Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றிவளைக்கப்படும் சீனா : விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம்!

Featured Replies

[size=3]

சுற்றிவளைக்கப்படும் சீனா!

இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம் கிளம்பியுள்ளது.

[/size]

[size=3]

கடந்த நவம்பரில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்த்திய உரையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தற்போது ஆசியா நோக்கி திரும்பியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். வடக்கு ஆஸ்திரேலியாவிலுள்ள டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ளும் என்றும், அத்துடன் ஆஸ்திரேலியாவின் இதர விமான மற்றும் கடற்படைத் தளங்களை அமெரிக்க இராணுவம் அதிகமாகப் பயன்படுத்தும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஆசியாவில் வியட்நாம் போருக்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கமாகும்.

மேற்குலக நாடுகளுடனான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி பெரும்பாலும் மலேசியாவின் மலாக்கா நீரிணை (ஜலசந்தி) வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக,மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் எண்ணெய், மலாக்கா நீரிணை வழியாகக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குறுகிய பாதை கொண்ட மலாக்கா நீரிணை வழியே பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில், இன்னும் ஆழமான சுந்தா நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கும். வடக்கு ஆஸ்திரேலிய நகரமான டார்வின் இந்த நீரிணைகளுக்கு அருகாமையில் உள்ளதால்தான், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகளிலும் விமானத் தளங்களை அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் உள்ளது.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2.jpgமலாக்கா வழியாகக் கப்பல்கள் மூலம் தென்சீனக் கடல் பகுதிக்கு எண்ணெயைக் கொண்டுசெல்ல ஏறத்தாழ 1200 கி.மீ. சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதாலும், அமெரிக்காவுடன் மோதல் போக்கை தவிர்க்கும் நோக்கத்துடனும், மலாக்கா நீரிணையை மட்டும் சார்ந்திராமல் தரை வழியேயும் எண்ணெயைக் கொண்டு செல்ல சீனா முயற்சிக்கிறது. இதற்காக, வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியிலுள்ள தனது நட்பு நாடான மியான்மரின் (பர்மாவின்) கியாவ்க்பியூ துறைமுகத்தில் எண்ணெயை இறக்கி, அங்கிருந்து தரைவழியாக சீனாவின் யுன்னான் மாகாணத்திலுள்ள குன்மிங் வரை கொண்டு செல்ல தரைவழி எண்ணெய்க் குழாயை சீனா பதித்து வருகிறது. 2013இல் நிறைவேறவுள்ள சீனாவின் இப்பெருந்திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு மியான்மரைத் தன் பிடியில் விரைவாகக் கொண்டுவர அமெரிக்கா கிளம்பியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அரசுச் செயலரான ஹிலாரி, மியான்மருக்குப் பறந்து சென்று எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியையும், அந்நாட்டின் அதிபர் தியன் சியன்ஐயும்சந்தித்தார். 50ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு உயர்மட்ட அமெரிக்க அரசுச் செயலர் மியான்மருக்கு வருவது இதுவே முதன் முறையாகும்.

மியான்மரில் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் சீனாவின் செல்வாக்கை ஆசிய வட்டகையிலிருந்து அகற்றும் அமெரிக்கப் போர்த்தந்திர திட்டத்தின் ஓர் அங்கமாகவே இது நடத்தப்பட்டுள்ளது. சீன உதவியுடன் கட்டியமைக்கப்படும் மியான்மரின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பில் வைக்கவேண்டும் எனப் புதிய கெடுபிடிகளை விதித்துள்ள அமெரிக்கா, மேகாங் நதியின் கீழ் பகுதி நாடுகளுடன் அதாவது வியட்நாம், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கொண்ட, 2009இல் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட “கீழ் மேகாங் முன்முயற்சி” என்ற கூட்டமைப்பில் மியான்மரையும் சேருமாறு நிர்பந்திக்கிறது.

