Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரின் பேட்டி...

Featured Replies

சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையில் உள்ள பலரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் விலைக்கு வாங்கிவிட்டனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலோசகர் எச்.எம்.ஜி.பி.கொட்டகதெனியா கூறியுள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறப்பட்டுள்ளதாவது:

அவிசாவளையில் ஐந்து தமிழர்களின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்கள். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பலரும்தான் காவல்துறையுடனான மோதலில் கொல்லப்படுகின்றனர்.

தடய அறிவியல் சோதனை முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் அந்த உடல்கள் தமிழர்களினதுதான் என்று எப்படி முடிவுக்கு வரமுடியும்?

சிறிலங்கா அரச படைகள் மிகுந்த ஒழுக்கத்தோடு இயங்குகின்றன. விடுதலைப் புலிகளால் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரச படைகள் பொறுமை காக்கின்றன. ஆனால் போர்ச் சூழலில் எமது தற்காப்புக்கான தாக்குதல்களை நாம் நடத்த வேண்டியுள்ளது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் குண்டுவெடிப்பு நடந்த போது எதுவித உத்தரவுக்கும் காத்திருக்காமல் சந்தேக நபர்களை சுட்டுக் கொன்றர்கள்.

இந்த நாட்டில் உள்ள அரச சார்பற்ற நிறுவன முகவர்கள், ஊடகங்கள் ஆகியவை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு நாட்டை பிளவுபடுத்துகின்றனர். இந்த நாட்டினது இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டியது அரச படைகளின் கடமை. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினால் பயங்கரவாத அமைப்பின் நிழல் அரசாங்கத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத இயக்கத்தை சர்வதேச சமூகம் ஆதரிக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை நீக்கப்பட்டிருப்பதால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் உள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் யுத்த நிறுத்த ஒப்பந்தமானது சில சிறப்பு அனுமதிகளைக் கோருகிறது. எந்த ஒரு நாடும் பயங்கரவாதிகளைக் கையாள சிறப்புச் சட்டங்களின்றி செயற்பட முடியாது. சாதாரண சட்டங்களினூடே பயங்கரவாதத்தைக் கையாள முடியாது.

சிறிலங்கா இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி கொழும்பில் பல மாதங்களாக தங்கியுள்ளார். ஆனால் நாங்கள் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினால் தமிழர்களின் உரிமையை மறுப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

ஜெனீவாவில் ஒரு மாதத்துக்கு முன்பாக அரச படைகள் மீது எதுவித தாக்குதலையும் மேற்கொள்ள மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் இராணுவ தளபதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நாங்கள் பயங்கரவாத இயக்கத்தைக் கையாள எமக்கு மேலதிக அதிகாரங்கள் தேவை. சிறிலங்கா அரசாங்கத்தின் எதிரிகளால் முன்வைக்கப்படுகிற விமர்சனங்களை மக்கள் நிராகரிப்பார்கள்.

எந்த ஒருநாட்டிலும் அதனது உள்விடயங்களில் சர்வதேச முகவர்கள் தலையிட்டது இல்லை. இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடத்திய பின்னரும் அந்நியத் தலையீடுகள் எமது நாட்டில் நிகழ்கிறது.

கொழும்பு நகரின் பாதுகாப்பு எப்போதும் பலப்படுத்தப்பட்டதுதான். ஆனால் தற்கொலைதாரி நீண்டகாலமாக கொழும்பில் இருந்துள்ளார். இத்தகைய நபர்கள் பதுங்கியிருந்து கிளிநொச்சியிலிருந்து தாக்குதலுக்கான உத்தரவு வரும் வரை காத்திருப்பதைத் தடுக்க காவல்துறையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் தேவை. காவல்துறையினர் ஒவ்வொருமுறை நடவடிக்கை எடுக்கும்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூச்சலிடுகின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகள் பலமாக ஊடுருவியிருப்பதாக அனைவரும் உணருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த ஒரு தமிழரும் வாயைத் திறந்து தகவல் கொடுப்பது இல்லை. கொழும்பில் உள்ள அதிகாரமிக்க சக்திகளால் விடுதலைப் புலிகள் பாதுகாக்கப்படுகின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியும். காவல்துறையிலும் இராணுவத்திலும் நிறைய பேரை விடுதலைப் புலிகள் விலைக்கு வாங்கியுள்ளனர். இராணுவத் தளபதி மீதான தாக்குதல் என்பது இராணுவத்தில் உள்ளே உள்ள சிலரது ஒத்துழைப்புடனேயே நடந்தது என்பதை உறுதியாக நான் கூறுவேன்.

சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையில் பலரையும் படுகொலை செய்து சீர்குலைத்துவிட்டனர். இத்தகைய படுகொலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தும்போது பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் பணி அதிகம் தேவையில்லை. அவர்களைப் பாதுகாக்க வேண்டியதற்கா காரணமும் இல்லை என்கிறார். நாட்டில் இப்போது யுத்தம் இல்லை. ஆகையால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க மறுத்துவிட்டனர்.

இதற்காக எந்த ஒரு அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவது என்பது அல்ல. இராணுவத் தளபதிகளும் கூட தேவையான நேரத்தில் செயற்பட்டிருக்க வேண்டும். இராணுவத்தில் உள்ள பல மூத்த அதிகாரிகள் சுதந்திரத்தோடு தங்களது விருப்பப்படி செயற்பட்டு வருகின்றனர். நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படாது என்று கூறிவருகின்றனர். இராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் போதனை வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர்.

நாம் ஒரு சட்டப்பூர்வமான அரசாங்கம். நாம் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட முடியாது. மனித உரிமைகளை மதித்துச் செயற்பட வேண்டும் என்று விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். ஆனால் அப்படிச் செய்திருக்கிறார்களா? இப்போது கர்ப்பிணிப் பெண்ணை தற்கொலைதாரியாக அனுப்பியிருக்கிறார்கள். இது ஐ.நா.வின் சாசனங்களுக்குஎ எதிரானது. இது நம்பமுடியாதது.

எந்த ஒரு அமைதிப் பேச்சுக்களாக இருந்தாலும் ஆயுதக் குழுவினர் நடுநிலை சக்திகளின் முன்பாக ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். பேச்சுக்கள் தோல்வியடைந்தால் ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்.

ஆனால் எமது எதிரி சொந்த இராணுவத்தை, கடற்படையை மற்றும் விமானப் படையை வைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கும்போது பேச்சுவார்த்தை நடத்துவது என்பது முட்டாள்தனமானது.

சிறிலங்கா இராணுவத்தின் மீதான அனைத்துத் தாக்குதல்களுக்கும் மக்களே காரணம் என்று பிரபாகரன் கூறுகிறார். ஆனால் பயங்கரவாதிகள் குறித்து நாங்கள் சொல்ல முடியாதா? விடுதலைப் புலிகளா அல்லது வேறு நபர்கள் கொலை செய்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் அரசாங்கத்தை பொறுமையாக இருக்குமாறு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் கூறினால் மக்கள் தங்களது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை அவர்களே மேற்கொள்வார்கள் என்றார் கொட்டகதெனியா.

நன்றி: புதினம்

http://www.eelampage.com/?cn=25912

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

³§Â¡ À¡Åõ ¯ó¾¡û.. ¯Å÷¾¡§É Óó¾¢ ¦¸¡ì¸Ã¢îºÅ÷ ²ý þôÀ ¸ñ½£÷ ÅÊ츢ȡ÷?

இவரின்ர ஆலோசனையால மகிந்தர் உருப்பட்ட மாதிரித்தான். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான 'மரமண்டை' ஆலோசகர்கள் மகிந்தவுக்கு இருப்பது தான் நமக்கு நல்லது.

கொட்டதனிய'வின் 'same side goal' போடுதலை பார்த்து மகிந்த குளம்ப போகிறார்.

சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுத்துறையில் பலரையும் படுகொலை செய்து சீர்குலைத்துவிட்டனர். இத்தகைய படுகொலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தும்போது பாதுகாப்பு அமைச்சர் சொல்கிறார், யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் புலனாய்வுத்துறை அதிகாரிகளின் பணி அதிகம் தேவையில்லை. அவர்களைப் பாதுகாக்க வேண்டியதற்கா காரணமும் இல்லை என்கிறார். நாட்டில் இப்போது யுத்தம் இல்லை. ஆகையால் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க மறுத்துவிட்டனர்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.