Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேள்விக் கிடாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேரடியாக சொல்லி விளங்கவைக்க முடியாத விடையங்களை எழுத்திலயாவது எங்கள் மக்களுக்கு புரிய வைப்பம் என்று தான் நான் அனேமான கருத்துக்களை எழுதுவது..ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவர்,அவர் மனதைப் பொறுத்தது.புலத்தில் இருப்பவர்கள் ஊரில் இருக்கும் உறவுகளின் கற்பனைகளுக்காக எல்லாம் பணம் காய்க்கும் மரங்களாக எல்லாம் மாற முடியாது..ஒருக்கா உதவலாம்,இரண்டு தரம் உதவலாம்,தேவை அறிந்து மூன்றாம் முறையும் கொடுக்கலாம்..ஆனால் பாவம் புண்ணியம் பார்க்கப் போய் வாழ்வு பூரா அவர்கள் வீட்டு சுமையை நாங்கள் சுமக்க முடியாது தானே..இப்படியானவர்களை என்ன செய்தால் தகும்..கொடுக்க மறுத்தால் மாமி தரவேண்டியவா தானே, அதற்கு மச்சாள் என்ன பணம் தர மறுப்பது. அல்லது அவா என்ன வீட்டில் கணக்கு,வளக்கு பார்ப்பது என்ற மற்றவர்களின் தேவை அற்ற பேச்சு,ஏச்சுக்கும் ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பலரும் தள்ளப்படுவதும் உண்டு...எனக்கும் ஊரில் இருக்கும் ஒரு குடும்பம் அபிசேகம் பண்ணிக்கொண்டு தான் இருப்பார்கள்..

பணப்பிரச்சனை தனித்து ஒரு வாழ வேண்டிய ஆணையோ இல்லை பெண்ணையோ தான் தாக்குகிறது என்று சொல்லி விட முடியாது..திருமணம் செய்து பேரப்பிள்ளைகள் கண்டவர்களைக் கூட சகோதரங்கள் ஊரில் இருந்து பணம்,பணம் என்று துரத்தி போண் அடித்து வாங்கி ஊரில் வங்கியில் சேமிப்பவர்களும் இருக்கிறார்கள்...கொஞ்சம் கேட்க மாட்டார்கள் லட்சம்,லட்சமாகத் தானே கேட்பார்கள்....கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தலைப்புக்கு கருத்து எழுதிக் கொண்டு இருக்கும் போது எனது அம்மா என் காதில் வீட்டில் மற்றவர்களுக்கு தெரியாமல் போட்ட செய்தி அண்ணா 4 லட்சம் அனுப்ப சொல்லி ஒரு வீட்டிற்கு போண் பண்ணி இருக்கிறாராம்..அந்தப் செய்தி என் அம்மாவின் காதில் போட்டதற்கு காரணம் நாங்கள் கனேடிய மண்ணிற்கு வந்த காலம் தொடக்கம் இன்று வரை ஒரு குடும்பதிற்கு கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்ததே..கிட்டத் தட்ட 18 ஆண்டுகள் கரம் கொடுத்து நின்றோம்..ஆனால் தொடர்ந்து செய்யுங்கோ நீங்கள் நினைச்சால் பணத்திற்கு மேல் எங்களை புரள வைக்கலாம் என்ற கதை வேறு...இத்தைனக்கும் பணம் கேட்டு போண் பண்ணுபவர் ஒரு அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர். அவருக்கு அந்த வருமானம் வந்து கொண்டே இருக்கும் அது போய் சேரும் இடம் வங்கி..அவர்களது பிள்ளைகள் ஆசிரிரியப் பணியில் இருப்பதனால் இப்போதைதைய ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது அனேகமானவர்கள் அறிந்து இருப்பீர்கள்.அப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்களிடம் பணம் கறந்து கொண்டே இருக்க வேணும் என்று நினைப்பவர்களும் உண்டு அதைச் செயல் படுத்துபவர்களும் உண்டு..

