Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://www.adaderana.lk/tamil/news.php?nid=2991312084372381541792492mahela1.jpg

T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்!

சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார்.

இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தாரைவார்த்துக் கொடுத்ததன் பின் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே மஹேல ஜயவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

Mahela(17).jpg

[size=2][size=4]இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன இலங்கையின் டுவென்டி டுவென்டி அணிக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்றைய இறுதிப் போட்டிக்குப் பின்னரே மஹேல இவ்வாறு அறிவித்தார்.

உலக டுவென்டி டுவென்டி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தேர்வாளர்களுடன் இதுகுறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே இத்தொடர் முடிவில் தான் பதவியிலிருந்து விலகுவதாக அவர்களுக்கு அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தன்னைப் பொறுத்தவரை இலங்கை அணி முன்னோக்கிச் செல்வதற்கு இளைய வீரரொருவர் தேவைப்படுவதாகவும், இளைய வீரரொருவர் தனது தலைமைப் பதவியை டுவென்டி டுவென்டி போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்து ஆரம்பிப்பது சிறப்பாக அமையும் எனவும் மஹேல ஜெயவர்தன தெரிவித்தார்.

இலங்கை டுவென்டி டுவென்டி அணியின் அடுத்த தலைவராக அன்ஜலோ மத்தியூஸ் செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உப அணித்தலைவரான அவர், இலங்கை அணியின் அடுத்த தலைருக்கான பொறுப்பிற்காக அதிக எதிர்பார்ப்புகளுடன் வளர்க்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இடம்பெற்ற உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியானது மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தது.[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...8-06-20-53.html[/size][/size]

[size=4]இராஜபக்செக்களால் விலக்கப்பட்டு இருக்கலாம் :rolleyes:[/size]

  • கருத்துக்கள உறவுகள்
:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் இருந்து விளையாட்டு வரைக்கும் செல்லும் இராஜபக்சாக்கள் பவர் :icon_mrgreen:

உலக டுவென்டி டுவென்டி அணியின் தலைவராக மஹேல

திங்கட்கிழமை, 08 ஒக்டோபர் 2012 15:31 0 COMMENTS

MahelaCaptain.jpgநடந்து முடிந்த சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரை அடுத்து அத்தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் ஆண்களுக்கான அணி என அறிவிக்கப்பட்டுள்ள இவ்வணியின் தலைவராக இலங்கை அணியின் மஹேல ஜெயவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மஹேல ஜெயவர்தன தவிர, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவும், சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸும் இடம்பெற்றுள்ளனர். இத்தொடரில் காட்டிய திறமைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணி இத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு இறுதிப் போட்டி வரை சென்று இறுதிப் போட்டியில் வைத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை அணியிலிருந்து மாத்திரமே 3 வீரர்கள் இவ்வணிக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து தலா 2 வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியின் 12ஆவது வீரராக இந்திய அணியின் சுரேஷ் ரெய்னா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் தொடரின் அணி:

கிறிஸ் கெயில், ஷேன் வொற்சன், விராத் கோலி, மஹேல ஜெயவர்தன, லூக் ரைட், பிரென்டன் மக்கலம், மார்லன் சாமுவேல்ஸ், லசித் மலிங்க, மிற்சல் ஸ்ரார்க், சயீட் அஜ்மல், அஜந்த மென்டிஸ். 12வது வீரர்: சுரேஷ்

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/50081-2012-10-08-10-02-38.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.