Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலங்கள், கல்கி தொடர்களில் நடித்த டி.வி. நடிகை தற்கொலை: காதல

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோலங்கள், கல்கி தொடர்களில் நடித்த டி.வி. நடிகை தற்கொலை: காதல் தோல்வி எதிரொலியா?

டி.வி. நடிகைகள் ஷாலினி, வைஷ்ணவி ஆகியோர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் மனதை விட்டு அகலு வதற்குள் ஷர்தா (வயது21) என்ற இன்னொரு டி.வி. நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஷர்தா பாலச்சந்திரன் கல்கி தொடரில் நடித்தவர். தற்போது ஒளிபரப்பாகி வரும் கோலங்கள் தொடரிலும் நடித்து வந்தார். இதில் ஆதித்யாவில் 2-வது தங்கையாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்தார். இவருடைய தந்தை விசுவ நாதன். தாயார் சுபத்ரா. இவர்களுடைய வீடு கோட்டூர் கார்டன் 4-வது மெயின் ரோட்டில் உள்ளது. ஷர்தா வுக்கு வீட்டில் தனி அறை உண்டு. அங்கு இரவு தனியாக படுத்து தூங்கினார்.

இன்று காலை அவரது தாயார் சுபத்ரா, ஷர்தாவின் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு ஷர்தா பேனில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கினார்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிணம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஷர்தாவின் சாவுக்கு காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை. ஷர்தாவுக்கும் அவருடன் நடிக்கும் நடிகர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதுதான் தற்கொலைக்கு காரணமா? என்று தெரியவில்லை. நேற்று மாலை ஷர்தாவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு படுக்கைக்கு சென்றவர் தற்கொலை செய்துள்ளார். எனவே இதுபற்றி தந்தையிடம் விரிவாக விசாரித்து வருகின்றனர்.

ஷர்தா பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து விட்டு தற்போது லயோலா கல்லூரியில் பயோ இன்பர் மேஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.

மகள் படிப்பையும், நடிப்பையும் ஒரே நேரத்தில் தொடர்வது கூட விசுவநாதனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இது தொடர்பாகவும் அவர்களுக்கு இடையே பிரச்சினைகள் இருந்துள்ளது.

அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதை போலீசார் கைப்பற்றினார்கள்.அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாவது:-

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு உங்கள் அன்பு மகள் ஷர்தா எழுதுவது,

நான் உங்களுக்கு நிறைய தொல்லை கொடுத்து விட் டேன். உங்கள் பெண்ணாக இருக்க எனக்கு தகுதி இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். இந்த உலகில் நான் வாழ விரும்பவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள் கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஷர்தா நடித்து வந்த கோலங்கள் தொடரை இயக்கிய டைரக்டர் திருச்செல்வம் கூறியதாவது:-

ஷர்தா மிகவும் அமைதியான பெண். அவரால் எந்த பிரச்சினையும் எழுந்தது இல்லை. எல்லோரிடம் அன்பாகவும், கலகலப்பாகவும் பழகக்கூடியவர். அப்படிப்பட்ட பெண் இந்த முடிவை எடுத்து இருப்பது எனக்கும், என் ïனிட்டை சேர்ந்தவர்களுக்கும் மிகுந்த வேதனையை அளிக்கிறது.

நேற்று முன்தினம் கோலங்கள் படப்பிடிப்பு நடந்தது. அவர் நடிக்க வந்தி ருந்தார். அப்போதும் கூட கலகலப்பாகவே இருந்தார். முகத்தில் எந்த சோகமும் தெரியவில்லை. இடையில் என்ன நடந்தது என்று புரிய வில்லை.

இவ்வாறு திருச்செல்வம் கூறினார்.

ஷர்தாவின் தந்தை சமையல் கலை தொழில் நுட்பம் படித்தவர். இதில் ஆலோச கராக பணியாற்றி வருகிறார். தாயார் சுபத்ரா தோல் பொருள் வடிவமைப்பாளராக இருக்கிறார்.

இவருக்கு ஒரே தங்கை ஷரயா. 9-ம் வகுப்பு படித்து வந்த அவர் கோடை விடுமுறையை ஒட்டி கொல்கத்தா சென்றிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு வாறார் வந்து மிச்சத்தை பார்ப்பார்.........

