Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களின் செய்கைகளே அவர்களது எண்ணங்களின் விளக்கமாகும்.

  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உழைத்து வாங்கும் சொந்தப் பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் ஒரு சாதனையாளராகவோ,சிறந்த புத்திசாலியாகவோ இல்லை.இருந்திருந்தால் எப்பவோ மண்டையைப் போட்டு இருக்க வேண்டியது தான்.இப்ப மட்டும் உயிரோடு இருந்து என்ன சாதித்தாய் என்று நீங்கள் கேட்கவில்லை.என் மனட்சாட்சி என்னைப் பார்த்து கேட்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் மிக நல்ல நாளே

ஒருவர் தூக்கு மேடை ஏறுவதும்,திருமணம் செய்து கொள்வதும் விதியினால் ஏற்படுபவை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதையும் உன்னால் செய்ய முடியாது என்று தயங்காதே!
முடியும் என்று தைரியமாய் செய்.இலகுவாக முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை வெறுப்பது கூட உண்மையாக இருக்கலாம்.ஆனால் நேசிப்பது மட்டும் போலியாக இருந்து விடக் கூடாது. வாழ்க்கையில் எல்லோரையும் நேசியுங்கள்.நல்ல மனிதர்கள் உங்களுக்கு சந்தோசத்தைக் கொடுப்பார்கள். கெட்ட மனிதர்கள் உங்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பார்கள்.இரண்டுமே நமக்கு வேண்டியது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போருக்குப் போகும் முன் ஒரு முறை பிரார்த்தனை செய்
கடலின் செல்லும் முன் இரு முறை பிரார்த்தனை செய்
திருமணம் செய்யும் முன் ஓயாமல் பிரார்த்தனை செய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் அடிமைத்தனத்தை ஒழிப்போம்.
வீர,தீரப் பேச்சு
மனைவிக்கு அடங்கிய கணவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோயின் தந்தை யாராகவும் இருக்கலாம். ஆனால் தாய் உணவுக் கோளாறு.
நல்ல காற்று ஆயிரம் மருந்திட்கு சமன்.
வயிற்றுக்கு சாப்பிடாதே! வாழ்வதற்கு சாப்பிடு.
கொழுத்தால் கொள்ளு திண்ணு.இளைத்தால் எள்ளு திண்ணு.
நல்லாரைக் காண்பதுவும் நன்று. வல்லாரை திண்பதுவும் நன்று.
பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் உணவு அருந்தலாம்.
சுத்தமான நீர் சுத்தத்திற்கு முதல் மருந்து.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் முழுக்கவும் பொய்யானது என்பதை நம்புங்கள்.இனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக,'இது வெறும் கனவுலகம்' என்று கூறிச் சென்றுள்ளார்கள்.கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட இவை அனைத்தும் பொய்யே என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றி விட்டால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியும் வரை முயற்சி செய்!உன்னால் முடியும் வரை அல்ல; நீ நினைத்தது முடியும் வரை! ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு மனசுக்குள் கிளம்பும்.ஆனால் அந்த நாள் முடியும் போது ஒரு மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுக்கும்.அந்த அனுபவங்கள் தான் நாம் அடையப் போகும் வெற்றிக்கான படிக்கட்டுகள்.நீ வலிகளை ஜிரணிக்க கற்றுக் கொண்டாலே போதும்_வெற்றி தானாய் உன்னைத் தேடி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகிற்கு "டயட்டை" அறிமுகப்படுத்தியது எங்கட மதத்தை சேர்ந்த முன்னோடிகள் தான் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் மதிப்பு தெரியுமானால்
வாழ்வின் மதிப்பு தெரியும்.


(எனக்குத் தெரியாது.நான் ஒரு அட்டை சோம்பேறி)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.10.2016 at 9:28 PM, ரதி said:

உலகிற்கு "டயட்டை" அறிமுகப்படுத்தியது எங்கட மதத்தை சேர்ந்த முன்னோடிகள் தான் என்று நினைக்கிறேன்.

