Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேதினப் பேரணியும் கூட்டமைப்பின் துரோகத் தனமும். - தாயகத்தில் இருந்து வீரமணி

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இழப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டுக்கு செல்லாமையால் தமிழ் மக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்துவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளமை தமிழ் மக்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினமாகிய மே தினத்தை இதுவரை காலமும் தென்னிலங்கையில் நடத்திய ஐக்கிய தேசியக்கட்சி இவ்வருடம் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி மற்றும சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக்கட்சி ஆகிய அரசியல் கட்சிகளை இணைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்களின் பிரதான தலைமைத்துவ அரசியல் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி முடிவு செய்தது. இது தொடர்பான கருத்துக்கள் ஆரம்பத்தில் வெளிவந்தபோது அதனை மறுத்துரைத்த தமிழ்க் கூட்டமைப்பு தற்போது அதற்கு சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவராத போதிலும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கான விருப்பங்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி பெரும்பாலும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பு யாழில் மே தினக்கூட்டத்தை நடத்தும் என்பது உறுதியாகியுள்ளதாகவே தென்படுகிறது.

கூட்டமைப்பின் இந்த முடிவு குறித்து யாழ்.குடாநாட்டிலுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தலைவர் பிரபாகரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் சிங்கள அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தனியே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மட்டும் தான் தமிழ் மக்களின் போராட்டத்தை அழித்ததென்றில்லை. தென்னிலங்கையிலுள்ள பாமர சிங்கள மக்களை விட மற்றைய அனைவரும் இணைந்த பௌத்த மேலாண்மை வாதத்தின் இணைவே எமது போராட்டத்தை அழித்தொழித்தது.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்கியடுக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடக்கம் அதனையடுத்துவந்த ஜனாதிபதிகளான பிரேமதாச, டி.பி.விஜயதுங்க, சந்திரிகா குமாரணதுங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரை அனைவருமே தமிழ் மக்கள் விடயத்தில் கடும்போக்குடனேயே செயற்பட்டனர்.

ranil%20mahi.jpg

இவர்களில் எவருமே தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவில்லை. மாறாக இந்த அரசுத் தலைவர்கள் அனைவரும் தமிழர் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக மாற்றினர். சிங்களத் தலைவர்கள் அனைவருக்குள்ளும் மிகவும் வித்தியாசமானவரும் தமிழ் மக்களின் முதல் எதிரியாகவும் விளங்குபவர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவராகவுமுள்ள ரணில் விக்கிரமசிங்க ஆவார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலத்திற்கும் ரணில் விக்கிரமசிங்கதான் அடியெடுத்துக்கொடுத்தவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாகவும் சிறந்த தாக்குதல் தளபதியாகவும் இருந்த கருணாவை துரோகியாக மாற்றியவர் ரணில் விக்கிரமசிங்க. கருணாவுடன் பிரிந்து சென்ற நூறு வரையான தமிழினத் துரோகிகளை சிங்கள இராணுவத்துடன் இணைத்து அவர்கள் மூலமாக வன்னிப் பிராந்தியக் கட்டமைப்புகளை அறிந்துகொள்ள வழியேற்படுத்திக் கொடுத்தவர் இதே ரணில் விக்கிரமசிங்க என்பதை தமிழ் மக்கள் என்றுமே மறந்துவிட மாட்டார்கள்.

கருணாவுடன் பிரிந்து சென்ற மேற்படி நூறு வரையான தமிழினத் துரோகிகள் சிங்கள இராணுவப் படை முகாம்களில் வைத்தும் புடம்போட்டு எடுக்கப்பட்டு ஆசைகாட்டி, இறுதிப்போரில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து களமிறக்கப்பட்டனர். முன்னரங்குகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையில் தமிழில் உரையாடியவாறு நின்ற மேற்படித் துரோகிகள் பாதுகாப்புத்தேடி ஓடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் தான் தங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கின்றார்கள் என்று மக்கள் நம்பி புலிகளுக்கான ஆதரவை விலக்கிக்கொள்வார்களென்று நம்பியே சிங்கள இராணுவம் இந்தச்செயலை மேற்கொண்டது. மக்களிலிருந்து புலிகளை வேறுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மேற்படி முயற்சிகள் இறுதிவரை வெற்றி

பெறாத போதிலும் இதற்குப் பின்னணியாக இருந்து கருணாவைத் துரோகியாக்கிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.

இதேவேளை ஜெயசிகுறு படையெடுப்பின் மூலம் சிங்களப் படையினர் ஒரு வருடமாக படையெடுப்பை மேற்கொண்டு கைப்பற்றிய தமிழர் தாயகப் பகுதியில் சில பிரதேசங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் புலிப்பாய்ச்சல் என்ற நடவடிக்கை மூலம் ஒருசில நாட்களுக்குள்ளேயே மீட்டெடுத்தனர்.

புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் புலிகள் ஏ-9 சாலையூடாகத் துரத்திச்சென்ற படையினர் வவுனியா நோக்கித் தலைதெறிக்க ஓடினர். அப்போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நாட்டின் பாதுகாப்பைப் பலபபடுத்துமாறு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் வேண்டுகோள் விடுத்தார். இவற்றை விட விடுதலைப் போராட்டத்தை அழித்து தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியைக் குறைப்பதற்கும் இல்லா

தொழிப்பதற்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ரீதியாக இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார்.

இத்தகைய போக்கிரித்தனமான துரோகத்தில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்கவை தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள். இந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மே தினக்கூட்டத்தை நடத்துவதற்கு தயாராகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முட்டாள்த்தனத்தை என்னவென்று கூறமுடியும்? தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அண்மைக்கால நகர்வுகளை நோக்குகின்றபோது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள மேலாண்மைவாதத்துக்குள் கரைப்பதற்கான முயற்சியாக அமைவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

மேற்படி கட்சித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையன்றில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலைக்கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் விடுதலையில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்ற கட்சியாக இருந்தால் இந்த மே தினத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பதிவாக்க முடியும். யாழ்.குடாநாட்டுத் தமிழ் மக்கள் இன்றுவரை விடுதலைத் தாகத்துடனேயே உள்ளனர்.

வருகின்ற மே தினத்தன்று யாழில் மிகப்பிரமாண்டமான மே தினக்கூட்டத்தை நடத்தி அக்கூட்டத்தில் வைத்து சர்வதேசத்திற்கு பொதுவான செய்தியன்றை விடுக்கமுடியும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை முன்வைக்குமாறும் அந்தத்தீர்வு எமது இழந்தவைகளுக்கும் தியாகங்களுக்கும் நிகரானதாக அமைய வேண்டுமென்றும் உலகுக்கு கோரிக்கை விடுப்பதற்கு இந்த மே தினத்தை கூட்டமைப்பு பயன்படுத்த முடியும்.

சர்வதேசத்தின் இராஜதந்திரச் செயற்பாடுகள் தற்போது தமிழ் மக்களின் நலன்களுக்குச் சாதகமானதாகத் தென்படுகிறது. இவ்வேளையில் தாயகத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்.குடாநாட்டில் மக்களை ஒன்று திரட்டி பொதுவான அறைகூவலொன்றை விடுக்க முடியும். யாழ்ப்பாண மக்கள் எழுச்சியுடன் வாழ்பவர்கள். தியாகி திலீபன் அவர்கள் 1987 ஆம் ஆண்டு கூறிய மக்கள் எழுச்சியை 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் நாமெல்லோரும் கண்டோம். இலட்சக்கணக்கான மக்கள் இந்தப்பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பொங்குதமிழ் நிகழ்விற்கு இலட்சக்

கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள் என்றால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்படும் மே தினக் கூட்டத்திற்கு ஆகக்குறைந்தது 50 ஆயிரம் பேராவது பங்குபற்றமாட்டார்களா? ஓவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது தொகுதி மக்களை அழைத்து வந்தாலே யாழில் மிகப்பெரும் மனிதப்பேரணியன்றை நடத்தமுடியும்.

இவ்வாறான வகையில் பொது மக்களைத் திரட்டுவதற்கு நிதி வசதி இல்லையென்றும் மக்களின் போக்குவரத்தை வழங்குவதற்கு நிதி இல்லையென்றும் கூட்டமைப்பு சாக்குப்போக்குகளைச் சொல்ல முடியும். இந்தச் செலவுகளுக்குரிய நிதியை புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் கேட்டாலே அவர்கள் வழங்க முன் வருவார்கள். ஆனால் எதுவுமே இல்லாமல் வாழாவிருந்துகொண்டு அடுத்தவன் கையை எதிர்பார்ப்பதை கூட்டமைப்பு கைவிட வேண்டும்.

இத்தகைய மனிதப் போராட்டத்திற்கு மக்களைத் திரட்டும் போது படையினர் முட்டுக்கட்டை போடுவார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. 2001 ஆம் ஆண்டு பொங்குதமிழ் நிகழ்விற்கும் படையினர் தடை விதித்தார்கள். ஆனால் சிலநூறு மாணவர்கள் அதனை நடத்திக்காட்டி வெற்றிபெற்றார்கள். இந்தப் பொங்கு தமிழ் இன்று கர்நாடகம் வரை விரிந்து நிற்கின்றது.

