Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சன் தொலைக்காட்சிக்கு விமான நிலையத்தில் வைத்து ஆப்பு! வெளிவிவகார அமைச்சு அடாவடி!

Featured Replies

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அவர்களை வெறுங்கையுடனேயே நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.இதனால் கொதிப்படைந்த சன் ரி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்தனர்.

இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளனர். இதன் பின்னணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சே செயற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுங்க அதிகாரிகளின் இந்தக் கண்டிப்பான உத்தரவால் வெறுங்கையுடனேயே இந்திய ஊடகர்கள் நாட்டுக்குள் வந்துள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் என்ற காரணியைக் கருத்திற்கொண்டே சன் டி.வியின் தொலைத்தொடர்புக் கருவிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என இலங்கை அரச தரப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் சன் டி.வி. தொலைக்காட்சி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஊடக சுதந்திரத்தைப் பற்றி அடிக்கடி பேசும் இலங்கை அரசு, இவ்வாறு நடந்துகொள்வது சரியா என்று சன் செய்தியாளர்கள் விமானநிலையத்தில் கேள்வி எழுப்பி சுங்க அதிகாரிகளுடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண் தொலைக்காட்சி பெரும்பாலும் ஸ்ரீலங்காவின் செய்திகளையே அடிப்படையாக வைத்து செய்தியை தொகுத்து ஒலி ஒளி பரப்பு செய்பவர்கள் வன்னியில் யுத்தம் நிகழ்ந்த வேளையில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வேளையில் கூட அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது ........ பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் ஏனைய நாட்டு செய்திகளை ஒலி ஒளி பரப்பிக்கொண்டு இருந்தவர்கள், ஆகையால் இவர்களுக்கு இப்போது நடந்தது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் இல்லை ........ நான் நினைக்கின்றேன்.

இதன்பின்னர்ராவது திருந்துமா .......... சண் தொலைக்காட்சி நிறுவனம் ?

அவர்கள் ராஜபக்ச புகழ் பாட வந்திருப்பார்கள். அதை வெளிப்படையாக சுங்க அதிகாரிகளிடம் சொல்லியிருந்தால் பிரச்சனை சுமுகமாக முடிந்திருக்கும்.

. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

இந்த ஆண்டின் சிறந்த புளுகு என்று இதை பரிந்துரை செய்யலாம்.முள்ளிவாயக்கால் பேரவலம் நடந்த காலத்தில் அதன் தாக்கம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்து உண்மையை இருட்டடிப்புச் செய்த தமிழக ஊடகங்களில் சண் தொலைக்காட்சியின் பங்கும் முக்கியமானது

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கலைஞரின் பேரனின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதினால் ............. கலைஞர் அரசியலில் எப்படியெல்லாம் பல்ரி அடிப்பாரோ அதே போன்று பேரன்களும் நல்லாக அடிக்கின்றாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

செய்தியின் மூலம் தாய்த்தமிழ் என்றிருக்கின்றது.

மூன்று வருடத்துக்கு முன்பு, முள்ளிவாய்க்காலில் சனம் செத்துக்கொண்டிருக்கும் போது...

சன் ரிவி ஒரு துரும்பையும் ஈழத்தமிழனுக்காக.... போட்டது கிடையாது என்று,

அரசாங்கம் கொடுக்கும் செய்திகளையே... ஒளி பரப்புச் செய்து கொண்டு இருந்ததாக... பல இணையங்களும், சன் ரிவி இணைப்பு வைத்திருந்தவர்களும் குற்றம் சாட்டியதை வாசித்துள்ளேன்.

இது, தாய்த்தமிழ் இணையத்துக்கு தெரியாதா?

இணையத்தளம் நடாத்தும் வித்துவான்களே... செய்திகளை பதிவு செய்யும் போது, முக்கிய கவனம் எடுங்கப்பா....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண் தொலைக்காட்சி பெரும்பாலும் ஸ்ரீலங்காவின் செய்திகளையே அடிப்படையாக வைத்து செய்தியை தொகுத்து ஒலி ஒளி பரப்பு செய்பவர்கள் வன்னியில் யுத்தம் நிகழ்ந்த வேளையில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வேளையில் கூட அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது ........ பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் ஏனைய நாட்டு செய்திகளை ஒலி ஒளி பரப்பிக்கொண்டு இருந்தவர்கள், ஆகையால் இவர்களுக்கு இப்போது நடந்தது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் இல்லை ........ நான் நினைக்கின்றேன்.

இதன்பின்னர்ராவது திருந்துமா .......... சண் தொலைக்காட்சி நிறுவனம் ?

எல்லாம்... வியாபாரம் தமிழரசு.

இன உணர்விலும், வியாபாரம் செய்ய... இவர்களால் மட்டுமே முடியும்.

இன்றைய அரசியல் நிலையில் சிங்களம் கருணாநிதியை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அவரோ எல்லாவறையும் இழந்து அம்மணமாக இருக்கும் நிலை வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டும் போது இது மாதிரியான பெரும் தவறுகள் நடந்து விடுவதுண்டு. கருணாநிதி ஆதரவு இணையத்தில் இருந்து சுட்டிருப்பார்கள் போல. அதனால் சன் ரிவி 2009 இல் இருட்டடிப்புச் செய்ததெல்லாம் சொல்லாமல் செய்தி இருக்கிறது. சன் டிவியின் இருட்டடிப்பால் தமிழக மக்களுக்குச் செய்தி போகாததும், உண்மையைக் காட்டிய மக்கள் தொலைக்காட்சி பிரபலமான இடங்களில் தி.மு.க ஆட்கள் கேபிளைப் பிடுங்கியதும், அதையும் மீறி தமிழக அமைப்புகள் இறுவட்டுத் தயாரித்து வீடு வீடாகச் சென்று கொடுத்ததும் தாய்த்தமிழின் இந்த செய்தி சுட்டுப் போடும் பழக்கத்தால் மறைக்கப் பட்டு விட்டது வேடிக்கை தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.