Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட் சட்`டென கோபம் வருமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோபம் வராத மனிதரில்லை. உங்களுக்கு ` சட் சட்`டென கோபம் வருமா? அதுதான் பிரச்சினை. பலருக்கும் வேண்டாதவராகி விடுவீர்கள்.

கோபம் எப்போதாவது வரலாம். தப்பில்லை. எப்போதும் வந்தால் தான் தப்பு.`அந்த ஆள் சரியான சிடுமூஞ்சி. எவன் மூஞ்சி கொடுத்து பேசுவான்?` என்பது போன்ற பட்டம் உங்களுக்கு நிரந்தரமாகி விட்டால் அப்புறம் நீங்கள் அம்பேல்தான். நீங்கள் நெருங்கினாலே ஒட்டம் பிடிக்கத்தொடங்கி விடுவார்கள்.

சிலர் கோபம் என்பது ஒரு பலம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப்பெரிய பலவீனம் என்பதை போகப் போகத்தான் உணர்ந்து கொள்வார்கள். வீட்டில் கணவர் கோபக்காரர் என்று வைத்துக் கொள்வோம். வீட்டின் முக்கிய நிகழ்வுகளைக்கூட அவரிடம் பகிர்ந்து கொள்ளப் பயப்படுவார்கள். சின்ன விஷயத்திற்கும் இப்படி கோபம் என்பது அவர்கள் சொத்தாகிப் போவதால் `எதற்கு அவரிடம் வாங்கிக்கட்டிக் கொள்ளணும்` என்று அவரிடம் வீட்டு விஷயம் பற்றி சொல்வதையே தவிர்த்து விடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் நிலைமை சீரியஸாகி விடும்போது, அப்போதும் அந்த குடும்பத் தலைவர் விஷயம் தெரிந்ததும் தாம் தூம் என்று குதிக்கத்தான் போகிறார். அப்போது கூட நாம் சின்ன விஷயத்திற்கும் `சள்`ளென விழுவதால் தான் குடும்பம் நம்மிடம் இது விஷயமாக பேசப்பயந்திருக்கிறது என்பதை அந்த குடும்பத்தலைவர் உணர்ந்து கொள்ளமாட்டார்.

பெரும்பாலும் பொறுப்பை தட்டிக் கழிப்பவர் கள் தான் கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கள் சும்மா இருக்கும்போது கூட யாரும் வேலை சொல்லி விடக்கூடாது. உடனே முகம் மாறும். கோபத்தில் உடம்பு நடுங்கத் தொடங்கத் தொடங்கி விடும். வார்த்தை களை வாரியிறைக்கத் தொடங்கி விடுவார் கள்.

இவர்களாக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்கள். அதே நேரம் வீட்டில் எல்லாம் சரியாக நடந்திருக்க வேண்டும். கோபப்பட்டே பழகிப்போன இவர்கள் முகத் துக்கு புன்னகையே மறந்து போகும். இவர் களாக எதற்காவது சிரிக்க முயன்றால் கூட அது செயற்கையாக இவர்களுக்கே தோன் றும்.

இந்த கடுகடு பார்ட்டி இருக்கிற வீடுகளில் எப்போதும் ஒரு அசாதாரண நிலை காணப்படும். வீட்டில் உள்ளவர்களும் இவர்களால் சிரிப்பைத் தொலைத்து விட்டு பரிதாபமாக காட்சி தருவார்கள். எடுத்ததற்கெல்லாம் கோபம் என்பது சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவித்து விடுவதுண்டு.

கோபத்தையே தனது முதலீடாக வைத்திருந்த அப்பா அவர். தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகனிடம் கூட ரிங் மாஸ்டர் போலவே நடந்து கொண்டார். சின்னத்தவறு என்றாலும் கூட பெல்ட்டால் விளாசி விடுவார். இதனால் பையன் அவரிடம் பேசவே பயந்தான்.

ஒரு நாள் பக்கத்து தெரு நண்பனை பார்த்து விட்டு வரும்போது தெருநாய் ஒன்று மகனை கடித்து .லேசாக பல் பதிந்து விட்டது. மகனுக்கு அப்பாவிடம் சொல்ல பயம். அம்மாவிடம் சொல்லவும் பயம். இவனுக்கு அடி விழுந்த கையோடு அம்மாவையும் நாலு சாத்து சாத்தி விடுவார் அப்பா. அதனால் சொல்லாமல் மறைத்து விட்டான்.

நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான். `அய்யோ கோபத்தால் என் ஒரே குலக்கொழுந்தையும் இழந்தேனே ` என்று அழுது புரண்டார் அப்பா. அதற்குப்பிறகு எஞ்சியிருந்த காலங்களில் பாதிபைத்தியமாகத்தான் அவரை பார்க்க முடிந்தது.

கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா?

Thanks:Thanthi...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் என்க சட் சட் என்டு கோபம் வாரதே இல்ல....

பட் பட் என்டு தான் வாரது... :oops: :)

நல்ல காலம் என்க சட் சட் என்டு கோபம் வாரதே இல்ல....

பட் பட் என்டு தான் வாரது... :oops: :D

'

ம்ம்..அதுவரைக்கும் சந்தோசம் தான்..இல்லையா சுண்டல்? :roll:

.........

