Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

http://virakesari.lk/article/local.php?vid=178

தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையை கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று காலை 11மணிக்கு ஆரம்பமான போராட்டம் நண்பகல் 12.15 மணிவரையில் இடம்பெற்றது. இதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினருடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமாசவஜ கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, போன்றனவும் மேலும் சில சிங்கள முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான பலமான கோசங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் கருணா, கே.பி, பிள்ளையான் போன் றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளபோதும், அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி போராளிகளை ஏன் படுகொலை செய்கிறீர்கள் என கேள்வியெழுப்பினர்.

இதேவேளை, போராட்டத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்து தமது பங்களிப்பை செலுத்தியிருந்ததுடன், படுகொலை செய்யப்பட்ட டெல்றொக்சனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தமது பிள்ளையின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மேலும் கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் யாழ். நகரில் இடம்பெற்ற போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசியர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர். இதேவேளை இந்தப் போராட்டத்திற்கும் தடையொன்று போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்ப்புக்கள் எவையுமின்றி போராட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசனும் அரசியல் உரைகளை நிகழ்த்தினர்.

தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோரும் கூட்டமைப்பின் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சி.சிறீதரன், சரவணபவன் ஆகியோரும் வேறு பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், யாழ். உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

jaffna_arpadam_tnpf_005.jpgjaffna_arpadam_tnpf_004.jpgjaffna_arpadam_tnpf_003.jpgjaffna_arpadam_tnpf_002.jpgjaffna_arpadam_tnpf_001.jpg

http://thaaitamil.com/?p=28927

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.