அதெண்டால் உண்மைதான் தங்கச்சி........கிழமைக்கு 3 விரதம்......அதோடை  மரக்கறி சாப்பாடுகளையே சாப்பிட சொன்ன மதம். அதுக்கை உபவாச விரதம் வேறை.
விரதம் இருந்து சனத்துக்கு வருத்தம் வந்ததாய் கேள்விப்படேல்லை.....ஆனால் இப்பவெல்லாம் சாப்பாட்டிலை கவனம் இல்லாமல் தான் செத்தவை/வருத்தம் வந்தது எண்ட நியூஸ் டெய்லி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை இல்லாத வாழ்க்கை ஒன்றை நாம் எப்போது வாழ ஆர‌ம்பிக்கிறோமோ,அப்போதே துன்பம் இல்லாத வாழ்க்கை ஒன்று நம்மைத் தேடி வரும்.ஒரு அப்பிளில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை சுலபமாய்ச் எண்ணிச் சொல்லி விட‌லாம் ஆனால் ஒரு விதைக்குள் எத்தனை அப்பிள்கள் இருக்கும் என்பதை கணக்கிட‌ முடியாது. அதே போல் கண்ணுக்குத் தெரியாத வருங்காலத்தை நினைத்து கலங்காமல் நிகழ்காலத்தில் வாழ்வோம்.நாட்களை சந்தோச‌மாய் கழிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப் படைப்பின் ரகசியங்கள் அனைத்துக்கும் நுழைவு வழி அன்பு தான்

மகிழ்ச்சி,அளவான உணவு,போதிய ஓய்வு என்பன மருத்துவரை வீட்டுக்குள் அண்ட விடா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் வருத்தப்பட வேண்டாம்.உங்கள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்.அந்தப் பாடங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.அவை உங்கள் எதிர் காலத்திற்கு நல்ல வழிகாட்டியாய்_சிறந்த புத்தகமாய் அமையும்.ஒரு மனிதன் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால் அந்தக் கவலை அவனைக் கரைத்து விடும்.கவலைகளை ஜீர‌ணித்துக் கொள்பவன் நிகழ்கால நாட்களை சந்தோச‌மாய்க் கழிப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரகசியத்தை காப்பது
இழைக்கப்பட்ட தீங்கை மறைப்பது
ஓய்வு நேரத்தை இயன்ற வழியில் பயன்படுத்துவது
ஆகிய மூன்றும் வாழ்வில் மிகக் கடினமானவை

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் எழுத்துக்கள் இப்போதெல்லாம் கூர்ப்படைந்து விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/31/2016 at 3:55 PM, ரதி said:

நோயின் தந்தை யாராகவும் இருக்கலாம். ஆனால் தாய் உணவுக் கோளாறு.
நல்ல காற்று ஆயிரம் மருந்திட்கு சமன்.
வயிற்றுக்கு சாப்பிடாதே! வாழ்வதற்கு சாப்பிடு.
கொழுத்தால் கொள்ளு திண்ணு.இளைத்தால் எள்ளு திண்ணு.
நல்லாரைக் காண்பதுவும் நன்று. வல்லாரை திண்பதுவும் நன்று.
பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டில் உணவு அருந்தலாம்.
சுத்தமான நீர் சுத்தத்திற்கு முதல் மருந்து.

அண்மையில் ஒரு விஞ்ஞான நிகழ்ச்சியில் பார்த்தேன். பலருக்கும் உணவின் அளவைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படும். குறைவாக சாப்பிட்டால் மனதுக்கு திருப்தி கிடைக்காது. இது மூளையின் செயற்பாட்டில் ஏற்படுவது.

இதை நிவர்த்தி செய்வதற்கு ஒரு ஆராய்ச்சியை செய்து காட்டினார்கள். ஒரே அளவான பாஸ்டா உணவை இரண்டு தட்டுகளில் வைத்தார்கள். ஒன்று பெரிய தட்டு. மற்றது உணவு வைக்க மட்டுமட்டான தட்டு. இரண்டில் ஒன்றை தெரிவு செய்யச் சொன்னால் மனம் சிறிய தட்டைத்தான் தெரிவு செய்கிறது. காரணம் அதில் அதிக உணவு இருப்பது மாதிரியான தோற்றம் கிடைக்கிறது. எமது மூளைக்கும் மகிழ்ச்சி.. tw_blush:

ஆகவே, இனிமேல் நாம் எல்லோரும் சின்ன தட்டை பாவிப்போமாக..! :109_vulcan:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் அஞ்சாதே.எதையும் வெறுக்காதே.யாரையும் ஒதுக்காதே.
உன் கடமையை ஊக்கமுடன் செய்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயன் கருதி செய்யப்படும் வேலை தொண்டாகாது.
தொண்டு என்பது வேலையன்று அது தெய்வீகப் பணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாகப் பேசு அது உன் இரகசியங்களைப் பாதுகாக்கும்.
நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையை பாதுகாக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவைக் கூட திறக்கும்.
அன்புக்கும்,அறிவுக்கும் எல்லையே இல்லை.
அழகுணர்ச்சி,அன்புணர்ச்சி,நன்னடத்தை மனித குலத்திற்கு பெருமையைக் கொடுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமையை நீக்குவதே வெற்றிக்கு வழி.
மனிதனின் உண்மையான மதிப்பு அவன் வழங்குவதில் உள்ளது. பெறுவதில் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.