Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ கைது

Featured Replies

[size=5]மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது[/size]

vaik.jpg

[size=4]பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி அகதிகள் முகாம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார்.

பெருந்திரளான ஆதரவாளர்களுடன் அகதிகள் முகாமை முற்றுகையிட முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டே வைகோ கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைதினைத் தொடர்ந்து தொண்டர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சிலர் தீக்குளிக்க முயன்றதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பூந்தமல்லி கரையான் சாவடியில் அகதிகள் சிறப்பு முகாமில் செந்தூரன் என்பவர் கடந்த 6ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது விடுதலையையும் அரசு கருத்திற்கொள்ள வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி உள்பட அனைத்து முகாம்களிலும் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக் கோரி செந்தூரன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/47061-2012-08-21-09-49-51.html[/size]

ஈழத்து தமிழரின் துன்பங்களை தமதாக ஏற்கும் தமிழக உறவுகளுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

[size=4]டந்த ஆக-6 லிருந்து பதினைந்து நாட்களுக்கும் மேலாக உண்ணா நிலையில் இருந்த பூந்தமல்லி சித்திரவதை முகாம் தோழர். செந்தூரன் நேற்றிலிருந்து தண்ணீர் அருந்தாமல் உண்ணா நிலையை தொடர்கிறார். கடந்த ஜூன் மாதமும் இதே போல 25 நாட்கள் உண்ணா நிலையை தொடர்ந்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணா நிலையை தலைவர்கள் கைவிடக் கோரிய பின்னர் ( க்யூ உளவுப் பிரிவின் தலைவர் கொடுத்த வாக்குறுதியினை நம்பாவிட்டாலும் ) கைவிட்டார்..[/size]

[size=4]ஆனால் எப்போதும் போல தமிழ்நாடு சிறப்பு உளவுத்துறை க்யூ பிரிவின் தலைவர் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத காரணத்தால் தனது போராட்டத்தை மீண்டும் தொடர ஆரம்பித்து இருக்கிறார். போராட்டகுணமும், சமரசமற்றவருமாக இருந்த காரணத்தால் அவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பூந்தமல்லி முகாமிற்கு மாற்றப்பட்டு இருக்கிறார். [/size]

[size=4]பூந்தமல்லி முகாம் தமிழர்களுக்கு அவமானசின்னமாக நிற்கிறது.. ராசீவ் கொலைவழக்கில் அப்பாவிகளை அடித்து துன்புறுத்திய இடம் இது. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட இடம் இது.. மிகக்குறுகிய இடத்தில் மேற்கூரையும் இரும்பு கம்பி[/size][size=4]யால் வேயப்பட்ட அந்த சிறை பல தமிழீழ தமிழரின் சிறு நீரகத்தை அழித்திருக்கிறது, மன நிலையை பாதித்து இருக்கிறது. அதே இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக செந்தூரன் வைக்கப்பட்டு இருக்கிறார். [/size]

[size=4]கலெக்டரின் உத்தரவு பெயரில் பூந்தமல்லியில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்டத்தை மீறி சட்டவிரோதமாக அவர்களை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. தற்போது அவரின் உடல் நிலை மிக மோசமாக இருக்கிறது .. அவரது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம்.[/size]

[size=4]அது நம் அனைவருக்கும் பெரும் பின்னடைவினையும், அவரது உயிரை 7 கோடித் தமிழர்கள் உள்ள தமிழகத்தில் காப்பாற்ற முடியாத அவமானத்தையும் வரலாறு முழுவதும் நாம் சுமக்க வேண்டி வரும். வர இருக்கும் நாம் தமிழர் போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொள்வோம். இந்த செய்தியை உடனடியாக உயிர்காக்கும் செய்தியாக நண்பர்களிடத்தில் கொண்டு செல்வோம். [/size]

[size=4]அவரது உயிரை காக்க உடனடியாக நாம் செயல்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட அவர் அந்த வெப்பம் நிறைந்த அவரது சிறைக்கூடத்தில் 15 நாட்கள் உணவு உட்கொள்ளாத சோர்வுடனும் கடந்த 2 நாட்களாக நீர் அருந்தாமலும் வேர்வை நிறைந்த நாட்களை கடந்து கொண்டிருப்பார்.. பெருமளவு நீரை அவரது உடல் இழந்து விட்டிருந்தபடியால் உடனடியாக அவரது சிறு நீரகம் பாதிக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே 25 நாட்கள் உண்ணா நிலையில் உடல் நலம் குன்றி இருந்த அவரது உடல் தண்ணீர் அருந்தாத இந்த இரண்டு நாட்களில் மேலும் மோசமடைந்து கொண்டிருக்கும். ஆகவே தோழர்களே உடனடியாக செயல்படுங்கள். உங்களுக்கு தெரிந்த அமைப்புகளிடத்தில் பேசி போராட்ட களத்தை வடிவமையுங்கள்.. [/size]

[size=4]செய்திகளை உடனடியாக கொண்டு செல்லுங்கள். இது நமது முதல் பணியாக இருக்கட்டும். அடுத்த கட்ட போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தமிழீழ குடிமக்களை காப்பது நமது கடமை, உடனடி வேலை.. நாம் ஆயிரக்கணக்கில் திரண்டால் எந்த அரசும் ஒன்றும் செய்துவிடாது. திரள்வது நமது அவசிய வேலை.[/size]

- [size=5]திருமுருகன் காந்தி [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக உறவுகளுக்கும், வைகோ அவர்களுக்கும் நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழர்களுக்கு உதவுவோம் என்று ஆட்சி அமைத்தவர்கள் கண்மூடி மௌனமாவதேன்?

போராட்டத்தில் குதித்து இருக்கும் அனைத்து தமிழ் நாட்டு சகோதரர்களுக்கும் தலை வணங்குகிறேன்.

சீமான், வை.கோ, கொளத்தூர் மணி போன்றோரை கைது செய்வது தி.மு.க, அ.தி.மு.க ஆகியோருக்கு பொழுது போக்காக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.