  • கருத்துக்கள உறவுகள்

சூரியத்தொலைக்காட்சி பார்த்து எமது மண்ணில் இறப்பவர்கள் பற்றித் தெரியாமல் என்ன நடக்குது என்று புரியாமல் கெளசல்யன் இறக்கும்போது, அஞ்சலி செலுத்தாது, ஜெமினி கனேசனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டமும் , அல்லைப்பிட்டியில் உயிர் இழந்த பிஞ்சுகுழந்தை பற்றித் தெரியாமல், கோலங்கள், செல்வியில் மூழ்கும் கூட்டமும், ஐரோப்பாவில் தடையினப்பற்றிக் கவலைப்படாது நடிகை சிம்ரானுக்கு நடிக்கத்தடை பற்றிக் கவலைப்படும் கூட்டமும் எம்மிடையே உள்ளதினை நினைக்க நெஞ்சு பொறுக்குதில்லையே.

நடிகைக்கு அஞ்சலி செலுத்தவேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஈழத்தில் என்ன நடக்குது என்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சாட்டையடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவளை பற்றி இந்தியாவில இருக்கிற சனங்கங்கள் கவலைப்படுதா என்டு முதல்ல பாப்பம்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடு எ.கெ 47 யை.............. கந்தப்பு

எத்தனை நாளைக்கு தான் அரிவாளை போடு என்று சொல்லி கொண்டு இருக்கிறது.....................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி,

ஷ்ரதாவைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள், அவர் கல்கி தொடரில் என்ன பாத்திரம் ஏற்று நடிக்கிறார்?

பதிலை எதிர் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய சட்டி (பாத்திரம்) ஏந்தி நடிக்கிறார். :lol::lol::lol::D

கொஞ்சம் ஈழத்தில் என்ன நடக்குது என்று பாருங்கள்.

கந்தப்பு ஈழத்திலை என்ன நடக்குதெண்டு வெளியிலை இருந்து நீங்கள் பாக்கிற தன்மையிலை அரைவாசி கூட இஞ்சை இருக்கிற ஆட்களிட்டை இல்லை நான் சொல்வது எனது ஊரைப் பற்றி கோபில் டீவியிலை கொஞ்சம் புள்ளி விழுந்தால் காணும் கேபில் காரனுக்கு விழுகிற பேச்சு விளையாட்டு டெலிராமா எண்டு சனம் தங்கடைபாடு . . .கவலையை மறக்க டிவியிலை கவனத்தை செலுத்துதுகளோ??? தெரியேலை

கண்ணீர்அஞ்சிகள் அக்கா வுக்கு :cry: :cry: :cry: :cry: :cry:

சீரியலைப்பாத்தும் அழுகிறீங்கள்... அதில வர்ரது செத்துப்போச்சு எண்டும் அழுகிறீங்கள்... எங்க போய் முட்ட?

  • கருத்துக்கள உறவுகள்

சீரியலைப்பாத்தும் அழுகிறீங்கள்... அதில வர்ரது செத்துப்போச்சு எண்டும் அழுகிறீங்கள்... எங்க போய் முட்ட?

பெரியப்பு மேற்கோள்

சன் தொலைகாட்சி உரிமையாளரின் தலையில் முட்ட....

  • கருத்துக்கள உறவுகள்

சீரியலைப்பாத்தும் அழுகிறீங்கள்... அதில வர்ரது செத்துப்போச்சு எண்டும் அழுகிறீங்கள்... எங்க போய் முட்ட?

பெரியப்பு மேற்கோள்

சன் தொலைகாட்சி உரிமையாளரின் தலையில் முட்ட....

:):lol::lol::o:o:o:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌசி ஒரு செய்தியைத்தான், அதுவும் சினிமா எனும் களப்பிரிவில் தந்துள்ளார். இதை ஏன் கண்ணீர் அஞ்சலி என்று திரிவு படுத்துகிறீர்கள். அப்படி செய்திகளே தரக்கூடாதென்றால், ஏனப்பா காந்தப்பூ சினிமா என்ற களப்பிரிவு. இதை ஒரு செய்தியாகவே வாசித்துவிட்டு நகரவேண்டியதுதானே. அல்லாவிட்டால் சினிமா என்ற களப்பிரிவு எதற்கு. எமது சினிமாவென்றால் இச்சொல்லே தமிழ் இல்லையே! :twisted: உங்கள் கருத்து?

அல்லிகா

«Ð ºÃ¢......

þó¾ º¢É¢Á¡ À̾¢¨Â ¿£ì¸¢Å¢ð¼¡ø

¿¡í¸û ±ôÀÊ ¯Â¢÷ Å¡úÅÐ..?

µö.. ¸ó¾ôÒ þó¾ôÀì¸õ ÅᨾÔõ ¸¡Ïõ.! :lol:

________________________________________

¡Á¢Õì¸ ÀÂõ ²ý!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.