Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒடியல் கூழ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே தாரணி சொல்லி இருக்கிறா ஒடியல் கூழ் பற்றி. ஒடியல் இருந்தாத்தானே ஓடியல் கூழ் வரும். கூழ் குடிக்கலாம் ஒடியல் குடிக்கேலாது. என்ன தூயா நான் சொல்லுறது சரியா :wink:

நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். ஆனால் என்ன சொன்னீர்கள் என்று புரியவே இல்லையே!! :roll: :roll: :wink:

  • Replies 59
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வல்லிபுர கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பனைகளை பார்க்க வேண்டுமே, தலைகள் இல்லாமல்..கோரம்..

வல்லிபுரத்தில் கிளைகள் உள்ள பனைமரம் நிற்கின்றது என்று சொன்னது பிழையாம். அது உண்மையில் பனைமரமே இல்லையாம்!!

நீங்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும். ஆனால் என்ன சொன்னீர்கள் என்று புரியவே இல்லையே!! :roll: :roll: :wink:

தூயவா ஒடியல் புரியலையா அல்லது ஒடியல் கூழ் புரியலையா :roll:

வல்லிபுரத்தில் கிளைகள் உள்ள பனைமரம் நிற்கின்றது என்று சொன்னது பிழையாம். அது உண்மையில் பனைமரமே இல்லையாம்!!

ஓஓஓ அப்ப அது என்னவாம் :roll:

அதப் படம் எல்லாம் எடுத்துப் போட்டாங்களே :roll:

  • கருத்துக்கள உறவுகள்

:shock: :shock: :shock:

சின்னப்பு என்ன கனடாவில தடை போல யாழ் களத்தில ஒரு பனை பற்றிக் கதைக்கக் கூடாதா.

:shock: :roll: :roll:

எப்படிக் கதைக்கலாம்? கனடாவில் தடை போட்ட பிறகு கனடாச் சனத்துக்கு மட்டும் தடையைப் பற்றிக் கதைக்க துணிவு வந்ததா என்ன? :evil: :evil: :wink:

ஆக வல்லிபுர கோவில் பனை மர கதை வதந்தியா?

சரி யாராவது ஒடியலை பற்றி சொல்லுங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ அப்ப அது என்னவாம் :roll:

அதப் படம் எல்லாம் எடுத்துப் போட்டாங்களே :roll:

அதன் இலையெல்லாம் பார்க்க வித்தியாசாக இருக்குதாம். அதுவும் ஒரு வகை தனி இனத்தைச் சார்ந்தது என்று சொல்கின்றார்கள்!!

பனைமட்டும் தான் வதந்தியா அல்லது வல்லிபுரக் கோவிலே வதந்தியா அங்க ஏதோ சக்ரம் கடலில வந்ததோ ஏதோ என்று சொன்ன ஞாபகம் :?

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா ஒடியல் புரியலையா அல்லது ஒடியல் கூழ் புரியலையா :roll:

ஓடியல் கூழ் எல்லாம் புரிஞ்சிருக்கு ஆனா எப்பிடி பனைல இருந்து ஒடியல் வருது எண்துதான் புரியல

ஆமா!! ஒடியல் எப்படி பனையில் இருந்து வருகின்றது? :wink: :P

ஒடியல் கூழ்

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா - 1/2 கிலோ

மீன் - 1 கிலோ

நண்டு - 6 துண்டுகள்

இறால் - 1/4 கிலோ

பயிற்றங்காய் - 250 கிராம்

(1 அங்குல நீள துண்டுகள்)

பலாக்கொட்டைகள் - 25

(கோது நீக்கி பாதியாக வெட்டியது)

அரிசி - 50 கிராம்

செத்தல் மிளகாய் - 15 அரைத்தது

பழப்புளி - 100கிராம்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஓரளவு நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக

நீரில் கரைக்கவும். பெரிய பாத்திரத்தில் போதியளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள், மீன்தலைகள், நண்டு, இறால் ஆகியவற்றை போட்டு நன்றாக அவியவிடவும். நன்றாக அவிந்ததும் ஒடியல் மா, அரைத்து வைத்துள்ள மிளகாய், கரைத்தபுளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

:D :P :P :(

:arrow:

http://www.yarl.com/forum/viewtopic.php?t=3345&start=0

:P உண்ட்மையில் ஒடியலும் பதநீரும் :? தெரியாமல் தான் சண்டை நடக்குதா???

செந்திலுக்கு தெரியாமல் இருக்க சாத்தியம்,

பொதுவாக தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு ஒடியல் என்றால் என்ன என்பது தெரிந்திருக்க்வில்லை

நான் கூழ் பற்றி எழுதிய போதும் என்னை வலைப்பதிவில் கேட்டார்கள்

ஒரு லீட்டரா? என்ன அளந்து வைச்சா குடிப்பீர்கள்?

ஆம் லிட்டர் அளவையில்தான் குடித்தேன். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லடைசல் வாரது என்று அறிவுரை கூறப்பட்டதால் ஒரு வாரமாய் அது தொடர்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

பனைமட்டும் தான் வதந்தியா அல்லது வல்லிபுரக் கோவிலே வதந்தியா அங்க ஏதோ சக்ரம் கடலில வந்ததோ ஏதோ என்று சொன்ன ஞாபகம் :?

கடவுள் நம்பிக்கையை நிந்திக்க விரும்பவில்லை. பாத்திருக்கின்றீர்களா? அந்தக் கடற்கரையை! ஒரே மணல் வெளி!! கண்ணாடி மாதிரி மண் இருக்கும். அதில் சிலிக்கன் உண்டாமே!!

