Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்க கொடி விவகாரம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது!

Featured Replies

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் யாழ்.மேதின விழாவில் சிறிலங்கா தேசிய கொடியை தூக்கி பிடித்த விடயம் இன்று கொழும்பில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பெரும் பூகம்பமாக வெடித்தது.

சம்பந்தன் அதற்கு சொன்ன அதிர்ச்சி தரும் தகவல்களும், மாவை சேனாதிராசா, சிறிதரன், அரியநேந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் காரசாரமான விவாதங்களும் இன்னும் சில மணிநேரங்களில் தினக்கதிரில் விரிவாக வெளிவர உள்ளது.

எதிர்பாருங்கள்……..

http://www.thinakkathir.com/?p=36138

சிங்க கொடி விவகாரம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழு கூட்டத்தில் வெடித்தது!

இதில் வேடிக்கை பார்க்க ஒழித்திருந்த சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைகூலிகள், ஒட்டுண்ணிகள் அனைவரும் வெடித்துச் சிதறிப்போனர் - என்றும் வரும்!!!

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எழுதிய தினக்கதிருக்கும் இன்று எழுதும் தினக்கதிருக்கும்

நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

தவறுகளை உணர்ந்து உண்மைகளை எழுதுபவர்களுக்கு

வாசகர்கள் ஒரு சந்தர்ப்பம் அளிப்பதில் தவறில்லை.

உண்மைகள் எப்போதும் எப்படியும் வெளிவரும்.

அதுவரை காத்திருப்போம்

கூட்டமைப்பு பிளவுபடாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்துகொண்டே இன்னொரு பதியத்தக்க கட்சியை முன்னிலைப்படுத்தி தேர்தலில் நிற்கவேண்டும். ஆனால் இந்த கொடிவிவகாரம் தேர்தலையோ அல்லது கூட்டமைப்பையோ பலவீனப்படுத்திவிடும் என்று சொல்லி, தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் அவசரப்படக்கூடாது. 1975இல் SJV அரசியல் அமைப்புக்கு விசுவாசமாக பதவி பிரமாணம் எடுக்க முடியாது என்று விலகி தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் சென்றார். சம்பந்தர் சிங்கக்கொடி காட்டியதால் அவர் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளமல் இருக்கிறார் என்பது அர்த்தமில்லாத கதை. நமது யாழ் கள உறவு டாம் கூட இப்படி தவறு விட மாட்டார்.

அதோ அவசரத்தில் தினக்கதிரில் தனக்கு மகிழ்வளிக்கத்தக்கதொன்றை கண்டவுடன் செய்தி முழுவதாக வெளிவரும் முன் இங்கே கொண்டு வந்து இணைத்துவிட்டார். அது அவரின் பிழை அல்ல. இலகு ஆட்களை நோக்கியே தமிழ் ஊடகங்கள் சுடசுட செய்தி எழுதி போடுகிறார்கள். அதற்கு டாம் என்ன பண்ண முடியும். சம்பந்தர் சொல்லாமலே, சிங்ககொடி விவகாரத்திற்கு மாவை தான் தனிய மன்னிப்புக் கேட்டது. அத்துடன் மவை நிறுத்தியிருந்திருக்கலாம். அதன் பிறகு பாராளுமன்றக்குழுவோ அல்லது இன்னொரு உயர்மட்டக் குழுவோ இதைப்பற்றி சம்பந்தருடன் பிரத்தியேகமான பேச்சு வார்த்தை நடத்தியிருந்திருக்கலாம். இவ்வளவு சோ காட்டலுக்கும் பிறகுதான் மாவைக்கு தான் அதை சாம் அண்ணனுடன் தனியேதான் கதைத்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. சரி அத்துடனாவது இதை பெரிது படுத்தாமல் விட்டுவிடுவாராக. சம்பந்தர் இல்லாவிட்டால் அடுத்தமுறை திருகோணமலையில் மாவைதான் தேர்தலுக்கு நிற்கவேண்டும்.

சம்பந்தர் சிங்ககொடி பிடித்ததால், கூட்டமைப்புக்கு வாக்களிக்க விரும்பாமல் டக்கிக்குதான் தமிழ்மக்கள் வாக்களித்து போடப்போகிறார்கள் என்று மாவை பயங்கொள்வது அவசியமில்லாதது. இது புலம் பெயர் மக்களுக்கு விருப்பமில்லாத செய்தியாக இருக்கலாம்.கூட்டமைப்பு, தாயகத்து நிலைமைகளுக்கேற்பத்தான் நடந்து கொள்ளவேண்டும். இருந்தாலும் சம்பந்தர் தலைமையை கட்சிமீது கொண்டுநடத்த சரியான முடிவுகள் எடுக்க வேண்டும். பீரிசு, மகிந்தா தன்னிடம் அமெரிக்காவுக்கு சொல்லும்படி ஒன்றைக்கூறிவிட்டு அதன் பின் அவ்வாறு நடந்து கொள்ள மறுத்துவிடடதாகவும் தனக்கு இனி கில்லரி கிளின்ரனை எப்படி போய் பார்க்க முடியும் என்று பேசினார். ஆனால் அவர் ஜெனீவாவில் சோபாக்கள் கிளீன் பண்ண வைத்ததிலிருந்து, இவரை அமெரிக்கா போ என்று மகிந்தா சொன்னால் போகாமல் தப்ப முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதிலிருந்து இவரை யாரும் காப்பாற்ற முடியாது. இந்த முகத்துடன்தான் அவர் , தாங்கள் செய்த மிகப்பேரிய அவல நாளான மே-18 அன்று, உலத்தமிழர் சர்வதேசம் முழுவதும் துக்கதினம் கொண்டாடும் போது, மான ரோசமில்லாதவராக கில்லரி கிளின்ரனை சந்திக்க போகிறார். இருந்தும், இவ்வளவு இழிநிலையிலும் இவரை கில்லரி சந்திப்பா, ஏன் எனில் இவர் இலங்கை அரசின் பிரதிநிதி. இப்படி ஒரு ஆழுமை இல்லாத நிலையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தி சம்பந்தரால் உலக அரசியல் வாதிகளை சந்திக்க முடியாது. பலர் பீரிசுவின் நிலையை அரசுக்காக சம்பந்தருக்கும் ஏற்படுத்ததான் முயல்கிறார்கள். அதை சம்பந்தர் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக அவரை திமிர்த்தனம் என்றோ இறுமாப்பென்றோ தமிழ்ப்பத்திரிககைகள் விவரிக்க முயலக்கூடாது. அவருடன் பேசிய அமெரிக்க, இந்திய அரசியல்வாதிகள் அவரைப்பற்றி அப்படிக்கூறவில்லை. எனவே மாவை தெரிந்தோ தெரியாமலோ கவனமில்லாமல் நடக்க கூடாது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.