Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற அச்சத்தில் இலங்கை அரசு – அமெரிக்கா.

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டுவருவதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அமெரிக்கத் தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை, ஜனநாயக ரீதியாக அவர்கள் தமது மாற்று நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் பலவிதமான முட்டுக்கட்டைகள் இருக்கின்றன என்றும் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவரிடம் எடுத்துக்கூறியதாக யாழ் ஆயர் தெரிவித்தார்.

இலங்கையில் தமது பதவிக்காலத்தை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பற்றீஸியா பூட்டனிஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மக்கள் ஜனநாயக ரீதியாக செயற்படுவதற்கு எதிராக கழிவு எண்ணெய் வீசியடிப்பது, ஆட்களைத் தாக்குவது, அச்சுறுத்துவது போன்ற செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக ஆயர் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனப்பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

எனினும் அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. மாறாக, போருக்குப் பிந்திய அபிவிருத்திச் செயற்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள் என்ற மாயையில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிகின்றது என்றும் அமெரிக்க தூதுவர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் கூறினார்.

காணி அபகரிப்பு பற்றிய விடயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ள அமெரிக்க தூதுவர், மீண்டும் சண்டைகள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் இருக்கின்றது, இதனால் இராணுவம் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்திருக்கின்றார்.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/

இனப்பிரச்சனைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாக அமெரிக்கா கூறுகிறது.

காணி அபகரிப்பு பற்றிய விடயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்துள்ள அமெரிக்க தூதுவர், மீண்டும் சண்டைகள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் அரசாங்கம் இருக்கின்றது, இதனால் இராணுவம் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருவதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்திருக்கின்றார். http://thaaitamil.co...ோதல்-வெடிக்கும/

போரில் வென்றால் அரசாங்கம் போருக்கு பின்னால் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்தும் என்பது போருக்கு உதவும் போது பழைய ராச தந்திரிகளான அக்காசி, சொலெயிம், பிளேக் பொன்றோரின் விளக்கம். இந்த சர்வதேச மனநிலை ஏற்பட உதவியவர்கள் அரசிடமிருந்து நேரடியாக பலவகை ஊழல் பரிசில்களை அனுபவித்துவந்த நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற தரங்கெட்ட அதிகாரிகள். அரசாங்கம் எந்த வகையிலும் சமரசத்திற்கு போகத்தாரில்லை என்பதை D.S., சோல்பரி கமிசன் அமர்வுகளை பகிஸ்கரிப்பதின் மூலமே காட்டியிருந்தார். இதை பற்றி கூட்டமைப்பு போரின் போது பலருக்கு எடுத்துக்கூறியும் அவர்கள் அதை "புலிகளின் புராணம் பாடும் கூட்டமைப்பாக" கூறி தட்டிக்கழித்து விட்டார்கள். இனி இந்தியாவையோ இலங்கையை நம்பாமல் சர்வதேசம் செய்யல்படவேண்டும். இதை பற்றீசியா புட்னிக் அமெரிக்க அதிகாரிகளுக்கு விளங்கவைக்க வேண்டும்.

[size=4]அமெரிக்காவுக்கு எல்லா உண்மைகளும் தெளிவாகத்தெரியும், குறிப்பாக தமிழ் மக்கள் முழுச்சுதந்திரமாக இல்லை என்பது.[/size]

[size=4]பல இலட்சங்களை கொண்ட சிங்கள இராணுவத்தினை பொருளாதார ரீதியாக தக்கவைக்க முடியாத ஒரு நிலையை எம்மால் உருவாக்க முடிந்தால் அதுவும் இராணுவ அகற்றலுக்கு உதவும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல இலட்சங்களை கொண்ட சிங்கள இராணுவத்தினை பொருளாதார ரீதியாக தக்கவைக்க முடியாத ஒரு நிலையை எம்மால் உருவாக்க முடிந்தால் அதுவும் இராணுவ அகற்றலுக்கு உதவும்.[/size]

உண்மை.இது பல இராணுவ முகாம்களை ஒரே சமயத்தில் தாக்கி அழிப்பதற்கு சமமானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.