ஹிலாரியின் பயணத்துக்குப் பின்னர், இப்போது மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களும் அகற்றியுள்ளன. இதனால் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் முதலீடுகள் மட்டுமின்றி, இந்தியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடுகளும் மியான்மரில் பெருக வாய்ப்புள்ள சூழல் நிலவுவதாக இந்தியப் பெருமுதலாளிகளின் சங்கமான “ஃபிக்கி” பூரிக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, கடந்த ஈராண்டுகளில் பிலிப்பைன்சுக்கும் சிங்கப்பூருக்கும் அதிநவீன போர்க்கப்பல்களை அமெரிக்கா கொடுத்துள்ளதோடு, வியட்நாமுடன் கூட்டுப் பயிற்சிகளையும் நடத்தியுள்ளது. சீனாவை அடுத்துள்ள தைவானுக்கு மிகப்பெரும் அளவிலான ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. மேலும், அண்மையில் சீனாவின் நட்பு நாடான வடகொரிய அதிபரின் மறைவையடுத்து, எல்லையில் படைகளைக் குவித்துப் பதற்றநிலையை ஏற்படுத்தியுள்ளது, அமெரிக்காவின் விசுவாச நாடான தென்கொரியா. இவையனைத்தும் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பிராந்தியம் முழுவதும் அமெரிக்க இராணுவபொருளாதார மேலாதிக்கத்தை வலுவாக நிலைநாட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1.jpgஅமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார, இராணுவ உறவுகள் அண்மையில் விரிவடையத் தொடங்கியுள்ளன. கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் இராணுவ அமைச்சரான ஸ்டீபன் ஸ்மித், இந்தியாவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் உள்ள தடைகளை ஆஸ்திரேலிய அரசு அகற்றி விட்டது என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் அணு ஆயுத இருப்பு சீனாவுக்கு ஒப்பானதாக வர வேண்டும் என்பதே யுரேனிய விற்பனையின் நோக்கம் என்றும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இராணுவப் பிரச்சினைகளில் நடைமுறை ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும், பாரசீக வளைகுடாவில் உள்ள பஹ்ரைனில் அமெரிக்காவின் ஏழாம் கடற்படையுடன் இந்திய, ஆஸ்திரேலிய கடற்படைகள் முக்கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப்பெரிய கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவுமாகும். சீனாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன்தான், இம்மூன்று நாடுகளின் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதை அவர் மறுத்த போதிலும், அவரது ஒவ்வொரு அறிவிப்பும் இந்தத் திசையை நோக்கித்தான் உள்ளன.

இவையனைத்தும் அமெரிக்காவின் போர்த் தேரில் இந்தியா பிணைக்கப்பட்டிருப்பதையும், சீனாவைச் சுற்றிவளைத்துத் தாக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு விசுவாச அடியாளாக இந்தியா மாற்றப்பட்டிருப்பதையும் மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இந்தியா வல்லரசாக வளர்வதற்கு நாங்கள் உதவுவோம் என்று அமெரிக்கா கூறுவதன் பொருள், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத் திட்டத்துக்கு இந்தியா விசுவாசமாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

