Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்.

Featured Replies

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் – கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.

கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் சிறிலங்காவுக்குத் தெற்கிலும், செங்கடலிலும் மேலும் இரு மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை கொண்டுள்ளது.

இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள தன்னியக்க துப்பாக்கிகள், வெடிபொருட்கள், உடற்கவசங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பாதுகாப்பு நிறுவனங்கள் வாடகைக்குப் பெற முடியும் என்று Avant Garde நிறுவனத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, யேமன் போன்ற நாடுகளில் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களின் ஆயுதங்கள், வெடிபொருட்களை இந்தக் கப்பலில் நாளொன்றுக்கு 25 டொலர் வாடகைக் கட்டணம் செலுத்தி பாதுகாக்கவும் முடியும்.

சிந்துபாத் கப்பலில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை வெளியிட Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி மறுத்து விட்டபோதும், அந்த ஆயுதங்கள் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“சிந்துபாத் கப்பலில் இருந்த எவரும் கைது செய்யப்படவில்லை. கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

தடுப்புக் கைதிகள் போல அவர்கள் நடத்தப்படவில்லை.

கப்பல் சோதனையிடப்பட்ட போது, சிறிலங்கா அரசுடன் இணைந்த கூட்டு முயற்சி என்ற நம்பகத்தன்மையை நிரூபித்து விட்டோம்.

5 – 7 நாட்களுக்குப் பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது.” என்றார் அவர்.

இந்தக் கப்பல் தொடர்பாக விசாரிக்கப்பட்டதை ஐக்கிய அரசு குடியரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் கப்பல் கைப்பபற்றப்பட்ட புஜாய்ரா பகுதியின் சட்டநடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்கள் தவறான கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்துலக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, மேஜர் சேனாதிபதி, “நாம் மிகவும் உயர்ந்த பாதுகாப்பை அளித்துள்ளோம்.

எந்தநேரத்திலும், சிறிலங்காவின் ரக்ன ஆரக்சக லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

ரக்ன ஆரக்சக சேனா பாதுகாப்பு நிறுவனம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், உருவாக்கப்பட்டு நடத்தப்படுவதாகும்.

இது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற போதும், கோத்தாபய ராஜபக்சவே அதனை நிர்வகித்து வருகிறார்.

அத்துடன், தரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரையும், கடல் பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களையும் ஈடுபடுத்தி பெருமளவு வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபயவே நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சிறிலங்கா படையினருக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

http://thaaitamil.com/?p=35657

[size=4]கோத்தாவை ஒரு பயங்கரவாதியாக உலகம் ஏற்கும். [/size]

[size=4]இதன் இணையத்தளம்: [/size]http://www.avantgarde.lk/index.html

  • கருத்துக்கள உறவுகள்

sinbad-ship.jpg

[size=4]சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் - கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.

கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு கொடுக்கும் மிதக்கும் ஆயுதக்களஞ்சியமே தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கொடியுடன் ஐக்கிய அரபுக் குடியரசு கடலில் தரித்து நின்ற ‘சிந்துபாத்‘ என்ற மிதக்கும் ஆயுதக்களஞ்சியமான கப்பலே, கடந்த முதலாம் நாள் அந்த நாட்டு கடலோரக் காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் Avant Garde Maritime Services என்ற நிறுவனமே இயக்கி வருகிறது.

இந்த நிறுவனம் சிறிலங்காவுக்குத் தெற்கிலும், செங்கடலிலும் மேலும் இரு மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை கொண்டுள்ளது.

இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள தன்னியக்க துப்பாக்கிகள், வெடிபொருட்கள், உடற்கவசங்கள், இலகு இயந்திரத் துப்பாக்கிகள், இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பாதுகாப்பு நிறுவனங்கள் வாடகைக்குப் பெற முடியும் என்று Avant Garde நிறுவனத்தின் இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு குடியரசு, சவூதி அரேபியா, யேமன் போன்ற நாடுகளில் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய நிறுவனங்களின் ஆயுதங்கள், வெடிபொருட்களை இந்தக் கப்பலில் நாளொன்றுக்கு 25 டொலர் வாடகைக் கட்டணம் செலுத்தி பாதுகாக்கவும் முடியும்.

சிந்துபாத் கப்பலில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை வெளியிட Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி மறுத்து விட்டபோதும், அந்த ஆயுதங்கள் சிறிலங்கா அரசுக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

“சிந்துபாத் கப்பலில் இருந்த எவரும் கைது செய்யப்படவில்லை. கப்பலில் உள்ளவர்களிடம் விசாரணை மட்டும் நடத்தப்பட்டுள்ளது.

