Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப் பயணம் தொடர்கிறது – ஏ9 பாதை ஊடாக....

Featured Replies

என்னுடைய கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் படையினன் மிகவும் இளமையாகவும் என்னை விட குள்ளமாகவும் இருந்தான். முகத்திலும் ஒரு அப்பாவித்தனம் தெரிந்தது. யுத்தத்தில் என்னவெல்லாம் செய்திருப்பான் என்பதை முகத்தை வைத்துக் கணிப்பது கடினமாக இருந்தது.

„இதிலே ஓடுவது ஜேர்மனிய நேரமா' என்று அவன் என்னிடம் ஒரு புன்னகையோடு கேட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன். நான் இலங்கை நேரத்திற்கு கடிகாரத்தை மற்றாமல் விட்டிருந்தேன். ஆம் இது ஜேர்மன் நேரம்தான் என்று அவனுக்கு பதிலளித்தேன். அவன் மணிககூட்டை இன்னும் நெருக்கமாக வந்து பார்த்தான்.

புலம்பெயர்ந்தவர்களிடம் படையினர்கள் அன்பாகப் பேசி அன்பளிப்புகளை பெறுகின்ற செய்திகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். இவனும் அன்பாக வேறு இருக்கின்றானே என்று சிந்தனை எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் எங்களின் வாகன ஓட்டுனர் ஒரு படை அதிகாரியுடன் அந்த இடத்திற்கு வந்தார். வாகனம் ஓட்டும் தொழிலை செய்பவர்கள் படை அதிகாரிகளை சினேகிதம் பிடித்து வைத்திருப்பது உண்டு. அந்தப் படை அதிகாரி வாகனுத்துக்குள் ஏறி அமர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட துரம் வாகனத்தை செலுத்தச் சொன்னான்.

இலங்கை அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்களின் கடவுச் சீட்டு நகலை ஓமந்தைச் சோதனைச் சாவடியில் கொடுத்து, ஒரு படிவத்தையும் நிரப்ப வேண்டும். நாங்கள் கடவுச்சீட்டை நகல் எடுத்து வரவில்லை.

புடிவத்தை நிரப்பும் கொட்டில் அமைந்திருந்த இடத்திற்கு பக்கத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லி விட்டு என்னை இறங்கி வரச் சொன்னான். என்னுடைய மனைவியின் முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது. தானும் வருகிறேன் என்றார். நான் தேவையில்லை என்று சொல்லி விட்டு படை அதிகாரியுடன் போனேன்.

என்னை அந்தக் கொட்டிலுக்குள் அமரச் சொல்லி விட்டு கடவுச்சீட்டுக்களை நகல் எடுப்பதற்கு அவன் போய் விட்டான். அங்கே இரண்டு பெண் சிப்பாய்கள் படிவங்களை நிரப்புகின்ற வேலையை செய்து கொண்டு நின்றார்கள்.

சிங்கள இராணுவத்தில் பெண் சிப்பாய்கள் இருந்தாலும், அவர்கள் போரில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டதாக குறிப்புகள் எதுவும் இல்லை. பின் தள மற்றும் அலுவலக வேலைகளையே செய்திருக்கிறார்கள். இந்த இரண்டு பெண் சிப்பாய்களின் உடைகளே அவர்களை படையினர்களாக இனம் காட்டியது. மற்றையபடி அலுவலகப் பெண்கள் போன்று பொலிவாகத்தான் இருந்தார்கள்.

அந்த இடத்தில் ஒரு பேருந்தும் நின்றிருந்தது. பேருந்துக்குள் பத்துப் பேர் வெளிநாட்டுக் கடவுச்சீட்டோடு இருப்பதாக அந்த பேருந்து நடத்துனர் சலிப்போடு பக்கத்தில் நின்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனை பேரின் படிவங்களையும் நிரப்பியபின் புறப்பட நேரமாகிவிடுமே என்கின்ற தவிப்பு அவருக்கு

அந்த வகையில் பேருந்தில் வரவில்லை என்று நிம்மதியாக இருந்தது.

