Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் பிறந்த இந்நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது)

[size=6]நீங்கள் பிறந்த இந்நாள் [/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010

Prabaharan01.png

மெளனங்களாய்

உங்கள் நினைவேந்திக்

கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்

முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு

மூச்சறுந்த நிலையில் எல்லாம்

உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்

வரலாறாய் பதித்துவிட்டு

வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே

வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்

இந்த மெளனங்களும் ஊகங்களும்

வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்

இப்போ நல்ல மழை பெய்கிறது…..

நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை

உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு

உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு

உயிர் கொடுக்கப் போனவர்கள்

தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்

பிழைகாணும் வீர(ண)ர்கள்

இடுகின்ற ஊழைகளில் உண்மையும்

நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை

இந்த ஊனக்கண்களும்

உக்கிய வாய்களும்

ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..

நீங்களாய் மாற நிறையவே நரிகள்

பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க

உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்

மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..

26.11.10

[size=6]http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_26.html[/size]

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

[size=4]தனிப்பட்ட ரீதியில் ஒரு குடிமகன் கொண்டாடுவது இல்லை வாழ்த்துவதில் எந்த பிழையும் இல்லை. அது அவர்கள் சுதந்திரம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

விழித்தெழும் காலம் வரும் வரைக்கும்,

வலி தானே எங்கள் வாழ்வு!

நன்றிகள், சாந்தி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது தனிவாழ்வில் தனது பிறந்த நாளையே கொண்டாடாத ஒரு தலைவனுக்கு மற்றையவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது முரண்நகையாக உள்ளது சாந்தி .

தனக்காக பிறந்தநாளளையோ தனக்கான வாழ்வைவோ நினைக்காது தமிழினத்துக்காக வாழ்ந்தவரை மற்றவர்கள் மதிப்பதும் துதிப்பதும் தவறில்லையே கோமகன். அது ஒவ்வொருவரும் அவர்மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு. காந்தியை தேசத்தந்தையென்கிறது இந்தியா. காந்தியின் பிறந்தநாளை இந்தியா கொண்டாடுகிறது. அதுபோல உலகில் பல தலைவர்களை அந்தந்த இனத்துக்காக வாழ்ந்தவர்களின் பிறந்நாளை அவர்கள் மீதான அன்பின் வெளிப்பாடாகவும் அவர்களை ஞாபகப்படுத்தும் விதமாகவும் கொண்டாடுவது தப்பில்லை.

விழித்தெழும் காலம் வரும் வரைக்கும்,

வலி தானே எங்கள் வாழ்வு!

நன்றிகள், சாந்தி!

வலிகளிலிருந்தே புது வழிகள் பிறக்கிறது. அதுவரை காத்திருப்போம் புங்கையூரான்.

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

 

 

நான்கு வருடங்கள் நகர்ந்து போய் விட்டன!

 

ஆனாலும், வலிகள் மட்டுமே,

வாழ்க்கையாகிப் போய்விட்ட நிலையில்,

வாழ்க்கை தொடர்கின்றது! :o

 

இன்றைய தெரிவாக, இதைத் தெரிந்தெடுத்த நியானிக்கும், சாந்திக்கும் நன்றிகள்!

(இரண்டு வருடங்களின் முன்னர் இதே நாளில் எழுதிய கவிதையிது)

நீங்கள் பிறந்த இந்நாள்

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Friday, November 26, 2010

Prabaharan01.png

மெளனங்களாய்

உங்கள் நினைவேந்திக்

கரைகிறது இந்நாள்…..

முப்பதாண்டுத் தவம்

முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு

மூச்சறுந்த நிலையில் எல்லாம்

உறைந்து போய்க் கிடக்கிறது……

வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம்

வரலாறாய் பதித்துவிட்டு

வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே

வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில்

இந்த மெளனங்களும் ஊகங்களும்

வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது…..

உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில்

இப்போ நல்ல மழை பெய்கிறது…..

நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை

உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்…..

உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு

உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு

உயிர் கொடுக்கப் போனவர்கள்

தவிர்க்க முடியா நிலையில் தடம்மாறிப் போனதில்

பிழைகாணும் வீர(ண)ர்கள்

இடுகின்ற ஊழைகளில் உண்மையும்

நீதியும் உயிர் சிதைகிறது….

உண்மையாய் வாழ்ந்தோரை

இந்த ஊனக்கண்களும்

உக்கிய வாய்களும்

ஈவிரக்கமின்றிச் சப்பித் தின்கிறது…..

நீங்களாய் மாற நிறையவே நரிகள்

பந்தயமிடுகிறது அங்கும் நீங்களே பொன்வாத்து….

நீங்கள் பிறந்த இந்நாள்

வருடாவருடம் வந்து போன

நாட்கள் போலில்லை…..

என்றுமே உணர்ந்திராத

வலிகள் நிறைந்த நாளாகக் கழிகிறது….

பொங்கிடும் எண்ணங்கள் பெருக்கெடுக்க

உங்கள் சிரித்த முகம் தாங்கிய ஒளிப்படம் முன்

மெளனக்கண்ணீர் வடிய மெளனமாகிறோம்…..

26.11.10

http://mullaimann.blogspot.de/2010/11/blog-post_26.html

 

நன்றி சாந்தியக்கா, அண்ணனில்லா வேதனைகள்.

"யாதுமானவனே... நீயில்லாக் காலைகளில் களத்திலும் புலத்திலும் நரிகள் தொல்லை தாங்கமுடியவில்லையே...."

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.