Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவரச மரமும் சில பின்னிரவுகளும்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்த விடயம், நாம் எல்லோரும் நாளாந்தம் அனுபவிக்கும் ஒரு விடயமென்றாலும் அதை சுவைபட எழுதுவது என்பது எல்லோராலும் இயலுவதில்லை...அப்படி சுவைபட எழுதக்கூடியவராக இருந்தும் அத்தி பூத்தாற்போல் எப்பவாவது எழுதும் நண்பர் சாய் பிரசாத்தின் பதிவொன்று...

__________________________________________________________________

பூவரச மரமும் சில பின்னிரவுகளும்....

2340008447_0263c02f39_thumb%25255B4%25255D.jpg?imgmax=800

யாழ்ப்பாணத்தின் புழுதி மண்டிய கிரவல் வீதிகளில் கழிந்தது என் பால்யம். கிரவல் வீதியும், அது சார்ந்த ஊரும் தேவதைக்கனவுகளின் மிச்சம்போல் இன்னும் நினைவிலிருக்கிறது. மருதங்குள வெளிகளில் நீந்தியும் ,கிட்டிப்புல்லு அடித்தும், விடிய விடிய கண்விழித்தும் கோஸ்டிபார்த்த நண்பர்கள் நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கிறார்கள். போர்தின்று சொரித்தது போக எஞ்சிய சிலரும் புலம் பெயர்ந்துவிட்டனர். குழம்பியிருந்த குளத்தில் வீழுந்த 'போர்'க்கல் ஒவ்வொருவரையும் திசைக்கொன்றாய் சிதற்றி விட்டது . நான் வின்செட் வன்காவின் மங்கி ஒளிரும் மஞ்சள் வர்ணங்களுள் ஒதுங்கிக்கொண்டேன். பிதுங்கி வழியும் பாரிஸ் மாநகர சனத்திரளில், வயலில் துருத்திக் கொண்டிருக்கும் வெருளிகளாய் கண்ணில் தட்டுப்படும் அபூர்ப நண்பர்களை, கைகொடுத்து நலம் விசாரித்து, என்னை ஆசுவாசபடுத்திக் கொள்ளுகிறேன். இருபது வருட யாழ் வாழ்க்கையை துறந்து, பிரான்ஸ் வந்தது பெரும் கனவின் நீட்சி போலிருந்தது.

யாழின் அச்சமிகு பின்னிரவுகளையும், வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டுகளை, நினைவூட்டும் பகல்களையும் உதறி, குளிர் மிகு பிரான்ஸ் வந்தது அழைக்கப்படாத விருந்தில் சரியான நேரத்தில் நுழைந்தது போலிருந்தது. நாங்கள் ஆங்கிலேயரால் காலனிப்படுத்த பட்டிருந்தோம். ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் இரு துருவங்கள். இங்கே எல்லம் தலைகீழ் அதாவது ஆங்கிலேயருக்கு எதிர். வாகனங்களில் ஓட்டுனர் இருக்கை இடதுபக்கமிருக்கும். நேரக செல்லவும் என எழுதியிருந்தால் கீழ்நோக்கிய அம்புக்குறியிருக்கும். பேரூந்தினுள் வலது பக்கமாக நின்று ஏறவேண்டும். வந்த வுடனேயே எல்லாம் தலைகீழக இருக்கிறதே என ஊகித்து , பேருந்தில் ஏறுவதற்கு பின் பக்க வாசலில் காத்திருந்தேன். ம்ஹும் அது மட்டும் மாற்றமில்லை.ஏறும்போது முன்பக்க வாசலால் ஏறி , இறங்கும் போது பின்பக்க வாசலால் தான் இறங்க வேண்டும். பேருந்தின் கதவுகள் மூடியபின்னர் தான் அது புறப்படும். பேருந்துக்கு கதவு இருக்கிறது என்றால் ஊரில் யாரும் நம்பமாட்டர்கள். ரிகற் எடுக்க நடத்துனரை தேடினேன் அப்படி ஒரு இனமே இங்கு இல்லை.

