Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்சுவை கதம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கதம்பம் இதில் நான் வாசித்து ரசித்தவற்றோடு என் கருத்துக்களையும் சேர்த்து தருகிறேன்;

"ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வாறேன்னு சொல்றீயே! வெட்கமாயில்ல"

"நீங்க தானே சார் சொன்னீங்கள் விடை தெரியலேன்னு முழிச்சிட்டு இருக்காதேன்னு" :D

உங்க பையன் என்னை எருமை மாடுன்னு சொல்றான்

ஏன்டா பெரியவங்களை பெயரை சொல்லிக் கூப்பிடக் கூடாதுன்னு எத்தனை தட‌வை சொல்லி இருக்கேன் :lol:

ஆசிரியர்;ஒரு மணி நேர‌ம் பாட‌ம் நட‌த்தினேன் உங்களுக்கு என்ன புரிந்தது?

மாணவர்; பொறுமையாக இருப்பது எப்படின்னு சார்

.....................................................................................................................................................

மருத்துவ பொன்மொழிகள்;

நோயின் தந்தை யாராகவும் இருக்கலாம் ஆனால் தாய் உணவுக் கோளாறு தான்.

நல்ல காற்று ஆயிர‌ம் மருந்திற்கு சமம்.

வயிற்றுக்கு சாப்பிடாதே!வாழ்வதற்கு சாப்பிடு!

கொழுத்தால் கொள்ளு திண்ணு!

இளைத்தால் எள்ளு திண்ணு!

நல்லாரைக் காண்பதும் நன்று!

வல்லாரை திண்பதும் நன்று!

பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் உணவு அருந்தலாம்.

சுத்தமான தண்ணீரே சுத்தத்திற்கு முதல் மருந்து

அளவுக்கு மீறிய செல்வமும் ஆபத்து

அளவுக்கு மீறிய வறுமையும் ஆபத்து

.........................................................................................................................................................

திருமணத்தில் தாலிக்கு மூன்று முடிச்சு போடுகிறார்களே ஏன்?

தூக்குக் கைற்றில் கூட‌ மூன்று முடிச்சு தான்

மணத்தைப் பார்த்து பூவெடு;

நிலத்தை பார்த்து பயிரிடு;

தர‌த்தைப் பார்த்து பொருலெடு;

தாயைப் பார்த்து பெண்னெடு

மனைவி ஒரு கம்பளம் மாதிரி அதை இழுத்திப் போர்த்திக் கொண்டால் தொந்தர‌வாக இருக்கிறது

விலக்கிக் கொண்டால் குளிர் வாட்டுகிறது

என் சக்திக்கு மீறிய எதையும் நான் செய்வதில்லை என்றார் அடிக்கடி ஒருவர்

அது சரி அப்படித் தானே இருக்கனும் என்றேன்...பிறகு தான் தெரிந்தது அவர் மனைவியின் பெயர் சக்தி என்று :lol:

தொடருங்கோ . எழுத்துப்பிழையளையும் கொஞ்சம் கவனியுங்கோ . மற்றது சொன்னதில் உங்கடை கருத்துகளை காணேலாமல் கிடக்கு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவத்தை தளுவியவர்களை சைவர்கள் என்கிறோம்.சைவர்களின் சின்னம் திருநீறாகும்.நீர் என்டால் பஞ்ச‌ பூதங்களில் ஒன்றான தண்ணீர் தான் ஆனால் திருநீறு என்டாலோ அது விபூதியைக் குறிக்கும்.விபூதி என்ட‌ சொல்லும் ஒரு கார‌ணப் பெயர் தான்.அதைப் பிளந்து பார்த்தாலே கார‌ணம் விளங்கி விடும்.நமது உட‌லானது பஞ்ச‌ பூதங்களால் ஆனது.சுருக்கமாக "பூதி" என்பர்.இந்தப் பூதியில் திருநீறு சேர்ந்து விடும் போது அது விபூதி ஆகிறது.அதாவது விருத்திக்குரிய பூதி ஆகிறது.....[தொட‌ரும்]

........................................................................................................................................................................................................

தீமை செய்தவருக்கும் நன்மை செய்யுங்கள்...உங்கள் அச் செயல் உங்களை சிறந்த மனிதராக்கும்[நபிகள்]

இந்தக் காலத்தில தீமை செய்தவருக்கு தொட‌ர்ந்து நன்மை செய்து கொண்டு இருந்தால் நாங்கள் தான் பைத்தியக்கார‌ர்[நான்]

கேட்டதை எல்லாம் நம்பாதே...நம்பினதை எல்லாம் சொல்லாதே[புத்தர்]

மனைவியை "வாயை மூடு" என்று முட்டாள் திட்டுகிறான்..."நீ பேசாமல் இருக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய்" என்கிறான் புத்திசாலி[வாரியார்]

யாழில் உள்ள ஆண்கள் முட்டாளா/புத்திசாலியா :lol:

சுருக்கெழுத்தும்,கைரேகையும் அவற்றைப் படித்தவனுக்குத் தான் தெரியும்...மற்றவர்களுக்கு அவை வெறும் கோடாகத் தான் தெரியும்.

