Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் அமைச்சராக இருந்து இதுவரை செய்தவை என்ன?

Featured Replies

மிகவும் நகைப்புக்கிடமான பதில் இது.

அதாவது டக்ளஸ் மக்களுக்காக பலவற்றை செய்கிறார். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள். இப்பொழுது புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் 80% ஐயும் ஏன் 100% ஐயும் அரசாங்கம் எடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் வெளிப்படையாக உதவி செய்கிறார்கள் என்ற பிடிமானத்தை ஏற்படுத்தாலாம் என்கிறீர்கள். உண்மையில் உங்களை தவிர வேறு எவராலும் இப்பிடி யோசிக்க முடியாது.

கொடுக்கும் பணத்தில் 100% ஐயும் அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டு இவர்கள் கையை கட்டிக்கொண்டிருப்பதால் மக்களுக்கு உதவி போய் சேரும், வெளிப்படையான தன்மை உருவாகும் என்று சொல்லும் முதல் ஆளும் நீங்களாக தான் இருப்பீர்கள்.

சரி 80% பணத்தை அரசாங்கத்துக்கு கொடுத்து விட்டு மிகுதியில் மக்களுக்கு உதவி செய்யும்படி கூறினால்,

பணம் என்ன மரத்திலிருந்து காய்க்குது என்ற நினைப்போ உங்களுக்கு? மக்களில் எத்தனை வீதமானோர் பணம் வழங்குகிறார்கள்? அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக பணத்தை பெற்றுக்கொள்வதே தற்போது கடினமான சூழ்நிலை. அரசாங்கத்துக்கு பணம் செல்கிறது என்று தெரிந்தால் இப்பொழுது உதவி செய்பவர்களில் பலரும் பின்னர் உதவி செய்ய மாட்டார்கள்.

இப்பொழுதே பணத்தை அவர் சுருட்டி விட்டார் இவர் சுருட்டி விட்டார் என்று சொல்லும் மக்கள் அரசாங்கம் 80% ஐ பறித்தாலும் தமிழ்தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் சேர்ந்து மக்களின் பணத்தை அமுக்கி விட்டது என்று சொல்வார்கள். அதை பற்றி கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தீர்களா?

உங்களுக்கென்ன கவலை? நீங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஒரு அங்கத்தவரோ இல்லை நாடுகடந்த அரசாங்கத்தில் ஒரு அங்கத்தவரோ இல்லை தானே. பொறுப்பு கூற வேண்டியது அவர்கள். மாட்டப்போவதும் அவர்கள்.

நகையுங்கள் அதுவும் அவசியம் சோகத்தை சுமந்து இறுகிய முகத்துடன் எவ்வளவு காலம் தான் திரிவது.

ரகசியமாக செய்வதுதான் சரியான வழி என்றால் அப்டியே செய்யுங்கள். நான் எனது கருத்தைக் கூறினேன்.

ரகசியமாக செயற்படுவதை மக்கள் நம்புகின்றார்கள் என்றால் அது ஒரு மாபெரும் விசயம்தான்.

இந்ததலைமுறை செத்தொழியும் வரை அடுத்த நகர்வுக்கான கருத்தியல் தளமே உருவாகாது என்பது உண்மையே.

மக்களில் இருந்த அந்நியப்பட்டிருக்கும் பூசுவாக்களை விட சரியோ பிழையோ மக்களுடன் மக்களாக இருக்கும் செயலாளர் நாயகம் எவ்வளவோ பரவாயில்லை.

உங்கள் ரகசிய மறைமுக தேசீயப் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • Replies 81
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=4]இந்த தலைமுறையை முற்றாக அழிக்கவேண்டும் என்று நீங்களும் கோத்தா கூறியதை செப்புகிறீர்கள். [/size]

இந்ததலைமுறை செத்தொழியும் வரை அடுத்த நகர்வுக்கான கருத்தியல் தளமே உருவாகாது என்பது உண்மையே.

