Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலையில் மிருகத்தனம்- புதுமுக மாணவனின் செவிப்பறை கை, கால் உடைந்தது!

Featured Replies

வெளிநாட்டிலுள்ள மாணவர்களுக்குரிய வசதிகள்,சலுகைகள்,பொழுதுபோக்குகள்,அங்குள்ள மாணவர்க்கும் கிடைக்கும் பட்சத்தில் ராகிங் என்ற ஒரு பொழுதுபோக்கு அழிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன் புத்தர்.................

வெளிநாட்டு பல்கலைகழகங்களில் இந்த ராக்கிங் இல்லைதானே? எல்லாவற்றையும் கொப்பி அடிக்கும் எம்மவர்கள் இந்த ராக்கிங்கை மட்டும் இன்னும் கை விடாமல் தொடர்ந்து செய்வதற்கு என்ன காரணம்?

அர்ஜீன் உங்களுக்கு ஒரு சிவப்பு. இது புலவர் மீதான தனி மனித தாக்குதலாகவே எனக்குத் தெரிகிறது. ஒருவர் தலைப்புக்கு ஏற்ப கருத்தெழுத பல்கலைக்கழகம் போனவராகவோ.. பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற அவசியம் யாழ் களத்தில் இல்லை. குறித்த சமூகத்தில் அவதானித்ததை.. அனுபவத்தை,, ஏன் இன்று அவர்களின் எண்ணத்தில் உதிப்பதைக் கூடச் சொல்லலாம்..! அந்த வகையில்.. இது புலவர் மீதான அப்பட்டமான தனிமனித தாக்குதல்.அதுமட்டுமன்றி அவரின் கருத்துரிமையை நீங்கள் தன்னிச்சையாக தீர்மானிப்பதை செய்கிறீர்கள். இது மிகவும் அடாத்தான செயல்..!

அதைவிட இந்த தலைப்புக்கு ஏற்ப உங்கள் கருத்தை நீங்கள் சொல்லவே இல்லை..????! அதில் நீங்கள் கவனம் செலுத்தவும் இல்லை.. ஏன்...???!

உங்களை சோத்துப் பாசல் என்று சொல்லிறதாக சிலர் விழுந்து விழுந்து அனுதாபக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நீங்கள் செய்யும் பல தனிமனித தாக்குதல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்தப் பக்கச்சார்ப்பானவர்களின் கருத்துக்களை காணும் போது வெறுப்பே மிஞ்சுகிறது. :rolleyes::icon_idea:

சிறிலங்கா ஆமிக்காரனே பல்கலை கழகத்தை மதித்து அதன் நிர்வாகத்தில் தலையிடாத காலம் இருந்தது ,உண்ணாவிரதம் இருந்த பல்கலை கழக மாணவர்களை கடத்தபோய் அவர்களுக்கும் ஒரு அடி எடுத்து கொடுத்தவர்கள் புலிகள் ,பின் சுயமாக இருந்த பல்கலை கழக மாணவர் அமைப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர புலிகள் செய்த அராஜகங்கள் எண்ணிலடங்கா.(கொலைகள் உட்பட) இதில் திலீபனும் அடக்கம் இதே நிலைபாட்டை பின் உலகெங்கும் வியாபாரம் ,விளையாட்டு ,ஊடகம்,பழையமாணவர் அமைப்பு ,ஊர் அமைப்பு என்று ஊடுருவி அரையும் குறையுமாக நாறினது பெருங்கதை .

படுபாவிகள் எதைத்தான் விட்டுவைத்தார்கள் .மக்களின் சாபமே அவர்களை அழித்தது .

மூளை இருந்திருந்தால் அரசியல் மட்டுமே செய்திருப்பார்கள்,இருந்தால் தானே.இப்போது தமிழர்களுக்காக பாடுபடும் மனித உரிமை அமைப்புகளின் பழைய அறிக்கைகளை போய் பார்த்தால் தெரியும் இவர்களா செய்த அநியாயங்கள்.கெடுகுடி சொல் கேளாது அழிய வேண்டும் என்பது நியதி.இன்று சிறிலங்கா அரசு நடப்பது போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

poet யுத்தம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தார். ஆனால் சில பேர் புலிகளை குற்றம் சொல்லுவதாக எழுதி இருக்கினம்.

சில பேர் தொப்பி தங்களுக்கு அளவு என்று தாங்களே போட்டுட்டு அடுத்தவரை குற்றம் சொல்லுறதே வெலையாப்போச்சு..

விஜிதரன் சம்பவத்துக்கு ஆதாரம் கேட்கினம்.

ஆதாரம் கேக்கிற விடயம் இந்த திரியில மட்டும் இல்ல கன திரியில வாசிச்சு இருக்கிறன்.

முழுப்பூசணிக்காயை சோத்தில மறைக்கிற முயற்சி...

பால் கருப்பு கருப்பு என்று ஆயிரம் தடவை சொன்னலும் பால் கருப்பு ஆகாது.

விதண்டா வாதம் ஆருக்கும் பயன்தராதப்பு.....

யுத்தத்தால உளவியல் ரீதியாக 2,3 சந்ததியள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

நித்திரை கொள்ளுறவரை எழுப்பலாம் ஆனால் நித்திரை மாதிரி நடிக்கிற ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது...

மேலே எழுதியது ஒருவரையும் காயப்படுத்த அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பெரிய ஆய்வாளர் நீங்கள்! அபராஜிதன் தன் நண்பி சொன்னார் என்று ஆதாரமில்லாத ஒன்றை எழுதி விட்டு, இப்ப கருத்தை அழித்தும் விட்டார். யூனியர் சீனியர் பிரச்சினை ராக்கிங் காலத்திற்குள் நடந்தாலும் நடக்கா விட்டாலும் அது ராக்கிங்கின் நீட்சியாகத்தான் பார்க்கப் படும். இல்லா விட்டால் யூனியருக்கும் சீனியருக்கும் வேறென்ன பிரச்சினை வரும்? - JUSTIN

"எவ்வளவு பெரிய ஆய்வாளர் நீங்கள்!" Come on Justin நக்கலடிப்பதானால்கூட positive வாக நக்கலடிக்கிறீங்க. நான் ஒன்றும் ஆய்வாளனல்ல எதோ கிறுக்கல்களுக்கு சொந்தக்காரனான அப்பாவிக் கவிஞன் ஜஸ்ரின். ஒரு அப்பாவிக் கவிஞனை நக்கல் அடிக்கும் பாவகாரியத்தைத் தொடர்ந்து செய்யாதீங்க ஜஸ்ரின்.

அபராஜிதன் சொல்வது உண்மையாக இருந்தால் என்றுதானே எழுதினேன். யாழ்பல்களைக் களக கால அனுபவங்களின் அடிப்படையில்தான் பேசுகிறேன். யூனியர் சீனியர் பிரச்சினை ராக்கிங்கின் தொடற்ச்சியாகவும் இருக்கலாம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலும் ஜுனியர் சீனியர் பிரச்சினை ராக்கிங்கின் தொடற்சியல்ல.

ஜூனியர் சீனியர் பிரச்சினையில் பெரும்பாலும் பெண்களுக்கான (sex jealous) தலைமைக்கான போட்டிகள் இருக்கும். சாதி fuculty ஏற்றத்தாழ்வு போன்ற வக்கிரங்கள் இருக்கும். என்னுடைய அனுபவத்தில் கூடியவரை பல்கலைக் களக மாணவர் பிரச்சினையை தீர்க்கும் உள்வாரியான பொறிமுறைகள் பலப்படுத்தப் படுவதே சரியானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.