Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணு குண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் - அப்துல் கலாம்..!

Featured Replies

அணு குண்டு, ஏவுகணை தயாரிப்பு அவசியம் - அப்துல் கலாம்..! அப்பத்தானே பல லட்சம் கோடிகளை ஆட்டையப் போடலாம் - ஈழதேசம்..!

adpul%20kalaam.jpgகாரைக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் சந்திப்பில் தான் இவ்வாறு கூறியுள்ளார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். நாட்டை வலிமைப்படுத்த, பாதுகாக்க அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் மிக அவசியம் என்றார். அப்படியெனில், அணுகுண்டுகளும் ஏவுகணைகளும் இல்லாத நாடுகள் அனைத்தும் வலிமையற்ற பாதுகாப்பு அற்ற நாடுகள் என்று கொள்ள முடியுமா..? அதெல்லாம் ஒன்றும் கிடையாது. அணுகுண்டு தயாரிக்கும் அணு மின் நிலையங்கள் நிறுவியதின் மூலம் பல லட்சம் கோடிகள் பணத்தை கொட்டி இருக்கிறார்கள், இந்த பல லட்சம் கோடிகளுக்கு முறையான கணக்கு வழக்குகள் கிடையாது. பிரதமரை தவிர வேறு எந்த கொம்பனும் கணக்கு கேட்க முடியாது. இதில் இந்தியாவிற்குப் போக ரசியா நாட்டிற்கு, அமெரிக்கா நாட்டிற்கு, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அணு உலைகள் மூலம் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறது இந்தியாவில், எவ்வளவு லட்சம் கோடிகள் கொட்டப்பட்டுள்ளன என்ற கணக்கு விபரங்கள் கிடையாது. அணுகுண்டுகளின் பயனை நன்றாக அனுபவித்த ஜப்பான் நாடு கிட்டத்தட்ட தனது நாட்டில் உள்ள அணைத்து அணுமின் நிலையங்களையும் மூடிவிட்டன அல்லது மூடுவிழா நடத்தும் அளவிற்கு சென்று விட்டன.

இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 100 அணு மின் நிலையங்களை கட்டி முடித்து விடுவதற்கு சென்ற யு.பி.ஏ.அரசின் பிரதமர் மன்மோகன் சிங் பல ஒப்பந்தங்களை போட்டு விட்டார். அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரா சூழலில் சிக்கி தவிக்கும் நேரத்தில் இந்தியாவில் பல நூறு அணு மின் நிலையங்கள் கட்டுகிறார்கள் என்றால் அது இந்திய மக்களின் நன்மைக்கு என்று நினைப்பது எவ்வாறு பெரிய முட்டாள்தனமோ அதுபோன்றது தான் இந்த நினைப்பும். இவ்வாறு இந்திய அணுமின் நிலையங்களில் கொட்டப்படும் பல லட்சம் கோடிகளை அந்நிய நிறுவனங்களுக்கு வாரியிறைத்து விட்டு கமிசனாக கொஞ்சம் கோடிகளை பெறுவது ஒன்று தான் அணுமின் நிலையம் கட்டுவதின் முக்கிய நோக்கமே, அடுத்ததாக செறிவூட்டப்பட்ட புளுடோனியத்தை மேற்கண்ட நாடுகளுக்கு அளித்துவிட்டு, பரிசாக அணுக்கழிவுகளை இந்திய மண்ணில் புதைத்து விடுவது.

இதைப் போன்றது தான் ஏவுகணை தயாரிப்பும்..? 5000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளால் எந்தவித பயனும் கிடையாது என்றே சொல்லலாம். புதிது புதிதாக ஏவுகணைகள் செய்து, வானவெளியில் பறக்கவிட்டு கரியாக்கவே பயன்படும். இதுவரை கண்டுபிடித்த, தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் எல்லாம் கொடோன்களில் துருப்பிடித்து, காயலங்கடைக்குக் கூட பயன்படாத நிலையிலேயே உள்ளன. இந்தத் துறையிலும் பல லட்சம் கோடிகள் கொட்டப்படுகின்றன, அணு உலையைப் போலவே கணக்கு எழுத வேண்டிய தேவை கிடையாது, இவ்வளவு செலவு செய்துள்ளோம் என்று சொன்னால் போதுமானது.

அப்படியென்றால் பத்து ரூபாய் செலவு செய்து விட்டு பத்து லட்சம் செலவு செய்துள்ளோம் என்று சொல்வார்களா மாட்டார்களா..?