[size=4]சிங்களம் கூட ஒற்றுமையாக முன்னேறுவதாக கூறி இருந்தீர்கள். அவர்களிடம் பல தலைமுறைகளாக கருத்தியல் தளம் இருக்கவில்லை, அதனால் தான் தமிழர்கள் துன்பப்படுவதற்கு ஒரு காரணம். [/size]

[size=1]

[size=4]இரகசியம் என்பது சாதாரண மனிதனில் இருந்து அமெரிக்கா போன்ற மிகப்பெரிய ஜனநாயக அரசுகள் வரை உள்ளது. விடுதலை அமைப்பில் இரகசியங்கள் இருப்பது அவசியம். [/size][/size]

நகையுங்கள் அதுவும் அவசியம் சோகத்தை சுமந்து இறுகிய முகத்துடன் எவ்வளவு காலம் தான் திரிவது.

ரகசியமாக செய்வதுதான் சரியான வழி என்றால் அப்டியே செய்யுங்கள். நான் எனது கருத்தைக் கூறினேன்.

ரகசியமாக செயற்படுவதை மக்கள் நம்புகின்றார்கள் என்றால் அது ஒரு மாபெரும் விசயம்தான்.

இந்ததலைமுறை செத்தொழியும் வரை அடுத்த நகர்வுக்கான கருத்தியல் தளமே உருவாகாது என்பது உண்மையே.

மக்களில் இருந்த அந்நியப்பட்டிருக்கும் பூசுவாக்களை விட சரியோ பிழையோ மக்களுடன் மக்களாக இருக்கும் செயலாளர் நாயகம் எவ்வளவோ பரவாயில்லை.

உங்கள் ரகசிய மறைமுக தேசீயப் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். :)

நான் ரகசியமாக செய்வது தான் சரி என்று கூறவுமில்லை, நிறுவவும் முயலவில்லை. ஆனால் இன்றைய நாட்டு நிலைமையில் வெளிப்படையாக உதவி செய்யும் சந்தர்ப்பம் இல்லை என்பதை தான் கூறினேன். :)

மக்களில் இருந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பும் நாடுகடந்த அரசாங்கமும் அன்னியப்பட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது தவறு. புலிகள் ஆயுத பலமற்ற இந்த காலப்பகுதியில் தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பையும் புலம்பெயர் தேசத்தில் நாடுகடந்த அரசாங்கத்தையுமே மக்கள் நம்புகிறார்கள்.

செயலாளர் நாயகம் மக்களுடன் மக்களாக இருக்கிறார் என்பதும் தவறு. அவர் மக்களால் தெரிவு செய்யப்படவுமில்லை. (கள்ள வாக்குகளால் தான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்). இராணுவத்துடன் இணைந்து ஓர் ஆயுத குழுவாக இயங்குவதால் அவருக்கெதிராக மக்கள் தமது எதிர்க்குரலை பதிவு செய்ய முடியாமல் உள்ளனர்.

அவரால் சிலர் நன்மையை பெற்றிருந்தாலும் பெருமளவிலான மக்கள் தீமையை தான் பெற்றுள்ளார்கள். ஒரு உதாரணத்துக்கு நீங்கள் அல்லது உங்கள் குடும்பம் ஒருவேளை நன்மையடைந்த குடும்பமாக இருந்தால் உங்களுக்கு அவர் பெரியவராக இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலான மக்கள் விடயத்திலும் அது பொருந்தும் என்று நினைப்பது தவறு.

நானும் என் கருத்தை தான் சொன்னேன். அதையும் உங்கள் தவறான கருத்து புரிதலால் என் ரகசிய தேசிய பயணம் வெற்றிபெற வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள். :icon_mrgreen:

Edited by துளசி

மக்களில் இருந்த அந்நியப்பட்டிருக்கும் பூசுவாக்களை விட சரியோ பிழையோ மக்களுடன் மக்களாக இருக்கும் செயலாளர் நாயகம் எவ்வளவோ பரவாயில்லை.

