Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி - இரா.சம்பந்தன் நம்பிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan12.jpg

[size=4]கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம்.

இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும்.

ஐதேக 7 ஆசனங்களில் வெற்றிபெறுமேயானால், நாம் 20 ஆசனங்களைப் பெறமுடியும்.

இதன்மூலம் கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலம் கொண்ட- ஐதேக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்த ஆட்சியை நிறுவலாம்.

ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறமுடியும் என்று நாம் நம்பவில்லை.

அவை சிறிலங்கா அரசுக்கு விசுவாசமாக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளன.

எனவே, நாம் 20 ஆசனங்களைக் கைப்பற்றினால், இலகுவாக முதல்வர் பதவியைப் பெறமுடியும்.

அதன் மூலம் எமது பலத்தை உலகிற்குக் காட்ட முடியும்.

எமக்குள்ள மக்கள் ஆணையை உலகிற்கு நிரூபிக்க இது நல்லதொரு சந்தர்ப்பம்.

அதற்கு உங்களின் வாக்குகளை எமக்கு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120816106811[/size]

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/...howtopic=106460

நல்லா அறளை பேந்து விட்டது போல???????????????????????????

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கும்!– சம்பந்தன்

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று (14.8.2012) மாலை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு இங்கு கூறினார்.

இங்கு தொடாந்து உரையாற்றிய இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கணிசமான ஆசனங்களை பெறும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்போம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நாங்கள் ஏற்னவே பேசினோம். ஏங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் கணிசமான ஆசனங்களை பெற்று ஆட்சியமைப்போம்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டிருந்தோம். இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து அரசாங்கம் நழுவிச்சேன்றதே தவிர நாங்கள் இதிலிருந்து நழுவிச் செல்லவில்லை.

தமிழ் மக்களின் பிரச்சினை சர்வேதசத்திற்கு சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கும், ஜெனிவாவுக்குமாக தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந் நிலையில் அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரவணைக்க வேண்டிய நிலையிலுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றால் அதற்கு முழுக் காரணமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் 85 வீதம் வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களையும், அம்பாறை மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களையும் பெற்றுக்கொள்ள முடியம்.

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஏன் நடாத்தப்படுகின்றது எதற்காக நடாத்தப்படுகின்றது என்பது மக்களுக்கு நன்கு தெரியும் ஆகவே தான் இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி, புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்ந்தன். டெலோ இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன், மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பிரதான பெரினவாதக்கட்சிகளும் போட்டிபோட்டு இன அழிப்பை செய்து வந்தது இதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல படுகொலைகளுக்கு அப்படி இருக்கும்போது கூட்டமைப்பு இந்த கட்சிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு நற்சான்று கொடுக்க முயல்கின்றதா ? கூட்டமைப்பு முதலில் தமது நிலைப்பாடு என்ன என்பதினை மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் அதை விட்டுவிட்டு தங்களும் குழம்பி மக்களையும் குழப்பி வருகின்றார்கள் இந்த நிலை மாறவேண்டும் அதற்க்கு தற்கால அரசியல் புரிந்த புதிய தலைமை வரவேண்டும் அதற்காக சம்பந்தன் மாவை போன்றோர் பதவியில் இருந்து விலகி வழிவிடவேண்டும் இப்படி செய்தால்தான் தமிழ்மக்களுக்கு ஒரு விடிவு வரலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.