பிள்ளைகளுக்கு தங்கள் தகுதிக்கு மீறிய வரன்களைப் பார்த்துட்டு சீதணம் கொடுக்க வேணும் காசு அனுப்புங்கோ என்பார்கள் தற்சமயம் அந்த இடம் விடுபட்டு விட்டால் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தலையைத் தான் உருட்டுவது..5,6 மாமிமார் வெளியில் இருக்கீனமாம் ஆனால் அண்ணாவின் பிள்ளைகளுக் சீதணம் கொடுக்க மாட்டீனமாம்..இந்தக் கதையைக் கூட உடன்பிறந்தவர்களே கட்டி விட்டுட்டு கூத்து பார்ப்பவர்களும் உண்டு..அண்ணா டசின்கணக்கில் பெத்துப் போட்டு தங்கைமாரை,அவர்களது பிள்ளைகளை உரிச்சுக் கொண்டே இருக்க வேணும் என்று செய்யல் பட்டால் என்ன செய்ய முடியும்...அடுத்து புலத்தில் இருந்துட்டு ஊருக்கு போய் எங்கள் ஆண்கள்,பெண்கள் பண்ணும் லூட்டி தான் எல்லோரும் அறிந்ததாச்சே..அதை வேறு எழுதியா புரிய வைக்கனும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பங்களினுள் மட்டுமல்ல, வெளியார் - இதர உறவினர்கள், ஒட்டி உறவாடுபவர்கள்... வாங்கி மகிழ்ந்தவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நாம்தான் கொடுக்கல், வாங்கலில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவேண்டும். காசு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு செலவளிக்கும் எமது நேரம், எமது தலையில் ஏற்றுகின்ற இதர பொறுப்புக்களையும் கவனமாகக்கையாளவேண்டும்.

இத்தைனக்கும் பணம் கேட்டு போண் பண்ணுபவர் ஒரு அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர். அவருக்கு அந்த வருமானம் வந்து கொண்டே இருக்கும் அது போய் சேரும் இடம் வங்கி..அவர்களது பிள்ளைகள் ஆசிரிரியப் பணியில் இருப்பதனால் இப்போதைதைய ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது அனேகமானவர்கள் அறிந்து இருப்பீர்கள்....

கோமகன் கதையை முதலே வாசித்து விட்டேன் பதில் போட பிந்திவிட்டது

எங்களது வீட்டில், எனது நண்பன் வீட்டில், உங்களது வீட்டில் நடக்கிற கதையை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

ஒருவர், இருவரது வெளிநாட்டு வாழ்வில் எவ்வளவு தூரம் ஒரு பெரிய குடும்பம், தனது நிலையை உயர்த்த முடியும் என்று விளங்காதால்தான் அதிகமான பிரச்சனைகள் வருகிறது. ஒருவர் வெளிநாட்டிற்கு வந்த பிறகு, ஒரு முழுக்குடும்பத்தையும் பார்ப்பது எவ்வளவு நாட்களுக்கு முடியும்?

கரும்பு;

சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்கிறேன், முக்கியமாக நேரம்...ஒய்வு நேரம்,

யாழினி;

நீங்கள் சொன்ன பெரும்பாலனவற்றை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் ஆசிரியரின் சம்பளம்..பொதுவாகவே இலங்கயில், அதுவும் தமிழர் பகுதிகளில், அரச உத்தியோகம் செய்பவர்களில் நிலை அந்தோ பரிதாபம். நான் கிட்டடியில் அறியவில்லை, பொதுவாக அவர்களது சம்பளம் ~20000 , ரூபா; அது அங்குள்ள விலைவாசிகளுக்கு "மூக்கு பொடிக்கும் " காணாது. நான் சில காலத்துக்கு முன்பு -ஒரு மாதர்ற்குள், கணவனும் மனைவியும், வைத்தியராக வேலை செய்கிற ஒருவருடன் கதைத்தேன்., அவர்களுக்கு கூட, பெரியளவில் பொருளாதார நெருக்குவாரம் இருக்கிறது என்று சொன்னார். அவர்கள் கொழும்பில் வேலை செய்கிறார்கள்; 2 பிள்ளை கள், இங்கே நாங்கள் இருப்பது போல் செக் க்கு செக் இடையில் வாழ்வதாக. அந்த நிலையில் ஆசிரியர்/ ஓய்வூதியம் எடுப்பவர்களின் நிலை...:(