நாலு வாரத்துக்குள் நாய்க்கடி விஷம் வேலையைக்காட்ட ஆரம்பித்தது. நாய் போல பையன் குரைக்கத் தொடங்கிய பிறகு விபரீதம் புரிந்த அப்பா அப்புறமாய் டாக்டரிடம் ஒடினார். ஆனால் என்ன பயன்? மகன் மரணத்தை தழுவி விட்டான்.

பாவம் இந்த பையன்... :cry:

சரி உண்மையாலும் இப்படி நாய்கடித்தால் நாய் போல குரைப்பினமோ... :roll: :roll:

நல்ல காலம் என்க சட் சட் என்டு கோபம் வாரதே இல்ல....

பட் பட் என்டு தான் வாரது...

பட் பட் எண்டு வந்தாலும் ஆபத்துதானே... பட் பட் என்று யாரும் கன்னதில போட்டுட்டா...? :wink: :)

பட் பட் எண்டு வந்தாலும் ஆபத்துதானே... பட் பட் என்று யாரும் கன்னதில போட்டுட்டா...?

அதுதானே.. :):(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இந்த பையன்... :cry:

சரி உண்மையாலும் இப்படி நாய்கடித்தால் நாய் போல குரைப்பினமோ... :roll: :roll:

பட் பட் எண்டு வந்தாலும் ஆபத்துதானே... பட் பட் என்று யாரும் கன்னதில போட்டுட்டா...? :wink: :)

ke ke ke ஓருக்கா நாய்ட்ட கடி வாங்கி பாக்கிறது... :evil: :twisted: :twisted:

பிணியின் தாக்கத்தில்இ பேச்சுத் தடைப்பட்டுஇ அவர்களால் முணகத்தான் முடியும்.. அது நாய் ஊளையிடுவதுபோலவோ அல்லது குரைப்பதுபோலவே தோன்றலாம்.. என கேள்விப்பட்டிருக்கிறேன்.. நேரில் பார்த்ததில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா

தேவை இல்லைதான்...ஆனால் நம்மளைதான் கோப படுத்திறதுக்கு என்ரு சிலர் இருக்கினமே..... :evil: :evil:

ke ke ke ஓருக்கா நாய்ட்ட கடி வாங்கி பாக்கிறது...

ke ke ke என்னக் கண்டா நாய்க்கு சா நாயக் கண்டால் எனக்கு பயம்...அப்புறம் எப்படி ஒருக்கா கடி வாங்குறது... :wink: பேசாமா எங்களுக்காக நீங்க ஒருக்கா கடி வாங்கிட்டு வாங்க எப்படி எண்டு பாப்பம், 8) சோழியன் அண்ணாவும் நாயைப் போல குரைக்குற ஆக்களை நேர்ல காணயில்லையும்( நானும்) அவரும் பார்த்த மாதிரி இருக்கும்... :wink: :lol::lol: 8) 8)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோபத்துக்கு இந்த மாதிரி விலையையும் கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கோபம் நமக்குத் தேவைதானா

தேவை இல்லைதான்...ஆனால் நம்மளைதான் கோப படுத்திறதுக்கு என்ரு சிலர் இருக்கினமே..... :evil:  :evil:

இதோடா வந்திட்டா.இவாவ கோபப்படுத்திறத்துக்கும் சில பேராம்? சிரிப்பா இருக்கு...... :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனால்தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள்.

ஓர் அறிவுபுூர்வமான கட்டுரையை வாசித்ததும் நாய் போலக் கடிபடுபவர்களைப் பார்க்கும்போது எனக்கு கோபம் வரப்பார்க்குது. ஆனால் வராது என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது.

நாய் கடித்தால் ஏற்பு வராமல் தடுப்பதற்கு ஊசி மருந்து ஏற்றுவார்கள். ஒருமுறை அனுபவப்பட்டேன். அதிலும் விசர்நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி தினமும் ஒவ்வொன்றாக 23 ஊசிகள் போடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன். கள உறவுகள் கவனமாக இருக்கவும்.

இங்கே கடி படும் போது

எங்கே ஊசி போடுறது ? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோடா வந்திட்டா.இவாவ கோபப்படுத்திறத்துக்கும் சில பேராம்? சிரிப்பா இருக்கு...... :D

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்று கூறுவார்கள்.

ஓர் அறிவுபுூர்வமான கட்டுரையை வாசித்ததும் நாய் போலக் கடிபடுபவர்களைப் பார்க்கும்போது எனக்கு கோபம் வரப்பார்க்குது. ஆனால் வராது என்றொரு நம்பிக்கையும் இருக்கிறது.

நாய் கடித்தால் ஏற்பு வராமல் தடுப்பதற்கு ஊசி மருந்து ஏற்றுவார்கள். ஒருமுறை அனுபவப்பட்டேன். அதிலும் விசர்நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி தினமும் ஒவ்வொன்றாக 23 ஊசிகள் போடுவார்கள் என்றும் கேள்விப்பட்டேன். கள உறவுகள் கவனமாக இருக்கவும்.

:evil: :evil: :evil: :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.