Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் துஸ்பிரயோக மன்னன் பிரியதர்ஸன சந்நிதியில் கரகாட்டக் காரர்களை நிர்வானமாக்கி அவமதித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் துஸ்பிரயோக மன்னன் பிரியதர்ஸன சந்நிதியில் கரகாட்டக் காரர்களை நிர்வானமாக்கி அவமதித்தார்

30 ஆகஸ்ட் 2012

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வரலாறறு புகழ் மிகு செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்றிரவு பொலிஸார் மேற்கொண்ட அடாவடிகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் விசனம் தெரிவித்துள்ளன.

பாரம்பரிய கரகாட்ட கலைஞர்களை பக்தர்கள் முன்னிலையில் பொலிஸாh நிர்வாணமர்க்கி அவமதித்ததாக கூறப்படுகின்றது. நேற்றிரவு வழைமை போன்று சப்பறத்திருவிழா அனுஸ்டிக்கப்பட்டிருந்தது. அங்கு தமது நேர்த்திக்கடன்களை அனுஸ்டிக்கவென பலரும் காவடிகளை எடுத்த வண்ணமிருந்தனர். இன்று தேர்த்திருவிழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடிகள் படையெடுத்து வந்தவண்ணமிருந்தன. இவ்வாறு நேற்றிரவு ஆலயத்திற்கு கரகாட்டமாடி வந்தவர்களே தாக்கப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கரகாட்ட கலைஞர்கள் பெண் யுவதிகளை போன்று வேடமணிந்து கரகாட்டமாடிக் கொண்டிருக்கையில் அங்கு சென்று சேர்ந்த வல்வெட்டித்துறை பொலிஸ நிலைய அதிகாரியான பிரியதர்சன மற்றுமொரு அதிகாரி சகிதம் கரகாட்டம் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி கலைஞர்களை தாக்கியுள்ளார்.

அத்துடன் திரண்டிருந்த பக்தர்களிடையே குறித்த கரகாட்ட கலைஞர்களது ஆடைகளை கழைந்து அவமதித்துள்ளனர். ஆண்டு தோறும் இவ்hறு தாங்கள் கரகாட்டமாடி நேர்த்தி கடனை நிறைவேற்றுவதாக அக்கலைஞர்கள் கூறிய போதும் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. இச்செயல் பல தரப்பினரிடையேயும் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி மீது பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றசசாட்டுக்கள் ஏற்கனவே எழுப்பபட்டுள்ளமை குறிப்பிடத்தககது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82257/language/ta-IN/article.aspx

புத்தாவின் எச்சங்கள் இலங்கையில் இருப்பதால் ஜனாதிபதியின் ஆணைப்படி இப்படு நடந்து கொள்ளுகிறார்கள்.

இந்த ஜனாதிபதி பதவி இறக்கப்படாவிடில் இலங்கையில் புத்தர் எதிர்த்த பஞ்சாமா பாதகங்களை செய்து கொண்டு அந்த பழியை புத்தரின் தலையில் போட்டுவிடுவார்கள்.

இந்த நடத்தை, ஏன் புத்தரின் இறப்பின் பின் வட இந்தியர் வன்முறையாளர்களாக இருந்தார்கள் என்பதும், தமிழ்நாட்டில் களபிரயர்காலம் இருண்டகாலமாக இருந்ததென்றும், "ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்" என்று பாடி திருநாவுக்கரசர் புத்த சமண சமயங்களை தமிழ்நாட்டை விட்டே விரட்டி அடிக்க வேண்டியிருந்ததென்பதும் விளங்குகின்றது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு அர்ஜுன் அண்ணா பதில் சொல்வார்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு அர்ஜுன் அண்ணா பதில் சொல்வார்

எல்லாருக்கும் லொள்ளு கூடிப்போச்சு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒன்றும் லொள்ளு கிடையாது நந்தன்.அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை சுதந்திரமாக உள்ளதாக யாழ் களத்தில் உரத்த குரலில் அடிக்கடி முழங்குவது அர்ஜுன் அண்ணா மட்டுமே.அதனால் தான் அப்படி எழுதினேன்.வேறு என்ன.

எனக்கும் அவருக்கும் எல்லைத்தகறாராஇல்லையே.

இதற்கு அர்ஜுன் அண்ணா பதில் சொல்வார்

***

நாட்டை விட்டு ஓடிவந்து ஊளையிட்டு கொண்டிருப்பதில் பயன் எதுவுமில்லை .நாட்டில் இருப்பவர்களை விட புலம் பெயர்ந்தவர்களுக்கு தான் நாட்டில் இருப்பவர்களை பற்றி ஒரே அக்கறையாக கிடக்கு .

அவர்கள் சொல்லுகின்றார்கள் யுத்தகாலத்தை விட நாம் எவ்வளோவோ சந்தோசமாக இருக்கின்றோம் என்று .அது உங்களுக்கு பொறுக்குதில்லை ,சுத்தி சுத்தி இதே செய்திகள் தான் ,அதில் நம்பகதன்மை எவ்வளவு என்றும் தெரிவில்லை.

எல்லாமே ஒரு ஒப்பீட்டு ரீதியில் தான் ,இனம் தெரியாதவர்களால் என்று நடந்த கொலைகள் என்று இப்போ இல்லை ,அது மக்களுக்கு பெரும் நிம்மதி .

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜூனின் பதிலுக்குரிய சரியான பதில்கள் காலதாமதம் இன்றிவரும் எனவும் இன்னும் 72 மணி நேரத்தில் இந்த திரி பூட்டப்படும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேயர், யாழ்ப்பாணத்தை ஆண்ட போது,ஒரிருவரைப் பிடிச்சு, அவைக்கு ஒரு காச்சட்டையைப் போட்டுக், 'கங்காணி' என்று ஒரு பட்டமும், கொடுத்துவிட்டுத் தான் பாட்டில் போய் விடுவான்!

இந்தக் கங்காணியள் தான் விரதம் பிடிக்கிற ஆக்களைத் தேடித் பிடிச்சுக், காட்டிக் கொடுக்கிறது!

இது தான் மகிந்தவின் ஆட்சி முறையுமாகும்!

இந்தக் கங்காணிகளை, அகற்றும் வரையும் இந்தக் கூத்துக்கள் தொடரும்!

அவர்களை அகற்றினால், மிச்சத்தைச் சனம் பாத்துக் கொள்ளும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நான் மன்னிப்பு கேட்கிறேன்.நாட்டை விட்டு ஓடி வந்ததற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.