அந்நிய நாடுகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் கலாம். அணுகுண்டுகள் ஏவுகணைகள் இல்லாத நாடுகள் எல்லாம் பாதுகாப்பு அற்ற நிலையிலா உள்ளன..? பக்கத்து நாடுகளிடம் நட்புணர்வுடன் உறவுகளை வைத்துக்கொண்டால் ஒரு துப்பாக்கி ரவை கூட தேவையில்லை. ஆயுதங்கள் தாயரிக்க வேண்டும், அதில் பல லட்சக்கணக்கில் பணத்தை சுருட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் உறவு வைத்துக் கொண்டால் பக்கத்து நாடுகள் எல்லாம் எதிரி நாடுகள் தானே. அணு மின் நிலையங்களுக்கும், ஏவுகணை சோதனை என்ற பெயரில் செலவிடப்படும் பணத்தை, நாட்டில் கக்கூசு கட்டி விட்டாலே போதும்,சுத்தமான ஆரோக்கியமான இந்தியர்கள் உருவாகி வருவார்கள். இந்திய திருநாடும் மனம் கமழ திகழும் என்று நாம் சொன்னால் தேடிவந்து உதைக்க மாட்டார்களா என்ன..?

இறுதியாக, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு மாணவரும் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கூறியுள்ளார். சுற்றுச் சூழல் பாதுகாக்க வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் கூடி பேசினார்கள்.கோபன் ஹேகன் மாநாட்டில் பேசிய பொலிவிய அம்மையார் இமா மொரல்ஸ் இவ்வாறு கூறினார் மாநாட்டின் வெளியே, உலகில் உள்ள முதலாளித்துவ அரசுகள் அதாவது இன்றைய கார்ப்பரேட் அரசுகள் என்று ஒழியுமோ அன்றுதான் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றார். நம்ம கலாம் அவர்கள் 10 மரக்கன்றுகள் வைத்தால் அல்லது நட்டால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் என்று சொல்வது எவ்வளவு பெரிய மோசடித்தனம்..?

கார்ப்பரேட் அரசுகள் கலாம் போன்ற கார்ப்பரேட் அறிவாளிகளை உருவாக்கி பேச வைக்கிறார்கள். கலாம் எவ்வளவு அறிவுத்தனமாக பேசினாலும், திரு சீமான் கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் மௌனமாக உள்ளார். வைக்கோ கேள்விகள் கேட்டார், அதற்கு கலாம் அது அவர்கள் விமர்சனம்,கருத்துச் சொல்ல உரிமை உண்டு என்றார். "அதற்கு இது பதில் இல்லையே" என்று புலிகேசி கேட்டது தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

மாயாண்டிக்கருப்பு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கள் கருத்துக்கு... அகிம்சையின் வழியில் வந்த அழிவியல் விஞ்ஞானி அவர்களே..!

எனியும் காந்தியமும்.. பஞ்ச சீலமும் பேசி ஏமாற்ற..... சீனாக்காரனும்.. பாகிஸ்தான்காரனும் முட்டாள் இல்லை என்று விளங்கிட்டுது.. ஆனால் ஈழத்தமிழங்க மட்டும் இன்னும்.. சிங்களவனோட... காந்தியம்.. பஞ்ச சீலம் என்று ஒரு போர்வை போர்த்திக்கிட்டு வாழனுன்னு சொல்லிறீங்க. அது ஏன்னா அவனட்ட அணு குண்டும் இல்ல.. ஏவுகணையும் இல்ல என்று உங்களுக்கு நல்லா தெரிஞ்சு போச்சுது.. அதனால தான்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சையில் பெற்ற இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க அணுகுண்டு தேவைப்படுகிறது.ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே!!!இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எத்தனை நாடுகள் இநு;தியாவுக்கு நட்பு நாடுகள்? சிறிலங்கா உட்பட எவையுமே இல்லை என்பதுதான்யதார்த்தம்.நட்பு நாடாக இருக்கக் கூடிய ஒரேயொரு நாடான தமிழ்ஈழத்தையும் அவர்களே பகைநாடாக்கி விட்டார்கள்.இந்த இலட்சணத்தில் வல்லரசுக்கனவு வேற!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிடம் அனு ஆயுதம் இருக்கும் போது இந்தியா அனு ஆயுதம் வைத்து கொள்ளாமல் இருந்தால் தனக்கு தானே ஆப்பு வைத்து கொள்ளுதலே ஆகும். வளர்க இந்தியாவின் சுய சார்பு ஆயுத வளர்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு நாடுகளின் நட்பு இறக்குமதி ஏற்றுமதி சமாச்சாரங்களை பொருத்து இருக்கிறது. இதில் கொள்கைகளுக்கு இடம் இல்லை.

அண்டை நாடு நட்பு எல்லாம் வியாபாரம் நிமித்தமே. தனி இரு நபர்களின் நட்பே சுயநலம் கருதி என வரும் போது நாடுகளுக்கிடையே எப்படி எதிர்பார்க்க முடியும்.?

பஞ்ச சீல கொள்கை எல்லாம் 90களுக்கு முன்பு தான். பஞ்சசீலம் சோசலிஸம் பேசி பஞ்சத்தி அடிபட்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை இந்திய ஜனாதிபதியாக வரவேண்டும் என்றால்

சும்மாவா எதாவது ஒரு குண்டைப் போட்டால்த்தான் வரலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.