Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாயில் தமிழக மீனவர் படுகொலை- அமெரிக்க கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்ய இந்தியா வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

17-usns-rappahannock-ship.jpg

[size=4]துபாய்: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.[/size]

[size=3][size=4]சம்பவம் என்ன?[/size][/size]

[size=3][size=4]துபாய் கடற்பரப்பில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுக்காக ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பஹ்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படையினர் 5-வது படை பிரிவுக்காக எரிபொருள் ஏற்றிக் கொண்டு யுஎஸ்என்எஸ் ரப்பாஹன்னோக் என்ற கப்பல் துபாயின் ஜபேல் அலி முறைமுகம் அருகே சென்று கொண்டிருந்தது.[/size][/size]

[size=3][size=4]தமிழக மீனவர்களின் மீன்பிடி படகு, அமெரிக்க கப்பலின் அருகே சென்றபோது அக்கப்பலில் இருந்த கடற்படையினர் கண்மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர் சேகர் உயிரிழந்தார். முனிராஜ், முத்துக்கண்ணன், முருகன் ஆகிய மூன்று மீனவர்கள் படுகாயமடைந்தனர்.[/size][/size]

[size=3][size=4]வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்[/size][/size]

[size=3][size=4]இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மூன்று தமிழக மீனவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு ஐக்கிய அரபு எமிரேட் அரசிடம் இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.[/size][/size]

[size=3][size=4]கேரளாவின் கொல்லம் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலிய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இத்தாலிய கடற்படையினர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இச்சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு அமெரிக்க கடற்படையினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் வலியுறுத்தியிருக்கின்றனர்.[/size][/size]

[size=3][size=4]அறிக்கை தர உத்தரவு[/size][/size]

[size=3][size=4]இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக துபாயில் உள்ள தூதரை தொடர்பு கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பலியான மீனவர் சேகரின் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவும் காயமடைந்த மீனவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.[/size][/size]

[size=3][size=4]தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க கடற்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]சென்னை தூதரகம் இரங்கல்[/size][/size]

[size=3][size=4]இதனிடையே சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் அமெரிக்கக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் சேகர் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]

http://tamil.oneindi...ase-157853.html[/size][/size]

[size=5]ஒருவேளை அமெரிக்க மீனவரை நம்மாளுங்க சுட்டிருந்தா...?[/size]

17-indian-navy-3-300.jpg

[size=3]

[size=4]சென்னை: இந்திய மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்காக ஒரு போன் கால் மூலம் வருத்தம் தெரிவித்து விட்டது அமெரிக்கா. இந்திய அரசும், ஒப்புக்கு லேசாக கூப்பாடு போட்டு விட்டு பிறகு கப்சிப்பாகி விடும், செத்துப் போன இந்திய மீனவரின் உயிர் 'கர்சிப்' போலாகி விடும். ஆனால் இதேபோல இந்திய கடற்படை அமெரிக்க மீ்னவர் ஒருவரை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா வாயில் விரலை வைத்துக் கொண்டு அமைதி காக்குமா...?[/size]

[/size]

[size=3]

[size=4]பிழைப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் போய் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவித் தமிழர்கள் அமெரிக்கக் கடற்படையிடம் சிக்கி குண்டடியைத் தாங்கியுள்ளனர். அதில் ஒருவர் பலியாகி விட்டார். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.[/size]

[/size]

[size=3]

[size=4]எங்களை நோக்கி வேகமாக வந்தது படகு, இதனால் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அதை மதிக்காமல் படகு வந்ததால் சுட்டோம் என்று விளக்குகிறது அமெரிக்கா. அவர்கள் சொல்வது எல்லாம் சரி, அவர்கள் விடுத்த எச்சரிக்கை, இந்த மீனவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்புண்டா?... நிச்சயம் இருக்காது. காரணம், இவர்கள் ஆங்கிலம் தெரிந்திராத மீனவர்கள். மீன் பிடிக்க மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும், 'பல்லிடுக்கில் சிக்கிய பல்லி' கத்துவதைப் போல, அமெரிக்கர்கள் பேசும் முரட்டு ஆங்கிலம் இவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்காது.[/size]

[/size]

[size=3]