அப்பொழுது என்னுடைய கடவுச்சீட்டுக்களை வாங்கிச் சென்ற படை அதிகாரி அங்கே வந்து சேர்ந்தான். என்னுடைய கடவுச்சீட்டுக்களையும் நகல்களையும் ஒரு பெண் சிப்பாயிடம் கொடுத்து விட்டு, சிங்களத்தில் ஏதோ சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

ஏற்கனவே ஓரிருவர் எனக்கு முன்னமேயே காத்திருந்த போதும், பெண் சிப்பாய் என்னை அழைத்தாள். எனக்கு அது சங்கடமாக இருந்தது. எனக்கு பக்கத்தில் நின்ற ஒரு பெரியவரைக் காட்டி „இவர் எனக்கு முன்னமேயே நிற்கின்றார்' என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னேன்.

ஆனால் அவள் மீண்டும் என்னை வரச் சொன்னாள். மீண்டும் மறுத்து வாதிட்டுக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகக் படவில்லை. போய் அவள் முன் அமர்ந்தேன். ஓரிரு தமிழ் சொற்கள்தான் அறிந்து வைத்திருந்தாள். ஆங்கிலமும் அப்படித்தாhன். இந்த இரண்டையும் கொண்டு படிவத்தை நிரப்பி முடித்தாள்.

ஜேர்மனி முகவரி, தொழில், இலங்கையில் எங்கே வசிக்கின்றோம், எங்கே போகிறோம், ஏன் போகிறோம் என்கின்ற விபரங்கள்தான் அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டிருந்தன.

புடிவத்தில் கையெழுத்திட்டு விட்டு, கடவுச்சீட்டுக்களையும் வாங்கிக் கொண்டு மீண்டும் வாகனத்திற்கு திரும்பினேன். என்னுடைய மனைவியின் முகத்தில் நிம்மதி தெரிந்தது.

.........

வாகனம் ஏ9 பாதையின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தது. பாதை திருத்தும் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால் வேகமாகச் செல்ல முடியவில்லை. தற்பொழுது இருக்கும் பாதையை விட மூன்று மடங்கு பெரிதாக பாதையை மாற்றுவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

இந்தப் பாதை அகலப்படுத்தும் வேலைக்காக பல வீடுகளும் இடிக்கப்பட்டிருந்தன. பொதுவான மக்களை வெகு குறைவாகவே காணக் கூடியதாக இருந்தது. பொது மக்களை விட படையினரே அதிகமாக இருந்தார்கள். நூறு மீற்றருக்கு ஒரு படைத்தளம் அமைந்திருந்தது.

ஏ9 பாதையில் இவ்வளவு படையினரை குவித்திருப்பதைக் கவனித்த நான், „காடுகளுக்குள்ளும் படை முகாம்கள் இருக்கின்றனவா' என்று வாகன ஓட்டுனரைக் கேட்டேன்

„இல்லை, பிரதான வீதிகளில்தான் முகாம்கள் இருக்கின்றன, காடுகளுக்குள் முகாம் அமைத்தால் புலிகள் வந்து தாக்கி விடுவார்கள் அன்று அவர்களுக்குப் பயம்'

வுhகன ஓட்டுனரின் இந்தப் பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆயினும் தொடர்ந்து இது பற்றி;க் கேட்பதை அப்போதைக்கு நிறுத்திக் கொண்டேன். எனது உறவினர்கள், நண்பர்கள் அல்லாதவர்களுடன் உரையாடுகின்ற பொது வெகு அவதானமாவே உரையாடினேன்.

முறிகண்டியில் தரித்து நின்று சிற்றுண்டியை எடுத்து விட்டு, எமது பயணத்தை தொடர்ந்தோம். கிளிநொச்சியில் நிறைய சிங்கள சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தார்கள். அப்பொழுது பள்ளிக்கூட விடுமுறையாகவும் இருந்ததால், நிறைய சிங்களவர்கள் வந்திருந்தார்கள்.

யுத்தத்தில் வீழ்ந்து போயிருந்த நீர்த் தாங்கி, இராணுவம் அமைத்த நினைவுச் சின்னம் போன்றவற்றின் பக்கத்தில் நின்ற படங்களும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனையிறவிலும் நிறைய சிங்கள சுற்றுலாப் பயணிகளைக் காணக் கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டு இலங்கையின் வரலாற்றுக் குறியீடாக விளங்கக் கூடிய கவசவாகனமும் ஆனையிறவில் நின்றது.