தேர்தல்கள் வந்தால் மட்டும் தமது சுயமரியாதைகளையும் மறந்து வீட்டுக்கு வீடு போய் வாக்குக்கேட்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்ற மே தினத்தையும் அவ்வாறு கருதவேண்டும். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வீட்டுக்கு வீடு சென்று மக்களைத் திரட்டி தனியானதொரு மே தினத்தை நடத்த வேண்டும். இதுவே ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தமிழ் மக்களின் அழிவில் சுவை கண்ட சிங்களக் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மே தினம் நடத்துவதென்ற தனது எண்ணத்தையும் நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அறவே கைவிட வேண்டிய நிலை ஏற்படும்.

நன்றி : ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

வீரமணி அவர்கள் சொன்ன விடயங்கள் பலவற்றில் உண்மையுள்ளது. இதே போன்ற உண்மைகள் பின்னணிகள் IPKF காலக் கட்டத்தில் பிரேமதாசாவுக்கும் 2005ல் வேட்பாளராக முன்னின்றபோது மகிந்த ராசபக்சவுக்கும் இருந்தது. தேசிய சர்வதேசிய ரீதியாக வலு இழந்துள்ளபோது எதிரிகளுக்குள் முதல் எதிரி யைத் தனிமைப் படுத்தி கூட்டு வைப்பது அரசியல் இராணுவ தந்திரங்களின் அடிப்படை’ கடந்த காலங்களில் பிரேமதாச, மகிந்த போன்ற முதல் எதிரிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புகொண்ட நிகழ்வுகள் கூட இராசதந்தைர அடிப்படையில் இடம்பெற்றுள்ளன. மக்கள் சார்பான அமைப்பு ஒரு இராசதந்திர நகர்வை மேற்க்கொள்ளும்போது அந்த இராசதந்திரம் சரியா பிழையா என்று ஆரயலாம். ஆனால் துரோகம் என பட்டம் சூட்டுவது அபத்தமானது.

போரில் எல்லா வலிமையும் இழந்து ஆக்கிரமிப்பு இராணுவ பூட்ஸுகளின் கீழே நசிந்து கிடந்தபோது சம்பந்தர் தலைமையில் வடகிழக்கை இணைத்து திரும்ப எழுகிற முயற்ச்சியில் நாம் வெற்றி பெற்றோம். இது எங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் அக்கறையையும் பெற்றுத்தந்தது. இந்த முயற்ச்சி நாம் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிதிருந்தால் வடகிழக்கில் மகிந்த வெற்றிபெற்றிருந்தால் சாத்தியமாகி இருக்காது. . மீழ எழுகிற நிகழ்ச்சிநிரலில் இத்தகைய ராசதந்திர நகர்வுகள் ஏணிகளைப் போன்றது.

வீரமணி ஈழத்தினதும் உலகத்தினதும் வரலாற்று படிப்பினைகளையும் உள்வாங்கிக்கொண்டு களத்தில் உள்ள கையறு நிலையையும் மனதில் கொண்டு நமது மீட்ச்சிக்கான இராசதந்திரத்தை அடையாளப் படுத்தவேண்டும்.

கூட்டணியின் தேர்தல் வெற்றியே இன்று சர்வதேச ரீதியில் நமது மக்கள் தோல்விக்குப் பின்னும் உரிமைக்காக வடகிழக்கு பேதமின்றி ஒரு முகமாக நிற்க்கிறார்கள் என்கிற அடையாளத்தை வென்றுதந்தது. கூட்டணி தோற்றிருந்தால் தமிழர் வடக்கு கிழக்கென பிரிந்து அரசுடன் நிற்க்கிற தோற்றமே ஏற்ப்பட்டிருக்கும்.

கூட்டணியை வடக்கிலும் சம்பந்தரை திருமலையிலும் விழுத்தி தமிழர் எங்கள் பின்னே என்று உலகிற்க்குக் காட்ட விரும்பிய மகிந்த ராசபக்சவின் விருப்பத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோனவர்களை ஆதரிக்கத் தோன்றும் சிலருக்கு உயிர் அச்சுறுத்தலின் மத்தியில் வடகிழக்கை இணைத்து சாத்தியமற ஒரு சூழலில் நம் அடையாளங்களை பாதுகாத்த சம்பந்தரை எப்படி இலகுவாக துரோகி என்று சொல்ல முடிகிறதோ? - வ.ஐ.ச.ஜெயபாலன்

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

மே தினமன்று, வீட்டை ஒழுங்குபடுத்தி.....0057.gif

மனைவி, பிள்ளைகளுடன்0082.gif சந்தோசமாக இருங்கள்.0003.gif

அதுவே... சந்தோசம்.0065.gif

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன்.... மேதின நாளுக்கு போராடி வெற்றி பெற,

அல்லக்கைகள், செங் கொடி பிடிச்சு, அலையுது.

  • கருத்துக்கள உறவுகள்

Sampanthan%2BMR.jpgmahinda-sampanthan-150x150.jpg

Rauf%20hakkem%20with%20Sampanthan.jpg

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.