[size=4]சரி, வருவது தாக்குதல் நடத்தும் படகா அல்லது மீன்பிடி படகா என்று கூடவா அமெரிக்கக் கடற்படையினரால் அனுமானிக்க முடியவில்லை?. அந்த அளவுக்கா அவர்கள் பய பீதியில் மூழ்கிப் போயுள்ளனர்?. கையில்தான் நிறைய நவீன தொலைநோக்கிகளை வைத்திருப்பார்களே, அதை வைத்து சரியாக ஜூம் செய்து பார்த்திருந்தால் கூட வருவது மீன்பிடி படகு என்று தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமலா போய் விடும்?.[/size]

[/size]

[size=3]

[size=4]தங்களை நோக்கி யாராவது வந்தாலே, கொல்லத்தான் வருகிறார்கள் என்று எப்படி இவர்களாகவே முடிவெடுக்க முடியும்?, அப்படியே வந்தாலும் கூட அவர்களை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்த முயற்சித்திருக்கலாமே, சுடாமலேயே இவர்களைப் பிடித்து விசாரித்திருக்கலாமே.. இப்படி எதையுமே இந்த அமெரிக்க வீரர்கள் முயற்சிக்கவில்லையே...![/size]

[/size]

[size=3]

[size=4]இப்படி கண்டதும் சுடும் உரிமையும், கடமையும் இவர்களுக்கு மட்டும்தானா இருக்கிறது?.. ஒரு வேளை அமெரிக்கர் ஒருவரை இதேபோல நமது படையினர் சுட்டுத் தூக்கியிருந்தால் அமெரிக்கா அமைதியாக இருந்திருக்குமா?..[/size]

[/size]

[size=3]

[size=4]வெளியுறவுத்துறைத் செயலாளரை விட்டு ஒரு போன் செய்து பேசி 'ஸாரி'ங்க என்று இந்திய அரசு சொல்லியிருந்தால் அதை அமெரிக்கா அமைதியாக ஏற்றுக் கொண்டிருக்குமா? .. இறந்தவருக்காக வருத்தப்படுகிறோம், என்ன செய்வது நடந்தது நடந்து விட்டது என்று ஆறுதலாக நாலு வார்த்தை கூறியிருந்தால் அதையும் அமெரிக்கா அமைதியாகவா கேட்டுக் கொண்டிருக்கும்...?[/size]

[/size]

[size=3]

[size=4]அமெரிக்காவைப் பொறுத்தவரை அது 'எப்போதுமே' தவறு செய்யாது... ஆனால் மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு மட்டுமே.. இந்த மனோபாவம்தான் பொசுக்கென துப்பாக்கியைத் தூக்கும் தைரியத்தை அந்த நாட்டுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவும் கூட ஒரு வகையில் தீவிரவாதம்தான்..![/size]

[/size]

[size=3]

[/size]

[size=5]அமெரிக்க கடற்படை சுட்டு தமிழக மீனவர் கொலை[/size]

[size=5] துபாய் கல்ப் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் எழுதினார். இந்த கடிதத்தில் கொல்லப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் காயமுற்ற மீனவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும் மீனவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் வெளயிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜெ., கூறியுள்ளார்.

துபாயில், அமெரிக்க கடற்படை நடத்திய துப்பாக்கி்ச் சூட்டில் ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த மீனவர் சேகர் பலியானார். மற்ற 3 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.[/size]

[size=5]துபாயில் செயல்பட்டு வரும் மீன்பிடிநிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கட்கிழமை, 4 தமிழக மீனவர்கள் மற்றும் 2 ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்தவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், அப்பகு‌தி வழியே ரோந்து வந்த அமெரிக்க கடற்படை கப்பல், திடீரென்று அவர்கள் மீது இயந்திர துப்பாக்கியின் உதவியுடன் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், சேகர் என்ற தமிழக மீனவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிகாரப் பூர்வ நாளிதழ் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரிந்தது : பலியான மற்றும் படுகாயமடைந்த மீனவர்கள் யார் என்ற அடையாளம் தெரிந்துள்ளது. அதன்படி, பலியான மீனவர் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்த சேகர் என்பதும், படுகாயமடைந்தவர்கள் அதேபகுதியை சேர்ந்த முத்துமுனிராஜ், பண்டுவநாதன் மற்றும் முருகன் என்பது ‌தெரியவந்துள்ளது. இந்த தகவலலை, காரையூர் மீனவர் சங்க தலைவர் மலைராஜன் தெரிவித்துள்ளார். அவரது உடலை, நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள‌ை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மன்னிப்பு கோர மாட்டோம்- அமெரிக்கா : இத்தாக்குதல் குறித்து அமெரிக்க கடற்படை உயரதிகாரி கூறியதாவது, தாங்கள் அவர்களை இப்பக்கம் வராதீர்கள் என்று தொடர்ந்து எச்சரித்ததாகவும், அவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல், மேற்கொண்டு வந்ததன் காரணமாகவே, தாங்கள் துப்பாக்கிச் சூடு ந‌டத்தியதாக அவர் கூறினார். இதனால், தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