  • தொடங்கியவர்

எங்கட தமிழ் ஆக்கள்ள இருக்குற பிரச்சனையே இது தான் 40 வயசுக்கு மேல ஒண்டுமே பண்ண முடியதேண்ட எண்ணம் வெள்ளையல்ல பாருங்க அவங்க வாழ்கையே 40 வயசுக்கு மேல தான் ஆரம்பம் ஆனா என்ன எங்கட ஆக்கள் உடம்ப கவனிக்கிறேல்ல 35 வயசிலையே தொப்பைய தள்ளிட்டு திரிறது...

உங்கள் கருத்து வாதத்துக்கு சரி சுண்டு . ஆனால் நாப்பது வயதுக்குமேல் அவர்களுக்கு உருவாகப்போகின்ற குழந்தை என்ன பாவம் செய்தது ???

  • தொடங்கியவர்

இங்கு எண்பத்துஐந்து வயது வாலிபன் மணிக்கு நூறு நூற்று இருபது கிலோமீற்றர் வேகத்தில் ஆடம்பரமான காரில் பறப்பதை பார்க்கின்றோம். எழுபது, எண்பது வயதுகளிலேயே உலகத்தை ஆட்டிப்படைக்கின்றார்கள். இருபது, முப்பது வயதுக்காரர்களினால் செய்யமுடியாத காரியங்களை 60, 70, 80 வயதுக்காரர் செய்வதைப்பார்க்கின்றோம்.

தற்காலத்தில் எமது உடம்பின் அடி தொடக்கம் நுனி வரை எல்லாவிதமான அங்கங்களினதும்/உறுப்புக்களினதும் வயதுக்குறைபாடுகளையும், இயலாமைகளையும் மருத்துவம், வசதிகள் மூலம் நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு அல்லது பின்தள்ளிப்போடுவதற்கு முடிகின்றது.

எமது உடல்நலத்திலும், உளநலத்திலும் அக்கறை எடுத்தால், அத்துடன் வசதி, வாய்ப்புக்களை கிடைத்தால்/உருவாக்கினால் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு வயது ஓர் தடையாக அமையாது.

தமன்னா கனவில் வந்தால் காற்சட்டை நனையும் அளவுக்கு ஆள் வலுவற்று திடகாத்திரம் இல்லாமல் காணப்பட்டால், அத்துடன் புகை, மதுப்பழக்கமும் காணப்பட்டால் நிலமை பாரதூரமானதே.

வெளிநாட்டு வாழ்க்கையில் பல இடையூறுகள் உள்ளன. அதற்காக நூறுடன் நூற்றொன்றாக நாம் மடியவேண்டும் என்று இல்லையே.

குடும்பங்களினுள் மட்டுமல்ல, வெளியார் - இதர உறவினர்கள், ஒட்டி உறவாடுபவர்கள்... வாங்கி மகிழ்ந்தவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நாம்தான் கொடுக்கல், வாங்கலில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கவேண்டும். காசு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கு செலவளிக்கும் எமது நேரம், எமது தலையில் ஏற்றுகின்ற இதர பொறுப்புக்களையும் கவனமாகக்கையாளவேண்டும்.

