Jump to content

சன் தொலைக்காட்சிக்கு விமான நிலையத்தில் வைத்து ஆப்பு! வெளிவிவகார அமைச்சு அடாவடி!


Recommended Posts

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான சன் டி.வி. செய்தியாளர்களின் தொலைத்தொடர்பு, செய்மதி உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ள இலங்கை அரசு, அவர்களை வெறுங்கையுடனேயே நாட்டுக்குள் அனுமதித்துள்ளது.இதனால் கொதிப்படைந்த சன் ரி.வி. செய்தியாளர்கள் விமானநிலைய சுங்க அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கை பயணம் குறித்தான செய்திகளையும், வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் தற்போதைய நிலைவரங்களை குறித்தும் இங்கிருந்து நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு சன் டி.வியின் செய்தியாளர்கள் சிலர் இலங்கை வந்தனர்.

இவர்களை விமானநிலையத்தில் சோதனைக்குட்படுத்திய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த தொலைத்தொடர்புக் கருவிகள், செய்மதிகள், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியவற்றை நாட்டுக்குள் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளனர். இதன் பின்னணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சே செயற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சுங்க அதிகாரிகளின் இந்தக் கண்டிப்பான உத்தரவால் வெறுங்கையுடனேயே இந்திய ஊடகர்கள் நாட்டுக்குள் வந்துள்ளனர். நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் என்ற காரணியைக் கருத்திற்கொண்டே சன் டி.வியின் தொலைத்தொடர்புக் கருவிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என இலங்கை அரச தரப்பு தெரிவிக்கின்றது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கையால் சன் டி.வி. தொலைக்காட்சி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஊடக சுதந்திரத்தைப் பற்றி அடிக்கடி பேசும் இலங்கை அரசு, இவ்வாறு நடந்துகொள்வது சரியா என்று சன் செய்தியாளர்கள் விமானநிலையத்தில் கேள்வி எழுப்பி சுங்க அதிகாரிகளுடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண் தொலைக்காட்சி பெரும்பாலும் ஸ்ரீலங்காவின் செய்திகளையே அடிப்படையாக வைத்து செய்தியை தொகுத்து ஒலி ஒளி பரப்பு செய்பவர்கள் வன்னியில் யுத்தம் நிகழ்ந்த வேளையில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வேளையில் கூட அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது ........ பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் ஏனைய நாட்டு செய்திகளை ஒலி ஒளி பரப்பிக்கொண்டு இருந்தவர்கள், ஆகையால் இவர்களுக்கு இப்போது நடந்தது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் இல்லை ........ நான் நினைக்கின்றேன்.

இதன்பின்னர்ராவது திருந்துமா .......... சண் தொலைக்காட்சி நிறுவனம் ?

Link to comment
Share on other sites

அவர்கள் ராஜபக்ச புகழ் பாட வந்திருப்பார்கள். அதை வெளிப்படையாக சுங்க அதிகாரிகளிடம் சொல்லியிருந்தால் பிரச்சனை சுமுகமாக முடிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

இந்த ஆண்டின் சிறந்த புளுகு என்று இதை பரிந்துரை செய்யலாம்.முள்ளிவாயக்கால் பேரவலம் நடந்த காலத்தில் அதன் தாக்கம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக இருந்து உண்மையை இருட்டடிப்புச் செய்த தமிழக ஊடகங்களில் சண் தொலைக்காட்சியின் பங்கும் முக்கியமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கலைஞரின் பேரனின் தொலைக்காட்சி நிறுவனம் என்பதினால் ............. கலைஞர் அரசியலில் எப்படியெல்லாம் பல்ரி அடிப்பாரோ அதே போன்று பேரன்களும் நல்லாக அடிக்கின்றாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பன்னாட்டு ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தினர். இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கு அரங்கேறிய கொடூரங்களை எதுவித அச்சமுமின்றி சன் தொலைக்காட்சி இந்தியாவில் ஒளிபரப்பு செய்தது. இதற்குப் பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கை அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

http://thaaitamil.com/?p=16341

செய்தியின் மூலம் தாய்த்தமிழ் என்றிருக்கின்றது.

மூன்று வருடத்துக்கு முன்பு, முள்ளிவாய்க்காலில் சனம் செத்துக்கொண்டிருக்கும் போது...

சன் ரிவி ஒரு துரும்பையும் ஈழத்தமிழனுக்காக.... போட்டது கிடையாது என்று,

அரசாங்கம் கொடுக்கும் செய்திகளையே... ஒளி பரப்புச் செய்து கொண்டு இருந்ததாக... பல இணையங்களும், சன் ரிவி இணைப்பு வைத்திருந்தவர்களும் குற்றம் சாட்டியதை வாசித்துள்ளேன்.

இது, தாய்த்தமிழ் இணையத்துக்கு தெரியாதா?

இணையத்தளம் நடாத்தும் வித்துவான்களே... செய்திகளை பதிவு செய்யும் போது, முக்கிய கவனம் எடுங்கப்பா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சண் தொலைக்காட்சி பெரும்பாலும் ஸ்ரீலங்காவின் செய்திகளையே அடிப்படையாக வைத்து செய்தியை தொகுத்து ஒலி ஒளி பரப்பு செய்பவர்கள் வன்னியில் யுத்தம் நிகழ்ந்த வேளையில் எமது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வேளையில் கூட அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்காது ........ பொழுதுபோக்கு நிகழ்சிகளையும் ஏனைய நாட்டு செய்திகளை ஒலி ஒளி பரப்பிக்கொண்டு இருந்தவர்கள், ஆகையால் இவர்களுக்கு இப்போது நடந்தது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஈழத்தமிழரைப் பொறுத்தளவில் இல்லை ........ நான் நினைக்கின்றேன்.

இதன்பின்னர்ராவது திருந்துமா .......... சண் தொலைக்காட்சி நிறுவனம் ?

எல்லாம்... வியாபாரம் தமிழரசு.

இன உணர்விலும், வியாபாரம் செய்ய... இவர்களால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

இன்றைய அரசியல் நிலையில் சிங்களம் கருணாநிதியை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அவரோ எல்லாவறையும் இழந்து அம்மணமாக இருக்கும் நிலை வந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டும் போது இது மாதிரியான பெரும் தவறுகள் நடந்து விடுவதுண்டு. கருணாநிதி ஆதரவு இணையத்தில் இருந்து சுட்டிருப்பார்கள் போல. அதனால் சன் ரிவி 2009 இல் இருட்டடிப்புச் செய்ததெல்லாம் சொல்லாமல் செய்தி இருக்கிறது. சன் டிவியின் இருட்டடிப்பால் தமிழக மக்களுக்குச் செய்தி போகாததும், உண்மையைக் காட்டிய மக்கள் தொலைக்காட்சி பிரபலமான இடங்களில் தி.மு.க ஆட்கள் கேபிளைப் பிடுங்கியதும், அதையும் மீறி தமிழக அமைப்புகள் இறுவட்டுத் தயாரித்து வீடு வீடாகச் சென்று கொடுத்ததும் தாய்த்தமிழின் இந்த செய்தி சுட்டுப் போடும் பழக்கத்தால் மறைக்கப் பட்டு விட்டது வேடிக்கை தான்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.