Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி

Published: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 16, 2012, 15:37 [iST]

Posted by: Sudha

மதுரை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் பானுமதி, சுப்பையா ஆகியோர் கொண்ட் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு நித்தியானந்தா விவகாரத்தில் பெருத்த அமைதி காத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இத்தனை காலமாக அமைதி காக்காமல் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இத்தனை வழக்குகள் கோர்ட்டுக்கு வந்திருக்காது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்தபோதுதான் இவ்வாறு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர் என்ம் அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/10/16/tamilnadu-nithyanantha-is-not-eligible-lead-madurai-aadheenam-163248.html

நித்தியானந்தா நடத்தை கெட்டவர், வாரிசாகும் தகுதி இல்லாதவர் - தமிழக அரசு அதிரடி

இருக்கலாம்...ஆனால்..எனது கட்சிக்காறர் தனக்கு வாரிசாக்கும் தகுதி இருக்கென்பதை....ஏற்கனவே நிரூபித்துவிட்டார்...என்பதை கனம் கோட்டார் அவர்கள் கவனத்தில் எடுக்கவும்... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

:D

இந்த வாதத்தை நான் கடுமையாக எதிர்கின்றேன்.......

இன்னும் தனக்கு ஆண்மை இருக்கின்றத என்ற சோதனைக்கு பெங்களூர் கோர்ட் உத்தரவிட்டும் கூட காலம் தாழ்த்திக்கொண்டு இருக்கும் ஒருவருக்கு எப்பிடி வாரிசாக்கும் தகுதி இருக்கின்றது என்பதை எதிர்க்கட்சி வழக்கறிஞர் உறுதியாக கூற முடியும்?

அப்பிடியானால் இவரது கட்சிக்காரர் பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஈடுப்பட்டார் என்பதனை வழக்கறிஞர் ஒத்துக்கொல்கின்றாரா?

ஒரு சமூக நல வழக்கு ஒன்றில் எதிர்க்கட்சி வழக்கறிஞர் பொய்யை மெய்யாக்க முற்படுவது வருத்ததிற்குரியது......... இது பல மக்கள் சார்ந்த வழக்கு ஆகவே இந்த கோர்ட் மக்களிற்கு நல்லதோர் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுகொள்கின்றேன்

That's all யுவர் ஆனார்

அந்த வாரிசு வேறை இந்த வாரிசு முறை வேற

நித்தியானந்தா பற்றிய தமிழக அரசின் விமர்சனம் படு கேவலமாதுடன் தமிழக அரசின் பிற்போக்குத் தனத்தைத் தான் காட்டுகின்றது. நித்தியானந்தா பக்தி என்று சொல்லி செய்த சட்டத்துக்கு புறம்பான எத்தனையோ விடயங்களை நீதியான விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வராமால் மிகவும் இலகுவாக மக்களிடம் விலை போகக் கூடிய கற்பு சம்பந்தமான விமர்சனமாக 'நடத்தை கெட்டவர்' ஒரு அரசே என்று கூறுவது கேவலமான விடயம்.

நித்தி எத்தனையோ செய்திகள், எத்தனையோ பேட்டிகள் வந்த பொழுதெல்லாம் கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்று உயர் நீதிமன்றம் தமிழக அரசின் மெத்தனத்தை குறை கூறும் போது மட்டும் அவரை சரியில்லை என்பது சந்தர்ப்ப வாதம் தான் ஒழிய வேறொன்றும் இல்லை.

நித்தியானந்தா பக்தி என்று சொல்லி செய்த சட்டத்துக்கு புறம்பான எத்தனையோ விடயங்களை நீதியான விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வராமால் மிகவும் இலகுவாக மக்களிடம் விலை போகக் கூடிய கற்பு சம்பந்தமான விமர்சனமாக 'நடத்தை கெட்டவர்' ஒரு அரசே என்று கூறுவது கேவலமான விடயம்.

நித்தியானந்தா பக்தி என்பதற்கு மேலாக போககூடியவர் என்பதால்தான் அவரை தான் இளைய ஆதீனமாக நியமிப்பதாக ஆறுமுகம் கூறியவர். ஆதீன பொறுப்பு, ஒரு ஆட்சி பொறுப்பு. எனவே அவர் மீது இருக்கும் குற்றச்சாட்டுக்கள் பக்தி என்ற நம்பிக்கையை துர்ப்பிரயோகம் செய்ததற்கும் மேலே போகிறது.

மேலும் நீங்கள் சட்டப்படி "நடத்தை கெட்டவர்" என்ற வார்த்தையை குடும்ப நிலையில் வைத்து கணிக்கிறீர்கள். கனடா, அமெரிக்காவில் திருமணமாகதவர் பல பெண்களுடன் உறவு வைப்பதை நடத்தை கெட்டதாக கூறி ஒரு பதவியையும் மறுக்க முடியாது.

நான் நம்புகிறேன் நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்று அரச தட்டதரணி கூறுவது பணம், பக்தி போன்ற விடையங்களில் நம்ப முடியாதவர் என்பது மட்டுமல்ல அடிதடி அரசியலும் நடத்துபவர் என்பதால் அறக்கட்டளை ஒன்றுக்கு தலைமை தாங்க முடியாது என்பதாகத்தான் இருக்கும். விரும்பி போகும் நிந்தியானந்தாவின் சீஷ்களை, அவர்கள் வயது வந்தோர்களாக இருக்கும் வரை கோடு தடுக்க முடியாது. இதில் கற்பு விவாதம் எடுபடாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா நல்லவரோ... கெட்டவரோ... என்னும் ஆராய்ச்சிக்கப்பால்,

ஒரு மதநிறுவனத்தின்... முடிவில் மூக்கை நுளைக்க, தமிழக அரசுக்கு.. அதிகாரமில்லை.

அப்படியானால்... முஸ்லீம், கிறிஸ்தவ மத அமைப்புக்களில் நடக்கும், விடயங்களிலும்... தமிழக அரசு தலையிடுமா?

நித்தியானந்தா ஒரு பிராமணராக... இல்லாததே... அவர் மீது, குற்றச்சாட்டுக்களை வீசியெறிய தமிழக அரசு, முனைந்துள்ளது.

காஞ்சி சங்கர மடத்தில்... ஒரு கொலைக்குற்றம் சாட்டப் பட்ட பிராமணரான ஜெயேந்திரர் மடத்து ஆச்சாரியாரக இருக்க முடியுமென்றால்...

நித்தியானந்தாவால்... ஏன் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.