Jump to content

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர்.


Recommended Posts

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி, மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இராணுவ உயர்மட்டக் குழு தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கின்றது.

இம்மாதம், 23 மற்றும் 24ம் திகதிகளில் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது. ஏழு பிரதான கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தல் ஆணையகமும், இடைக்கால இராணுவ உயர்மட்ட குழுவும் தேர்தலை முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்து, சில கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒரு வன்முறை கும்பல் கல், கண்ணாடி மற்றும் குண்டுகளை வீசினர். சுமார் ஆறு மணி நேரம் நடந்த இந்த சண்டையில், 20 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக, ராணுவம் சில கூலி படைகளை ஏவி, இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளதாக, முஸ்லிம் சகோதர சுதந்திர நீதி கட்சியும் சுயேட்சைகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://thaaitamil.com/?p=17928

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் அகஸ்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலில் நொதிகள் உள்ள இந்த நெளியும் புழுக்கள் நெகிழியைச் சிதைக்கின்றன. இவை அப்படிச் செய்யவில்லையெனில் இந்த ப்ளாஸ்டிக் சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள்கூட எடுக்கும். முதல் பார்வையில் மெழுகுப்புழுக்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மெழுகு அந்துப்பூச்சிகளின் வளைந்து நெளியும் லார்வா வடிவம், தேனீக்கள் தங்கள் தேன்கூடுகளை உருவாக்கப் பயன்படுத்தும் மெழுகைச் சாப்பிடுகின்றன. தேனீ வளர்ப்பவர்கள் ஒரு நொடிகூட சிந்திக்காமல் இந்தப் புழுக்களை அழித்துவிடுவார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் கரு வளர்ச்சியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மூலக்கூறு உயிரியலாளர் ஃபெடெரிகா பெர்டோச்சினி, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய, இந்த உயிரினங்கள் பற்றிய ஒரு கண்டுபிடிப்பைச் செய்தார். பெர்டோச்சினி, புதிதாக தேனீ வளர்ப்பவர். தேன்கூட்டை சுத்தம் செய்த பிறகு சில மெழுகுப் புழுக்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அவற்றை அங்கே விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து இந்தப் புழுக்கள் பிளாஸ்டிக்கில் சிறிய துளைகளை உருவாக்கத் தொடங்கியதை அவர் கவனித்தார். புழுக்களின் வாய் பட்டவுடனேயே ப்ளாஸ்டிக் சிதைய ஆரம்பித்தது.   படக்குறிப்பு,இந்தப் புழுக்களின் 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. "அதுவொரு உண்மையான யுரேகா தருணம் - அது அருமையாக இருந்தது," என்று தனது ஆரம்ப கண்டுபிடிப்பு மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பது மனதில் பதிந்த அந்தத் தருணத்தை பெர்டோச்சினி விவரிக்கிறார். "அதுதான் கதையின் ஆரம்பம். ஆராய்ச்சித் திட்டத்தின் ஆரம்பம், எல்லாவற்றுக்குமான ஆரம்பம்," என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களாகிய நமக்குச் செய்யக் கடினமாக இருக்கும் ஒன்றை அந்தப் புழுக்கள் செய்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் அந்தப் புழுக்கள் உணவு போல ப்ளாஸ்டிக்கை ஜீரணிப்பது போலவும் தோன்றியது. பெர்டோச்சினி மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புழுக்களின் வாயில் இருந்து சுரந்த திரவங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. இவை முறையே ரோமன் மற்றும் கிரேக்க வேளாண் பெண் தெய்வங்களின் பெயர்களாகும். அவை பிளாஸ்டிக்கில் உள்ள பாலிஎத்திலீனை ஆக்சிடைஸ் செய்து சிதைவை ஏற்படுத்தின.   படக்குறிப்பு,"இந்தp புழுக்களின் நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்," என்கிறார் பெர்டோச்சினி. தேன் கூடுகளை அழிக்கும் அவற்றின் திறனைப் பார்க்கும்போது அவற்றை பிளாஸ்டிக் மாசுபாட்டு சூழலில் அப்படியே விடுவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று பெர்டோச்சினி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தp பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் என்சைம்கள், உலகின் பிளாஸ்டிக் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் நம்புகிறார். பெர்டோச்சினி இப்போது பிரான்சில் உள்ள பயோரிசர்ச் ஸ்டார்ட்அப் பிளாஸ்டிசென்ட்ரோபியில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். பிளாஸ்டிக்கை உடைப்பதில் இந்த நொதிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். "இந்த நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்" என்கிறார் பெர்டோச்சினி. "இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உலகளவில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். பயன்தரக்கூடிய என்சைம்கள் பல்வேறு உயிரினங்களில் காணப்படுகின்றன. சில பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை ஜீரணிக்கின்றன. ஆனால் உயர் விலங்கினங்களில் இது மிகவும் அரிதானது. கடந்த 2022ஆம் ஆண்டில், பிளாஸ்டிக்கை விரும்பி உண்ணும் மற்றொரு முதுகெலும்பில்லாத உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் "சூப்பர் வார்ம்" ஜூபோபாஸ் மோரியோ. இது பாலிஸ்டிரீன் கொண்ட உணவு மூலம் தனது எடையை அதிகரித்துக் கொள்கிறது. பிளாஸ்டிக் மீதான நமது நம்பிக்கையையும், நுகர்வையும் குறைக்கப் பல உலகளாவிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கிற்காக, பல நாடுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளன. மேலும் 2024இன் பிற்பகுதியில் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இறுதியில் இதுபோன்ற நொதிகள், பிளாஸ்டிக்கை குறைக்கப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் இந்தச் சிறிய புழுக்களின் பங்கும் இருக்கலாம்.   