ஏற்கெனவே மறுகட்டுமானப் பணிகள் என்ற பெயரில் ஆப்கானிலும், கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் சோமாலியாவிலும், அமைதிப்படை என்ற பெயரில் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் அமெரிக்காவுக்கு விசுவாச சேவை செய்துவரும் இந்தியப் படைகள், இனி சீனாவுக்கு எதிரான பதிலிப் போர்களிலும் ஈடுபடுத்தப்படும். சீனா பாரம்பரிய உரிமை கோரும் தற்போது வியட்நாமால் உரிமை கோரப்பட்டுள்ள தீவுப் பகுதிகளில் இருந்து எண்ணெய் தோண்டுவதில் வியட்நாமுடன் உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளதன் மூலம், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையுடன் பகிரங்கமாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க ஆக்கிரமிப்புக்கு ஊழியம் செய்யும் இந்திய அரசு, ஏற்கெனவே ஆப்கானில் பல இந்தியர்களைக் காவு கொடுத்ததைப் போல, சீனாவுக்கு எதிரான இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இன்னும் பலரைக் காவு கொடுக்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தில் அமெரிக்காவின் அடியாளாகச் சேவை செய்வதன் மூலம் இந்திய ஆளும் வர்க்கங்கள் தெற்குதென்கிழக்காசிய நாடுகளில் தமது சந்தையை விரிவுபடுத்தி ஆதாயமடையத் துடிக்கின்றன. இதற்கேற்ப இந்திய அரசும் ஊடகங்களும் தேசபக்தியின் பெயரால் சீன எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. இந்தியாவின் அணுசக்தித் திறன் கொண்ட அக்னி5 ஏவுகணை, சீனாவைத் தாக்கி அழிக்கும் அரக்கன் என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டது. தலாய்லாமாவின் புத்த மாநாட்டுக்கு இந்திய அரசு அனுமதியளித்து சீனாவை ஆத்திரமூட்டிய அதேநேரத்தில், ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் தமிழனின் பெருமையைப் பறைசாற்றுவதாகக் காட்டிக்கொண்டு சீன எதிர்ப்பை உசுப்பி விடுகின்றன.

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-3.jpgஇந்நிலைமைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்காவின் விசுவாச நாடான பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுமிடையே அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன்விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது. இனி, பாக். மீது அமெரிக்கா அல்லது நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தினால் திருப்பித் தாக்குவோம் என்று வெளிப்படையாக எச்சரித்துள்ளார், அந்நாட்டின் இராணுவத் தளபதியான கயானி. மறுபுறம், பாக். இராணுவக் கும்பலுக்கும் சிவிலியன் அரசாங்கத்துக்குமிடையிலான அதிகாரப் போட்டியும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு அபாயமும் நீடிப்பதால், அந்நாட்டில் தீராத குழப்பமும் நிலையற்ற தன்மையும் நீடிக்கிறது.

அமெரிக்காவுக்கு நீண்டகால விசுவாச அடியாளாக இருந்த பாகிஸ்தான் மீதே அமெரிக்கா தாக்குதல் நடத்தி அந்நாட்டை உருக்குலைத்திருக்கும் போது, இந்தியாவோ கொள்ளியை எடுத்து கூந்தலைச் சொறிந்த கதையாக, நாட்டையும் மக்களையும் பேரழிவில் தள்ளிவிட்டு அமெரிக்காவின் புதிய விசுவாச அடியாளாக மாறி, தெற்காசியாவில் ‘வல்லரசாக’ விரிவடையத் துடித்துக் கொண்டிருக்கிறது.

http://www.vinavu.com/2012/01/18/china-encircled/

[/size]

[size=3]விசுவாச நாடாக இருந்த போதிலும், பாக்.கின் பெயரளவிலான சுயாதிபத்திய உரிமையை மிதித்து, அபோடாபாத் நகரில் அத்துமீறி தாக்குதல் நடத்தி, ஓசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கொன்றொழித்தன. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள வஜீரிஸ்தான் பகுதியில் நேட்டோ படைகள் நடத்தும் வான் வழித் தாக்குதலாலும், ஆளில்லா விமானத் தாக்குதலாலும் பாக். மக்கள் வாழ்வுரிமையையும் இழந்து கந்தலாகிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் 26 அன்று அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய சிப்பாய்கள் கொல்லப்பட்டு 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்படுகொலையை எதிர்த்து, நாடெங்கும் அமெரிக்கக் கொடிகளை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பெருகியதால், மக்களின் பொதுக்கருத்துக்கு எதிராகச் செல்ல முடியாமல் பாக். அரசு, ஆப்கானுக்குச் செல்லும் நேட்டோ படைகளுக்கான உணவு மற்றும் ஆயுத விநியோகப் பாதையை அடைத்து எதிர்ப்பைக் காட்டியுள்ளது. இப்படுகொலை பற்றி புலன்விசாரணை செய்யும் நேட்டோ தலைமையகத்துக்கும் பாக். அரசு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டதோடு, ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் ஆப்கான் குறித்த மாநாட்டிலும் பங்கேற்க மறுத்துவிட்டது[/size]

வினவு தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாகட்டும் என்று பாக்கிற்காக அழுகிறது.