பேரூந்தில் ஏறினால் ஓரிரு தமிழ் முகங்கள் தட்டுபடுகிறது , மெற்ரோ , திராமில் என்றால் ஐந்தாறு தமிழ் முகங்கள் தட்டுப்படுபடுகிறது, இதுவே தொடரூந்து என்றால் பத்து , பதினைந்து முகங்கள் தென்படுகிறது. வார இறுதிகளில் தமிழ்கலாச்சரம் பேனும் சேலை, சுடிதர் பென்களும் தென்படுகிறார்கள்.யாழ்பாணத்தில் கூட இவ்வளவு தமிழ் முகங்களை பார்கலாமா என்பது சந்தேகம்.

வலது , இடது குழப்பத்திலிருந்து அத்தனை குழப்பங்களும் ஒன்றாய் சூழ்ந்து கொண்டன. சித்தி மகனின் சைக்கிளை எடுத்து ஒரு ரவுண்டு அடிப்போம் என்றால், எதிரில் வருபவர்கள் எல்லோரும் எனக்கு இடிப்பது போல் வருகிறார்கள். தவறு எங்கோ நடக்கிறது என நிமிர்ந்து பார்பதற்குள் ‘டமால் டுமீல்’. சக்கரம் நெளிந்த சைக்கிளை தூக்கிக் கொண்டு பொடிநடையாய் வீடு வரவேண்டும். ஊரின் கிரவல் வீதி, கல்லு ஒழுங்கை , குச்சு ஒழுங்கைகளில் எல்லம் பிரேக் இல்லாத சைக்கிளை வெற்றிகரமாக ஓடித்திரிந்த எனக்கு இது அவமானமாக பட்டது. மலைப்பாம்பு நெளிவுகளுடன் கிடக்கும் குச்சு ஒழுங்கைகளில் லவகமாக சைக்கிளை வெட்டி , வெட்டி போட்டிக்கு ஓடுவதை மெருமையாக நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இது பெருத்த அடி.

கல்லுறோட்டில் துள்ளி , துள்ளி குதிரையோட்டுவது போல சைக்கில் ஓடிய எனக்கு, பளிங்கு றோட்டில் நேராக ஓடுவது கிளர்ச்சியை கொடுக்கவேயில்லை. குச்சு ஒழுங்கையில் திருப்பங்களில் எதிர்ப்படும் ஆ(பத்துக்கள்) , அப்பு , மோனை என வேலியை பிடித்து நடக்கும் பாட்டிகள், புளிச்ச கள்ளின் எப்பம் விட்டபடி வேலியுடன் அலம்பும் அப்புக்கள். கீழ் பாரில் சைகில் பழகும் பரயளங்கள். ஒற்றை கையால் காற்றின் எதிர் திசையில் சைக்கில் ஓட்டும் பள்ளிக்கூட பெட்டைகள். என யாரும் இல்லாதது ஒருவித அயர்ச்சியை கொடுத்தது. ரீவியில் கார் ரேஸ் ஓடும் சித்தியின் பையனிற்கு தெரியது, அதனைவிட சகசம் நிறைந்தது அவன் பாட்டியின் ஊரில் சைக்கில் ஓட்டுவது என்பது.ஒரு ரீவி , ஒரிரு கேம் சீடி முடிந்தது அவன் உலகம்.

வானுயர கட்டிடங்களை நிமிர்ந்து பார்த்தபடி நடந்தால் எதிரில் வருபவர்களுடன் முட்டு , முட்டு விளையாட வேண்டியிருக்கிறது. மூன்றாம் உலக நாட்டிலிருந்து , முதற்தர நாட்டிற்கு வரும் சாதரணனுக்கு இருக்கும் அத்தனை எதிர்பார்புகளுமிருந்தன. சாலையின் தரம் பிரமிக்க வைக்கிறது. எங்குமே சீரான தரம். யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் போது குன்று , குழிகளின் அடர்த்தியும் ,அகலமும் அதிகரிக்கும்.கட்டுமானம் , வாகனங்கள் , சமிஞ்ஞைகள் அதிசயமாகவே தெரிந்தன. சமிஞ்ஞைகளுக்கு காத்திர்ருப்பவர்களை விநோதமாக பார்க்க வேண்டியிருக்கிறது. பாரிஸ் நகரத்து மக்கள் மென்பொருளில் இயங்குபவர்கள் போன்றிருந்தனர். சீரான,மிருதுவான ஆடைகள். நேரான , வேடிக்கை பார்க்காத நடை. பாரீஸின் சனத்திரளில் அபூர்ப ஜந்துவை போல் நான் மட்டும் வேடிக்கை பார்த்தபடி அலைந்தேன்.

