் வருவதை பற்றி சரியாக நான் கேட்டு சொல்கிறேன்
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆம் இவை ஓரளவு உண்மை. அலெக்ஸான்ரியா பகுதியிலும் இப்படி என கேள்விப்பட்டுள்ளேன். ஜோர்டன் மிக அருகில் உள்ளது. இஸ்ரேல் காச பகுதிக்கு தரைவழியூடக செல்லலாம். 10 கட்டளை இறைவனாஇ கொடுக்கபட்ட இடம் என நிறய இடமுள்ளது போகவேண்டும் ஆம் உண்மை. அழகான தோல் நிறம் கொண்ட வித்தியாசமன இனக்கூட்டம். இவர்கள் அரபுக்கள் அல்ல
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
பெரியளாவில் எனக்கு இவை பற்றி போதிய அறிவில்லை கோசான். முயன்று பார்கின்ரேன். இங்குள்ள தமிழர்களிடம் கேட்டு பார்கின்றேன். சுயஸ் வந்தல்ல் என்னை சந்திக்கலாம். மிக அழகிய இடம் பழைய பிரன்சு வீடுகளை இன்னும் காணலாம்.
-
துட்டன்காமனுடன் புதைக்கப்பட்ட 5000 பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளன?
ஆம் நான் இப்பொழுது எகிப்தில்தான் தற்காலிகமக வசிக்கின்றேன். போன கிழமை இந்த நூதனசாலையை திறந்தார்கள். இதற்காக இங்கு ஒரு நாள் லீவு விட்டார்கள். கெய்ரோ மிகவும் பழமையான நகரம். அழகிய நைதி தமிழர்கள் இங்கு கைத்தறி, நெசவு தொழில்களுக்கக வந்து பல வருடங்களாக வாழ்கின்ரார்கள். பொதுவாக நான் மத்தியகிழக்கில் வேலை செய்யும்போது கண்டது என்னவென்றால் எட்கிப்தியர்கள் இலங்கை , இந்தியவர்களை மதிப்பதில்லை. கடினமாக நடத்துவார்கள். இங்கு அப்ப்டியள்ள இவர்கள் மிகவும் அன்பாக பழகுகின்ரார்கள். இந்த நுதனசாலை இருக்கும் கிசா பகுதிக்கு கடந்த மாதம் என்னுடய ஒடிட் விடயமாக சென்றிருந்தேன். மிக ஆழகான நகரம். பழைய இத்தாலிய கலாச்சரத்தை நினவூட்டுகின்றது. எகிப்ப்தை பெண்களாஇ போல நான் ஆழகனவர்களை எங்கும் காணவில்லை. .
-
கட்டு வரியன் பாம்பு கடித்தால் தூக்கத்திலேயே மரணம் ஏற்படுமா?
போன மார்ச் மாதத்தில் ஒரு நாள் ஒரு சனிக்கிழமை பகல் சாப்பிட்டுவிட்டு டீ வீ பார்ர்த்துகொண்டு இருக்கும்போது இந்த் பாம்பு பின்கதவு வழியாக உள்ளே வேகமாக வந்தது. காலின் அருகாமையில் வந்து விட்டது. கடும் வெப்ப காலங்களில் இது வீட்டுட்குள் வருகின்றது. மிகவும் பயந்து விட்டேன் பின்பு ஒருவாரு முன் கதவு வழியாக வெளியேறி விட்டது. இப்பொழுதும் மாமரத்தில் சிலவேளை சுற்றித்திரிவதை கண்பேன்.
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
நான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம் - மேயராக தெரிவானபின் சொஹ்ரான் மம்தானி உரை நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட். முஸ்லிம் வெறுப்பை எதிர்த்துப் போராடுவோம். நான் இளமையாக இருக்கிறேன். நாங்கள் ஒரு அரசியல் வம்சத்தை வீழ்த்திவிட்டோம். நியூயார்க் குடியேறிகளின் நகரமாகவே இருக்கும். குடியேறிகளால் கட்டமைக்கப்பட்ட, குடியேறிகளால் இயக்கப்படும். இன்றிரவு முதல், ஒரு குடியேறியவரால் வழிநடத்தப்படும் நகரம். (நியூயார்க் நகர மேயராக தெரிவான பின் சொஹ்ரான் மம்தானி ஆற்றிய உரையின் ஒரு பகுதி) https://www.jaffnamuslim.com/2025/11/blog-post_12.html
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
சீ...நான் கோசான் புதா என வாசிச்சி ஒரு கணம் அதிந்து போய்தன் வா.... என்ன ஹராம் வா இது..