.........................................................................................................................................................................................................

என் பொண்டாட்டி என்னை பூரிக் கட்டையால் அடிக்கிறால் என என் மாமனாரிட‌ம் சொல்லலாம்னு போனேன்

அப்புறம்?

என் மாமனார் உலக்கையால் அடி வாங்குவதைப் பார்த்திட்டு ஓடியாந்திட்டேன் :D

எழுத்தாளர்;நான் புதிசாய் ஒரு புத்தகம் வெளியிட‌லாம் என்று இருக்கேன்

கடைக்கார‌ர்;ரொம்ப நல்லதாய் போச்சுது எனக்கு பொட்டலம் கட்டத் தேவைப்படும் :rolleyes:

வேலை,வெட்டி இல்லாமல் சுத்திக்கிட்டு இருந்த உங்கள் பையன் இப்ப என்ன பண்ணுறான்?

உங்க பொண்ணை லவ் பண்ணுறான் :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு நான் கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறன்.சந்தோசத்திற்கு காரணம் என்ட நண்பரை ஒருவரை நீண்ட நாள் கழித்து சந்தித்தது ஆனால் அதில் கவலை என்ன என்டால் அவருக்கு என்னோட நீண்ட நேரம் செலவழிக்க முடியாமல் போய் விட்டது

என்னில பிழை இல்லை நான் இன்டைக்கு அவரை சந்திப்பதற்காக வேலையில் லீவு எல்லாம் எடுத்தேன் ஆனால் அவர் தான் பிசி...அவருக்கு நண்பர்களும்,சொந்தமும் அதிகம் என்பதால் எனக்கு 2 மணித்தியாலம் தான் ஒதுக்கினார்[ஆனால் முதலில் 4,5 மணித்தியாலம் என்னோட‌ செலவழிக்கிறது என்டு சொன்னார் ^_^ ]

இதையும் விட அவர் என்னை சந்திக்காமல் விட்டு இருக்கலாம் :o ...நான் அவருக்கு மினக்கெட்டு கட்லட்,ரோல்ஸ் எல்லாம் செய்து கொண்டு போனனான் ஆனால் அவர் ஒன்று தான் சாப்பிட்டவர்.அவர் ஏற்கனவே சாப்பிட்டுட்டுத் தான் வந்தவராம் அத்தோடு பின்னேரம் ஒரு வீட்டை போய் சாப்பிட வேணுமாம் அதை விட இரவு என்னும் இரண்டு பேர் வீட்டை போய் சாப்பிட வேணுமாம்[பெரிய பிரைம் மினிஸ்டர் என்ட நினைப்பு :lol: ]அப்படி போகாட்டில் அவர்கள் குறை நினைப்பினமாம் ஆனால் நான் மினக் கெட்டு செய்திட்டு போனதை தான் சாப்பிட‌வில்லை என்ட‌ ஒரு கவலையும் இல்லை.நான் தானே என்னத்தை கோவிக்கப் போறன் என்ட‌ அலட்சியமோ அல்லது உன்னை எல்லாம் மனிதராய் மதித்து சந்தித்ததே பெரிது அதற்குள் வேற சந்திப்பு நேர‌ம் காணாது,கொண்டு வந்ததை சாப்பிடேல்ல என்ட‌ கதை வேற என்டு நினைத்தாரோ தெரியாது :D

நான் என்ட‌ அம்மா,அப்பாவை விட‌ கூட‌ப் பிறந்த சகோதர‌ங்களை விட‌ அதிக பாச‌மும்,அன்பும் வைத்தது இவரில் தான்...அவருக்கும் என்னில் பாச‌ம் இருக்கும் இல்லா விட்டால் அவ்வளவு பிசியிலும் என்னை சந்தித்திருக்க மாட்டார்...அடுத்த முறை வந்தால் என்னோட‌ இர‌ண்டு,மூன்று நாள் செலவழிக்கிறது என்டு சொல்லியிருக்கிறார் பார்ப்போம்...அடுத்த முறை அவர‌து வர‌வை ஆவலோடு காத்திருக்கும் :) .......................ர‌தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.