தடுப்புக் கைதிகள் போல அவர்கள் நடத்தப்படவில்லை.

கப்பல் சோதனையிடப்பட்ட போது, சிறிலங்கா அரசுடன் இணைந்த கூட்டு முயற்சி என்ற நம்பகத்தன்மையை நிரூபித்து விட்டோம்.

5 - 7 நாட்களுக்குப் பின்னர் கப்பல் விடுவிக்கப்பட்டு விட்டது.” என்றார் அவர்.

இந்தக் கப்பல் தொடர்பாக விசாரிக்கப்பட்டதை ஐக்கிய அரசு குடியரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் கப்பல் கைப்பபற்றப்பட்ட புஜாய்ரா பகுதியின் சட்டநடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் உள்ள ஆயுதங்கள் தவறான கைகளுக்குப் போய்விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்துலக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, மேஜர் சேனாதிபதி, “நாம் மிகவும் உயர்ந்த பாதுகாப்பை அளித்துள்ளோம்.

எந்தநேரத்திலும், சிறிலங்காவின் ரக்ன ஆரக்சக லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு அதிகாரிகள் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

ரக்ன ஆரக்சக சேனா பாதுகாப்பு நிறுவனம், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால், உருவாக்கப்பட்டு நடத்தப்படுவதாகும்.

இது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்ற போதும், கோத்தாபய ராஜபக்சவே அதனை நிர்வகித்து வருகிறார்.

அத்துடன், தரையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா இராணுவத்தினரையும், கடல் பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்களையும் ஈடுபடுத்தி பெருமளவு வருமானத்தை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களையும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபயவே நடத்தி வருவதாகவும் நம்பப்படுகிறது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சிறிலங்கா படையினருக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி கோத்தாபய ராஜபக்ச அனைத்துலக அளவில் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20121017107153[/size]

தலைப்பு மட்டும் மாற்றிய ஒரே செய்தி இரு இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்பட்டுள்ளன. :o

  • கருத்துக்கள உறவுகள்
:D

MEMBERS OF SAMI........

http://www.seasecurity.org/directory/

LGS-Matrix-Web.jpg

Sampson-Hall-Web.jpg

Aegis-International-Web.jpg

Black-Pearl-Web.jpg

Ellis-Clowes-web-logo1.jpg

HADCON-Web.jpg

Regal-Web.jpg

Diaplous.jpg

Nexus-Web.jpg

Hart-Web.jpg

AdvanFort-Logo-web.jpg

Castor-Vali-Web.jpg

Nemesis-Web.jpg

Solace.jpg

Antares-World-Web.jpg

Wallop-Web.jpg

Akinci-Web.jpg

Dryad-Web.jpg

Drekars1.jpg

Asset-Web.jpg

[size=4]

Avant-Garde-Maritime-Services-Web.jpg[/size]

Avant Garde Maritime Services

Avant Garde Maritime Services Pvt Ltd (AGMS) is a limited liability Company, established in the Democratic Socialist Republic of Sri Lanka, registered on the 24th of June 2011 under the Companies at Number 07 of 2007.

The Company is fully authorized by the Ministry Of Defence of Sri Lanka to supply Sea Marshals and weapons to any kind of vessels that seek security and protection during their voyages to any destination in the World. So far we have handled 120 Commercial vessels.

AGMS is also authorized to deploy its own armed Sea Marshals on board the fishing trawlers that are engaged in deep Sea fishing in the Indian Ocean. At the moment we have altogether 131 Fishing Trawlers in the Indian Ocean with 400 Sea Marshals engaged in Vessel protection duties. We have in our Head Office an Operations room which is functioning 24/7 with Satellite communications to contact all Sea Marshals in Vessels

AGMS is also fully authorized by Ministry Of Defence to handle and control all weapons and ammunition issued by the Government of Sri Lanka in any Sea port of the World.

AGMS has in its Board of Directors Senior and Experienced Ex Armed Forces officers who are holding the top level appointments. The two consultants working for AGMS are also with a sea of experience in their fields, where they have more than 20 years experience in the field of Security and Marine Biology.

AGMS recently started training of Sea Marshals with the help of qualified foreign instructors in order to give them the necessary Certifications such as STCW 95 and SSO in order for them to get the Seamans book.

Website: http://www.avantgarde.lk/index.html

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.