Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அரசு இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்: கெஹலிய ரம்புக்வெல்ல கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

AmericanEagleFlag-seithy-150.jpg

அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும் அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரியுள்ளார். ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

கடனால் சுத்திகரிப்பு ஆலையை மூடிவிட்டு, அமெரிக்காவில் பழியை போடுகிறார்கள்.

மிச்சேல் இனி கூட கவனமாக இருக்க வேண்டும். இதை நிறுவ இலங்கை அரசு எதுவும் செய்யும்.

Edited by மல்லையூரான்

[size=4]இந்த செய்தி சிங்களத்தை தமிழர்களும் கூட நட்ட ஈடு கேட்ட்கலாம் என சொல்லாமல் சொல்லுகிறது .[/size]

[size=4]இந்த செய்தி சிங்களத்தை தமிழர்களும் கூட நட்ட ஈடு கேட்ட்கலாம் என சொல்லாமல் சொல்லுகிறது .[/size]

சிராணி பண்டாரநாயக்காவும் ஒத்துக்கொள்வாவ?

10 % வேறு நாடுகளிடமிருந்து வாங்க வேண்டுமென்பது தானாக்கும் அமெரிக்காவின் ஆரம்ப கோரிக்கை. மேலும் அமெரிக்கா தானகவே இந்தியா, பங்களாதேஷ், யப்பான், தென் கொரிய, இலங்கை (மாலைதீவு?) போன்ற எழு நாடுகளுக்கு விலக்கு அழித்தது. ஈரான் இருக்கும் நிலைமையில் இலங்கை மாதிரி நம்பிக்கை இல்லாத கடனாளிகளுக்கு இப்போது எண்ணை ஏற்றுமதி செய்ய விரும்பாது. கள்ளர் தங்களின் கடனை சொல்லாமல் மோடையாகளை ஏமாறுகிறார்களாக இருக்கும்

Edited by மல்லையூரான்

அமெரிக்கத் தடையினால் சிறிலங்காவுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பு [ வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, 08:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

crude%20oil%20from%20Iran.jpgஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையினால், எரிபொருள் இறக்குமதியால் சிறிலங்காவுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தடையினால்,வேறு நாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதால், 1.2 பில்லியன் டொலர் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 5 பில்லியன் டொலரை எட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை ஈரானிடம் இருந்து போதியளவு எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது போனதால், சிறிலங்காவின் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்றுடன் மூடப்படவுள்ளது.

ஈரானில் இருந்து மசகு எண்ணெய் விநியோகம் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று தொடக்கம் சுமார் இரண்டு வாரங்களுக்கு சபுகஸ்கந்த ஆலை மூடப்படும்.

நவம்பர் நடுப்பகுதியில் எரிபொருள் விநியோகக் கப்பல் சிறிலங்காவை வந்தடைந்த பின்னரே இந்த ஆலை மீளத் திறக்கப்படும்.

சிறிலங்காவின் 70 வீதமான பெற்றோல் மற்றும் டீசல் தேவையையும், 75 வீதமான விமான எரிபொருள் தேவையையும், 45 வீதமான மண்ணெண்ணெய் தேவையையும் சபுகஸ்கந்த ஆலையே நிறைவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20121026107199

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அதிபர் ஆட்சி என்ற முறையில் இந்த கிணற்று தவளைகள் ஊளையிடுவதை அதிபர் கோஜபக்சேதான் வெளிநாடுகளில் சொம்படித்து சோப்பு போட்டு புஸ்வாணமாக்க வேண்டியுள்ளது

டிஸ்கி:

எப்படி டகால்டி வேலை பண்னுவான் என்று நான் சொல்லுறன் இப்போ..

"கடந்த முப்பது வருடங்களாக தீவிர வாதத்தை ஒழித்த முன்மாதிரியான ஒரு நாடாக விளங்குது இலங்கை.. அதன் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டியது உலக சமுதாயத்தின் கடமை.."

டிஸ்கிக்கு டிஸ்கி:

ஆனாலும் இந்த சைடில் இருந்து கிளப்பிவிடும் பிக்குமார் .. இந்த அல்லகைகள் ஸ்பீச்சை ஒபாமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு சீரியசாக அவர்கள் கவனத்தில் எடுக்கும் அளவுக்கு எடுத்து செல்ல வேண்டியது ஈழ தோழர்கள் கையில் தங்கியுள்ளது... :icon_idea: :icon_idea:

இவ்வளவு நாளும் கொடுத்த உதவிகளை மகிந்த குடும்பம் ஏப்பமிட்டுவிட்டது. இம் முறை கெஹலியவிற்கு.

அமெரிக்கா நட்ட ஈடுட்டை உதவியாக வழங்கும் இதல்லாம் பெரிய விடையமா .... ?

இவ்வளவு நாளும் கொடுத்த உதவிகளை மகிந்த குடும்பம் ஏப்பமிட்டுவிட்டது. இம் முறை கெஹலியவிற்கு.

வேட்டைகாறன் முயலை சுடுவான், நாய்யின் வேலை முயலை எடுத்து வருவது. நாய்யிற்கு பழைய இறச்சியும் சோறும் மட்டும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.