அது அமெரிக்காவை மட்டும் சாட முயல்கிறது.

ஆனால் சீனா, அமெரிக்கா, இலங்கை, மூன்றும் ஒரேபாதையில்தான் போவன. ஆனால் நோக்கங்கள்தாம் வேறு வேறு.

சீனா தனது புதிய செல்வத்தை முதலிடுவதற்கு இடம் தேடும் நாடு. அதை தனிய மேற்கு நாடுகளின் வங்கிகளில் மட்டும் போட்டால் சில ஆபத்துக்கள் வரலாம் என்பதால் கெட்டு நொந்து போயிருக்கும் சிறு சிறு அரசுகளுக்கு கடன் கொடுக்க விளைகிறது. இந்த கடன்களை அந்த நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுடன் இணையாத அபிவிருத்தி திட்ட கடன்களாகதான் கொடுக்கிறது (அந்த நாடுகள் உணமையில் அபிவிருத்தி அடைந்து எதையாவது உற்பத்திசெய்த்தால் அது சீனாவின் ஏற்றுமதியை பாதிக்கும்). அதாவது பிள்ளை வளர்வதை விட பிள்ளையின் காலில் இருக்கும் யானைக்கால் நோய் வேகமாக வளர்கிறது. இது வளரும் பிள்ளையை ஓடியாடதபடி முடக்கி விடுகிறது. இது வரையில் சீனா தானும் இப்படிக்கொடுத்த கடன்களில் பலவற்றை இழந்தும் இருக்கிறது. World Bank, IMF போன்றவற்றிடம் நேர்ப்பாதைகளில் போக விரும்பாத நாடுகள் சீனாவின் வலைக்குள் சிக்குகின்றன.

அமெரிக்கா அரசியல் அதிகாரத்தை காட்டி, மடியை பிடித்து இழுத்து கள்ளைகொடுத்துவிட்டு மயிரை பிடிப்பது போன்ற கடன்களை கொடுத்து வருகிறது. சில நாடுகள் தாய்வான், கொறியா, யப்பான் போன்றவை அமெரிக்காவிடம் வாங்கிய கள்ளை சாராயமாக வடித்து அவர்களுக்கு திரும்ப விற்றும் விடுகிறார்கள். மத்திய கிழக்கு, தென் அமெரிக்க நாடுகள் போதை ஏறி தவறு விடுகின்றன. இவர்கள் தங்கள் மீது விழுந்திருக்கும் சுருக்கை விளங்காமல் இடை இடை இழுத்து தங்கள் களுத்தை தாங்கள் இறுக்கி கொள்கிறார்கள்.

இலங்கையும் சீனா, அமெரிக்கா போன்றே பொறுக்கி நாடுகளைத் தேடித்தான் உறவுகள் வைத்துக்கொள்ளும். அமெரிக்காவின் நோக்கமான மற்றைய நாடுகளுக்கு அரசியல் படம் படிப்பிப்பது இலங்கையின் உறவுகளின் ஒரு நோக்கம். உறவு வைத்தபின் அமெரிக்கா தனது ஆதிக்கத்தால் படிப்பித்தால், இலங்கை படிபிக்க வேண்டியவரின் எதிரியுடன் உறவை வைத்து சீண்டுவதால் தான் படிபிற்கும். அதே நேரம் சீனா கடன் கொடுக்க பொறுக்கி நாடுகளை தேடித்திரிந்தால், இலங்கை தனது அரசியல் சுதந்திரத்துடன் கடன் வாங்குவதற்காக பொறுக்கி நாடுகளைத்தேடும்.

