Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம்: உதயகுமாருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைதாணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளியூர்: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகததால், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு எதிராக,வள்ளியூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது கூடங்குளம் போலீசார் தொடர்ந்து வழக்கு பதிந்து வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் 73-வது வழக்கில் கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மை.பா. ஜேசுராஜன், புஷ்பராயன், ஜெயக்குமார், முகிலன், அகிலன் உள்பட 3,550 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் தெரிந்த 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 141-வது வழக்கில் உதயகுமார், புஷ்பராயன் உள்பட 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உதயகுமார் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மீரா 36-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது 143 (தடையை மீறுதல்), 188 (அரசு உத்தரவை மீறுதல்), 157 (சாப்பாடு அல்லது பணம் கொடுப்பதாக கூறி கூட்டத்தை கூட்டுதல்), 291 (பொது இடத்தில் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல்), 149 (சட்ட விரோதமாக கூடி கூட்டம் நடத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 73 மற்றும் 141-வது வழக்கு விசாரணைக்காக வள்ளியூர் நீதிமன்றத்தில் 18-ம் தேதி (இன்று) ஆஜராகுமாறு உதயகுமாருக்கு சம்மன் கொடுக்க கூடங்குளம் போலீசார் கடந்த 13-ம் ந்தேதி நாகர்கோவில் பறக்கை இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் உதயகுமாருக்கான சம்மனை வாங்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து 141-வது வழக்கின் 36-வது குற்றவாளியான உதயகுமாரின் மனைவி மீராவிடம், அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை கொடுத்தனர்.

உதயகுமாரின் மனைவி ஆஜர்

இதனைத்தொடர்ந்து 73 மற்றும் 141-வது வழக்குகள் வள்ளியூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அதில் 141-வது வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக உதயகுமாரின் மனைவி மீரா இன்று வந்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் ஆஜரானார்.அப்போது அவரிடம் உதயகுமார் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மீரா, தனது கணவர் இருப்பிடம் குறித்து தனக்கு தெரியாது என்றும், ஊடகங்களுக்கு அவர் அளிக்கும் பேட்டியை பார்த்தே அவரைப்பற்றி தாம் அறிந்துகொள்வதாகவும் கூறினார்.

இதனையடுத்து இவ்வழக்கில் உதயகுமாருக்கு எதிராக நீதிபதி பபிதா, ஜாமீனில் வெளிவர முடியாத கைதாணை பிறப்பித்தார்.

கைதாக தேவையில்லை

முன்னதாக இன்று முற்பகலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயகுமார்,”கூட்ஙகுள அணுஉலைக்கு எதிரான தங்களது அறவழி போராட்டத்திற்கு தேசிய அளவில் பலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.தேசவிரோத செயலில் ஈடுபடாத காரணத்தால் கைதாகத் தேவையில்லை என நானும்,எனது சக போராட்டக்கார்களும் நம்புகிறோம்.

காலாவதி கண்ணீர் புகை குண்டுகள்

கடந்த 10 ம் தேதியன்று இடிந்தகரையில் போலீசார் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் போது போராட்டக்கார்களான எங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. அதன் பின்னர் எங்களில் பலருக்கு சருமத்தில் அரிப்பு போன்ற தாக்கம் ஏற்பட்டது. பின்னர் தான் எங்கள் மீது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியானவை என்பது தெரிய வந்தது. இதில் கூட ஊழல் நடைபெறுகிறது.இதையெல்லாம் அரசு கண்டு கொள்ளவில்லை.

மாறாக இடிந்தகரையில் அறவழியில் போராடும் எங்கள் மக்களை ஏதோ பயங்கரவாதிகளைப் போல்,பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல் பாவித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.தமிழகத்தில் அப்பாவி மீனவர்கள் பலர் பலியான போது இவ்வளவு ரோந்தும், பாதுகாப்பும் போடப்படவில்லையே? எங்களை இப்படி கண்காணிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மேலும் எங்களது போராட்டம் உணர்வுப்பூர்வமானது,நாங்கள் எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தோ இல்லை இந்தியாவில் இருந்து செயல்படும் எந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் இருந்தோ இதுவரை ஒரு ரூபாய் கூட நண்கொடையாக வாங்கியதில்லை,இனியும் வாங்கப் போவதில்லை.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாடை்டை எங்கள் மீது சுமத்தி வரும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியோ இல்லை வேறு யாருமோ எங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை” என்றார்

விகடன்

[size=1]

[size=4]'பிணையில் வர முடியாத கைதாணை ' - இது என்ன சட்டம்?? [/size][/size]

[size=4]தமிழகத்திலும் ஒரு காஸ்மீரை மத்திய நடுவண் அரசு உருவாக்குகின்றது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.