பிளாஸ்டிக் பயன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். இன்று உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அதில் 19 முதல் 23 மில்லியன் டன்கள் (சுமார் 2,000 குப்பை லாரிகளுக்குச் சமமானவை) நீர்வாழ் உயிரின சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் செல்கின்றன. அதில் பெரும்பாலானவை நுண்ணுயிர்களின் இருப்பிடமாக மாறுகின்றன அல்லது விலங்குகளால் உண்ணப்படுகின்றன. பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். https://www.bbc.com/tamil/articles/c6pyj8kjkz3o
    • Published By: DIGITAL DESK 7   12 MAY, 2024 | 01:30 PM (நா.தனுஜா) யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவரும் நிலையில், இனியேனும் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 மே 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரமன்றி யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் அடையாளங்காணப்பட்டு முழுமையாகக் களையப்படவோ, தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வோ இன்னமும் வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக தொடர்ச்சியாக வாக்குறுதியளித்துவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள்,  அதனை முன்னிறுத்தி தேசிய தேர்தல் ஆண்டான இவ்வருடத்தில் எத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். அதன்படி, இது பற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிஞானம் சிறிதரன், '2009இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் பலவீனமானதாகவே பார்க்கின்றன. 2009ஆம் ஆண்டின் பின்னர் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே 2010இல் சரத் பொன்சேகாவுக்கும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவுக்கும், 2019இல் சஜித் பிரேமதாஸவுக்கும், 2022இல் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால ஜனாதிபதித் தெரிவு) ஆதரவளித்தோம். இருப்பினும் சிங்கள அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றியிருக்கின்றன. ஆனால் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டினார். இத்தகையதொரு சூழ்நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச அரங்கில் தமிழர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அரசியல் தீர்வுக்கான சாத்தியம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இவ்விடயத்தில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பின்வருமாறு தெளிவுபடுத்தினார்: இன அழிப்பின் ஊடாக யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஒருபோதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாது என நாம் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். மாறாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் அதேவேளை, தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதேபோன்று யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்தி வருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கமைய ஒற்றையாட்சியைப் புறக்கணித்து, சமஷ்டியை வலியுறுத்தும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு சிங்கள தேசிய கட்சிகள் அவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை முன்வைக்கவேண்டும்' என வலியுறுத்தினார். மேலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பல விடயங்களில் இன்னமும் மாற்றம் ஏற்படாதபோதிலும், சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக படையினர் வசமிருந்த காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளமை, அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இல்லாத அளவுக்கு தற்போது தொல்பொருள் திணைக்களமும், பௌத்த பிக்குகளும் இணைந்து வட, கிழக்கில் காணிகளை அபகரித்துவருவதாக விசனம் வெளியிட்டார். அத்தோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறல் என்பது மேலும் இறுக்கமானதாக மாறிவருவதாக தெரிவித்த அவர், இவை அனைத்தும் தற்போது மிகக் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கின்றன என்றார். 'தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியிலும் ஒற்றுமையீனம் மேலோங்கி வருகின்றது. இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு இடையிலும் பிளவுகள் அதிகரித்துவருகின்றன. பிளவுபட்டிருக்கும் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவருகின்றது. ஆகவே இவ்வேளையில் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும். அதேபோன்று இக்குழப்பகரமான சூழ்நிலையில் பொதுவேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்' எனவும் சித்தார்த்தன் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/183301
    • தமிழரசுக்கட்சியென்று ஒன்று தற்போதும் இருக்கிறதா? இவருக்கு இப்படிக்கோரும் அருகதை இருக்கிறதா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.