திருவிழாவில் அம்மாவை தவறவிட்ட பதின்ம வயதினன் போல , சுதந்திரமாகவும் , பயத்துடனும் , கண்ணில் ஆர்வம் மின்ன சனத்திரளில் தேடிக் கொண்டிருந்தேன். இரவு வீடு திரும்ப தமதமானால் பிரதான வீதிக்கும் வீட்டுக்கும் மிடையில் பதட்டத்துடன் நடைந்து திரியும் ஐயாவையும், சோற்றுக்குள் அவித்த முட்டையை ஒளித்துத் தரும் அம்மாவையும் , மண்வெட்டியுடன் நீரில் நின்று வெள்ளை பூத்த கால்களுடன் வீட்டு திரும்பும் அப்பாவையும் வயல் வெளிகளையும் ,கிரவல் மண்வாசனையையும் , தொலைந்து போன கனவுகளையும் , சிதறிப் போன பால்யகால நண்பர்களையும் கூடவே என் அமைதியையும்....

http://www.dpirasath.com/2012/10/blog-post.html

திருவிழாவில் அம்மாவை தவறவிட்ட பதின்ம வயதினன் போல , சுதந்திரமாகவும் , பயத்துடனும் , கண்ணில் ஆர்வம் மின்ன சனத்திரளில் தேடிக் கொண்டிருந்தேன். இரவு வீடு திரும்ப தமதமானால் பிரதான வீதிக்கும் வீட்டுக்கும் மிடையில் பதட்டத்துடன் நடைந்து திரியும் ஐயாவையும், சோற்றுக்குள் அவித்த முட்டையை ஒளித்துத் தரும் அம்மாவையும் , மண்வெட்டியுடன் நீரில் நின்று வெள்ளை பூத்த கால்களுடன் வீட்டு திரும்பும் அப்பாவையும் வயல் வெளிகளையும் ,கிரவல் மண்வாசனையையும் , தொலைந்து போன கனவுகளையும் , சிதறிப் போன பால்யகால நண்பர்களையும் கூடவே என் அமைதியையும்....

என்றுமே திரும்பாது ..................... எனது நேரடி அனுபவத்தில் , இப்போதுள்ள தாயகத்தின் பெரும்பான்மையானவர்கள் மனிதம் சார்பான பார்வையிலும் , வாழ்வியல் பாரம்பரியங்களிலும் ஐரோப்பாவை விட பலமடங்கு மூர்கமான நிலையில் சரிந்து உள்ளார்கள் . சுகமான மீள்நினைவுக்கு மிக்க நன்றிகள் . முன்பு பல சுயபடைப்புகளைத் தந்த சுபேஸை நான் பல நாட்களாக சல்லடைபோட்டுத் தேடவேண்டியுள்ளது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்றுமே திரும்பாது ..................... எனது நேரடி அனுபவத்தில் , இப்போதுள்ள தாயகத்தின் பெரும்பான்மையானவர்கள் மனிதம் சார்பான பார்வையிலும் , வாழ்வியல் பாரம்பரியங்களிலும் ஐரோப்பாவை விட பலமடங்கு மூர்கமான நிலையில் சரிந்து உள்ளார்கள் . சுகமான மீள்நினைவுக்கு மிக்க நன்றிகள் . முன்பு பல சுயபடைப்புகளைத் தந்த சுபேஸை நான் பல நாட்களாக சல்லடைபோட்டுத் தேடவேண்டியுள்ளது .

நன்றி கோமகன் அண்னா வாசிப்பிற்கும் கருத்திற்கும்..எழுத ஆசைதான்..ஆனால் நேரம் கிடைப்பதில்லை அண்ணா..வாசிப்பதிலும் வேலையிலும் அதிக நேரம் போய் விடுகிறது..பார்ப்போம் வரும் மாதத்தில் இருந்து நேரம் கிடைக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி சுபேஸ்...இந்தப் படம் நல்லாய் இருக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]அருமையான பதிவு [/size][size=1]

[size=5]நெஞ்சினுள் எறும்பு ஊறுகிறது [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.