எனது கதை 87 களில் ஒரு அறையில் இருப்பவர்களது வாழ்வியல் சம்பவங்களைச் சொல்கின்றது . அன்றய காலகட்டங்களில் புலம்பெயர்தவர்கள் , ஆங்கிலம் பேசும் நாடுகள் தவிர்ந்து பெரிய பிரச்சனையாக இருந்தது அந்தந்த நாட்டு மொழிகள் . புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு நீங்கள் சொல்கின்ற வசதிகளை தேட வாய்ப்பகள் இல்லை . அவர்களது முக்கிய தெரிவு தங்களது இருப்பை தக்கவைப்பதே !! மேலும் ஒரு பிரம்மச்சாரியின் கனவில் தமன்னா வருவதும் காற்சட்டை நனைவதும் இயல்பானதே . இல்லை அப்படியெல்லாம் வரவில்லையென்றால் அது பச்சைப்பொய் !! உங்கள் பார்வை இன்றுள்ள ஒரு புலப்பெயர்வு வசதிவாய்புகளைப் பார்க்கின்றது . எனது பார்வை 87 களில் ஒருவரது புலத்து அனுபவத்தைப் பார்க்கின்றது . வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் .

  • தொடங்கியவர்

நேரடியாக சொல்லி விளங்கவைக்க முடியாத விடையங்களை எழுத்திலயாவது எங்கள் மக்களுக்கு புரிய வைப்பம் என்று தான் நான் அனேமான கருத்துக்களை எழுதுவது..ஏற்றுக் கொள்வதும் விடுவதும் அவர்,அவர் மனதைப் பொறுத்தது.புலத்தில் இருப்பவர்கள் ஊரில் இருக்கும் உறவுகளின் கற்பனைகளுக்காக எல்லாம் பணம் காய்க்கும் மரங்களாக எல்லாம் மாற முடியாது..ஒருக்கா உதவலாம்,இரண்டு தரம் உதவலாம்,தேவை அறிந்து மூன்றாம் முறையும் கொடுக்கலாம்..ஆனால் பாவம் புண்ணியம் பார்க்கப் போய் வாழ்வு பூரா அவர்கள் வீட்டு சுமையை நாங்கள் சுமக்க முடியாது தானே..இப்படியானவர்களை என்ன செய்தால் தகும்..கொடுக்க மறுத்தால் மாமி தரவேண்டியவா தானே, அதற்கு மச்சாள் என்ன பணம் தர மறுப்பது. அல்லது அவா என்ன வீட்டில் கணக்கு,வளக்கு பார்ப்பது என்ற மற்றவர்களின் தேவை அற்ற பேச்சு,ஏச்சுக்கும் ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு பலரும் தள்ளப்படுவதும் உண்டு...எனக்கும் ஊரில் இருக்கும் ஒரு குடும்பம் அபிசேகம் பண்ணிக்கொண்டு தான் இருப்பார்கள்..

