Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை: தமிழக அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த நடவடிக்கை: தமிழக அரசு

Posted Date : 07:04 (29/09/2012)Last updated : 07:06 (29/09/2012)

madhurai-adheenam.jpgசென்னை:மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது சம்பந்தமாக சிவில் வழக்கு தொடர இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்துள்ளார்.இதை எதிர்த்து பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஜெகதலபிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,"கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக விதிமுறைகள் மீறி அருணகிரிநாதர் நியமித்துள்ளார். எனவே மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்"என்று கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த நிலையில்,இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.சுப்பையா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை செயலாளர் எம்.ராஜாராம் தாக்கல் செய்த பதில் மனுவில்,"மனுதாரர் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 59 மற்றும் 60-ன் கீழ் மதுரை ஆதீனம் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கையகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரிவு 59-ன்படி, ஒரு மடாதிபதி உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றிருந்தால்,மடத்தின் நிதியை தவறாக பயன்படுத்தினால் மற்றும் வேறு சில நடவடிக்கை அடிப்படையில் அவர் மீது சிவில் வழக்கு தொடர்ந்து, மடத்தை கையகப்படுத்த முடியும். பிரிவு 60-ன் படி மடாதிபதி பதவி காலியாக இருந்தால்,மடத்தை கையகப்படுத்த முடியும்.

[size="2"] [/size] ஆனால், மதுரை ஆதீனம் இப்போது உள்ளார்.அந்த பதவி காலியாக இல்லை.அதே நேரம், நித்யானந்தாவை 293-வது ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்,நித்யானந்தாவை நியமிப்பதில் விதிமுறைகளை தவறாக மீறினால், பிரிவு 59-ன் கீழ் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் நடவடிக்கை மேற்கொள்வார்.

இதனடிப்படையில்,மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது சம்பந்தமாக சிவில் வழக்கு தொடர்வதற்கு,இந்து சமய அறநிலைத்துறை கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.எனவே இந்த வழக்கில் தகுந்த உத்தரவினை இந்த கோர்ட்டு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கை அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

http://news.vikatan.com/?nid=10616

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்ய்..... மதுரை, ஏன்யா... கெட்டவனோடை... கூட்டணி வைச்சனி?

உனக்கு, இதுவும் வேணும்... இன்னும், வேணும்.

உன்னில்... எவ்வளவு, அபிமானம் வைச்சிருந்தமையா...

கட்டையிலை... போற, காலத்திலை.. எல்லாத்தையும்... கெடுத்திட்டியேயையா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.