மொத்தத்தில் மூன்று வல்லரசுகளுக்கும் பொறுக்கி நாடுகள் இல்லாவிட்டால் அரசியல் செய்யமுடியாது. இதில் அமெரிக்கா தனிய அல்ல.

Edited by மல்லையூரான்

[size=5]அமெரிக்க இராணுவ தளங்கள் உலகம் முழுதும்..[/size]

[size=4]ஈராக், ஆப்கான் போர்க்களங்களில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதால் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது. [/size]தற்போது உலகம் முழுவதையும் அமெரிக்கா மிக நவீன பாணியில் சுற்றிவளைக்க ஆரம்பித்திருப்பதாக வோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் வைன் தெரிவித்தார்.

[size=2][size=4]இவருடைய கருத்தை மேற்கோள் காட்டி டென்மார்க் பொலிற்றிக்கன் விசேட செய்தி வெளியிட்டுள்ளது.[/size][/size]

[size=2][size=4]பிரமாண்டமான படைகளை எதிரி நாடுகளை நோக்கி நகர்த்துவதைவிட உலகம் முழுவதையும் சிறு சிறு புள்ளிகள் போட்டது போல அடையாளப்படுத்தி அங்கு இராணுவத் தளங்களை அமைத்து நெருக்கி வருகிறது அமெரிக்கா.[/size][/size]

[size=2][size=4]அமெரிக்கக் கவிஞரான லிலிபாட்ஸ்சின் குறியீட்டு பெயரில் இந்த இரகசிய நகர்வு ஆரம்பித்து வெகு ஆழமாக ஊடுருவிவிட்டதாகவும் அவர் கூறினார்.[/size][/size]

[size=2][size=4]சுமார் 20 பேரில் இருந்து 200 கொமாண்டோ படைகள் கொண்ட படைத் தளங்களை அது வெகு வேகமாக நிறுவிச் செல்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர்ந்து அமெரிக்கா எடுத்துள்ள புதிய அடி இதுவாகும். [/size][size=4]இரகசியமாக அமைக்கப்பட்டு வரும் லில்லிபாட்ஸ் முகாம்களை இணைத்தால் உலகம் முழுவதையும் ஒரு வலைபோல அவை மூடிவிடும் என்பது கருத்தாகும்.[/size][/size]

[size=2][size=5]அமெரிக்கா இன்று அடைந்துள்ள புதுவகையான போரியல் வளர்ச்சிக்கு அதிக படைகள் தேவையில்லை ஆனால் உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தளங்களே அவசியமாகும். [/size][size=4]அமெரிக்காவின் இந்த நகர்வு போர்த்துறையில் அது உலகம் அறியாத வகையில் அடைந்துள்ள மர்மமான வளர்ச்சியின் இன்னொரு வெளிப்பாடே இதுவாகும்.[/size][/size]

[size=2][size=4]இதேபோல ஆப்கான் மலைக்குகைகளில் மறைந்து தாக்குதல் நடாத்தும் தலபான்களின் காலமும் வெகு விரைவில் முடிவுக்கு வரப்போவதாகவும் வேறு சில செய்திகள் கூறுகின்றன. [/size][size=4]ஒவ்வொரு மலைக்குகை பொந்துக்கு முன்னால் வெடிக்கும் குண்டுகள் ஏற்படுத்தும் பகாசுர காற்றழுத்தம் தலபான்களை குகைக்குள்ளேயே வீசியெறிந்து சங்காரம் பண்ணக் கூடியவை.[/size][/size]

[size=2][size=4]உலகின் போர் வடிவம் அடி தலையாக மாற ஆரம்பித்துள்ளது, அமெரிக்கா யாருக்கும் தெரியாமல் வேகமாக நகர்கிறது.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=110726[/size]

Edited by akootha

காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளான இந்தியப் பயங்கரவாதிகளை நம்பும் அமெரிக்கா - மூக்குடைபடப் போவது உறுதி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.