Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள வீரர்கள்: தாம்பரம் விமானதள பாதுகாப்புக்கு ராணுவம் குவிப்பு... பெரும் பதட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06-thambaram-airforce-300.jpg

[size=4]சென்னை: சிங்கள விமானப்படை வீரர்கள் 9 பேர் தொடர்ந்து தாம்பரம் விமானதளத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களை இப்போதைக்கு மத்திய அரசு வெளியேற்றாது என்று கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கட்சியினரும் தாம்பரம் விமானதளத்தை முற்றுகையிடக் கூடிய சூழல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தாம்பரம் விமானதளத்திற்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்களும் துப்பாக்கி சகிதம் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் விமானதளம் அமைந்துள்ள கிழக்கு தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது.[/size]

[size=3][size=4]சென்னை, கிழக்கு தாம்பரத்தி்ல இந்திய விமானப்படையின் பயிற்சித்தளம் உள்ளது. இங்கு இந்திய விமானப்படையினருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போக வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சார்க் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கை வீரர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கிறார்கள்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி பிடித்த சிங்கள விமானப்படைக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி தருவது என்பது தமிழர்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயல் என்று பலமுறை மத்திய அரசுக்கு கட்சிகள் கண்டனம் தெரிவித்தபோதும் மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதமாக சிங்கள வீரர்களை இங்கு அனுமதித்து வருகிறது.[/size][/size]

[size=3][size=4]இந்த நிலையி்ல் தற்போதும் 9 சிங்கள வீரர்கள் உள்பட சார்க் நாடுகளின் வீரர்கள் தாம்பரம் விமானதளத்தில் முகாமிட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.[/size][/size]

[size=3][size=4]இதற்கு தமிழக கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அனைவருமே கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் சிங்கள வீரர்களை வெளியேற்றும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லையாம். சார்க் நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் இவர்களைக் கூட்டி வந்ததாக ஒரு சப்பைக் காரணத்தை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.[/size][/size]

[size=3][size=4]இதனால் அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விமான தளத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் அவை குதிக்கும் நிலையும் உருவாகி வருகிறது.[/size][/size]

[size=3][size=4]இதையடுத்து தாம்பரம் விமானப்படை தளத்திற்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்று அடுக்குகளாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்ப் ரோடு என்று சொல்லப்படும் விமானதளத்திற்குச் செல்லும் நுழைவாயில் சாலையில் ஒரு போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானதளத்தின் நுழைவாயிலுக்கு சற்று முன்னதாக இன்னொரு போலீஸ் சோதனைச் சாவடி போடப்பட்டுள்ளது. நுழைவாயிலில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]போலீஸார் அந்தப் பகுதி வழியாக வரும் ஒவ்வொருவரையும் சோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.[/size][/size]

[size=3][size=4]தாம்பரத்தில் ரயில் மறியல்-30 பேர் கைது[/size][/size]

[size=3][size=4]இதற்கிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில், சிங்கள வீரர்களை வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் ரயில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...ion-157152.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

83 ,84ஆம் ஆண்டுகளிலும் இந்த விமானப்படை முகாமில் சிறிலங்கா படையினருக்கு இந்த தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது .

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

83 ,84ஆம் ஆண்டுகளிலும் இந்த விமானப்படை முகாமில் சிறிலங்கா படையினருக்கு இந்த தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது .

இந்தியா இன்னும்.... திருந்துகின்ற மாதிரி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்னும்.... திருந்துகின்ற மாதிரி தெரியவில்லை.

இப்பதான் அந்த மாநில முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார் ,எப்ப பிரதமந்திரி குரல் கொடுப்பார் ? காலம்தான் பதில் சொல்லவேண்டும்

வெளியேற்றித்தான் ஆகவேண்டும் என்று ஒரு ஜனநாயக போராட்ட வெற்றி போய் முடிய வேண்டுமென்பதிலை. இந்த தளத்தை கருணாநிதி-காங்கிரஸ் கூட்டை தமிழ் நாட்டை விட்டு ஓட்டிக்கஸ்க்க சரியான முறையில் உபயோகப்படுத்தினால் போதும். ஒன்பது சிறு விமானப்படை வீரர்களை விட கருணாநிதி- காங்கிரஸ் கூட்டு மிக மிக ஆபத்தானது. வெற்றி கருணாநிதி- காங்கிரஸ் போய்ச்சேர்வதில்த்தான் தங்கியிருக்கிறது. கருணாந்தி வெளியே வந்து தமீழீழத்திற்காக மத்திய விமானப்படை வீரர்களுடன் போரிட்டு வீரமரணத்தை தழுவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாந்தி வெளியே வந்து தமீழீழத்திற்காக மத்திய விமானப்படை வீரர்களுடன் போரிட்டு வீரமரணத்தை தழுவலாம்.

தோழர்

கருணாவை பிடிக்க எமன் வந்தால் எமன் வீரமரணம் அடைந்துவிடுவார்.. எமனை பேசியே கரெக்ட் பண்ணுவார்

உடன்பிறப்பே!! கண்டாயா தமிழின் கதியை ..

இப்போது நீ எண்ண வேண்டுமா விதியை..

சிந்திக்கவிடு உன் மதியை ..

அதனால்தான் இன்னும் பாசகயிற்றை எமன் போடாமல் இருப்பதாக பயந்து இருப்பதாக அனைவரும் பேசி கொள்ளுகிறார்கள் :icon_idea: :icon_idea:

தோழர்

கருணாவை பிடிக்க எமன் வந்தால் எமன் வீரமரணம் அடைந்துவிடுவார்.. எமனை பேசியே கரெக்ட் பண்ணுவார்

அதனால்தான் இன்னும் பாசகயிற்றை எமன் போடாமல் இருப்பதாக பயந்து இருப்பதாக அனைவரும் பேசி கொள்ளுகிறார்கள் :icon_idea: :icon_idea:

:D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரில் வைத்துப் பயிற்சி குடுக்கப் போகினமா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

http://tamilepaper.b...og-post_07.html

சிங்கள காடைய வீரர்கள் வெளியேற்றம்.

DT_07July2012.jpg

சிங்கள பயங்கரவாதியை.... தமிழ் நாட்டை விட்டு விரட்டியடிக்க பாடுபட்ட அனைத்து தமிழக கட்சி உறவுகளுக்கு நன்றி.

நாம் ஒற்றுமையாக நின்றால்.. எதையும் சாதிக்கலாம் என்பதை.... காட்டியுள்ளீர்கள்.

[size=5]இது முதல் தடவை அல்ல! கடந்த இரண்டு வருடங்களில் ஆறாவது தடவை என நினைகிறேன்!

இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் தமிழக மக்கள் தற்போது விழித்தெழ வேண்டிய தருணம்!

பெங்களூர் ஒரு வெளிநாடு என்பதை தமிழக மக்களுக்கு வட இந்தியா அரச காடுமிராண்டிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள பயங்கரவாதிகளுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சிகளை ஓடி ஓடி வழங்கும் ஒரு நாட்டின் பகுதியாக தமிழ் நாடு எப்படி இருக்க முடியும்?

இதற்கு விடை சொல்ல வேண்டியவர்கள் - தமிழக உறவுகளே![/size]

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூரில் வைத்துப் பயிற்சி குடுக்கப் போகினமா? :rolleyes:

எங்களூரில் வைத்து பயிற்சி கொடுக்காமல்,

பெண்களூரில் வைத்து பயிற்சி கொடுக்கட்டும்.

அப்ப தான்... தலைப்பா முக்கியமா, கோவணம் முக்கியமா என்று தெரியும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.