பணப்பிரச்சனை தனித்து ஒரு வாழ வேண்டிய ஆணையோ இல்லை பெண்ணையோ தான் தாக்குகிறது என்று சொல்லி விட முடியாது..திருமணம் செய்து பேரப்பிள்ளைகள் கண்டவர்களைக் கூட சகோதரங்கள் ஊரில் இருந்து பணம்,பணம் என்று துரத்தி போண் அடித்து வாங்கி ஊரில் வங்கியில் சேமிப்பவர்களும் இருக்கிறார்கள்...கொஞ்சம் கேட்க மாட்டார்கள் லட்சம்,லட்சமாகத் தானே கேட்பார்கள்....கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தலைப்புக்கு கருத்து எழுதிக் கொண்டு இருக்கும் போது எனது அம்மா என் காதில் வீட்டில் மற்றவர்களுக்கு தெரியாமல் போட்ட செய்தி அண்ணா 4 லட்சம் அனுப்ப சொல்லி ஒரு வீட்டிற்கு போண் பண்ணி இருக்கிறாராம்..அந்தப் செய்தி என் அம்மாவின் காதில் போட்டதற்கு காரணம் நாங்கள் கனேடிய மண்ணிற்கு வந்த காலம் தொடக்கம் இன்று வரை ஒரு குடும்பதிற்கு கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்ததே..கிட்டத் தட்ட 18 ஆண்டுகள் கரம் கொடுத்து நின்றோம்..ஆனால் தொடர்ந்து செய்யுங்கோ நீங்கள் நினைச்சால் பணத்திற்கு மேல் எங்களை புரள வைக்கலாம் என்ற கதை வேறு...இத்தைனக்கும் பணம் கேட்டு போண் பண்ணுபவர் ஒரு அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர். அவருக்கு அந்த வருமானம் வந்து கொண்டே இருக்கும் அது போய் சேரும் இடம் வங்கி..அவர்களது பிள்ளைகள் ஆசிரிரியப் பணியில் இருப்பதனால் இப்போதைதைய ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது அனேகமானவர்கள் அறிந்து இருப்பீர்கள்.அப்படி இருக்கையில் வெளியில் உள்ளவர்களிடம் பணம் கறந்து கொண்டே இருக்க வேணும் என்று நினைப்பவர்களும் உண்டு அதைச் செயல் படுத்துபவர்களும் உண்டு..

பிள்ளைகளுக்கு தங்கள் தகுதிக்கு மீறிய வரன்களைப் பார்த்துட்டு சீதணம் கொடுக்க வேணும் காசு அனுப்புங்கோ என்பார்கள் தற்சமயம் அந்த இடம் விடுபட்டு விட்டால் வெளிநாடுகளில் உள்ளவர்களின் தலையைத் தான் உருட்டுவது..5,6 மாமிமார் வெளியில் இருக்கீனமாம் ஆனால் அண்ணாவின் பிள்ளைகளுக் சீதணம் கொடுக்க மாட்டீனமாம்..இந்தக் கதையைக் கூட உடன்பிறந்தவர்களே கட்டி விட்டுட்டு கூத்து பார்ப்பவர்களும் உண்டு..அண்ணா டசின்கணக்கில் பெத்துப் போட்டு தங்கைமாரை,அவர்களது பிள்ளைகளை உரிச்சுக் கொண்டே இருக்க வேணும் என்று செய்யல் பட்டால் என்ன செய்ய முடியும்...அடுத்து புலத்தில் இருந்துட்டு ஊருக்கு போய் எங்கள் ஆண்கள்,பெண்கள் பண்ணும் லூட்டி தான் எல்லோரும் அறிந்ததாச்சே..அதை வேறு எழுதியா புரிய வைக்கனும்...

அப்ப நீங்களும் வேள்வி மறியா போட்டியளோ :lol::lol::D :D ?? நீங்கள் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை . எனக்கு தெரிஞ்சவற்றை தங்கைச்சிக்கு மூண்டு வரியத்துக்கு முதல் பத்துலட்சம் குடுத்து கலியாணம் செய்து வைச்சார் . பேந்து அவற்றை அம்மா தங்கைச்சிக்கு காசு கேட்டு சிபார்சு செய்தா . தங்கைச்சியார் இந்தியாக்கு போகவேணுமாம் , பரிசோதனைக்குழாய் குழந்தை பெற திரும்ப எட்டு லச்சம் அனுப்ப சொல்லி . இத்தனைக்கும் தங்கைச்சியும் மச்சான்காறனும் அரசு உத்தியோகத்தர்கள் . நண்பர் சீதனம் கொடுத்ததை குறிப்பிட்டு பேசிய பொழுது அம்மா சொன்னாவாம் " அதுவேறை இதுவேறை " எண்டு . நண்பர் அழுது அழுது வங்கியில் கடன் எடுத்து அனுப்பினார் . காரணம் வயசான வருத்தக்காற அம்மா மற்றது தங்கைச்சி சென்ரிமன்ற் :( :( .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.