விரைவில் திரும்புவதாக கூறியிருந்தான் -சேகரின் தாய்: துபாயில் அமெரிக்க கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், கீழக்கரை மீனவர் சேகர் பலியானார். இந்த சோகம், அவர் சார்ந்த கிராமத்தை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், பலியான சேகரின் தாய் நாகவல்லி கூறியதாவது, கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் அவன் வேலைக்காக துபாய்க்கு சென்றதாகவும், இதுவரை ரூ. 20 ஆயிரம் மட்டுமே வீட்டுக்கு அனுப்பியிருந்தான். வேலை கடினமாக இருப்பதாகவும், உணவு சரிவர தரப்படுவதில்லை என்று தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்த சேகர், விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தெரிவித்திருந்தான். இந்நிலையில், அவன் பலியானதாக வந்த தகவல் அதிர்ச்சியளிப்பதாக அவனது தாய் நாகவல்லி கூறினார்.

இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில், தமிழக மீனவர் மீனவர் ஒருவர் பலியான சம்பவம், மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமைச்சர் கிருஷ்ணா உத்தரவு : தமிழக மீனவர் பலிக்கு காரணமான அமெரிக்க படையினர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை உ‌டனே தனக்கு அனுப்புமாறு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து தகவல்களையும் விரைந்து வழங்குமாறு, தூதரக அதிகாரிகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் கலெக்டரிடம் மனு: இறந்த சேகரின் உ‌டலை சொந்த ஊரான பெரியபட்டனத்திற்கு ( தோப்புவலசை) கொண்டு வர வேண்டும் இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவிட வேண்டும் என இவரது உறவினர்கள் மாவட்ட ‌கலெக்டரிடம் மனுக்கொடுத்துள்ளனர்.[/size]

[size=5]இந்நிலையில், அமெரிக்க கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழக மீனவருக்கு அமெரிக்க தூதரகம் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.[/size]

[size=5]http://tamil.yahoo.com/அம-ர-க்க-கடற்பட-ச-102500697.html

[/size]

இலங்கையில் இருந்தாலென்ன, இந்தியாவில் இருந்தாலென்ன துபாயில் இருந்தாலென்னெ தமிழ் உயிர் என்றால் அதுக்கு மதிப்பே இல்லை.

[size=4]பல தடவைகள் எச்சரிக்கப்பட்டும் படகு ஓடியதாயும் அதனால் சுட்டதாயும் அமெரிக்கா கூறுகின்றது. [/size]

[size=4]இந்தப் பகுதியில் கடல்கொள்ளையரும் அல் - கைடாவும் வேறு உள்ளாதாக அமெரிக்கா கூறுகின்றது.[/size]

http://www.theglobeandmail.com/news/world/us-tankers-shooting-at-sea-raises-stakes-in-volatile-gulf/article4421533/

படகைச் செலுத்தியவர் துபாய் வாசியாக இருக்கலாம். தமிழ்நாட்டு வாசிகள் இதை செய்திருக்கதாக சந்தர்பம் குறைவு. இந்த வழக்கில் தமிழ்நாட்டு மீனவருக்கு உயிராபத்தை எற்படுத்தக்தான முறையில் படகு செலுத்தபட்டிருந்தால் துபாய் மீனவர்களும் விசாரிக்கப் படவேண்டும். எவ்வளவு கிட்ட அன்னிய கப்பல் ஒன்றுக்கு அருகில் இந்த படகு சென்றிருக்க முடியும் என்பதில் வழக்கு தங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.