சர்வதேசம் தமிழர்களுடன் பேசும் சந்தர்ப்பம் ஏற்படுமாக இருந்தால் செயலாளர் நாயகத்துடன் வந்து பேச மாட்டார்கள். :icon_mrgreen: தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் நாடுகடந்த அரசாங்கத்துடனும் தான் வந்து பேசுவார்கள். :)

நன்றிகள் .துளசி

நிதிஉதவி செய்தது மட்டுமில்லாமல் ,கிழக்கு மாகாணசபை தேர்தலில் தலைநகர மாவட்டத்தில்

முதன்மை வேட்பாளரை களமிறக்கியதில் முக்கியபங்கு வகித்துள்ளோம் . இதனுடாக

அந்த மாவட்டத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம் .

நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். :)

மக்களில் இருந்த அந்நியப்பட்டிருக்கும் பூசுவாக்களை விட சரியோ பிழையோ மக்களுடன் மக்களாக இருக்கும் செயலாளர் நாயகம் எவ்வளவோ பரவாயில்லை.

உங்கள் ரகசிய மறைமுக தேசீயப் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

மகிந்தாவின்ரை ரபர் டாக்கி வெளியிலை வர ஆயிரம் காட் வேண்டும். அவர் மக்களோடு மக்கள். தமிழர் கூட்டமைப்பினர் தேர்தல் கூட்டங்களில் கூட பாதுகாப்பில்லாமல் மேடை ஏறி பேசுகிறார்கள். அவர்கள் பூசுவாக்கள். உண்மை, மக்களுடன் மக்கள் அல்ல, ரவுடிகளுடன் ரவுடியாகத்தான் மேலே படங்கள் இணைக்கப்பட்டிருக்கு.

இது முன்னர் மு.கா வுடன் பேசினால்த்தான் விடிவு வரும் என்ற கதை மாதிரித்தான். கோயில் கட்டிவைத்து சோடி சோடி என்று சோடித்து மு.கா என்ற பிள்ளையார் பிடிப்பதாக சிலர் யாழ்களத்தில் சிலர் இரவுபகலாக மாய்ந்து முடிய அவர்களின் ஏமாற்றத்திற்கு, அந்த மு.கா, தேரதல் முடிந்த கையுடன் மு.கா குரங்காய் மாறிப்போய் மகிந்தா என்ற மரத்தில் ஏறிவிட்டது.

இப்போ ஏற்கனவே மகிந்தா என்ற மரத்தில் ஏறிவிட்ட தேவாங்குகளை வடக்கில் வசந்த மாருதம் வீசவைப்பத்தாக படம் காட்டிக்கொண்டு புதிய புதிய பிள்ளையார் எல்லாம் பிடிக்கிறார்கள்.

  • தொடங்கியவர்

[size=4]"அரசியல் காப்புரிமை கவசம்" (Diplomatic Immunity) - இது தரும் செல்வாக்கு, சர்வதேச பாதுகாப்பு, இவை இல்லாமல் மக்ந்தாவோ இல்லை அவரின் காலடியில் வாழும் டக்ளசோ இந்தியா, அமேரிக்கா போன்ற பல நாடுகளுக்கு செல்ல முடியாது. காரணம் அங்கு அவர்கள் மீது போர்குற்ற வழக்குகள் உள்ளன. [/size]

[size=1][size=4]சொந்த நாட்டில் கூட பாதுகாப்பில்லாமல் சாதராண குடிமகனாக இவர்களால் எந்த வீதியிலும் நடக்க முடியாது. மக்கள் அடித்தே கொ[/size][/size][size=4]ன்று[/size][size=1][size=4]விடுவார்கள். [/size][/size]

[size=1][size=4]இதுதான் இந்த பாவிகளின் நிலை. [/size][/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.