Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ சுரங்கங்கள்: விழித்துக்கொண்ட மத்திய அரசு

Featured Replies

[size=5]ராணுவ சுரங்கங்கள் எப்படி இருக்கும்: தாமதமாக விழித்துக்கொண்ட மத்திய அரசு[/size]

நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக[size=5] பாகிஸ்தான், சீன எல்லைகளில் சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது[/size].

உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் எல்லைகளில் சுரங்கப்பாதைகளை அமைத்து பாதுகாப்பை கண்காணிக்கின்றன. சமீபத்தில் கூட இந்திய எல்லைக்குள் நுழையுமாறு பாகிஸ்தான், அத்துமீறி சுரங்கப்பாதையை அமைத்தது தெரிய வந்தது. இதே போன்ற சுரங்கப் பாதைகளை இந்தியாவும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. மத்திய ராணுவ அமைச்சகம், வழக்கம் போல் மெத்தனமாக இருந்துவிட்டு, தற்போது விழித்துக்கொண்டு உள்ளது. [size=5]இதன்படி சீனா, இந்திய எல்லைகளை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில், 18 இடங்களில் சுரங்கப் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. [/size]

[size=3]

[size=4]காரணம் என்ன: சுரங்கப் பாதைகள் அமைத்தால் நெருக்கடி நேரங்களில், விரைவாக எல்லைப்பகுதிக்கு ராணுவம், ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள், துப்பாக்கிகள், குண்டுகள் போன்றவற்றை கொண்டு செல்லவும், அவற்றை சுரங்கங்களிலேயே ஸ்டாக் வைக்கவும் முடியும். ராணுவத்தினரின் நடமாட்டத்தை, செயற்கைக்கோள் உதவியுடன் எதிரி நாடுகள் கண்டுபிடித்து விடலாம். சுரங்கம் அமைத்தால், ராணுவத்தின் நடமாட்டத்தை, எதிரிகள் கண்டுபிக்க முடியாது. வெயில், மழை, பனி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்தும் தப்பிக்கலாம். மேலும் என்.பி.சி., ( நியூக்ளியர், பயோலாஜிக்கல், கெமிக்கல்) ஆயுதங்களை பாதுகாக்கவும், கட்டுபாட்டு மையமாகவும் பயன்படுத்தலாம். [/size][/size][size=3]

[size=4]18 இடங்கள்: சீனா, பாகிஸ்தான் எல்லையின் 7 இடங்களில் முதல் கட்ட தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 11 சுரங்கங்கள் காஷ்மீர், சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநில எல்லையில் அமைக்கப்டும். [/size][/size][size=3]

[size=4]வசதிகள்: சுரங்கப்பாதைகள், பெரியதாக அமைக்கப்படும், சாலை மற்றும் இருப்பு பாதைகளும் இதனுள் அமைக்கப்படும். அப்போது தான் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியும். [size=5]இந்த திட்டத்திற்காக 26,155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2020 -2021ல் இப்பணி நிறைவடையும். [/size][/size][/size]

[size=3]

http://tamil.yahoo.com/%E0%AE%B0-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-183300978.html[/size]

  • தொடங்கியவர்

[size=4]சீன உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்துகிறது பாகிஸ்தான்

சீன உதவியுடன், அதிவேக தாக்கு‌தலுக்கு பயன்படும் கப்பலை வடிவமைக்கும் பணியில்‌ பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. [/size]

[size=4]இதுதொடர்பாக, பாகிஸ்தான் கப்பற்படையின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, சீன அரசின் உதவியுடன் நடைபெற்று வரும் கப்பலின் கட்டுமானப் பணிகள், கராச்சி நகரில் நடைபெற்று வருவதாகவும், இந்த கப்பலுக்கு பிஎன்எஸ் தேஷாத் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது சீன உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் இரண்டாவது அதிவேக தாக்கு‌தலுக்கான கப்பல் எனவும், முதல் கப்பல் பிஎன்எஸ் அஜ்மத், கடந்த ஜூன் மாதம், கப்பற்படையில் இணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.[/size]

http://www.alaikal.com/news/?p=111894

  • தொடங்கியவர்

[size=4]நீண்ட தாமதத்திற்குப் பிறகு, ஒரு வழியாக[/size][size=5] பாகிஸ்தான், சீன எல்லைகளில் சுரங்கப் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது[/size][size=4].
[/size]

[size=4]

[/size][size=5]இந்த திட்டத்திற்காக 26,155 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2020 -2021ல் இப்பணி நிறைவடையும்.
[/size]

[size=4]திட்டம் முடிவடைவதற்கு முன்னர் இந்தியா முடிவடைந்தும் விடலாம் :icon_idea:[/size]

இரசாயனக்குண்டுகளை ஈழத்தமிழர் மீது பரிசோதனையாக போட்டு வந்த பயங்கர விளைவுகளை பார்த்துத்தான் சுரங்கப் பாதை தேவையா இல்லையா என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். எதை செய்தும் இலங்கை மனம் மாறாததால் இந்த புதிய பணிகள் தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் கனடாவில் இப்படியான் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.. அரை நூற்றாண்டுகால போர்முறையை இப்ப செய்யினமா? :rolleyes:

இப்பவெல்லாம் சில நூறு அடிகளுக்குக் கீழே என்ன உலோகம் இருக்கு என்கிறதை உலங்கு வானூர்தியில் இருந்தே கண்டுபிடிக்கிறான்கள்.. :rolleyes:

  • தொடங்கியவர்

[size=6]சீன படைகள் மீண்டும் வாலாட்டம் : ராணுவ தளபதி நேரில் ஆய்வு[/size]

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைஅடுத்து மூன்று நாள் பயணமாக ராணுவ தளபதி பிகாராம் சிங்லடாக் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியை சேர்ந்த சசூல் மற்றும்‌ டாங்ஸ்டே பகுதியில் சுமார் 800 மீட்டர் தொலைவிற்கு சீன படைகள் வந்து திரும்பியுள்ளது.இந்தாண்டு இது வரையில் மேற்கண்ட பகுதியில் இருமுறை சீன ராணுவத்தினர் ஊடுருவியுள்ளனர்.

காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் , மற்றும் அருணாசல பிரதேசம் வரையிலான 5 ஆயிரம் கி.மீ தொலைவு கொண்டஎல்லைப் பகுதியில் சீனா பல்வேறு வளர்ச்சி்ப்பணிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அருணாசல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா அம்மாநில எல்லைப்பகுதயில் சுமார்10 ஆயிரம் கி.மீட்டர் தொலைவிற்கு ரயில்பாதையை அமைத்துள்ளது. தொடர்ந்து ராணுவ தளபதி பிகாராம் சிங் அருணாசல பிரதேச மாநிலத்திலும் சுற்றுப்பயணம் மேற்‌கொண்டு எல்லைப்பகுதிய‌ை பார்வையிட உள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE-001400006.html

சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதைஅடுத்து மூன்று நாள் பயணமாக ராணுவ தளபதி பிகாராம் சிங்லடாக் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார்

ஏன்தான் சீனப்படைகள் வந்து போனபின்னர் போய்ப்பார்த்தவராம்?

செய்வினை செய்து ஒரே அடியாய் எல்லோரையும் விழுத்திவிட காலடி மண் அள்ளிக்கொண்டு வரப்போயிருந்திருப்பாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.