Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் இருக்கின்றாரா? ஒரு விவாத மேடை

Featured Replies

[size=5]நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.[/size]

[size=5]பேராசிரியர்: “நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”[/size]

[size=5]மாணவன்: “நிச்சயமாக ஐயா..”[/size]

[size=5]பேராசிரியர்: “கடவுள் நல்லவரா?”[/size]

[size=5]மாணவன்: “ஆம் ஐயா.”[/size]

[size=5]பேராசிரியர்: “கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

மாணவன்: “ஆம்.”[/size]

[size=5]பேராசிரியர்: “எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”[/size]

[size=5]மாணவன்: (அமைதியாய் இருக்கிறார்)[/size]

[size=5]பேராசிரியர்: “உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

மாணவன்: “ஆம் ஐயா..”[/size]

[size=5]பேராசிரியர்:“சாத்தா‎ன் நல்லவரா?”

மாணவன்: “‏இல்லை.”[/size]

[size=5]பேராசிரியர்: “எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

மாணவன்: “கடவுளிடமிருந்துதா‎ன்.”[/size]

[size=5]பேராசிரியர்: “சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

மாணவன்: “ஆம்.”[/size]

[size=5]பேராசிரியர்: “அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

மாணவன்: (பதில் சொல்லவில்லை)[/size]

[size=5]பேராசிரியர்: “இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. [/size]

[size=5]பேராசிரியர்: இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”[/size]

[size=5]மாணவன்: “ஆம் ஐயா..”[/size]

[size=5]பேராசிரியர்: “நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

மாணவன்: “ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”[/size]

[size=5]பேராசிரியர்: “ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.[/size]

[size=5](‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)[/size]

[size=5]மாணவன்: “ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”, “அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

பேராசிரியர்: “நிச்சயமாக.”[/size]

[size=5]மாணவன்: “இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)[/size]

[size=5]மாணவன்: “ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”[/size]

[size=5](குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)[/size]

[size=5]மாணவன்: “சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

பேராசிரியர்: “ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”[/size]

[size=5]மாணவன்: “நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”[/size]

[size=5]பேராசிரியர்: “சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

மாணவன்: “ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”[/size]

[size=5]பேராசிரியர்: “பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

மாணவன்: “ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.[/size]

[size=5]அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.[/size]

[size=5]இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”[/size]

[size=5]பேராசிரியர்: ”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

மாணவன்: “உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”[/size]

[size=5]பேராசிரியர்: (பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

மாணவன்: “அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”[/size]

[size=5](மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)[/size]

[size=5]மாணவன்: “இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)[/size]

[size=5]“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”[/size]

[size=5]“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”[/size]

[size=5]“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”[/size]

[size=5](மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)[/size]

[size=5]பேராசிரியர்: “நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”[/size]

[size=5]மாணவன்: “அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”[/size]

[size=5]இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.[/size]

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=7042:2012-09-23-02-47-02&catid=58:football&Itemid=386

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல பனிபுலத்தில கொள்ளை அடிப்பது சரியா,பிழையா அலை அதை சொல்லுங்கோ..:)

Edited by யாயினி

  • தொடங்கியவர்

முதல்ல பனிபுலத்தில கொள்ளை அடிப்பது சரியா,பிழையா அலை அதை சொல்லுங்கோ.. :)

இந்தப் பணிப்புல சைட் நல்லாய் இருக்கு. பறுவாயில்லை பகல் கொள்ளை தானே யாயி!! நீங்களும் கொள்ளை அடிச்ச மாதிரி இருக்கே ஒரு முறை!

இது எப்பிடி யாழுக்கு வழிகாட்டுது :o :o ????????????? முதல்லை றிப்போர்ட் பண்ணி மெய்யெனப்படுவதுக்கு மாத்துங்கோ . கொஞ்சநாளாய் ஒரு மார்க்கமாய்த்தான் நிக்கிறியள் :lol: :lol: :icon_idea: . பகர்வுக்கு நன்றி அலை :) .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]மாணவன்: “அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. [/size]

முட்டாள் தனமான வாதம். விஞ்ஞானத்தால் ஏற்ற்றுக்கொள்ளப்பட்ட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் ஒவொருவரும் சோதித்து பார்க்க முடியாது. ஆனாலும் பலரின் சொதனைக்குட்பட்டு ஏற்ற்றுக்கொள்ளப்பட்டவை உண்மைகளாக பார்க்கப்படுகின்றன அவற்றை கருத்து என கூறமுடியாது. சோதனைக்கு உட்படித முடியாத (ஏனேன்றால் இல்லாத) உட்படுத்தினால் கடவுளின் கோபத்திற்கு ஆளாகவேண்டும் என பசப்பு வார்த்தைகளின் காலம் தள்ளும் இவர்கள் தத்தமது முட்டாள் மதங்களை விஞ்ஞானத்தில் இருந்து தள்ளி வைப்பது நல்லது.

தமக்கும் விஞ்ஞானம் தெரியும் என்று தமையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்ற முனைகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.