ஆக வல்லிபுர கோவில் பனை மர கதை வதந்தியா?

சரி யாராவது ஒடியலை பற்றி சொல்லுங்க

:? :roll:

ஒடியல் என்றால் பனங்கிழங்கை இரண்டாக கிழித்து உலர வைத்து எடுப்பது

புழுக்கொடியல் என்றால் பனங்கிழங்கை அவித்து , குந்து நீக்கி உலரவைத்து எடுப்பது

புழுக்குதல்=அவித்தல்

இப்போது ஓடியல் என்றால் என்னவென்று சொல்லவில்லையென்றால் நான் அழுதுடுவேனாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் என்றால் பனங்கிழங்கை இரண்டாக கிழித்து உலர வைத்து எடுப்பது

புழுக்கொடியல் என்றால் பனங்கிழங்கை அவித்து , குந்து நீக்கி உலரவைத்து எடுப்பது

புழுக்குதல்=அவித்தல்

பனங்கிழங்கை எப்படி செய்வது என்று செந்திலுக்குச் சொல்லவில்லையா? அதைப் பற்றியும் கேட்டு அடம் பிடிக்கப் போகின்றார்! :wink: :P :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஓடியல் என்றால் என்னவென்று சொல்லவில்லையென்றால் நான் அழுதுடுவேனாக்கும்

என்னும் 5 பக்கத்திற்கு இதை வைச்சு விளக்கம் சொல்ல நினைத்தோம். குளக்ஸ் முந்தி விட்டதால் தப்பித்து விட்டீர்கள்!! :wink: :P

பனங்கிழங்கா ! அடச்சே இதுக்க மூனு பக்கம் வரைக்கும் இழுத்திட்டிங்கள்.....

பனங்கிழங்கை நெருப்பில் சுட்டுத்தின்பது எனக்கு பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கிழங்கா ! அடச்சே இதுக்க மூனு பக்கம் வரைக்கும் இழுத்திட்டிங்கள்.....

பனங்கிழங்கை நெருப்பில் சுட்டுத்தின்பது எனக்கு பிடிக்கும்

நெருப்பில் சுட்டும் தின்பார்களா? பொதுவாக அவிய வைத்து தானே உண்பது வழக்கம்!!

ஓடியல் கூழ் எல்லாம் புரிஞ்சிருக்கு ஆனா எப்பிடி பனைல இருந்து ஒடியல் வருது எண்துதான் புரியல

ஆமா!! ஒடியல் எப்படி பனையில் இருந்து வருகின்றது? :wink: :P

அட இதுதெரியாதா

ஏதோ எனக்கு தெரிஞ்சதச் சொல்லுறன்

அட சுற்றுலாவில பாத்தது தான்பா

பனைமரம் தெரிதுதானே,

அதுக்குப் பிறகு பனம் பழம் தெரியுமா? அந்தப் பனம் பழத்தில இருந்து பனங்கொட்டைய எடுத்து மண்ணுக்க புதைச்சு முளைக்க வைப்பார்கள். அப்புறம் அது முளைச்சு கிழங்குவரும். அந்தக் கிழங்கத்தான் நாம் பனங்கிளங்கு எண்டு சொல்கிறோம். அத அவிச்சும் சாப்பிடுவார்கள். அந்தக் கிழங்க இரண்டா பிளந்து வெயில்ல காய வைப்பார்கள் அதைத்தான் ஒடியல் என்பார்கள். பனங்கிழங்கை பச்சையாய் காயவைத்தால் அது ஒடியல். அதையே அவித்து பிளந்து பாயவைத்தால் அது புழுக்கொடியல்.

கனடிய தமிழ்க் கடைகளில் Boiled Odiyal என்று லேபிள் போட்டு விற்பனையில் உள்ளது.

:twisted: :evil: :twisted:

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டு தின்று பாரும், இங்கு என்னுடன் வேலை பார்ப்பவர் தினமும் வீட்டில் இருந்து எடுத்து வர கேட்டுக்கொண்டுள்ளேன். சந்தையில் 15 கிழங்கு 20 ரூபாய்.

இல்லைப்பா!! சுட்டுத் தின்றால் திருட்டுப்பட்டம் கட்டி விடுவார்களே! அதைப் பற்றிக் கவலை இல்லையா என்று கேட்டேன்! :wink: :P :D

சுட்டு சாப்பிடுவதை விட ஏதும் மகிழ்வான அனுபவம் இருக்கிறதா :D

பனங்கிழங்கை சுட்டிட்டு ஓடிப்போய் அதை நெருப்பில சுட்டுச் சாப்பிட்டா சுவை இன்னும் அதிகமா இருக்கும் :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

:twisted: :evil: :twisted:

குளக்ஸ் முறைக்கின்ற விதத்தைப் பார்க்க சரியில்லையே!! யாராவது ஒன்று, இரண்டு சொன்னீர்கள் என்றால் ஓடிவிடலாம்.... :oops: :oops:

குளக்ஸ் முறைக்கின்ற விதத்தைப் பார்க்க சரியில்லையே!! யாராவது ஒன்று, இரண்டு சொன்னீர்கள் என்றால் ஓடிவிடலாம்.... :oops: :oops:

மூன்று சொன்னால் தான் ஓடுவன் :evil:

ஆனா எனக்கு மூன்று தெரியாது :wink: :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.