இந்தக் கவசவாகனத்தை விடுதலைப் புலிகள் உருவாக்கி „ஆகாயம் கடல் வெளிச் சமரில்' பயன்படுத்தினார்கள். ஒரு சிறிலங்காப் படையினன் துணிவாக மேற்கொண்ட தாக்குதலில் அந்தக் கவசவாகனம் செயல் இழந்து போனது. அது சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

ஓயாத அலைகள் மூன்றில் ஆனையிறவுத் தளத்தைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் இந்தக் கவசவாகனத்தையும் மீட்டார்கள். அதன் பிறகு இறுதியாக நடந்த யுத்தத்தில் சிங்களப் படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டது.

சுருக்கமாக, அது முதலில் தமிழர்களிடம் இருந்தது. சிங்களவர்களால் கைப்பற்றப்பட்டது. மீண்டும் தமிழர்களால் மீட்கப்பட்டது. பின்பு மீண்டும் சிஙகளவர்களால் கைப்பற்றப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக தொடரும் தமிழர் தாயகத்தின் வரலாற்றுச் சக்கரத்தை குறியிடுவதற்கு இந்தக் கவசவாகனத்தை விட நல்ல உதாரணம் இருக்க முடியாது.

எனக்கும் அந்தக் கவசவாகனத்தின் முன் நின்று படம் எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஆயினும் பல சிங்களவர்கள் மட்டும் படம் எடுத்துக் கொண்டிருந்த நிலையில் நான் அதில் போய் படம் எடுப்பது சந்தேகத்தை உருவாக்கலாம் என்பதால் என்னுடைய ஆவலை அடக்கிக் கொண்டேன்.

ஆனையிறவைத் தாண்டி வாகனம் வேகமாக யாழ்ப்பாணத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தது. யாழ்ப்பாணமே தலைகீழாக மாறி விட்டது என்று பல இடங்களில் வாசித்திருந்ததால், மாறிய யாழ்ப்பாணத்தை பார்க்கின்ற ஆவல் எனக்குள் பெருக்கெடுத்தது...

தொடரும்

முன்னைய பதிவு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103879

பேருந்துக்குள் பத்துப் பேர் வெளிநாட்டுக் கடவுச்சீட்டோடு இருப்பதாக அந்த பேருந்து நடத்துனர் சலிப்போடு பக்கத்தில் நின்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இத்தனை பேரின் படிவங்களையும் நிரப்பியபின் புறப்பட நேரமாகிவிடுமே என்கின்ற தவிப்பு அவருக்கு

அந்த வகையில் பேருந்தில் வரவில்லை என்று நிம்மதியாக இருந்தது.

அப்பொழுது என்னுடைய கடவுச்சீட்டுக்களை வாங்கிச் சென்ற படை அதிகாரி அங்கே வந்து சேர்ந்தான்.

உங்களுக்காவது பறவாயில்லை . எனக்கு தனியார் பஸ்காறன் காசையும் வாங்கிப்போட்டு ஓமந்தையிலை இரவு ஒருமணிக்கு சாமானுகளோடை விட்டிட்டுப் போட்டான் . எம்ஓடி எடுக்காததாலை ஆமிக்காறன் வேறு நோண்டி நொங்கெடுத்து செரியா நொந்துபோனன் . ஏ 9 பாதையில போறியள் உப்பு புளி காரம் குறைவாய் கிடக்கு சபேசன் . தொடர்ந்து போங்கோ .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

பயணக் கட்டுரையில், அதுவும் தனிப்பட்ட பயணத்தில் உப்பு புளி காரம் அதிகமாக எப்பொழுதும் இருக்காதுதான். என்றாலும் கொஞ்சம் தூவ முடியுமா என்றும் பார்க்கிறேன். சில தொடர்களிற்கு பின்பு, கிழக்கில் மேற்கொண்ட பயணத்தை எழுதுகின்ற போது அது நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.